திங்கள், 13 மே, 2024

ஸ்ரீராம நவமியும், புனர்வசுவும்.

(Published in Geethacharyan) 

ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் உள்ள ஒரு பெரிய வேறுபாடு என்னவென்றால், மகாபாரதப் போர் நடந்த ஆண்டு நமது கால அமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் தனது ஸ்தூல சரீரத்தை விட்டு, ந்தப் பூவுலகிலிருந்து நீங்கியதற்கு முப்பதைந்து வருடங்களுக்கு முன் பாரதப் போர் நடந்தது. போர் முடிந்தவுடன் காந்தாரி கொடுத்த சாபத்தின் மூலம், போர் நடந்த முப்பத்து ஆறாவது வருடம் ிருஷ்ணி வம்சம் அழியும் என்பதை கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணர் நீங்கின நாளன்று கலி மஹாயுகம் ஆரம்பித்து. அந்த யுகக்கணக்கையே இன்று வரை நமது காலக் ணக்காகப் பின்பற்றி வருகிறோம். இதனால், கலி மஹாயுகம் ஆரம்பித்தற்கு முப்பதைந்து வருடங்களுக்கு முன் பாரதப் போர் நடந்தது என்று நம்மால் தெளிவாகச் சொல்ல முடிகிறது. இப்படிப்பட்ட தெளிவுடன் நம்மால் இராமாயண காலத்தை, குறிப்பாக, ராமர் பிறந்த வருடத்தைச் சொல்ல முடியவில்லை. அதன் காரணத்தைப் பார்ப்போம்.  

ராமாயணத்தில் இராமர் பிறந்த மாதத்தின் பெயர், திதி, க்ஷத்திரம் மற்றும் பிறந்த லக்னம் தவிர ஆறு கிரகங்களின் இருப்பிடம் குறித்து வால்மீகி அரிய தகவல்களைக் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள திதி, நஷத்திரத்தை நாம் இன்றளவிலும் பின்பற்றி, ஸ்ரீராமநவமி என்று இராமபிரானது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறோம். ஆனால் அவர் பிறந்த திதியான வளர்பிறை நவமியும், நக்ஷத்திரமான புனர்வசுவும், எந்த ஒரு வருடத்திலும், சித்திரை மாதத்தில் ஒன்றாக வந்ததில்லை என்பதை எத்தனை பேர் அறிந்துள்ளோம்  

ராமன் பிறந்தது, சூரியன் உச்சம் பெறும் மேஷ மாதமான சித்திரையாகும். ஆனால் பல வருடங்களில், சூரியன் மீனராசியில் இருக்கும் பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. துவும் நம்மில் பலருக்குப் புரியாத புதிராக இருக்கிறது. இப்பொழுது ஒரு முக்கியமான புதிரைச் சொல்லப்போகிறேன். 

ஒவ்வொரு ஆண்டும் மாதமும் திதியும் சேரும். அதாவது வ்வொரு சித்திரையிலும் வளர்பிறை நவமி வரும். அந்தத் திதியுடன், குறிப்பிட்ட  க்ஷத்திரமும் சேரும். ஆனால் வளர்பிறை நவமியுடன், புனர்வசு சேர்ந்து வராது. அப்படி வருவது பங்குனியில் அமைகிறதே தவிர, சித்திரையில் அமைவதில்லை. இந்த வருடம் (க்ரோதி வருடம்) ஸ்ரீராமநவமி சித்திரையில் வருகிறது. ஆனால் ன்றைய தினத்தில் ஆயில்ய நக்ஷத்திரம் இணைகிறது; புனர்வசு அல்ல. ப்பொழுதுமே மேஷ மாதத்தில் வளர்பிறை நவமியும், புனர்வசுவும் சேர்ந்து வராதென்றால், அப்படிப்பட்ட சேர்க்கை இராமன் பிறந்தபொழுது எப்படி சாத்தியமானது என்ற கேள்வி வருகிறது. ஆனால் வால்மீகி எழுதி வைத்துள்ளாரே, எனவே இராமன் பிறந்தபோது அவை ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். ஏன் தற்போதைய காலக்கட்டத்தில் அவை ஒன்று சேர்வதில்லை  

மேஷத்தில் சூரியனுடன் திதி-நட்சத்திரம் சேராமை 

இந்தச் சிக்கலைப் புரிந்து கொள்ள, சில அடிப்படை விவரங்களைத் தெரிந்து கொள்வோம். வளர்பிறை என்பது அமாவசை முடிந்தவுடன் வரும் பிரதமையிலிருந்து ஆரம்பிப்பது. சாந்திரமானத்தில் (சந்திர வட்டம்), பிரதமையிலிருந்து மாதம் ஆரம்பிக்கும். பெரும்பாலும் மீன ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் சாந்திரமான ாதமான சைத்ர மாதம் பிறக்கும். சூரியமானத்தில், சூரியன் மே ராசிக்குள் நுழையும்போதுதான் சித்திரை மாதம் பிறக்கும். ெயர்க் குழப்பம் இல்லாமல் இருப்பதற்கு நாம் இதனை மேஷ மாதம் என்றே குறிப்பிடுவோம். கல்வெட்டுகளில்கூட, மேஷ மாதம், ரிஷ மாதம் என்றுதான் சூரியமான மாதங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இராமன் பிறந்தது மேஷ மாதம் என்பதும், அப்பொழுது வளர்பிறை நவமியும், புனர்வசுவும் ஒன்றாக வந்தன என்பதும் வால்மீகி தரும் செய்தி. ஆனால் இப்பொழுது இந்தத் திதியும், நக்ஷத்திரமும் மேக்ஷ மாதத்தில் ஒன்றிணைவதில்லை. அது ஏன் 

புனர்வசு க்ஷத்திரம் வளர்பிறை நவமி திதிுடன் கூட வேண்டுமென்றால், (9 வது திதி) அந்தத் திதியிலிருந்து பின்னோக்கி எண்ணி, அமாவாசை என்று நடந்தது என்று கண்டுபிடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு திதி, மற்றும் ஒரு நக்ஷத்திரத்தை சந்திரன் கடப்பதால், ஒன்பது நாட்களுக்கு முன் அமாவாசை நிகழ்ந்திருக்க வேண்டும். இதன்படி, பூரட்டாதி க்ஷத்திரத்தில் சூரியனும், சந்திரனும் கூடி அமாவாசை நிகழ்ந்திருந்தால், அதற்கு மறுதினமான உத்திரட்டாதியில் பிரதமை வரும், அன்றே ந்திரமானத்தின் சைத்ர மாதம் பிறந்து விடும். அடுத்த நாள் ரேவதியில் துவிதியை வந்து விடும். இப்படி சந்திரன் முன்னேறிக் கொண்டே, 9-ஆவது திதியான நவமியில் புனர்வசுவுடன் இணைவான். ஆனால் அந்த நேரத்தில் சூரியன் மீன ராசியில்தான் இருக்குமே தவிர, மேஷத்திற்கு வந்திருக்காது 

ஏனெனில், சூரியன் ஒரு நாளைக்கு ஒரு பாகைதான் நகரும். ஒரு நக்ஷத்திரம் என்பது 13-20 பாகைகளைக் கொண்டது. ஒரு நக்ஷத்திரத்தைக் கடக்க, சூரியனுக்கு 13 நாட்களும், 8 மணி நேரமும் ஆகும். அமாவாசையின் போது, சூரியன், பூரட்டாதி நக்ஷத்திரத்தின் கடைசி பாகையில் இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். அடுத்த ஒன்பது நாட்களில் சந்திரன் நவமி-புனர்வசுவை அடையும் பொழுது, சூரியன் ஒன்பது பாகைகள் நகர்ந்து உத்திரட்டாதி க்ஷத்திரத்தில் 9-ஆவது பாகையில் ருக்கும். உத்திட்டாதியில் மேலும் நான்கு பாகைகளும், அடுத்த நட்சத்திரமான ரேவதியில் 13.20 பாகைகளும்  இருப்பதால் சூரியன் மேஷத்துக்குள் நுழைய 17 நாட்கள் ஆகும். அதற்குள் சந்திரன் பௌர்ணமியைக் கடந்து தேய்பிறையில் இருப்பான். சூரியன் இன்னும் மீன ராசியில்தான் இருப்பான் 

இனி அடுத்த சாத்தியக் கூற்றினைப் பார்ப்போம் 

சூரியன் ஒரு நக்ஷத்திரத்தைக் கடக்க 13 முதல் 14 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறான். சந்திரன் ராசி மண்டலத்தை ஒரு சுற்று சுற்றி வர எடுத்துக் கொள்ளும் சுமார் 30 நாட்களில், சூரியன் இரண்டு நக்ஷத்திரங்களைக் கடந்து விடுவான். அதாவது ஒரு அமாவாசையிலிருந்து, அடுத்த அமாவாசையை அடைவதற்குள், சூரியன் இரண்டு க்ஷத்திரங்கள் கடக்கிறான் 

முந்தைய அமைப்பில் பூரட்டாதியில் அமாவாசை வருவதைப் பற்றிச் சொன்னோம். அதற்கு அடுத்த அமாவாசையில், சூரியன், உத்திரட்டாதி, ரேவதியைக் கடந்து, அஸ்வினிக்கு வந்து விடுவான். அதாவது மேஷத்தில் நுழைந்து சித்திரை மாதம் ஆரம்பித்து விடும். ஆனால் வளர்பிறை நவமி என்று வரும்? அஸ்வினிக்கு அடுத்த பரணியில் பிரதமை வந்து, ஆறாவது திதியான சஷ்டி திதியில் புனர்வசு இணையும். ந்த வருடம், சஷ்டியின் இரவில் புனர்வசு ஆரம்பித்து, சப்தமியில் முடிகிறது. ந்த வருடம் மீன ராசியில் உள்ள ரேவதியில் அமாவாசை வரவே, சைத்ர மாதம் அஸ்வினியில் ஆரம்பித்து, சஷ்டி- சப்தமியில் புனர்வசுவுடன் கூடுகிறது. அதற்குள் சூரியனும் மேஷத்தில் நுழைந்து விடுகிறது 

சூரியன் மேஷத்தில் இருந்தால், திதி- நக்ஷத்திரம் கூடவே முடியாது. சூரியன் மீனத்தில் இருந்தால், திதி- நக்ஷத்திரம் கூடுகிறது. ஆனால் இராமர் பிறந்த நேரத்தில் இருந்ததைப் போல சூரியன் மேஷத்தில் இருக்காது. நிலைமை இவ்வாறு இருக்கையில், இராமன் பிறந்தபொழுது மட்டும் எப்படி மேஷ சூரியனும், திதி- நக்ஷத்திரமும் இணைந்தது 

அடுத்து ஒரே ஒரு சாத்தியம் இருக்கிறது. து சைத்ர மாதத்தில் அதிக மாதம் வந்தால், அதை அடுத்து வரும் நிஜ மாதத்தில் இந்த இணைப்பு நெருக்கமாக வருகிறது. சூரியன் ரேவதியின் 29-ஆவது பாகையில் இருக்கும் போது அமாவசை வந்தால், இரு தினங்களில் சூரியன் மேஷத்திற்கு வந்து விடுகிறான். ஆனால் நவமிக்குப் பதிலாக, அஷ்டமியில் புனர்வசு இணைகிறது 

ஜோதிடக் கணினியில் இந்த அமைப்புகளைத் தேடும் பொழுது, வால்மீகி சொல்லும் ஐந்து கிரக உச்ச அமைப்புகள் ஏற்படும் நேரத்தில், சைத்ர மாதம் நிஜ மாதமாக இருக்கிறது. சூரியன் மேஷத்துக்குள் வந்து விடுகிறான். ஆனால் புனர்வசு வளர்பிறை அஷ்டமியில் இணைகிறான். நவமியில் அல்ல. இதன் காலம் கி.மு. 5114 என்பதாகும். 

ஒரு குறிப்பிட்ட கிரக சேர்க்கை, இராசி மணடலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைவது, 4,32,000 வருடங்களுக்கு ஒரு முறைதான் வரும். அப்படிப்பட்ட கிரக அமைப்புகளைக் கணினி காட்டுகிறது. கி.மு. 5114 ஆம் வருடம், நிஜ சைத்ர மாதத்தில், சூரியன், குரு, செவ்வாய், சனி, சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் உச்சம் டைதையும், அவற்றுள் குரு, சந்திரனுடன் அபிஜித் முஹுர்தமான உச்சிக் காலத்தில் கடக லக்னத்தில் சேருவதையும், அப்பொழுது புனர்வசு நான்காம் பாதத்தில் இருப்பதையும் கணினி காட்டுகிறது. அது பராபவ வருடத்தில் ஒரு திங்கட் கிழமை. ஆனால் ஒத்துப் போகாத ஒரே ஒரு விவரம், திதி மட்டுமே. வளர்பிறை நவமி என்பதற்குப் பதிலாக, வளர்பிறை அஷ்டமி என்று காட்டுகிறது. அதாவது ஒரு திதி குறைவாகக் காட்டுகிறது 

இதன் காரணத்தை ஆராயும் போது, இன்றைக்கு உள்ள திதி- நக்ஷத்திரத் தொடர்பு தான் கணினியில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய காலக் கட்டத்தில் ஏன் இந்த தொடர்பு ஏற்படவில்லை? இதற்கு பதில், மஹாபாரதத்தில் ருக்கிறது. 

மஹாபாரதத்தில் ஒரு திதி இழப்பு. 

மஹாபாரதப் போருக்கு முன்னால் கிருஷ்ணர் தூது சென்றார். அந்தத் தூதை துரியோதனன் அலட்சியம் செய்துவிடுகிறான். அத்துடன், உடனடியாக, பீஷ்மரைத் தனது படைத் தளபதியாக நியமிக்க ஏற்பாடுகள் செய்கிறான். அது கார்த்திகை மாதத்து புஷ்ய நக்ஷத்திர தினமாகும். அன்றைய மாலைப் பொழுதில் எல்லா சடங்குகளும் முடியும் தருணத்தில், பல துர் நிமித்தங்கள் தென்பட ஆரம்பித்தன. வியாசர் மொத்தம் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட துர் நிமித்தங்களை, பேரரர் திருதராஷ்டிரரிடம் கூறுவார். அவற்றுள் முக்கியமனது, ஒரு வால் நக்ஷத்திரம், புஷ்ய  நக்ஷத்திரத்தன்று விழுந்தது என்பதே.  

தூமகேது மஹாகோர புஷ்யம் ஆக்ரம்ய திஷ்டதி” (ஹா.பா: 6-3-12) என்பார். அதே சமயம் கர்ணனும் சில நுட்பமான மாறுதல்களை கிருஷ்ணரிடம் சொல்பவான். அவற்றுள் முக்கியமானது, சந்திரனில் காணப்படும் புள்ளிகள் இடம் மாறி விட்டன (மஹா. பா: 5-141-10) என்பதும், கரணம் ாறி விட்டது என்பதும் ஆகும் (மஹா.பா: 5-141-9). இவற்றுள் சந்திரனில் புள்ளிகள் மாறின விவரத்தை வியாஸரும் கூறுவார் (மஹா.பா: 6-2-32). கரணம் மாறின விவரத்தை வேறு விதமாக வியாசர் சொல்வார் (மஹா.பா: 6-3-11). கரணம் என்பது திதியில் பாதி. அதாவது ஒரு திதியில் இரண்டு கரணங்கள் வரும், அவை திடீரென்று முன்னேறி விட்டன. 

தூமகேது விழுந்த புஷ்ய தினத்தின் இரவில் தேய்பிறை சஷ்டி, சப்தமியாக அளவு குறுகி இருப்பதை அவர்கள் கண்டார்கள். அதன் தொடர்பாக, அந்த பக்ஷத்தின் முடிவில் வந்த அமாவாசை, திரயோதசி திதியன்றே வந்து விட்டது. இதை ஒரு கதை ரூபத்தில் தமிழ் மக்கள் அறிவார்கள் 

ஜோதிடத்தில் சிறந்த சஹாதேவனிடம் துரியோதனன் தான் போர் தொடங்க ல்ல நாள் கேட்டதாகவும், சஹாதேவன் அமாவாசை அன்று ஆரம்பிக்கும்படி சொன்னான் என்பார்கள். அதைக் கேட்ட மற்ற பாண்டவ சகோதரர்கள், இதனால் தாங்கள் வெற்றி பெற இயலாமல் போய் விடுமே ன்று அஞ்சி, கிருஷ்ணனை அணுகினார்கள். கிருஷ்ணன் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, அமாவாசை வருவதற்கு முன்னாலேயே தர்பணம் செய்ய ஆரம்பித்து விடுவார். அதைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போக, சூரிய, சந்திரர்களும், கிருஷணனை நாடி வந்து அமாவாசை வருவதற்குள் ஏன் தர்பணம் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு, அமாவாசை என்றால் என்ன என்று கிருஷ்ணர் கேட்க, சூரியனும், சந்திரனும் ஒன்றிணைவது என்று அவர்கள் பதில் தர, நீங்கள் இங்கே ஒன்றிணைந்து விட்டீர்களே, இன்றுதானே அமாவாசை என்று கிருஷ்ணன் சொல்வதாகக் கதை வரும் 

இந்தக் கதை, இயற்கையில் என்று ஏற்பட்ட ஒரு உத்பாதத்தை என்றும் மறக்காமல் வைத்திருக்க உருவாக்கப்பட்டது. கிருஷ்ணர் தர்பணம் செய்திருக்க முடியாது, ஏனெனில் அவரது தந்தை, கிருஷ்ணரது காலம் வரை இருந்தார். ஒரு திதி தப்பி அமாவாசை முன்னாலேயே வந்து விடவே, அதுவரை இருந்த திதி- நக்ஷத்திர அமைப்பு பிறழ்ந்தது. ப்பொழுது அமாவாசை முன்னதாகவே வந்து விடவே போதாயன அமாவாசை என்பதைக் கொண்டு வந்தார்கள். இந்தத் திதி இழப்பினால், அந்த முறை உத்தராயணமும் காலம் தப்பி வந்தது. அதன் காரணமாக பீஷ்மரும் தனது முடிவுக் காலத்தைத் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. அதனால்தான் அந்த உத்தராயணத்தைரத சப்தமிஎன்று இன்றும் நினைவு கூர்கிறோம் 

இதன் ுக்கிய விளைவாக, நாம் இன்றிலிருந்து பின்னோக்கிக் கணக்கிடும் போது, அந்த கார்த்திகை புஷ்யத்துக்கு முன் வந்த காலத்தில், ஒரு திதி குறைவாக இருக்கிறது. அப்பொழுது பிறந்த கிருஷ்ணரது ிறந்த தினத்தையும், சூரியன், திதி, நக்ஷத்திரம் என ஒரே காலக் கட்டத்தில் பார்க்க முடிவதில்லை. இராமரது பிறந்த தினத்தையும், சூரியன், திதி, நக்ஷத்திரம் ஆகியவற்றின் சேர்க்கையுடன் பார்க்க முடிவதில்லை 

கணினி காட்டும் இராமர் காலத்தின் எல்லா நாட்களிலும், ஒரு திதி குறைவாக இருக்கும். நாமாக ஒரு திதியைக் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஐந்து கிரகங்கள் ஒருங்கிணைந்த வருடமான கி.மு. 5114 இல் புனர்வசுவுடன் அஷ்டமி இணையவே, ஒரு திதியைக் ூட்டி நவமி என்று எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது 

ஸ்ரீரங்கம் கோயிலைப் பொறுத்தவரை, நவமிக்கும், மேஷ சூரியனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மேஷ மாத வளர்பிறை நவமியில் கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. இப்பொழுது அயோத்தியாவில் புனர் நிர்மாணம் செய்துள்ள இராமர் கோயிலில், ஸ்ரீராமநவமியன்று பகவான் நெற்றியில் சூரிய ஒளி விழுமாறு செய்திருக்கிறார்களாம். எந்த ஸ்ரீராமநவமி அது? 

எது எப்படி இருப்பினும், இராமர் பிறந்த தினம் என்று லகத்தாருக்கு நாம் காட்ட வேண்டி இருக்கிறது. இல்லையேல் இராமாயணமே கட்டுக் கதை என்று சொல் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நமக்குக் கிடைக்கும் காலண்டர் தேதி ஜனவரி 9, கி.மு. 5114 ஆகும். ஜனவரியாக வருவதற்குக் காரணம் ஆங்கில காலண்டர் தேதி, நக்ஷத்திரத்துடன் இணைக்கப்படுவதில்லை. நம்முடைய காலக் கணிப்பில்தான், நக்ஷத்திரத்தைப் பொறுத்து வருஷம் பிறக்கிறது. ஆனால் காலண்டர் கணக்கில் சூரியன் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கவே, முடிந்து விட்ட காலத்தில் காலண்டர் தேதி பின்னோக்கிச் செல்லும். வரப்போகும் காலத்தில் ுன்னோக்கிச் செல்லும் 

உதாரணமாக, வருஷப் பிறப்பு 60 வருடங்களுக்கு முன்னால் ஏப்ரல் 13 ஆம் தேதி வந்தது. இப்பொழுது 14 அல்லது 15 ஆம் தேதி வருகிறது. இன்னும் 100 வருடங்களில் 16 அல்லது 17 ஆம் தேதி வரும். எனவே ராமர் ாழந்த காலத்தில் சித்திரை மாதம் ஜனவரியில் எவ்வாறு வந்தது என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். 

வருடந்தோறும் கொண்டாடும் ஸ்ரீராம நவமியில், திதியும், நக்ஷத்திரமும் சேராமை, மஹாபாரத காலத்தில் நடந்த ஒரு விண்வெளி விவரம் என்பதை, நம் சமூகம் மட்டும்தான் புரிந்து கொண்டிருக்கிறது. அறிவியல் லகுக்கு என்றுதான் தெரிய வருமோ 

 

*****