வியாழன், 26 ஜனவரி, 2012

95. மொஹஞ்சதாரோவில் வராஹப் பெருமாள்!


இந்தத் தலைப்பே மலைப்பைத் தருவதாக இருக்கிறதா?

மலைக்க வேண்டாம்.


சிறியதும், பெரியதுமாக அதிக அளவில் மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ள உருவம், ஒற்றைக் கொம்புள்ள மிருகத்தின் உருவமாகும்.  

இதை ஆங்கிலத்தில் UNICORN  என்பார்கள்.

சமஸ்க்ருதத்தில் வராஹம் என்கிறோம்.

தமிழில் ஒற்றைக் கொம்புப் பன்றி அல்லது கேழல் என்கிறோம்.

ஒற்றைக் கொம்புள்ள மிருகத்தை இந்த முத்திரையில் காணலாம்.



அலங்கரிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்னால் பாத்திரங்கள் போன்ற வடிவத்தில் அமைப்புகள் இருப்பதையும் காணலாம். இதே போன்ற உருவம், பல அளவுகளில் கிடைத்துள்ளது.


மிகச் சிறிய அளவிலும் கிடைத்துள்ளனஇந்தப் படத்தில் இருப்பதைப் போல.



 

வெள்ளியில் செய்யப்பட்டவையாகவும் கிடைத்துள்ளன, இந்தப் படத்தில் இருப்பதைப் போல.


 


ஓரளவு பெரிய அளவிலும் கிடைத்துள்ளன இந்தப் படத்தில் இருப்பதைப் போல.




இதன்  பின்புற அமைப்பைக் கீழே காணலாம்,

 


எதனுடனோ கட்டுவதற்கோ அல்லது பொருத்துவதற்கோ ஏற்றாற்போல துளையுடன் அமைந்துள்ளது.



இந்தப் படத்தில் உள்ள முத்திரையின் அளவு, 2.9 செ.மீட்டர் மட்டுமே.



இப்படிப்பட்ட உருவம் ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 388 உருவ முத்திரைகள் மொஹஞ்சதாரோவில் மட்டும் கிடைத்துள்ளன. இவை ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.

இவற்றின் மேல் புறம் எழுதியுள்ள எழுத்துக்களில் மட்டும் வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி இந்தப் பகுதி மக்களுக்கு இது மிக முக்கியமான அமைப்பு என்று சொல்லும் வண்ணம் மிக அதிக அளவில் கிடைத்துள்ளது.

 


ஹரப்பா மட்டுமல்ல, குஜராத்திலும் இவை கிடைத்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகம் என்பதே, குஜராத் மாநிலம் உட்பட, மஹாநதி வரை பரவியிருந்த ஒரே மாதிரியான கலாச்சாரம் என்பதை நாம் முன்னமே குறிப்பிட்டிருந்தோம், அந்த குஜராத்தில் கன்மெர் (KANMER) என்னுமிடத்திலும், ஒரே காலக்கட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது என்பதற்கான பல அடையாளங்கள் கிடைத்துள்ளன. கன்மெர் இருக்குமிடத்தைப் பின்வரும் வரைபடத்தில் காணலாம்.




இந்தப் படத்தில் மரக்கலரில் புள்ளி புள்ளியாகக் காட்டப்பட்டுள்ள இடங்களில், சிந்து சமவெளி அடையாளங்கள் கிடைத்துள்ளன. அவை, குஜராத்திலும், இன்றைய இந்தியாவிலுள்ள காக்கர்ஹக்ரா எனப்படும் சரஸ்வதி நதிப் படுகையிலுமே அதிக அளவில் இருப்பதைக் காணலாம்.


இன்றைய தமிழர்களது மூதாதையர் சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்று இன்னும், எந்தத் தமிழனாவது நினைத்துக் கொண்டிருந்தால், இந்தப் படத்தைப் பார்க்கட்டும். இன்றைய ஹரியானாவிலும், குஜராத்திலும் தான் அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதை ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகமே. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி, ஈரானுடனும், அங்கிருந்த எலாம் பகுதியுடனும் சொந்தம் கொண்டாடத் தயங்க மாட்டார்கள். அப்படிச் சொந்தம் கொண்டாடுவதில் பயனில்லை. ஏனெனில், அங்கு சிந்து சமவெளி நாகரிகச் சுவடுகளே இல்லை. இன்றைய பாகிஸ்தான் - ஈரான் எல்லையைத் தாண்டி சிந்து சமவெளி நாகரிகம் செல்லவில்லை. ஆனால் அந்த நாகரிகத்தின் தாக்கம் சென்றிருக்கிறது. அதைப் போகப்போகப் பார்ப்போம்.


இங்கு நாம் ஆராய எடுத்துக் கொண்டது ஒற்றைக் கொம்பு மிருகம் ஆகும். இதன் உற்பத்தித் தலம்  மொஹஞ்சதாரோ என்று சொல்லும் வண்ணம் அங்கு அதிக அளவில் கிடைத்துள்ளது. ஹரப்பாவிலும் கிடைத்துள்ளது. குஜராத்தில் உள்ள  கென்மர் பகுதியிலும் கிடைத்துள்ளது. இது ஏதோ ஒரு அடையாளாமாகவோ, அல்லது ஏதோ ஒரு வர்த்தகப் பொருளைக் கட்டி வைக்கப்பட்ட சீல் எனப்படும் முத்திரையாகவோ தென்படுகிறது.


கென்மரில் கிடைத்துள்ள ஒற்றைக் கொம்பு மிருக சீல்களை இங்கே காணலாம். நடுவில் துளையிடப்பட்டு அதனூடே ஒரு கயிற்றைச் செலுத்தி, எதனுடனோ கட்டியிருக்கிறார்கள் அல்லது பொருத்தியிருக்கிறார்கள்.



குஜராத் பகுதியிலுள்ள கோள தோரோ (GOLA DHORO) என்னுமிடத்திலும், இந்த உருவ முத்திரைகள் கிடைத்துள்ளன. கோள தோரோ இருக்கும் இடத்தை இந்த வரைபடத்தில் காணலாம்.



அந்த இடத்தில் கிடைத்துள்ள முத்திரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




இந்த அமைப்பின் உட்புறத்தில், சொருகுவதற்கு ஏற்றாற்போல வெற்றிடம் இருக்கிறது. எதன் மீதோ, ஒரு அடையாளமாகவோ, அல்லது சீல் வைத்தது போன்றோ, பொருத்தி இருக்கிறார்கள்.


இவ்வாறு விதம் விதமாகக் கிடைத்துள்ள இந்த உருவம் பதித்த முத்திரைகள் இந்தியப் பகுதிகளில் மட்டுமே கிடைத்துள்ளன என்பது ஒரு முக்கிய விவரம்.

அதாவது, சிந்து சமவெளி முத்திரைகள் பல

மத்தியத் தரைக் கடல் நாடுகள் வரை ஆங்காங்கே கிடைத்துள்ளன.


அவற்றை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்த முத்திரைகள், வர்த்தகப் பொருட்களது மீது கட்டப்படும் முத்திரைகள் என்று முடிவு செய்துள்ளார்கள். இந்த முத்திரைகளும், அவற்றின் மீது காணப்படும் எழுத்துக்கள் போன்ற வடிவங்களும், அந்த வர்த்தகப் பொருளையோ, அல்லது அந்த வணிகர்களது அடையாளத்தையோ சுட்டுவதாக இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். வர்த்தகத்தின் மூலமாக இந்த முத்திரைகள், அரேபியா, மத்தியத் தரைக் கடல் நாடுகள் போன்ற இடங்களுக்குச் சென்றிருக்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது.


அவ்வாறு அந்த இடங்களில் கிடைத்துள்ள முத்திரைகளைக் கீழுள்ள படத்தில் காணலாம்.

 


ஆனால் ஒற்றைக் கொம்பு மிருக முத்திரைகள் அங்கெல்லாம் கிடைக்கவில்லை.

அந்த முத்திரை பாரத நாட்டுக்குள்ளேதான் சுற்றி வந்திருக்கிறது.


இதன் மூலம், அந்த முத்திரை காட்டும் பொருள்,

பாரத நாட்டுக்கு மட்டுமே உரியதாக,

பாரத மக்களால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்திருந்திருக்கிறது

என்று தெரிகிறது. அது மட்டுமல்ல,

அதை அனுப்பினவருக்கும்,

பெற்றுக் கொண்டவருக்கும்,

பொதுவான பொருளாக அது அமைந்திருக்கிறது

என்றும்  தெரிகிறது.


அது காட்டும் பொருளின் பயன்பாடு பாரதத்திற்கு வெளியில் இல்லை என்றும் தெரிகிறது.

இந்த முத்திரை உருவத்தை ஆராய்ந்த டா. டேவிட் ஃப்ராலே அவர்கள்

இது வராஹம் என்றும், யூனிகார்ன் (UNICORN) என்றும் சொல்லப்படும்

ஒரு அபூர்வ மிருகத்தை ஒத்திருக்கிறது என்கிறார்.


 

இந்த உருவம் கிடைத்துள்ள இடம் பாரத நாடாகும்,

இங்குதான் வராஹம் என்ற ஒரு அவதாரக் கடவுள்

இன்றளவிலும் வணங்கப்பட்டு வருகிறார்.

விஷ்ணுவின் 10 அவதாரங்களில் வராஹ அவதாரம் ஒன்று.


கடல் நீருக்குள் முழுகியிருந்த நிலப்பகுதியை,

வராஹ ரூபத்தில்,

தன் முன் கொம்பால் குத்தித் தூக்கி,

நீருக்கு வெளியே எடுத்ததே வராஹ அவதாரமாகும்.

வராஹ புராணம் என்று ஒரு புராணமே இருக்கிறது.

அந்த வராஹ மூர்த்தியை இப்படிக் காட்டுகிறோம்,


 


உருவமாக இப்படிச் சித்தரிப்பது, சமீப காலங்களில்தான் உண்டாகியிருக்க வேண்டும்.

ஏனெனில், தெய்வ உருவங்களின் அமைப்பை விவரிக்கும் வராஹ மிஹிரர் (இவர் பெயரிலும் வராஹம் இருக்கிறது) வராஹத்தின் உருவச் சிலை அமைப்பைப் பற்றித் தனது நூலான பிருஹத் சம்ஹிதையில் எதுவும் தெரிவிக்கவில்லை.


அந்த நூல் இன்றைக்கு 1600 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

அதில் அவரது காலத்துக்கு முன்பிருந்த கருத்துக்கள்,

பழம் பெரும் ரிஷிகளது கருத்துக்கள் போன்றவற்றையே

தாம் சொல்வதாக வராஹ மிஹிரர் குறிப்பிடுகிறார்.

தெய்வச் சிற்பம் வடிக்கும் முறையைப் பற்றி விளக்கும் அத்தியாயத்தில்,

நாம் முந்தின கட்டுரையில் கண்ட சூரியன், அவனது மகன் ரேவதன் ஆகியோர் உட்பட

பல தெய்வ உருவங்கள் அமைக்கப்பட வேண்டிய லக்ஷணங்களைக் கொடுத்துள்ளார்.

ஆனால் வராஹக் கடவுளது சிற்ப அமைப்பைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.


அதனால் 2000 ஆண்டுகளுக்கு முன்வரை வராஹச் சிற்பம் அமைக்கும் முறை இருந்திருக்கவில்லை என்று சொல்லலாம்.


 

அதற்கு ஒரு காரணம், வராஹ அவதாரம் என்பது இயற்கை நிகழ்ச்சியின் உருவகம் என்பதே.  பூமியின் நிலப்பகுதிகள், நீருக்கு வெளியே எழும்பிய விவரத்தை இந்த அவதாரம் உருவகப்படுத்துகிறது. நிலப்பகுதி வெளியே வந்ததால்தான், மனித குலம் வளர முடிந்தது. மனிதனும், நல்லது- கெட்டதைப் புரிந்து கொண்டு, தர்ம வழியில் வாழ்ந்தால்தான் உயர முடியும், இவை அனைத்தையும் காட்டுவது வராஹ அவதாரமாகும். இதை விளக்கும் பகுதிகள் மஹாபாரதத்திலும் இருக்கின்றன. தமிழ்ச் சங்க நூலான பரிபாடலிலும் இருக்கிறது.


வராஹமானது பூமியின் மீது பரிவு கொண்டது. அந்தப் பூமியோ, கடலுக்குள் முழுகி இருந்தாள். அவளைத் தேடி, தன் கொம்பால் கடலுக்குள் குகை போல இருந்ததை முட்டித் தூக்கி நிறுத்தவே, அதற்குக் கோவிந்தன் என்ற பெயர் ஏற்பட்டது என்று மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் (346) கிருஷ்ணன் கூறுகிறான். கிருஷ்ணனது பல பெயர்களுக்கான பெயர்க் காரணத்தைக் கிருஷ்ணனே சொல்லுமிடத்தே இவ்வாறு கூறுகிறான்.


அதாவது கிருஷ்ணனே வராஹம்,


கிருஷ்ணனே, 'கோ' என்னும் குகையை அடைந்து (அவிந்தம்) அதைத் தூக்கி நிறுத்தினான், அதனால் கிருஷ்ணனே கோவிந்தன்.


நிலை நிறுத்திய பூமியில் அவனே தர்ம புருஷனாக, தர்மத்தின் காவலனாக ஆனான். அதனால் அவன் வ்ருஷாகபி

இவ்வாறு செல்கிறது சாந்திபர்வ வருணனை.


விருஷாகபி என்றாலும் ஒற்றைக் கொம்பு மிருகம் எனப்படும்.

வ்ருஷா என்றால் விருஷபம் அல்லது எருது எனப் பொருள்படும்.

கபி என்றால் கொம்பு. வ்ருஷாகபி என்றால் கொம்புள்ள எருது.

எருதுகளைப் பற்றி சொல்லும் வேதப் பாடல்கள் அவை ஆயிரம் கொம்புகள் கொண்டவை என்று வருணிக்கின்றன. ஆனால் ஒரே ஒரு கொம்பு இருந்தால் அது வ்ருஷாகபி ஆகும். அதை வராஹம் என்றே அழைத்தார்கள்.

வ்ருஷாகபியைப் பற்றிச் சொல்லும் ரிக் வேதப் பாடல் இருக்கிறது.

அதில் இந்திரனுக்கும், வ்ருஷாகபிக்கும் இருக்கும் சண்டையைப் பற்றிப் பேசப்படுகிறது. (ரிக் வேதம்-10 ஆவது மண்டலம், இந்திரன். LXXXVI.)

அதிலும் ஆரிய தஸ்யு போராட்டம் வருகிறது!!

எப்பொழுதும் இந்திரனே வென்று விடுவான். ஆனால் சோமம் என்னும் ரசத்தை உண்டவன் இந்திரனை வெல்வான் என்கிறது அந்தப் பாடல்.

இதன் உட்பொருள் என்னவென்றால், இந்திரன் என்பவன் இந்திரியங்களை, அதாவது நமது புலன்களை ஆட்டி வைக்கும் சக்தியாகும்.

புலன்களுக்கு அடிமையாகி நாம் பல தவறுகளைச் செய்கிறோம்.

அதனால் தஸ்யுக்களாக ஆகிறோம்.

இந்திரியங்களுக்கு அடிமையாகும் போது இந்திரன் வென்றவனாவான்.

அப்பொழுது தர்மம் தோற்றதாகும்,

அந்தத் தர்மம் வ்ருஷாகபி எனப்படுகிறது.

அந்த வ்ருஷாகபியானவன், சோமம் என்னும் சந்திரனை உட்கொள்ள வேண்டும்,.

சோமன் என்னும் சந்திரன் மனத்தை ஆட்டி வைப்பவன்.

'சந்த்ரமா மனசோ ஜாயத என்று வேதம் சொல்கிறது.

மனதைப் பயன் படுத்தி ஆழ்ந்து சிந்தித்தால், இந்திரியங்களிடம் அடிமைப்பட்டு கிடப்பது நமக்குப் புலனாகும். அப்பொழுது மனம் தர்மத்தின் வழி செல்ல முயலும், அப்படிபட்ட மனத்துக்கும், இந்திரியம் எனப்படும் புலன்களுக்கும் நடக்கும் சண்டையில், தர்மம் என்னும் விருஷாகபி வெல்வான். உயர்ந்த சிந்த்னை வெல்வதால் அது ஆரியன் ஆகும், தோற்றுப் போகும் புலன்கள் தஸ்யூவாகும். தோற்ற இந்திரியம், வென்ற தர்மத்துக்கும், மனதுக்கும் கட்டுப்படும். இந்தக் கருத்தே வ்ருஷாகபி குறித்த வேதக் கருத்தாகும்.

அந்த விருஷாகபி, ஒற்றைக் கொம்புள்ள வராஹமாகும். வேதம் சொல்லும் இந்தக் கருத்தை, கிருஷ்ணனுக்கு ஒப்புமை படுத்தி மஹாபாரதம் சொல்கிறது.

ராமனுக்கு ஒப்புமைப் படுத்தி, ராமனை "ஏக ஸ்ருங்கோ வராஹ:" என்று ராமாயணம் கூறுகிறது. அந்த அளவுக்கு வராஹ அவதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வராஹ அவதாரம் ஆரம்பித்த பிறகு உண்டான மனித குலமே இப்பொழுது இருக்கிறது என்பதால், தற்போது நடக்கும் காலக்கட்டத்திற்கு 'வராஹ கல்பம்' என்றே பெயர். இதைச் சங்க நூலான பரிபாடலும் தெரிவிக்கிறது.

பரிபாடல் 2 இல்,

"கேழல் திகழ் வரக் கோலமொடு பெயரிய ஊழி" என்று சொல்லப்படும் விவரம், கேழல் என்னும் பன்றியின் உருவம் (வராஹம்) கொண்டு, நீரில் முழுகிக் கிடந்த நிலத்தை வெளிக் கொணர்ந்து, அங்கு உயிர்கள் வாழ வழி செய்ததால், அந்தப் பன்றியின் பெயரைச் சேர்ந்து இந்த ஊழி பெயர் பெற்றது, அதாவது வராஹ கல்பம் என்ற பெயரைப் பெற்றது என்கிறார் இதைப் பாடிய கீரந்தையார்.

முதல் சங்கம் நடந்த இந்தியப் பெருங்கடல் பகுதியில், ரிஷப மலை இருந்தது போல, வராஹ மலை எனப்படும் பன்றி மலையும் இருந்திருக்கிறது. திருவிளையாடல் புராணத்தில், ஆலவாய்க் காண்டத்தின் ஆரம்பத்தில், 2 ஆம் ஊழியில் பல பகுதிகள் அழிந்தன என்று சொல்லும் இடத்தில், அழியாமல் நீருக்கு மேலே தெரிந்த பகுதிகளாக பன்றி மலை என்னும் வராஹ மலை இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. இன்று அது இல்லை. 3 ஆம் ஊழியின் போது அழிந்திருக்க வேண்டும். இந்தியக் கடலுக்குள்ளிலிருந்து அது ஒரு காலத்தில் எழும்பியிருக்க வேண்டும். அதனால் வராஹ மலை என்ற பெயர் பெற்றிருக்க வேண்டும்.

இவற்றின் மூலம், வராஹக் கருத்து என்பது வட இந்தியாவில் மட்டும் இருந்தது என்று சொல்ல முடியாது.

சங்கத் தமிழர்களும் அதே கருத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

ஆனால் அந்தத் தமிழர்கள் மொஹஞ்சதாரோப் பகுதியில் இருந்தவர்கள்

என்பது உண்மையானால்,

அங்கு காணப்படும் வராஹ முத்திரைகள், வராஹச், சின்னம்

ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஒன்றையாவது

தமிழ் நாட்டிலும் தொடர்ந்திருப்பார்கள் அல்லவா?

அப்படி ஒரு அடையாளமும் தமிழ் நாட்டில் காணப்படவில்லையே?

சங்கத் தமிழில் வராஹத்தைப் பேசியவர்கள், ஒரு மலைக்கு வராஹ மலை என்றே பெயரிட்டவர்கள், மொஹஞ்சதாரோவின் வராஹச் சுவடு ஒன்றைக் கூட தமிழ் நாட்டில் கொண்டு வராமல் இருந்திருப்பார்களா?

வராஹச் சின்னம் புழங்கிய மொஹஞ்சதாரோ காட்டும் நிலவரம் என்னவென்றால், ங்கிருந்த மக்கள் தமிழ் நாட்டுக்கு இடம் பெயரவில்லை என்பதே. அது மட்டுமல்ல, அந்த மக்கள் வேத முறையில் வாழ்ந்தவர்கள் என்பதைப் பறை சாற்றும் விதமாகவும் முத்திரைகள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம்.

வராஹமே, பூவராஹமாக, லக்ஷ்மி வராஹனனாக, இந்த உலகைப் பரிபாலிக்கிறான் என்பதே, பாரதம் முழுவதும் உள்ள கருத்தாகும். பல இடங்களிலும் ஆதி வராஹம் என்னும் பெயரில் தெய்வ உருவங்கள் இருக்கின்றன. வராஹத்துக்குப் பிறகுதான் மனித குலமே வந்தது, பிற அவதாரங்கள் வந்தன என்பதால் ஆதி வராஹம் என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வராஹம், தர்மத்தை நிலை நாட்டுகிறது என்பதே சாந்தி பர்வத்தில் கிருஷ்ணன் கூறுவதாகும். தர்மம் என்பதைத் தர்மச் சக்கரமாக்க் காட்டுவது வழக்கம். மொஹஞ்சதாரோவில் காணப்படும் பல ஒற்றைக் கொம்புச் சின்னங்களிலும் தர்மச் சக்கரம் இருப்பதைக் காணலாம்.


இந்த முத்திரையின் மேல்புறத்தில் சில சித்திர அமைப்புகள் உள்ளன. இவை வலது பக்கத்திலிருந்து, இட்து பக்கம் நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கம் வேத மரபில் உள்ள வழக்கமாகும். இதன் கடைசி அமைப்பு சக்கர வடிவில் இருப்பதைக் காணலாம்.

 

வராஹம் என்பது தர்மத்தின் பாதுகாவலனாக மட்டும் சொல்லப்படவில்லை. அந்த வராஹமே யக்ஞங்களில் வழிபடப்படுபவனாகவும் வேத மதம் கூறுகிறது, யக்ஞவராஹம் என்ற பெயர் வராஹத்துக்கு உண்டு. இந்த முத்திரைகளில், யக்ஞத்தில் வழிபடப்படுவது போன்ற தோற்றத்தில், இந்த மிருகத்துக்கு முன்னால் வழிபாட்டுப் பொருட்கள் காணப்படுகின்றன.

வராஹம் என்பது தர்மத்தின் காவலன் என்பதையும், இந்திரனுக்கும், விருஷாகபிக்கும் நடக்கும் போரில், விருஷாகபி வெல்வதே தர்மத்தின் வெற்றியாகும் என்பதையும் தெரிவிக்கும் வண்ணம் ஒரு முக்கிய முத்திரை ஹரப்பாவில் கிடைத்துள்ளது.3.91 செ.மீ நீளத்திலும், 1.5 முதல் 1.62 செ. மீ. அளவிலான அகலத்திலும் கிடைத்துள்ள இந்த முத்திரையின் இரு புறமும் சில உருவங்கள் இருக்கின்றன.

இதன் ஒரு புறத்தில், நாம் இப்பொழுது பேசி வந்த தர்மச் சக்கரம் போன்ற அமைப்பு மேல் பகுதியில் இருக்கிறது. அடிப்பகுதியில் யானை ஒன்று தென்படுகிறது. இடைப்பட்ட பகுதியில் பெண் போன்ற உருவத்தில் ஒருவர், புலிகள் போன்ற இரண்டு மிருகங்களை நெறித்து ஒதுக்குகிறார்.



இதே முத்திரையின் பின்புறம் இப்படி இருக்கிறது.

பத்மாசனம் போன்ற அமைப்பில் ஒருவர் தியானத்தில் இருக்கிறார். அதையடுத்து, எருது போன்ற ஒரு மிருகத்தை ஒருவர் அடக்கிக் குத்துகிறார்.

இவை இரண்டும், நாம் இதுவரை சொல்லி வந்த விருஷாகபி இந்திரன் தத்துவத்தை விளக்கும் வண்ணம் இருக்கின்றன.

முதலில் மேலே உள்ள தோற்றத்தைப் பார்ப்போம். புலன்கள் என்னும் இந்திரியங்களுக்கும், விருஷாகபிக்கும் சண்டை நடக்கிறது. இதில் இரட்டைக் கொம்புள்ள மாடு போன்ற தோற்றம் இருக்கிறது. விருஷாகபி என்னும் சொல்லில், வ்ரிஷா என்றால் விருஷபம் என்னும் ரிஷபம் அல்லது மாடு என்பதே பொருளாகும். கபி என்றால் கொம்பு. விருஷாகபி என்றால் கொம்புள்ள எருது என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் விருஷாகபி என்றால் தர்மத்தின் காவலனான வராஹம் என்பதும் ஒரு பொருளாகும் என்று பார்த்தோம்.

இந்த முத்திரையில், ஒருவன் தவக் கோலத்தில் இருக்கிறான். அதாவது புலனடக்கம் செய்து, இந்திரியங்களை வெல்ல முயலுகிறான். அதன் காரணமாக அவனுக்கும் (அவனுக்குள் இருக்கும் இந்திரியங்களுக்கும்), ரிஷபத்துக்கும் (விருஷாகபி) சண்டை நடக்கிறது.

இந்திரனும், ரிஷபமும் எதிரெதிரானவை என்ற கருத்து வாஸ்து சாஸ்திர வர்கங்களிலும் உண்டு. அது போல இந்திரனுக்கும், வருணனுக்கும் பகை.. இந்திரனுக்கும் சர்ப்பத்துக்கும் (பாம்பு) ஒற்றுமை கிடையாது என்ற வர்க அமைப்புகளும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகின்றன. இதில் இந்திரன் ஒரு திசையிலும், அதற்கு நேர் திசையில் ரிஷபம் அல்லது, வருணன் அல்லது சர்ப்பம் என்றும் அமைக்கப்படும். இவை எல்லாவற்றிலும் இந்திரன் இருப்பான். இந்திரியங்களது ஆக்கிரமிப்பை இது காட்டுவதாக உள்ளது. எதிர் திசையில், இடத்துக்கு ஏற்றாற்போல ரிஷபமோ, வருணனோ அல்லது சர்ப்பமோ அமையும். இவை காட்டும் கருத்துக்கள் ஐரோப்பாவிலும் பரவியிருந்தன என்பதைத் தக்க இடங்களில் இந்த்த் தொடரில் காணலாம்.

இந்திரனுக்கும், ரிஷபத்துக்கும் உள்ள சண்டையை மேலுள்ள முத்திரை காட்டுவதாக அமைந்துள்ளது.

இதன் அடுத்த நிலையை, இந்த முத்திரையின் பின்புறத்தில் அமைத்துள்ளார்கள்.


பின்புறம் தென்படும் இந்த அமைப்பில், கீழுள்ள யானை, ஐராவதம் என்னும் யானையைக் கொண்டுள்ள இந்திரனைக் குறிக்கிறது. அது இந்திரனுக்கு உருவகம்.

அதற்கு நேர் எதிரில், மேலே தர்மச் சக்கரம் காட்டப்பட்டுள்ளது. அது இந்திரனுக்குப் பகையான விருஷாகபியின் உருவகம் ஆகும். இவை இரண்டுக்கும் இடையே ஒரு மனிதன் அவனது ஆத்ம சக்தியைக் கொண்டு (இந்தச் சக்தி பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது) தன்னை அடக்க வரும் (இந்திரியங்களான) மிருகங்களை அடக்குகிறான்.

முடிவில் தர்ம்மே வெல்லும் என்பதைக் காட்ட, தர்மச் சக்கரம் மேல்புறம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உருவகமான ஒற்றைக் கொம்பு மிருகமான வராஹம், மொஹஞ்சதாரோ, ஹரப்பா எங்கும் கொண்டாடப்பட்டிருக்கிறது.

மொஹஞ்சதாரோவின் காலம், கிருஷ்ணன காலத்தை ஒட்டிய காலமாகும். அப்பொழுது பாரத மக்கள் வராஹத்தை வழிப்பட்டனர். வராஹமே முக்திக்கு வழி என்று அவர்கள் நினைத்தனர். வராஹ சரம ஸ்லோகம் என்ற ஒரு ஸ்லோகமும் இருந்து வந்தது. வராஹமே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே வராஹத்தின் உடலாகும் என்பதை ஒருவன் உணர்ந்து கொண்டு, அந்த வராஹத்திடம், அன்பு கொண்டு, சரணடைந்தால், சாகும் காலத்தில் உணர்விழந்து, மதியிழந்து, வராஹத்தை நினைக்கவில்லை என்றாலும் கூட, அந்த வராஹப் பெருமான் அவனை நினைப்பார். அவனுக்கு மறு பிறப்பில்லாத முக்தி அளிப்பார் என்பதே வராஹ சரம ஸ்லோகத்தின் கருத்தாகும். அதைப் பின் பற்றிய மக்களே, மொஹஞ்சதாரோ உள்ளிட்ட சிந்து சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்தனர் என்பதை வராஹ முத்திரைகள் காட்டுகின்றன.

அந்த வழிபாடு தொடர்பான போக்குவரத்துகளில், வராஹ முத்திரையைப் பயன் படுத்தியிருக்கின்றனர். அப்படி ஒரு முத்திரை குஜராத்தின் கோள தோரோவில் கிடைத்துள்ளது என்று கண்டோம்.


கோள தோரோ என்னும் பெயரைப் பாருங்கள். கோள வடிவிலான கோவில் என்று அது பொருள் படும் (கோள- கோளம் அல்லது வட்ட வடிவம்: தோரோ மொஹஞ்சதாரோ என்பதில் உள்ள தாரோ என்பதைப் போல தோரோ என்பது, டேரா எனப்படும் கோவில் என்று பொருள் படும் குஜராத்தியச் சொல்லாகத் தென்படுகிறது.)

விஷ்ணுவையும், கிருஷ்ணனையும் போற்றும் பாரத நாட்டுக்குள்தான் இந்த வராஹ முத்திரை பயணித்திருக்கிறது. இங்குதான் வேத கலாச்சாரம் இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் வருவதற்கு முன்னமேயே இங்கு வேதக் கலாச்சாரம் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். வராஹத்தை உருவ வழிபாட்டுக்குள் கொண்டுவராத காலக்கட்டமாக அது இருந்தது. அதனால் வராஹம் என்னும் மிருக உருவிலேயே அந்த தெய்வத்தை வடித்திருக்கிறார்கள்.

மொஹஞ்சதாரோ காலத்திற்குப் பிறகு, பொ.பி. 7 ஆம் நூற்றாண்டாண்டில்தான் வராஹ உருவம் மீண்டும் தென்பட ஆரம்பித்தது. அதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த உருவத்தைக் கொண்டு வந்தவர்களும், சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்தவர்கள்தான் என்பதே. இதை ஆராயும் போது, சிந்து சமவெளிப் பகுதியில் – அதிலும் குறிப்பாக மொஹஞ்சதாரோப் பகுதியில் வாழ்ந்த மக்கள் யார் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கிறது.

பொ.பி.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வராஹ உருவம் இதோ:-


ஆதிவராஹம் என்று சொல்லப்பட்ட இந்த வராஹம் கீழ்க்கண்டவாறு குர்ஜரப் பிரதிஹார அரசர்களால் வெளியிடப்பட்டது.


 

குர்ஜரப் பிரதிஹார்ர்கள் யார் என்று தேடினால், இவர்களது சரித்திரம், ராமாயண காலத்திலேயே ஆரம்பிக்கிறது. பிரதிஹார என்னும் பெயர், லக்ஷ்மணனுடன் தொடர்பு கொண்டது. காவல் புரிவோன் என்று அதற்கு அர்த்தம். லக்ஷமணன் வழியில் வந்த இவர்களைப் பற்றிய ஒரு முக்கிய செய்தியை வசிஷ்டர் எழுதியுள்ள யோக வாசிஷ்டத்தில் காணலாம். அந்தச் செய்திக்கும் தமிழ் நாட்டுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதை இந்த்த் தொடரின் தக்க தருணத்தில் காண்போம்.

ராமாயண காலத்தில் சரயு நதிக் கரையில் இருந்த இந்த மக்கள், மஹாபாரத காலத்தில் கிருஷ்ணனைத் தொடர்ந்து, வட மதுரைக்கும், பிறகு துவாரகைக்கும் வந்தனர் என்று இவர்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் கூறுகின்றன. கோகுலத்தில் கிருஷ்ணனுடன் இருந்த கோபர்களே இவர்கள் என்று குர்ஜர்ர்களுடைய வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் "The Royal Gurjars: Their contribution" என்னும் நூல் தெரிவிக்கிறது. மஹாபாரதப் போரில் இவர்கள் பாண்டவர்கள் பக்கம் போரிட்டிருக்கின்றனர்.

கிருஷ்ணன் காலத்துக்குப் பிறகு இவர்கள் எங்கே சென்றனர்?

மீண்டும் 2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சரித்திரம் தெரியவரும் வரை எங்கே இருந்தனர்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தேடினால், இவர்கள் சிந்து சமவெளிப் பகுதியில், மொஹஞ்சதாரோ அல்லது குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் பரவி வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

7 ஆம் நூற்றாண்டில் தென்பட்ட ஆதிவராஹ உருவத்தையும், ஆதி வராஹ வழிபாட்டையும் இவர்கள் செய்து வந்தவர்கள் ஆதலால், அதன் ஆரம்பத் தோற்றம் காணப்படும் மொஹஞ்சதாரோ உள்ளிட்ட சிந்து சமவெளிப் பகுதிகளில் இந்த மக்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

சிந்து சமவெளிப் பகுதியைச் சேர்ந்த ராஜஸ்தான் பகுதிகளிலும் இவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டின் ராஜஸ்தான் மாநில வெளியீட்டில், இவர்கள் பல நூற்றாண்டுகளாகவே பாரதத்தின் வட மேற்கு எல்லை வழியாக அன்னிய சக்திகள் வராமல், தடுத்து, வட மேற்கு எல்லையைப் பாதுகாத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வட மேற்குப் பகுதி, சிந்து சமவெளி நாகரிகம் வளர்ந்த மொஹஞ்சதாரோ உள்ளிட்ட பகுதியாகும்,

இவர்கள் பெயரே 'பாது காவலர்கள்" என்ற பொருள்படும் பிரதிஹாரர்கள். மஹாபாரதக் காலத்திற்குப் பின் இந்தப் பகுதியில் வாழ்ந்த குர்ஜரப் பிரதிஹாரர்கள், பாரம்பரிய வேத மதத்தைக் காத்திருக்கிறார்கள். வராஹ வழிபாட்டை விடாது பின்பற்றியிருக்கிறார்கள். தாங்கள் வசித்து வந்த வட மேற்கு பாரதம் வழியாக அன்னியப் படையெடுப்பாளர்கள் வராமல் காத்திருக்கிறார்கள்.

இவர்கள் காத்த நாடு ஆரிய வர்த்தம் என்று சொல்லும் வண்ணம் தங்களை 'ஆரியவர்த்த மஹாராஜாதி ராஜர்கள்" என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவரத்தை நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

குர்ஜர்கள் எனப்படும் இந்த மக்கள் வாழ்ந்த இடம் கூர்ஜரம் எனப்பெயர் பெற்றது

இதிலிருந்து குஜராத் என்ற பெயர் வந்தது.

இந்த குஜராத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிந்து சமவெளிக் கலாச்சாரம் இருந்திருக்கிறது.

இந்தப் படத்தில் மஞ்சள் நிற செவ்வகக் கட்டத்தில் இருப்பது ஆரியவர்த்தம்.

சிவப்பு நிற வட்டப் பகுதி, சிந்து சமவெளிப் பகுதியைக் காட்டுகிறது.


மொஹஞ்சதாரோவில் காணப்பட்ட வராஹம்,

குஜராத்தின் கென்மர் பகுதியிலும்,

கோள தோரோ பகுதியிலும் காணப்பட்ட வராஹம்,

அதே பகுதியைச் சேர்ந்த குர்ஜர மன்னர் முத்திரைகளிலும் காணப்படுகிறது என்றால்,

அந்த மக்கள் மொஹஞ்சதாரோ தொடங்கி, 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு வாழ்ந்து வந்தவர்கள் என்று தெரிகிறது.

அவர்கள் தங்களை ஆரிய அரசர்கள் என்று சொல்லிக் கொண்டதால், சிந்து சமவெளியில் இருந்தது ஆரியமே என்று தெரிகிறது.

ஆரிய-திராவிடப் போரைப் பற்றிய கதைகள் பொய்க் கதைகளே என்றும் தெரிகிறது. மஹாபாரதக் காலத்துக்கும் முன்பிருந்தே வராஹ வழிபாட்டைச் செய்து மக்களே மொஹஞ்சதாரோவிலும், ஹரப்பாவிலும், குஜராத்திலும் குடியேறியிருக்கின்றனர்.

1931 ஆம் ஆண்டு சர் ஜான் மார்ஷல் அவர்கள் முதன் முதலில் ஆராய்ந்தபோது, மொஹஞ்சதாரோவில் கண்டெடுத்த வராஹ முத்திரையைப் பாருங்கள்.

 

http://www.themeaningofvedas.com/CHAPTER%205.htm

 

குர்ஜரப் பிரதிஹார அரசர் மிஹிர் போஜர் அமைத்த வராஹத்தையும் பாருங்கள்.


http://en.wikipedia.org/wiki/Gurjara


தோற்றத்தில் இவற்றுக்குள்ளே ஒற்றுமை இருக்கிறது. ஒரே பகுதியில், ஒரே மூலத்தில் வந்த மக்களால் இவ்வாறு வடித்திருக்க முடியும்.

இந்தப் பகுதியை ஒட்டிய மத்தியப் பிரதேச உதயகிரியில் காணப்படும் வராஹம், இதை ஒட்டி அமைந்துள்ளது. இது பொ.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.


 

இது மட்டுமல்ல, குர்ஜரப் பிரதிஹார்ர்கள் ஆண்ட காலத்தில் பாரதத்தின் பல பகுதிகளிலும், இதே போன்ற அமைப்பில் வராஹ உருவங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதே தோற்றம், ஆந்திராவில் உள்ள அஹோபிலத்தில், பாறையில் செதுக்கப்பட்ட வராஹ உருவிலும் தொடர்வதைக் காணலாம்.


மொஹஞ்சதாரோவுக்கு முன்பிருந்த வராஹ வழிபாடும், மொஹஞ்சதாரோ காலத்தில் கொண்டிருந்த உருவமும், 1000 ஆண்டுகளுக்கு முன்வரையிலும் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது.

சிந்து சமவெளிக்கும் முன்பிருந்தே தொடரும் வேத கலாசாரத்தைத்தான் இது காட்டுகிறதே தவிர, ஆரியப் படையெடுப்பையோ, தமிழர் இடப்பெயர்வையோ காட்டவில்லை.

 

வராஹம் என்னும் யூனிகான் உருவம் காட்டும் விவரம் இத்துடன் முடியவில்லை.

அதன் தொடர்ச்சியை அடுத்தக் கட்டுரையில் காண்போம்,

அங்கு நாம் காணப்போகும் விவரம்,

வேத வராஹத்தைக் கிருஸ்துவம் சுவீகரித்துக் கொண்ட விவரமும்,

மேலே காட்டிய இந்திரன் – வ்ருஷாகபி முத்திரையில் உள்ள

தவ உருவம்,

எகிப்து வரை பரவிய விவரமும் ஆகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

37 கருத்துகள்:

  1. வணக்கம் ஜெயஸ்ரீ மேடம், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ‘குர்ஜர பிரதிஹார அரசர் மிஹிர் போஜர்’ என்னும் நபர் பெயரில் வரும் ‘போஜர்’ என்பது இன்று இந்தியாவில் இருக்கும் ‘போயர்’ அல்லது ‘போஜன்’ சமூக மக்களா? இந்த “போயர்கள்” வரலாற்றிலும் அவர்கள் ரஷ்யாவில் படை வீரர்களாகவே இருந்தார்கள் என கேள்விபட்டுள்ளேன், இதில் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா?

    பதிலளிநீக்கு
  2. அதுமட்டுமில்லாமல் ‘போயர்’ இனமக்கள் ரஷ்யாவிலிருந்து இமயமலை வழியாக ஒரிசா வந்து அங்கிருந்து ஆந்த்ராவிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து, பிறகு அதில் சிலர் தமிழகத்தில் இடம்பெயர்ந்து வாழ்வாதாகவும் சொல்லபடுகிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குர்ஜரப் பிரதிஹாரர்கள் தொடக்கம் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கங்கைக் கரையில் ஆரம்பிக்கிறது. இவர்கள் வேத நெறியில் வாழந்தவர்கள். ஆனால் இவர்களுக்குள் ஒரு பிரிவினர், இந்தியாவிலிருந்து, மத்திய ஐரோப்பாவுக்குச் சென்ற அடையாளம் இருக்கிறதே தவிர, ஐரோப்பா அல்லது ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வந்ததாக எந்தக் குறிப்ப்பும் இல்லை. கடந்த 30,000 வருடங்களாகவே இந்தியாவில் இருந்த மக்கள், இந்தியாவுக்குள்தான் இருக்கிறார்கள் என்பதே மரபணு ஆராய்ச்சிகள் தெள்ளத்தெளிவாக் காட்டும் செய்தியாகும். இந்தக் காலக் கட்டத்தில், இந்தியாவிலிருந்து, சில குழுக்களாக மக்கள் வெளியேறியிருக்கின்றனரே தவிர, வெளியிலிருந்து, அதாவது ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு மக்கள் வந்ததாக எந்த மரபணு ஆதாரமும் இல்லை.

      குர்ஜரப் பிரதிஹாரர்களுள் ஒரு குழு, 7000 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவை ஒட்டியுள்ளா Georgia நாட்டுக்குச் சென்றது என்று சொல்லும்படி சில ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை இந்தத் தொடரில் எழுதுவேன்.

      போஜ ராஜன் மாளுவ நாட்டை ஆண்டவன். கண்ணகிக்குக் கோவில் எடுத்த போது அங்கு ,மாளுவ மன்னனும் பங்கு பெற்றான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்த மன்னனும், இந்த மன்னனைச் சேர்ந்த பிரதிஹாரர்களும், அக்னிகுல க்ஷத்திரியர்கள் ஆவார்கள். தமிழ் நாட்டை ஆண்ட வேளிர்களும் அக்னிகுல க்ஷத்திரியர்களே. இவர்களைச் சேர்ந்த மக்கள் பலர் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டுப் பகுதிகளுக்கு வந்து குடியம்ர்ந்திருக்கிறார்கள். இவர்கள் பேசியது கொடும் தமிழ் எனப்படுவதால், இந்த விவரமும், தமிழ் மொழியே இந்தியாவெங்கும் புழங்கி வந்த பேச்சு மொழியாகும் என்பதற்கு ஒரு ஆதாரமாகும். பிற்படுத்தப்பட்டவர்கள் என்று மறைமலை அடிகள் சொன்ன 18 குடி மக்களும், இவர்கள் வழியில் வந்தவர்களே.

      நீக்கு
  3. நான் இன்று தான் இந்த பதிவினைப் படித்ததால் என்னுடைய எண்ணங்கள் இன்றே பதிவு செய்யப்படுகிறது.
    ஒற்றைக் கொம்பன் என்பது காண்டா மிருகமாக இருக்கலாமே? சில படங்களைப் பார்க்கும் போது இந்த எண்ணமே தோன்றுகிறது.
    விநாயகரை ஒற்றைக் கொம்பன் என்று கூறுகிறோமே? அந்த கோணத்தில் இந்த விஷயத்தை அணுகினார்களா ?
    நன்றி,
    ஸாரநாதன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sorry for writing in Tamil. Have to reinstall NHM.

      Rhino models also are there in Indus seals. Their body looks different. They look different from varaha (unicorn) seals. Varaha lookk horse-like. The varaha padathi continued till Vijaya nagara rulers who used Varaha coins for money.

      Take a look at the rhino pic of Indus seals here:-

      http://www.google.co.in/search?hl=en&sugexp=les%3B&gs_rn=0&gs_ri=hp&cp=25&gs_id=pc&xhr=t&q=Rhinoceres+in+Indus+seasl&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bvm=bv.1354675689,d.bmk&bpcl=39650382&biw=1366&bih=612&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=_srGUOmfDciHrAeogoGgCg

      Then take a look at Varaha (unicorn) pics here and compare to see that they are not rhino:-

      http://www.google.co.in/search?hl=en&sugexp=les%3B&gs_rn=0&gs_ri=hp&cp=7&gs_id=2x&xhr=t&q=unicorn&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bvm=bv.1354675689,d.bmk&bpcl=39650382&biw=1366&bih=612&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=G8vGUK2RJYPprQePsoG4Ag#um=1&hl=en&tbo=d&tbm=isch&sa=1&q=unicorn+in+Indus+seals&oq=unicorn+in+Indus+seals&gs_l=img.3...3909.8157.0.8508.19.17.2.0.0.0.484.5484.2-2j8j5.15.0...0.0...1c.1.bIhjpFj39JQ&pbx=1&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bvm=bv.1354675689,d.bmk&fp=a899f43790e8b966&bpcl=39650382&biw=1366&bih=612


      If this does not show up, google search images for 'Rhino in Indus seals' and 'Unicorn in Indus seals' to see for yourself.

      நீக்கு
    2. Dear Mr Saranathan,
      Some time ago you offered to translate these articles into English. If that offer is still on, I would like to use it. Kindly write here your willingness. If willing, give your email ID also, I will write to you on which articles to be translated. Your email ID will be protected and the comment having your email ID will not be published.

      நீக்கு
  4. போயர்(Boyar) அல்லது போய நாயுடு என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியோர் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
    வேடர்கள் எனும் போய நாயக்கர்களின் வம்சமாகும். இவ்வேட குடும்பம் இராமாயணம் எழுதிய கிராத் (Kirat ) வம்சாவளியான வால்மீகி குலத்தினை சார்ந்தவர்களாவர். நாயக் (Nayak) எனும் பெயர், மலைமீது வேட்டையாடும் போயர் எனும் வேடர்களின் பரம்பரை பட்டமாகும்,[13]மேலும் ஓடும் நீரில் மீன்களை வேட்டையாடும் இனமான வால்மீகி மக்கள் என அழைக்கப்படும். போய பாளையக்காரர்கள் முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கரின் ஒரு பிரிவே ஆகும். முடிராஜ் இனத்தை முத்தராசி , தேனுகோல்லு, முத்துராசன், முத்திராஜுலு, நாயக், பாண்டு, தெலுகுடு, தெலுகா, தலாரி, கோழி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கவார்,கங்கமதா,பேஸ்த, போய, கபீர், காபல்கார், கங்கைபுத்திரர், மற்றும் கோழி என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் மேலும் இம்மக்களை இந்தியாவின் வடமாநிலங்களில் கோழி (Koli) என்றும் அழைப்பர்.[14] இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளையும், முழுமையான கருநாடகப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையும் போய நாயக்கர்கள் பாளையங்களாக பிரித்து அரசாண்டது வரலாற்றுச்சுவடுகள் மூலம் புலனாகின்றது.


    போயர் (Boyar) என்றழைக்கப்படும் (Bedar) வேட்டுவ சாதி மக்கள்

    இராமாயணம் ஒரு நாயகன்(Nayaka) = கிராத் (Kirat) = போய (Boya) = வேடர் (vedar) = பேட (Beda) சமூகத்தில் பிறந்த முனிவர் வால்மீகியால் எழுதப்பட்டது.

    போயர்களின் சாதிய பெயர்கள் பின்வருமாறு அழைக்கப்படும்:-

    வேடன் = வேடர் = கண்ணப்ப குல மக்கள், பேட அல்லது போய = போயர் = பேடர் = வால்மீகி.

    போயர்கள் (Bhoyar), கவரா (Kavara) மற்றும் கோஹர்யா என்பன கோழி (Kohli ) இனத்திலிருந்து பூர்வ வழியாக வந்த இனமாகும்.
    கோழி (kolis ) இனத்தவர்கள் மகாராஷ்டிரா முழுவதுமாக இருப்பிடமாக கொண்டுள்ளனர், இவர்கள் கிராத் (kirat) வம்சவளியினறவர்,மேலும் இவர்கள் கஹர்ஸ் (Kahars) என்றும் அழைக்கபடுவர்.

    கோழி (koli) இனத்தவர்களும் கிராத் (kirat) இனத்தவர்களான இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரின் இனமும் ஒன்றே என்றும் மேலும் இவர்கள் சூரிய குலத்தினை சார்ந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

    கருநாடகாவில் பேடர் என்றும் வால்மீகி நாயக்கா என்றும் அழைப்பர் மேலும் தென் இந்தியாவில் போய டோரா எனும் வார்த்தை மருவி போயடுறு ஆக உருமாறி இறுதியில் போய எனும் சொல் வேடர்களை குறிக்க நிலைத்துவிட்டது.

    போயர்கள், நாய்டு அல்லது நாயுடு, நாயக், டோரா (ராஜா) , டோரா பிட்டா (ராஜபுத்திரர்கள்) மற்றும் வால்மீகி என்று அழைக்கபடுவர். இதை Edgar Thurston அவர்கள் சென்னை மாகாணத்திற்கான மக்கள் துகை கணக்கெடுப்பின் பொழுது அரசுக்கு அறிக்கை அளித்த பொழுது பின்வருமாறு கூறியுள்ளார். The titles of the Boyas are said to be Naidu or Nayudu, Naik, Dora, Dorabidda (children of chieftains), and Valmiki.

    போய அல்லது போயர்கள் எனும் சொல் உயர்ந்த ராஜவம்சத்தை குறிக்கும் சொல்லாக கருதப்பட்டுவந்தது.
    மகாராஷ்டிராவில் போயர்கள்

    போயர்கள் மகாராஷ்டிராவில் போய் (bhoi) என்றும் ரமொஷி (Ramoshi) என்றும் அழைக்கபடுவர், போய் என்பது தெலுங்கு வார்த்தையான போயாவில் இருந்து மருவி வந்ததாகும், மேலும் போய் இரு வேறு பிரிவு மக்களாக பிரிதரியப்ப்பட்டனர் அவை முறையே பேஸ்த மற்றும் குன்லோடு என்பவையாகும்.தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்த போய இனமக்கள் மகாபாரதத்தில் வரும் கங்கையின் புத்திரரான பீஷ்மரின் வம்சாவளியினராவர். இதில் உட்பிரிவினரான காஜலு (Kajale) மற்றும் கம்பளி (Kampale) இனத்தவர்கள் அடங்குவர்.

    for more details please visit to.....

    http://ta.wikipedia.org/s/25ue

    http://ta.wikipedia.org/s/8y4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தென்னிந்தியாவிற்கு புலம்பெயர்ந்த போய இனமக்கள் மகாபாரதத்தில் வரும் கங்கையின் புத்திரரான பீஷ்மரின் வம்சாவளியினராவர்//

      For those who claim that Dravida migrated from the Indus, this is a good retort!

      நீக்கு
  5. Chitradurga Nayaka (Karnataka)

    Socio –Economic Conditions of Ramayana Period

    The society was divided in four Varnas. The four divisions (Varna) of the society were Brahamana , Kshatriya, Vaishya and Shudra. This division was based on the guna (characteristic tendencies) and the Karma (acts) of the individuals.

    जन्मना जायते शूद्रः कर्मणा जायते द्विजः

    Janmana jayate Shudrah – Karmana Jayte Dvijah

    “At birth every child is born as Shudra. By his own Karma (action) he becomes a twice-born (dvijah). Brahaman, Kshatriya and Vaishya.

    The caste, as understood today is based on birth in particular division. It is the result of generations of people trying to preserve their knowledge and trade within limited circles, by limiting their alliances and minglings with others who follow the same pursuits for the same reasons.

    During the Ramayana period ,varna system(Varnashram Dharma) was prevalent. Vishwamitra , who was Kshatriya , was recognized as Brahmarishi.
    Why there was no caste discrimination in ancient India? read details?

    The Ramayana was written by sage Valmiki, born in a Nayaka, Kirat, Boya community.
    The Mahabharata was written by Veda Vyas,the son of Satyavati, daughter of a ferryman or fisherman, and the wandering sage Parashara.
    Maharshi Vasishta, Guru of Lord Rama, married Arundhati , not a brahmin.
    They were not brahmins.

    MY QUESTION IS HOW AND WHO DIVIDED INDIA INTO UPPER CASTES AND LOWER CASTES AND DALITHS WERE REGARDED AS UNTOUCHABLES?

    The Saraswat Brahmins claim descent from a Brahmin caste mentioned in ancient Hindu scriptures as inhabiting the Saraswati River valley. The reason for their generocity towards Saraswat Brahmins could be that many of these Valmikis were from the banks of river Saraswati in Rajastan and these Valmikis were highly aryanised. The Valmiki himself was an Indo-Aryan .

    The Karnataka Government, according to tribal welfare activists, committed a grave injustice to the original tribal people by recommending to the Union Government to include the communities and castes such as Nayaka, Valmiki and Beda under the Scheduled Tribe classification by yielding to political pressure. According to them, the inclusion of the Nayaka community in the ST category has greatly diluted the ST classification, resulting in members of this dominant community cornering most benefits of reservation.

    From History of Karnataka, it can be seen that the Valmiki people were rulers of some places such as Chitradurga, Surpur, Keladi, etc. In Karnataka the Valmiki community are also called as Nayaka, Beda, Talavara. All these people are known as Valmikis. The Beda(means Hunters), Talavar (means Natives) also use Nayak as the last names. Now Beda and Talavar communities are identified as Nayaks.

    The Bedas are the Bedars and the Bedars are Vedars. While Vedars are a subcaste of Tamil Muthuraja community, these people known as Valmikis are a subcaste of Telugu Mudiraj community today.
    Vetans = Vedars = the people of Kannappa Kula.
    Beda or Boya=Boyar = Bedar = Vedar = Valmiki

    Chitradurga region has been in existence much before the Vijayanagara empire (1300 AD), governed by local chieftains called "Nayakas". One such Chieftain by name Timmanna Nayaka rose to the rank of governor of Chitradurga under the Vijayanagara empire as a reward for his excellence in military achievements; this fort was built by him in 1562 AD. After the fall of the city of Vijayanagara in 1565, the Chitradurga family and most other central Karnataka nayakas soon declared their independence of the remnants of that empire. Later, in the 17th-18th centuries, Chitradurga became the headquaters of Bedas, until it was occupied by Haider Ali in 1799 and then annexed by the British.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. To know on Varnas read this: http://thamizhan-thiravidana.blogspot.in/2011/05/52.html

      Valmiki is not a generic name. Down the generations, some one started calling themselves as Valmik.

      நீக்கு
  6. DO YOU WANT TO KNOW MORE ABOUT, DRAVIDAN CULTURE. PLEASE READ THIS BOYA/VALMIKI/NAYAKA'S ....... It is well known fact that the Mudiraj people worship Goddess Ankamma. There is one Ankali mutt near Chitradurga. Nestling amongst a group of rugged hills, west of Chitradurga, this mutt is known for its subterranean chambers. Near the Panchalinga cave (Wonder cave) entrance, is an inscription dated 1286 A.D. executed in the reign of the Hoysala King Narasimha III. This stronly proves that these Valmiki Nayakas and Mudiraj are one and the same. This region of Tirupati and Srikalahasti is known to be the home land of Kalabhras ( the ancestors of Muthurajas ) who inveded Chola, Chera, and Pandya kingdoms. These Valmikis could be the descendants of kalabhras who are in turn are known as branch of Kalachuris of Central India.

    The term Nayaka means leader. The Nayaka community has three sub-castes namely Valmiki, Beda and Talavara. Valmiki claim direct descent from Valmiki, the author of Ramayana. Bedas practice hunting. Talavars function as messengers as well as village watchmen.NAIKADA, NAYAKA Popularly known as Palegar, Beda, Valmiki, Ramoshi Parivara etc., they are concentrated in the Chitradurga, Shimoga, Bellary and Tumkur. FOR MORE REFERENCE PLEASE VISIT TO THE FOLLWING WEBSITES: http://valmikiresearch.com/?file=Nayaka%20Valmiki.htm http://valmikiresearch.com/?file=Kirat%20Valmiki.htm# http://valmikiresearch.com/?file=Boya%20Valmiki.htm http://ta.wikipedia.org/s/25ue http://ta.wikipedia.org/s/8y4

    பதிலளிநீக்கு
  7. Boyars in South India

    The Karnataka Boyars are said to be beda/valmiki and they belongs surya vamsi (solar race)in India,from whom sprang the following seven great clans of Bedars, bearing the names of their progenitors : —

    Nishadas, who hunted tigers, bears and wild boars and ate the flesh of buffaloes.
    Sheras, who made a living by selling jungle roots, fruit and sandalwood {Sanialum album).
    Kavangriyaris, who wore long hair and had their ear-lobes bored with large holes. They subsisted on the sale of bidla {Pterocarpus marsupium) and oyster shells.
    Salikas, who were employed as day laborers in digging wells and tanks.
    Ksharakaris, who made lime and salt.
    Ansaris, who were fishermen and worked also as ferrymen.
    Sheshatardharis, who were hunters and fowlers.

    All these seven clans were distinguished by their respective gotra names or bedigd —

    Gojaldaru or Gujjar.
    Gosalru or Gurral.
    Bhadmandalkaru.
    Saranga Gunda Bahsarandlu or Sarang Gauda.
    Tayarasamantaru or Tair Samant.
    Pingal Rangamanya.
    Rajadhiraj (Maharaja).

    This elaborate organisation appears to be traditional and to have no bearing upon the present social division of the tribe.


    For further readings......

    http://en.wikipedia.org/wiki/Nayak_%28Hindu%29

    பதிலளிநீக்கு
  8. Nayak 1. (1674-1695), they founded a State, and fixed their capital at Vakinagir, two miles west of Shorapur. Pam Naik was the bravest of the dynasty and helped Sikandar Adil Shah, the last of the Bijapur Sultans, in subduing his rebel nobles and in his wars with the Generals of Aurangzeb. The Sultan, in gratitude, granted him a magnificent jagir and conferred upon him all the insignia of royalty with the titles " Gajag Bahirand Gaddi Bahari Bahadur." Pam Naik styled himself Raja, a title which has since descended to his successors. He organized the State, dividing it into provinces, over which he appointed Subedars. He was also a great builder, and raised new forts, constructed roads and tanks, and built stately temples. It was in his time that the kingdoms of Bijapur and Golconda were subdued by Aurangzeb. In his successor, Pid Naik Bahari (1695-1725 A.D.), the power of the Bedars had reached its zenith. He strongly resisted the power of Aurangzeb, and defeated the Imperial forces in pitched battles. At last the Emperor took the field in person and besieged the Bedar strong-hold of Vakingira. The fort made a galant stand, but was reduced ultimately by Zulfikarkhan, the best of Aurangzeb's Generals. It was, however, retaken by the Bedars immediately on the departure of Aurangzeb. Pid Naik removed the seat of government from Vakingira to Shorapur, which he founded on a hill. He introduced many reforms and ruled the State in greater splendour than any of his predecessors. After a glorious reign of 31 years he died in 1726 A.D. The later history of the Shorapur Rajas is blended with that of the Nizams of Hyderabad, whom they acknowledged as their suzerain lords, paying an annual tribute of 1,45,000 rupees. Though brave, they were not able rulers and were not infrequently involved in the wars of the Nizams with the Marathas and other contemporary powers. The decline of the State had already commenced and was hastened by internal dissensions, mal-administration and reckless extravagance, until, after a brief revival under the administration of Colonel Meadows Taylor, it was confiscated out account of the rebellion of the Raja '-Venkatappa Naik against the British Government (1858), and ceded to H. H. the Nizam in 1860 A.D.

    பதிலளிநீக்கு
  9. The Internal Structure,— The in-house structure of the Bedars is very intricate. This is due, partly to the large area over which they are scattered, and partly to the different social levels that have been formed among them. Thus at the highest level are the Rajas and rich landholders who have, in every respect, understood the style of higher Hindu castes, while the lowest level is occupied by the bulk of the people who adhere to their aboriginal customs and usages and have few scruples in diet — eating beef, as well as cat and other in clean animals. The following endogamous groups are found among them : —

    badar or Naikulu (Valmika) Bedars.
    Tanged Bedars.
    Mangala Bedars.
    Chakla Bedars.
    Neech Bedars.
    Basavi Bedars.
    Ramoshi Bedars.
    Jas Bedars.
    Bedars (proper).

    Of these, the Naikulu sub-tribe, called also Naikulu Maklus, claim the highest rank and decline to hold any spiritual union either of food or of matrimony with the other sub-tribes. To this sub-tribe the Bedar Rajas of Shorapur and other principalities belong. The Mangala Bedars are barbers and the Chakla Bedars washermen to the Bedar tribes and have, in effect of their occupation, formed separate groups. Neech Bedars are known to abstain from eating fowl or drinking shendi, the fermented sap of the wild date palm. They do not touch the shendi tree, nor sit on a mat made of its leaves. Basavi Bedars are the progeny of Basavis, or Bedar girls dedicated to the gods and brought up, subsequently, as prostitutes. They form a separate community comprising (1) children of unions, by regular marriage, between the sons and daughters of Basavis, (2) the children of Basatis themselves.' While among other Bedar tribes Basavis are made in pursuance of vows ot Ancient family customs, among Basavi Bedars there is a rule under which each family is said to be bound to offer up one of its girls to this gods as Basavi. The daughters of Basaois, for whom husbands cannot be procured in their community, are wedded to swords or idols. On an auspicious day, the girl to be dedicated is taken, m procession, to the temple, bearing on her head a lighted lamp. After she has been made to hang a garland round the sword or the idol, a tali (mangalsutra) is tied round her neck and her marriage with the sword or the idol is complete. She is, thenceforward, allowed to consort with any man provided that he is not of a lower caste },han herself. A Basaoi girl is entitled to share, equally with her brothers, the property of her father or mother. The euphemistic n,-me Basavi originally denoted girls who were dedicated to Ba^vanna, the deified founder of the Lingayit sect, but the title is, at the present day, borne by a girl dedicated to any god.

    பதிலளிநீக்கு
  10. போ(B)னி அமரேஸ்வரர் கோயில்

    தெரிந்த ஊர் தெரியாத செய்தி -2 விசாக பட்டிணம்

    போய (போயர்) ராஜாக்கள் கட்டியதாகத் தெரிகிறது, இக்கோயில். நாக அரசர்கள் மிகவும் போற்றி வணங்கியதாகவும் இருந்துள்ளது. போயர்களின் அரசாட்சி காலம் 8ஆம் நூற்றாண்டு. மீண்டும் 1533 ஆம் ஆண்டு கிருஷ்ண தேவராயரின் மாமனார் ப்ரதாப ருத்கஜபதி வம்சத்திடமிருந்து அரசை மீட்ட போயர்கள், மிகவும் நன்கு அரசாட்சி செய்தனர். 8ஆம் நூற்றாண்டின் போது அவர்கள் அரசாண்டபோது பொம்மக்கர வம்சம் என்றே பெயர் இருந்தது. அவர்களது முதல் அரசி, சோழ வம்சத்தைச் சேர்ந்தவர்! (திருபுவன மஹாதேவி) . அவர் நந்திவர்மன் III ஆம் மன்னனின் , பிரதானியான ராஜ மல்ல தேவராயன் என்பவரின் மகள்! இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் ஓரிடத்தில் கிருபாள போயா என்ற பெயர் காணப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போயர்கள், தங்கள் முன்னோர்கள் பெயரை கல்வெட்டாக பொறித்தார்கள் என யூகிக்கலாம்.

    http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_-_2

    அழகான ஆற்றங்கரையில் ஆ(யா)ரும் அறியாமல் அமரேஸ்வரர்

    விநாயகர் முதல் துர்க்கை வரை ஆராதிக்கப்பட வேண்டிய தெய்வங்களை இப்படி வெள்ளைச் சுண்ணத்தை அப்பி அடித்து அழகான முகங்களை மறைத்துவிட்டதை சொல்லி விளக்கினோம். ஒவ்வொரு சிலையின் மேலும் உள்ள சுண்ணத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்தினையும், பிறகு அவர்களுக்கும் செய்யவேண்டிய பூசை விதானத்தையும் விளக்கிச் சொன்னோம். உள்ளே கோவிலில் மேற்பாகக் கல்லில் கல்வெட்டுகள் தெலுங்கில் பதிவாகி உள்ளன. தெலுங்கு ஏறத்தாழ படிக்கும் வகையில் இருந்தாலும் சரியாக படியெடுக்கமுடியவில்லை. தெரிந்தவரை தெலுங்கு மலை ராஜாக்களான (B)(போயர்)/போயர்களின் தலைவன் பெயர் ஒன்று (த்ருபால போயராஜா) காணப்படுகின்றது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (B)போயர்கள் இங்குள்ள மலைப்பகுதிகளில் நேர்த்தியாக ஆண்டுகொண்டிருந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள். போயர்கள் வேதசாத்திரம் பயின்றவர்கள் என்பதும், இந்த காலகட்டத்தில் அவர்கள் ஆங்காங்கே கோயில்கள் கட்டியதும், அவைகள் கல்வெட்டில் பதிவாகி உள்ளது. அத்துடன் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டின மாவட்டங்களில் கோவில்களுக்கு போயராஜாக்கள் நிவேதனம் அளித்தவை (முக்கால்வாசி, ஆடுகள் அளித்தவைதான்) பதினோராம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் காணப்பட்டு ஏ.எஸ்.ஐ பதிவு செய்துள்ளது (South Indian Inscription series IV,735,765,766,780,781, series V,156,172,188, series VI, 96, 905,910,921,etc.)

    எப்படி இருந்தாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கோவில் இங்கே இருந்திருக்கவேண்டும். அதுவும், ஆற்றங்கரையில் கோயில் ஆகமவிதிகளுக்கேற்ப கட்டப்பட்ட கோயில். உள்ளே ஆவுடையாருடன் அமரேஸ்வரர் கோயில் கொண்டிருந்ததால் அம்பாளுக்குத் தனிக் கோயில் ஆதி காலத்தில் கட்டப்படுவதில்லை.

    வெளியே இரண்டு கற்சிலைகளை எங்கள் பார்வைக்காக நிமிர்த்தி எடுத்துவைத்திருந்தனர். சிலைகளைப் பார்த்ததும் நிஜமாகவே அதிர்ந்து போனோம். அற்புதமான கலைப் பொக்கிஷங்கள். யாரும் அறியாமல் கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஒன்று லக்ஷ்மி நாராயணர், இன்னொருவர் பிட்சாடணர்.

    http://vamsadhara.blogspot.in/2009/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  11. We Kirant Mongol Race

    Kiranti people are very ancient tribe in history .actually nobody khows when they came in nepal because these people are mentioned in ancient religion book of hindu like BED,PURAN,MAHABHART,SWASTHANI BRATA KATHA,HIMAVAT KHANDA ETC.These people are also mentioned in ancient Greek history, Chinese history and holy book of Sikh guru nanak.In Mahabharata once lord siba was went to nepal disguising himself as kiranti hunter and lord siba was again having incarnation of kiranti hunter and hunting around pasupatinath in SLESHMANTAK BAN.This can approved that kiranti people were already in nepal since ancient time actually no body’s knows the fact. According to Mahabharata when vimsen defeated the seven kirant king in northern India that time to make him happy beautiful kirant ladys were bringing him mountain medicine,gold,silver and other precious things.it is also mentioned that beautiful kiranti kanya was digging the medicine in mountain with golden khurpi{a kind of tool.}Kiranti NEW YEAR it’s been already THE YEAR 5063 which is considered The kiranti king yalamber stablish that new year which is called YELE SAMBAT. In wallo kirant of kiranti people used to celebrate this new year in the time of MAGHE SIRI PANCHAMI OR SUKLA PANCHAMI because these days are always considered lucky day for kiranti people.

    HOLIGRATIVE PSYCHO-HISTORY OF INDIA
    V. George Mathew
    Holigrative Psychology Institute, Thiruvananthapuram – 695 583
    After having long period of study v.george Mathew found that mongoloied people have very active and aggressive gene.He tried to explain in incient hindu book which is mention about chetri were not Aryan they were mongol people.Who always sacrifice himself as warrior.Probably later within indo Aryan people claim themselves as chetri but it’s not true.Bramhin people who married another cast and birth of that child automatically dawn his position from bramhin to chetri which is really ridicules.In that case VICHCHU PRAPANNA CHARYE is right.He said pure chetri were mongoloied kirant but it was criticized by many kiranti’s.Origion of jat{chetri} people was from the jata of lord siba who born for to rule the world which is written in bed.In fact lord siba himself was kiranti anciestor because of that pure chetri tribe in ancient time might be mongoloied people.Same thing west view mongoloied people as yellow and red colour like red Indians who are mongoloied people.In bed it is written that colour of chetri is RED.

    By Chandra Prakash Sunuwar
    Dhobighat, Lalitpur, Kathmandu
    Email: cpsunuwar@hotmail.com

    http://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=9&cad=rja&ved=0CFMQFjAI&url=http%3A%2F%2Fwww.menyangbo.com%2FWe%2520Kirant%2520Mongol%2520Race.docx&ei=IPxGUeWgK4HtrAexv4Aw&usg=AFQjCNEv8bCpPRge0M1SkvLvspLeSUdagg&bvm=bv.43828540,d.bmk

    பதிலளிநீக்கு
  12. A boyar, also spelled boya (meaning Hunter) is the name of a caste. A leader of a group or Head of Territory. Boya is called as Naidu. The Boyar community constitute the Non-orthodox Kshatriya or Warrior class of India. They are all believed to have originated from an ancient people called Kirata. Boya caste corresponds to Kiratas of Sanskrit writers, the Warriors, Hunters and Mountaineers. As the names indicate, they belonged to one of the hill tribes who subsisted by hunting and tending cattle.
    Boyars are Non-orthodox Kshatriya or Vratya Kshatriya according to Manu's script. They are called 'Boya' also known as descendants of Kirata (Sanskrit). Kiratas are described in the Kirata-Parva and Vana-Parva of Mahabharata and they were considered so powerful that even Lord Shiva is said to have taken the form of a Kirata. Kiratas and Shakas were considered to be Kshatriyas of good birth, according to Mahabharat. These communities were included among the suryavamshi or chandravamshi kshatriyas in the wake of battle, a generic term in Sanskrit literature for people who lived in the mountains, particularly in the Himalayas and North-East India and who were Mongoloid in origin.Manu’s script clearly mentioned ancient chetri were pure mongoloied non aryan and their origion is from north east india where used to be kirant deshe{land of kirant} and origionally were kiranti.This can clearly describe that ancient chetri were pure mongoloied not aryan but only stolen that posion by this aryan people.Like KHAN TITLE from mongolia has been stolen by this pakistani and some indian people.Khan is mongolian word.Whatever the past but present chetries are not mongoloied people they are clearly indo Aryan people. George mathew tried to explain about mongoloied people like saying like this in his book,
    Southern Mongoloids are of short stature. Northern Mongoloids are tall probably as a result of mixing with the Nordic race. Mongoloids have round faces. They have relatively short arms and legs. They have heavily padded face and slanting eyes. They spread north and through the Bering straight crossed over to the Americas . Another branch spread south and populated south east Asia. Around 10,000 B.C. they started pouring into India also through Asam. This migration continued till very recent times. They spread west along the sub-Himalayan valleys and they also spread south near the Bay of Bengal coastlands.


    By Chandra Prakash Sunuwar
    Dhobighat, Lalitpur, Kathmandu
    Email: cpsunuwar@hotmail.com

    http://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=9&cad=rja&ved=0CFMQFjAI&url=http%3A%2F%2Fwww.menyangbo.com%2FWe%2520Kirant%2520Mongol%2520Race.docx&ei=IPxGUeWgK4HtrAexv4Aw&usg=AFQjCNEv8bCpPRge0M1SkvLvspLeSUdagg&bvm=bv.43828540,d.bmk

    பதிலளிநீக்கு
  13. These Mongoloids (after considerable mixing with natives of south east Asia) mixed with the different local Indianoid populations in varying degrees. The Mongoloid race has a typical sex-wise division of occupational roles. Females do all the work and males specialise in fight. The yellow race also has a very clear ingroup-outgroup mechanism. They are very close to those whom they perceive as members of their ingroup. They have no hesitation in killing or fighting those whom they perceive as outgroup. They are fierce warriors and once they start fighting they forget their own personal safety (Bruce Lee and Jackie Chaan in films). They fight sacrificing themselves for group protection. The British recognised this characteristic and formed the Gurkha regiment. They tend to eat everything. Local Indian tribes with a great deal of Mongoloid mix became aggressive tribes and those with less Mongoloid mix show more docile and lazy characteristics.when the physical work comes chetries and bramhins scared and step back. past time they used to say Bramhin shouldn’t plough the land and carry Doko.This is purely nothing because of religion this is because of lazy characterstic.When the other cast plough and harvest the crops he is there to eat first, think yourself what shame. These chetri and Brahmins people who made Nepal the begging bowl and beggar for all neplese.We earn the reputation of Nepal but they destroy our reputation wherever they go. They never had done good things for Nepal and neplese people. Whenever the opportunity comes they first to say they are nepali and ready to sell neplese,gurkhas name in foreign country and finally destroy reputation with bad manner.They are useless, talkative,greedy and selfish people. I hope indigenous people of Nepal can identify this disease and restore their ancient Mongol pride in Nepal .

    By Chandra Prakash Sunuwar
    Dhobighat, Lalitpur, Kathmandu
    Email: cpsunuwar@hotmail.com

    http://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=9&cad=rja&ved=0CFMQFjAI&url=http%3A%2F%2Fwww.menyangbo.com%2FWe%2520Kirant%2520Mongol%2520Race.docx&ei=IPxGUeWgK4HtrAexv4Aw&usg=AFQjCNEv8bCpPRge0M1SkvLvspLeSUdagg&bvm=bv.43828540,d.bmk

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. வேளிர்களோட மரபணு சௌஹன் பரமர்ஸ் போன்றவர்களிடம் உள்ளது என்று படித்தேன் அப்படியென்றால் ராஜபுத்திரர்களும் யதுவின் வழி வந்தவர்களா நண்பர் ஒருவர் கூறினார் ராஜபுத்திரர்களும் யாதவர்களும் சொந்தங்கள் என்று ஐயத்தை தெளிவிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 89 ஆவது கட்டுரையில் இப்பொழுதுதான் இதைப் பற்றி எழுதினேன். அங்கு படிக்கவும். சௌஹான், பரமர், கூர்ஜர பிரதிஹாரர் போல வேளிரும் அக்கினி குல க்ஷத்திரியர்கள் என்று சொல்லும்படிதான் ஆதாரங்கள் இருக்கின்றன. இதனால் யாதவர்களும் வேளிர்களும் சொந்தங்கள் என்றோ அல்லது யாதவர்களும் ராஜபுத்திரர்களும் சொந்தங்கள் என்றோ சொல்ல ஆதாரமில்லை.

      நான் இப்படிச் சொல்கிறேனே என்று தவறாக நினைகக் வேண்டாம். யாதவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதோ ஒரு obsession இருக்கிறது என்று நினைக்கிறேன். யாதவர்களைப் பற்றிப் பல முறை கருத்துரை இட்டு விட்டேன். மீண்டும் கூறுகிறேன், யது என்பவன் இருந்தது 8000 ஆண்டுகளுக்கு முன்னால். அவன் வழி வந்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணனது நேரடித் தொடர்பு மக்கள் பலரும் அப்பொழுதே அழிந்து விட்டார்கள்.

      ராஜபுத்திரர்களுக்கும் வட இந்திய யாதவர்களுக்கும் மரபணுத் தொடர்பு இருக்கலாம். அது மண உறவால் ஏற்பட்டிருக்காது. பூர்வத்தில் ஒரே கூட்டமாக இருந்ததால் அது ஏற்பட்டிருக்கலாம். அது போல வட இந்திய யாதவர்களுக்கும், தென்னிந்திய யாதவ்ர்களுக்கு மரபணு தொடர்பு இருக்கலாம். இது மண உறவால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

      இதற்கு மரபணு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. சரித்திர பூர்வமாக, பல குழுக்கள் அன்று எவ்வாறு செயல் பட்டனவோ அதன் அடிப்படையில் இப்படிச் சொல்கிறேன். பொதுவாகவே தொழில் ரீதியாக ஒரே இனமாக அன்று கருதினார்கள். உதாரணமாக வட இந்திய யாதவரும், தென்னிந்திய ஆயரும் ஒருவருகொருவர் பெண் கொடுத்துப் பெண் வாங்கிய வழக்கம் இருந்திருக்க வேண்டும். பார்ப்பனர்களிடையேயும் இப்படி மண உறவு இருந்திருக்கிறது. இதனால் மரபணுக்கள் வட இந்தியா- தென்னிந்தியா என்று கலந்திருக்கின்றன.

      இன்னொரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். பிரிடிஷ்காரன்தான் முதன் முதலில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று பாகுபடுத்தினான். அதைப் பயன்படுத்திக் கொண்ட திராவிடவாதிகள் பல மக்களையும் கீழ் ஜாதி என்ற போர்வையில் மனம் குன்ற வைத்து விட்டனர். எல்லா ஜாதிக்குமே சமுதாயத்தில் ஒரு பங்கும், அதன் மூலம் முக்கியத்துவமும் இருந்திருக்கிறது. அதை உணர்ந்து ஒரு குழுவாகத்தான் 200 வருடங்கள் வரை நம் மக்கள் வாழ்ந்தனர். ஒரு ஜாதியின் மேன்மை என்பது அதன் மக்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கத்தில் இருக்கிறது. இதைத் தெரிந்து கொள்ள திருக்குறளின் குடிமை அதிகாரத்தைப் படிக்கவும்.

      இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால், யாதவர்கள் மேன்மையானவர்களே. உயிருக்கு ஆதாரமான பால் கொடுக்கும் பசுகக்ளைப் பராமரிப்பவர்கள். அவர்களை முன்னிட்டுத்தான் பொங்கல் பண்டிகையே எழுந்த்து. அது ஆயர் பண்டிகை. கிருஷ்ணனைச் சேர்ந்தவர்கள் கொண்டாடியது. அவர்கள் தாங்கள் பார்த்திராத ராஜ புத்திரர்களுடன் தொடர்பைத் தேடி அதன் மூலம் ஒரு பெருமையைத் தேட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

      இங்கு இன்னொன்றும் கூறிக் கொள்கிறேன். இந்தப் பிறப்பு என்பது இப்பொழுதைக்குத்தான். இந்தப் பிறப்பில் ராஜாவாகப் பிறப்பவன் அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கலாம். இந்தப் பிறவியில் பார்ப்பனனாகப் பிறப்பவன் அடுத்த பிறவியில் வேறு எந்த ஜாதியிலும் பிறக்கலாம். அது போலவே இன்றைக்குக் கீழ் ஜாதியில் பிறந்து விட்டோம் என்று நினைக்கிறவன், அடுத்த பிறவியில் பார்ப்பனனாகப் பிறக்கலாம்.

      என்னுடைய ஆங்கில வலைத்தளத்தில் இந்தக் கட்டுரையையும் அதில் நான் இட்டுள்ள கருத்துரைகளையும் படிக்கவும்.

      http://jayasreesaranathan.blogspot.in/2013/02/how-difficult-is-life-of-brahmana.html

      நீக்கு
    2. மேடம் நான் ஒரு யாதவ சமுதாயத்தை சேர்ந்தவன் இல்லை நான் ஒரு தேவர் கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவன் அனால் எனக்கு யாதவ சமுதாயத்தில் நெறைய நண்பர்கள் உண்டு உலகத்தின் முத்த குடி மக்கள் தேவர்களும் யாதவர்களும் என்பது தான் உண்மை ...//யாதவர்கள் மேன்மையானவர் ஆனால் பர்பனரோடும் இராஜபுத்திரரோடும் ஒப்பிடமுடியதவர்கள் என்பதனை நாசுக்காக குறிப்பிடுள்ளிர்கள்//.. ஆனால் உண்மையில் யாதவர்கள் பிரமணர்களையும் ராஜபுதிரர்களையும் விடவும் மேன்மையானவர்கள் தான் பகவான் கிருஷ்ணரே அவர்கள் சமுகத்தில் பிறந்தார்இன்றும் அவர்கள் தங்களை கிருஷ்ணரின் பரம்பரை என்று தங்களை அறிமுகபடுத்துகிறார்கள் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட பல ரிஷிகளும் யாதவர்கள் தான்... மேலும் அவர்கள் இந்தியா முழுவதும் பல இடங்களின் ஆட்சி புரிந்துள்ளர்கள்..சிந்து சமவெளியிலும் துவாரகையிலும் நாகரிகம் கண்டவர்கள் முதன் முதலாக உழைத்து உண்ணும் நாகரீகத்தை உலகிற்கு உணர்த்திவர்கள் யாதவர்கள். அது மட்டுமல்ல தங்களது உழைப்பான ஆடு, மாடு மேய்த்தலில், விலங்குகளோ விலங்கு குணம் கொண்ட கயவர்களோ வந்து தங்களது கால்நடைச் செல்வங்களை அபகரிக்க
      வந்தால், அவர்கள் உயிருடன் திரும்பாத அளவிற்கு தங்களது வீரத்தைக் காட்டியவர்கள் தான் யாதவ சிங்கங்கள்.வம்புக்கு போகமாட்டோம் வந்தால் விடமாட்டோம் ! என்பது யாதவர்களுக்கு மட்டுமே சொந்தமான பழமொழியாகும். மனித இனத்தின் ஒவ்வொரு நாகரீகமும் கோனார்களின் வழியாக வந்தவைகளே என்பதை உண்மை வரலாறு சொல்லும்

      நீக்கு
    3. நல்லது ஆனால்,

      //யாதவர்கள் மேன்மையானவர் ஆனால் பர்பனரோடும் இராஜபுத்திரரோடும் ஒப்பிடமுடியதவர்கள் என்பதனை நாசுக்காக குறிப்பிடுள்ளிர்கள்//..

      என்னும் இப்படிப்பட்டப் பேச்சுகளுக்கு இந்தத் தளம் இடமல்ல. நீங்கள்தான் குறிப்பிட்ட சமூகத்தினர் உயர்ந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள எப்படி எப்படியெல்லாமோ முயற்சி செய்து எழுதினீர்கள். ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தத் தளமும், என்னுடைய ஆராய்ச்சியும், யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்று கண்டு பிடிக்க எழுந்ததல்ல. நம்மிடம் இருக்கும் தரவுகள் + விஞ்ஞானத் தரவுகள் அடிப்படையில் நம் சரித்திரம் என்ன, யார் யார் எங்கெங்கே இருந்தார்கள், எப்படிப் பிரிந்தார்கள் என்பதை அறிவதற்கு மட்டுமே. இங்கு அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுங்கள், அதற்கு உதவும் தரவுகளைத் தாருங்கள். ஆனால் உங்கள் பெயர், மற்றும் இன்னொரு பெயரில் எழுதுபவர், யாதவன் உசத்தியா, யாதவன் அப்பொழுதே இருந்தான் அல்லவா என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

      மீண்டும் சொல்கிறேன். யது ஒரு தனி மனிதன். அவன் வம்சாவளியில் வந்தவர்கள் இன்றைக்கு யாதவர் என்ற பெயரில் இருக்கும் அனைவருமே என்பதற்கு அறிவியல் - மரபணு ஆதாரம் கிடையாது. வரலாற்று ஆதாரமும் கிடையாது. வரலாற்று ஆதாரம் என்றால் யாரெல்லாம் கால்நடைப் பராமரிப்பில் ஈடுபட்டார்களோ அவர்கெளெல்லாம் யாதவர்கள், ஆயர்கள், கோனார்கள், கோவலர்கள், பொதுவர்கள், இடையர்கள்....என்றெல்லாம் அழைக்கப்பட்டார்கள். இந்தப் பெயர்கள் உருவாக்கத்துக்கு காரணங்கள் இருக்கி்ன்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படிப் பல பெயர்கள் ஆயர்களுக்கு இருக்கின்றன. துவாரகையிலேயே 4 பெயர்களில் யாதவர்கள் இருக்கிறார்கள். அது முதலில் பிறப்பினால் ஏற்படவில்லை. வேறு தொழிலைச் செய்தவர், ஆயர் தொழிலுக்கு வந்து ஆயனாகலாம். அப்படிப் பலர் ஆகியிருக்கிறார்கள். அதன் அடிப்படியில்தான் நாம் எழுத முடியுமே தவிர, நீங்கள் விரும்பிகிறவாறு எழுத முடியாது.

      ஆனால் மரபணு ஆராய்ச்சியில் இந்திய மக்கள் அனைவருமே 60,000 வருடங்களுக்கு முந்தின காலக்கட்டம் வரை செல்கிறார்கள் என்பதே மரபணு ஆராய்ச்சி காட்டும் உண்மை, அதில் நான் யாதவன், அவன் ராஜ புத்திரன், நீ பார்ப்பனன் என்று சொல்லிக் கொண்டு நான் உயர்ந்தவனா, நீ உயர்ந்தவனா போட்டி போட்டால் அது அறிவியல் ரீதியில் அபத்தமானது.

      மேலும் நீங்கள் ராஜ புத்திரர்களோடு உறவா என்றும் கேட்கவே தான் ஏன் இப்படி அடையாளம் தேடுகிறீர்கள் என்றேன். யாதவர்கள் உயர்ந்தவர்கள் என்று இப்பொழுது எழுதியிருக்கிறீர்கள் அல்லவா, அதை விட்டு விட்டு ராஜபுத்திரர்களுடன் ஏன் தொடர்பைத் தேடுகிறீர்கள்? அதற்கு நான் பதில் கொடுத்தால் என் நோக்கத்தையே கேவலப்படுத்துகிறீர்கள். அவ்வாறு நினைப்பது சரியல்ல என்று நான் சொன்னதற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

      இப்படிப்பட்ட கருத்துரைகள் வந்தால், அவை பிரசுரிக்கப்படமாட்டாது. அறிவு விருத்திக்கு வருபவர்கள் இந்தக் கட்டுரைகளைப் படிக்கட்டும். உள் நோக்கம் உடையவர்களுக்கு என்ன எழுதியும் பயனில்லை.

      நீக்கு
    4. தொழில் ரீதியாக உலகின் ஆரம்பத் தொழில் எது என்றால், கல்லைக் கொண்டு செய்யும் தொழில்தான். ஆஃப்ரிக்காவில் லட்சம் வருடங்களுக்கு முன்பே அது தோன்றி விட்டது. வாழ இருப்பிடம் வேண்டி, கல்லை உடைத்து மறைப்புகள் ஏற்படுத்திக் கொண்டான் மனிதன். குகை மனிதனிலிருந்து வெளி வந்தவுடன் ஏற்பட்ட தொழில் இது. மயன் பெயர் இதில் அடிபடுகிறது. உலகளாவிய அளவில் கல் தச்சர் தொழிலே ஆதி தொழில். அதற்குப் பரவலாக ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் கம்மாளர்கள், விஸ்வகர்மாக்கள் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் ஆதி மக்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களுடன் சண்டை போட்டுக் கொள்ளுங்கள்.

      கல் தச்சனுக்குப் பிறகு, குயவன் தொழில். அதற்கப்புறம் தான் விலங்குகளைப் பழக்குதல். அதில் கால் நடைப் பராமரிப்பு வருகிறது.

      நீக்கு
    5. மனித இனம் முதலில் தோன்றி நாகரீக வளர்ச்சி அடைந்தது சிந்துசமவெளியிலா அல்லது லெமூரிய கண்டத்திலா இல்லை ஆப்ரிக்க கண்டத்திலா இதனை தங்கள் ஆய்வில் சரியாக குறிப்பிட முடியுமா ..? பதிலில் அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிடுங்கள்

      நீக்கு
    6. மூன்றுமே இல்லை. இன்றைய மனித இனத்தின் வளர்ச்சி, மற்றும் பரவலை ஆதாரத்துடன் காட்ட வேண்டும் என்றால், 25,000 ஆண்டுகளுக்கு முன் சுந்தாலாந்து என்னும், இந்தோனேசியப் பகுதி, தென்னன் தேசம், சாகத்தீவு என்று நான் இந்தத் தொடரில் காட்டி வரும் தென் இந்தியத் தீவுகள் (இன்று இவை முழுகி விட்டன) ஆகிய தென் கிழக்குப் பகுதிகளில்தான் தோன்றியது. இந்தத் தொடர் முழுவதும் படித்து வருபவராக இருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள். முழுமையாகப் படிக்கவில்லையென்றாலும், கடைசியாக இட்டுள்ள் 10 கட்டுரைகளையும் படிக்கவும்.

      இவற்றின் அடிப்படையே இன்றைக்கு -இன்றைக்கு என்றால் இந்த மாதம், போன மாதம் என்ற ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வுகளால் நிரூபிக்ககூடியது.
      உடனடி படித்தலுக்கு எனது ஆங்கிலக் கட்டுரைகளை இங்கு படிக்கவும்.

      ”Mu to Lemuria & Kumari-Kandam to Sumeria. (Part-2”):-


      http://jayasreesaranathan.blogspot.in/2012/12/mu-to-lemuria-kumari-kandam-to-sumeria_21.html

      “Asians (Indians & Chinese) shared same genetic origin with Native Americans.” :-

      http://jayasreesaranathan.blogspot.in/2013/01/asians-indians-chinese-shared-same.html

      இதே போன்ற கட்டுரையை திரு ராஜாராமன் அவர்கள் எழுதினதை இங்கு படிக்கவும். அந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் ஒரு படம் போட்டிருப்பார், அங்குதான் 25,000 ஆண்டுகளுக்கு முன்னால், நிரூபிக்ககூடிய மனித இனம் தொடங்கியது.

      http://folks.co.in/blog/2013/01/01/indo-europeans-3-noahs-animals-march/


      என் ஆங்கில வலைத்தளத்தில் பல கட்டுரைகள் உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும். சமீபத்தில் நான் எழுதி வரும் மனித பாஷை பற்றிய தொடரை திரு ராஜாராமன், திரு டேவிட் ஃப்ராலி (இவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்) போன்ற அறிஞர்களுக்கு அனுப்பி விவாதி்த்து வருகிறேன். அந்தக் கட்டுரையில் நான் எடுத்துச் செல்லும் திசையில்தான் அடுத்த 50 ஆண்டுகளில் ஆராய்ச்சிகள் நடக்கும். ஆனால் ஒன்று, மொழி வெறியும், இன வெறியும், ஜாதி வெறியும் கொண்ட தமிழன் படித்தால் - அவன் அந்தக் கட்டுரைகளைப் புரிந்துக் கொள்ளவில்லையென்றால், கெடுதிதான் என்று வாசகர்கள் வாதிடுகிறார்கள். தமிழன் அறிவாளி என்று நான் நம்புகிறேன்.

      அந்தக் கட்டுரை இங்கே:-

      Hanuman and Sita conversed in Madhura language (Spoken language of ancient India –part 3):-

      http://jayasreesaranathan.blogspot.in/2013/04/hanuman-and-sita-conversed-in-madhura.html

      நீக்கு
  16. //இன்றைக்குக் கீழ் ஜாதியில் பிறந்து விட்டோம் என்று நினைக்கிறவன், அடுத்த பிறவியில் பார்ப்பனனாகப் பிறக்கலாம். .//நீங்கள் தானே இப்படி கூறியிருக்கிறிர்கள் நீங்கள்தான் குறிப்பிட்ட சமூகத்தினர் உயர்ந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைப் போன்றவர்கள் அவ்வாறு சொல்லவேதான் உதாரணத்துக்கு அவ்வாறு சொன்னேன். நான் குறிப்பிட்ட கட்டுரையில் எனது கருத்துரைகளைப் படிக்கவில்லை அல்லது புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது.

      நீக்கு
  17. உலகில் முதலில் உருவான மொழி எது ? சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடையிலான தொடர்பு என்ன ? தமிழ் மொழியிலிருந்து சமஸ்கிருதம் மொழி உருவானதா இல்லை தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததா ? மேலும் சமஸ்கிருதம் பேசும் மொழியாக இல்லாமல் மந்திரங்களுக்காக மட்டுமே பயன்பட்ட காரணம் என்ன? ஒலிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் (காயத்ரி மந்திரங்கள்) ஏன் சம்ஸ்கிருத மொழியினில் மட்டும் உருவாக்க பட்டுள்ளன ? தமிழ் மொழியில் மந்திரங்கள் ஒலிப்பு முறைகளை உருவாக்கியவர்கள் யார் ? அவர்கள் பேசிய மொழி என்ன? எதனால் வழிபாட்டு முறைகளில் சமஸ்கிருதம் இன்றும் முன்னிலை படுத்தபடுகிறது. அப்படி என்ன ஒரு தனித்துவம் சமஸ்கிருதத்திற்கு உள்ளது சற்று விரிவாக விளக்கவும்...

    பதிலளிநீக்கு
  18. //அந்த மக்கள் மொஹஞ்சதாரோ தொடங்கி, 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கு வாழ்ந்து வந்தவர்கள் என்று தெரிகிறது.
    அவர்கள் தங்களை ஆரிய அரசர்கள் என்று சொல்லிக் கொண்டதால், சிந்து சமவெளியில் இருந்தது ஆரியமே என்று தெரிகிறது// ஆரியர்கள் சிந்து சமவெளியின் பூர்விவீகம் கொண்டவர்கள் எனில் ஆரியன் என்பவன் யார் ? அவன் உலகில் எங்கு எப்படி யார் மூலம் தோன்றினான் ? பிரமனர்களுக்கும் ஆரியர்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன ? தமிழன் உலகில் வேறு எங்கு தோன்றினான்..? அவனது நாகரீகம் எப்படி உருவானது? ஆரியனின் நாகரிகத்தினை தமிழன் பின்பற்றினானா ? திராவிடம் என்பது எதனால் தவறான கருத்து ? உலகின் மூத்த குடிமக்கள் யார் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இரண்டு கருத்துரைக்கும் சேர்த்துச் சொல்கிறேன். இந்த வலைத்தளத்தின் வலப்பக்கம் எல்லா கட்டுரைகளுக்குமான எண்களுடன் தலைப்புகளும் இருக்கின்றன. அவற்றில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலைத் தேடிப் படிக்கலாம். அல்லது முதலிலிருந்து வரிசையாகவும் படிக்கலாம். மேலும் வலப்பக்கம் மேலே, ‘பிராம்மணன் வந்தேறிய ஆரியனா?’ என்னும் தலைப்பில் 5 வீடியோக்களுக்கான இணைப்புகள் இருக்கின்றன. அவற்றிலும் உங்கள் கேள்விகளுக்கு விடை இருக்கின்றன. இடையில் ஏதேனும் சந்தேகம் வந்தால் பொறுமையாக பிற கட்டுரைகள், அவற்றில் நான் இட்டுள்ள விளக்கக் கருத்துரைகள் ஆகியவற்றைப் படிக்கவும், அவற்றிலேயே விடை கிடைத்து விடும்.

      இவை தவிர எனது ஆங்கில வலைத்தளத்தை இங்கே படிக்கவும்.
      http://jayasreesaranathan.blogspot.in/

      அதன் search box இல் "Aryan invasion” என்று எழுதிக் கிளிக் செய்யவும். பல கட்டுரைகள் கிடைக்கும், அவற்றியும் படிக்கவும், இன்னும் இந்தத் தமிழ்த் தொடரில் எழுதாத விவரங்களை அவற்றில் படிக்கலாம்.

      சமஸ்க்ருதம், மந்திரம் ஆகியவற்றுக்கும் இந்தத் தமிழ்த் தளத்திலேயே கட்டுரைகள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் இந்த இணைப்புகளில் மேலும் விவரங்களைப் படிக்கலாம்.


      Can mantras be chanted in Tamil in temples?

      http://jayasreesaranathan.blogspot.in/2008/03/can-mantras-be-chanted-in-tamil-in.html

      The power of mantras

      http://jayasreesaranathan.blogspot.in/2008/10/power-of-mantras.html


      கீழ்க்காணும் இணைப்பில் உள்ள கட்டுரையில் கோவில் பூஜை, மந்திர ஒலி உள்ளிட்ட விவரங்களை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்த விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே பல இணைப்புக் கட்டுரைகள் உள்ளன. அவற்றையும் படிக்கவும்.

      இந்த இணைப்பில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளரது வலைத்தளத்தில் என் கட்டுரைகள் பிரசுரமாகும். அவ்வாறு பிரசுரமான ஒரு கட்டுரையின் கருத்துரைப் பகுதியில், உருவ வழிபாடு பற்றி எழுதியுள்ளேன்.

      http://frontiers-of-anthropology.blogspot.in/2013/04/origin-of-easter-from-ishtar-and-ishtar_3.html

      சமஸ்க்ருதமும், வேதமும், வேத வழிபாடும் தவழ்ந்து விளையாடினது சங்கத் தமிழ் காலத்தில்தான்.
      http://jayasreesaranathan.blogspot.in/2010/02/ac-to-be-installed-in-garbha-graha-of.html


      சமீபத்தில் எழுதிய இந்தக் கட்டுரைகளையும் படிக்கவும்.

      http://jayasreesaranathan.blogspot.in/2013/03/valmiki-of-ramayana-knew-tamil-spoken.html


      http://jayasreesaranathan.blogspot.in/2013/04/tamil-was-human-tongue-or-manushya.html

      மொத்தத்தையும் படித்து விட்டு சந்தேகம் வந்தால் கேட்கவும். ஏனெனில் இவற்றில் எழக்கூடிய எந்த சந்தேகத்துக்கும், அடுத்த அல்லது வேறு ஒரு கட்டுரையில் விடை கொடுத்திருப்பேன். இந்தப் பதில்களை எழுதும் என்னுடைய நேரம் மிச்சமாகும். என் நேரத்தை புதிய கட்டுரை ஆக்கத்துக்குப் பயன் படுத்துவேன்.

      இவை அனைத்தையும் படித்து முடிக்க குறைந்த்து ஒரு மாதமாகவாவது ஆகும்.

      நீக்கு
  19. //25,000 ஆண்டுகளுக்கு முன் சுந்தாலாந்து என்னும், இந்தோனேசியப் பகுதி, தென்னன் தேசம், சாகத்தீவு என்று நான் இந்தத் தொடரில் காட்டி வரும் தென் இந்தியத் தீவுகள் (இன்று இவை முழுகி விட்டன) ஆகிய தென் கிழக்குப் பகுதிகளில்தான் தோன்றியது// தங்களுடைய இக்கருத்து முற்றிலும் தவறானது. இதனை புதிய தொல்பொருள் ஆய்வுகள் கடந்த ஆண்டே நிருபித்துள்ளன. உலகில் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என இஸ்ரேல் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆதரத்துடன் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகளை தாங்கள் அறியவில்லையா..?? உங்களின் ஆய்வுக்கட்டுரையின் இந்த அடிப்படையான செய்தியினை தாங்கள் குறிப்பிடாதது ஏன் ?? இதனை அடிப்படையாக கொண்டு ஆய்வுகள் மாற்றப்பட்டால் பழைய கோட்பாடுகள் உடைந்து புதிய கருத்துகள் உருவாக அதிக வாய்ப்புள்ளதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புதிய தொல்பொருள் ஆய்வுகள் கடந்த ஆண்டே நிருபித்துள்ளன//

      தொல் பொருள் ஆய்வுகளைக் கொண்டு நீங்கள் பழமையை நிரூபிக்க விரும்பினால், ஏன் மேற்கு ஆசியாவுக்குப் போகிறீர்கள்? சென்னைக்கு அருகில் அத்திரம்பாக்கத்துச் செல்லுங்கள். 15 லட்சம் வருடங்களுக்கு முன்பே அங்கு மக்கள் நன்றாகவே வாழ்ந்த தொல் பொருட்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்பதைத தமிழ் நாட்டவரான நீங்கள் அறியவில்லையா?

      இங்கே படிக்கவும்.

      http://www.telegraphindia.com/1110325/jsp/frontpage/story_13763075.ஜ்ச்ப்

      ******

      //உலகில் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என இஸ்ரேல் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆதரத்துடன் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகளை தாங்கள் அறியவில்லையா..??//

      உலகின் முதல் மனிதன் யார், எங்கே இருந்தான். நானும் ஆதாரம் தருகிறேன். 2.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பே.
      என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் படிக்கவும்:-


      http://jayasreesaranathan.blogspot.in/search/label/Creation?updated-max=2012-12-15T13:23:00%2B05:30&max-results=20&start=13&by-date=false

      நீக்கு
    2. அத்திரம்பாக்கம் தொல் பொருள் ஆராய்ச்சி பற்றிய செய்தி

      http://www.telegraphindia.com/1110325/jsp/frontpage/story_13763075.jsp

      நீக்கு
  20. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக மனித இனம் உண்டானது. இவையெல்லாம் ஊகமான செய்திகள் அல்ல. உடற்கூறியல், உடலியக்கவியல், உயிர்வேதியியல், இரத்த வகை ஒற்றுமை, மரபணுவியல், தடவியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சி, கதிரியக்கவியல் போன்ற பல்வேறு அறிவியல்கள் வழி கண்டறிந்த உண்மைகள். நீங்கள் எப்படி உலகின் முதல் மனிதன் 2.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பே வாழ்ந்தான் என குறிப்பிடுகிறீர்கள் ....? 15 லட்சம் வருடங்களுக்கு முன்பே சென்னைக்கு அருகில் அத்திரம்பாக்கத்தில் மக்கள் நன்றாகவே வாழ்ந்தார்கள் என எப்படி உங்களால் துணிந்து கூற முடிகிறது ..? வெறும் நான்கு லட்சம் ஆண்டுகளில் மனிதன் நாகரீக நிலைக்கு முன்னேறி விடுகிறானா..? 4500 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனித இனத்துக்கு மதம் கிடையாது.பின் எங்கிருந்து எப்படி அம்மக்கள் நாகரீகத்தினையும் பெற்று நன்கு வாழ்ந்திருக்க முடியும் என குறிப்பிடுகிறீர்கள் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் எப்படி உலகின் முதல் மனிதன் 2.8 பில்லியன் வருடங்களுக்கு முன்பே வாழ்ந்தான் என குறிப்பிடுகிறீர்கள் ....? 15 லட்சம் வருடங்களுக்கு முன்பே சென்னைக்கு அருகில் அத்திரம்பாக்கத்தில் மக்கள் நன்றாகவே வாழ்ந்தார்கள் என எப்படி உங்களால் துணிந்து கூற முடிகிறது ..? வெறும் நான்கு லட்சம் ஆண்டுகளில் மனிதன் நாகரீக நிலைக்கு முன்னேறி விடுகிறானா..? //


      என் கருத்துரையில் இணைப்புகள் கொடுத்துள்ளேன். அவற்றைப் படிக்காமல் கேட்கிறீர்களே? அவை ஆராய்ச்சியாளர் கருத்துக்கள். ஆராய்ச்சியின் விளைவான கருத்துக்கள் .

      //4500 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனித இனத்துக்கு மதம் கிடையாது.பின் எங்கிருந்து எப்படி அம்மக்கள் நாகரீகத்தினையும் பெற்று நன்கு வாழ்ந்திருக்க முடியும் என குறிப்பிடுகிறீர்கள் ? //

      I am just fed up, எல்லாக் கட்டுரைகளையும் படிங்கள் என்று சொல்கிறேனே, படிக்காமல் ஏன் கேட்கிறீர்கள்? எந்தக் கேள்விக்கும் கட்டுரையிலோ அல்லது கருத்துரையிலோ பதில் இருக்கிறது என்கிறேனே. தமிழ்ச் சங்கத்தின் காலமே 11,000 ஆண்டுகளுக்கு முன் சென்று விடுகிறது. அதை ஆரம்பித்தவரும், அரங்கேறும் பாடல்களைச் சங்கத் தோடு அணிந்த காது கொடுத்துக் கேட்டவரும் இறையானர் எனப்படும் சிவ பெருமான். அவ்வாறு இருக்க 4500 ஆண்டுகளுக்கு முன் வரை மதம் கிடையாது என்கிறீர்களே, அது திராவிடவாதக் கருத்து. யாதவன் என்ற பெயரைக் கொண்ட நீங்கள் எப்பொழுது கிருஷ்ணன் விளக்கிய வேத மதத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ளப் போகிறீர்கள்? இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணன் காலமே 5000 ஆண்டுகளுக்கு முன் சென்று விடுகிறது. 1000 க்கும் மேல் என் ஆங்கில வலைத்தளத்தில் கட்டுரைகள் இருக்கின்றன. படியுங்கள்.

      நீக்கு
  21. 'kankrej' இன மாடுகள் குஜராத்தில் இருக்கின்றன. அவை இந்த சீல்களில் உள்ள விலங்கு போலவே இருக்கும். kanmer -- kankrej : ???

    பதிலளிநீக்கு