புதன், 17 அக்டோபர், 2012

110. பாரதம் முதல் எகிப்து வரை பரவிய பித்ரு சடங்குகள்.

 

எழுத்துக்கள் வேறு, கண்ணெழுத்துக்கள் வேறு. எழுத்துக்களைச் சேர்த்து ஒரு சொல் உருவாக்க வேண்டும், ஆனால் கண்ணெழுத்துக்களைப் பொறுத்தமட்டில், அதன் வடிவமே ஒரு சொல்லைக் குறிப்பதாக இருக்கும், அதைப் பார்த்த மாத்திரத்தில், அது குறிக்கும் சொல்லையோ, பொருளையோ புரிந்து கொள்ள முடியும், அப்படிப்பட்ட கண்ணெழுத்துக்களே சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன என்று சிலப்பதிகாரச் சான்றுகள் வாயிலாக முந்தின கட்டுரையில் அறிந்தோம், ட்ரூயிடுகளது எழுத்துக்களும் அப்படிப்பட்ட கண்ணெழுத்துக்ளே என்பது நமது கருத்து. இந்த்க் கண்ணெழுத்துக்களது ஆரம்பம் சிந்து சமவெளியிலும், அதற்கு முன் பாரதமெங்கும் இருந்து வந்த வேத மதத்திலும் இருந்தது.

 

ட்ரூயிடுகளது எழுத்து என்பது 20 வகைக் கோடுகளாகத்தான் இருக்கின்றன என்றும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மரத்தைக் குறிக்கின்றன என்பதுமே பழைய அயர்லாந்து வழக்கில் இருந்து வந்திருக்கிறது, ஆனால் அவை சொல் எழுத்துக்களே என்று பொ.பி. 14 ஆம் நூற்றாண்டில் கிருஸ்துவப் பாதிரிமார்களால் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் கோடுகளையே விதம் விதமாக அமைத்து அவை ஒவ்வொன்றும் ஒரு எழுத்து அல்லது சொல் என்று சொல்லும் பலிமோட் புத்தகம் (BOOK OF BALLYMOTE)  உருவாக்கப்பட்டது.



Fig 1


மதமாற்றக் கொள்கையே முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ள கிருஸ்துவம் அன்றும், இன்றும் செய்து வரும் முதல் வேலை, ஒரு கலாசாரத்தை அழிப்பதும் அதன் முதல்படியாக அந்தக் கலாசாரத்தின் மொழியையும், நூல்களையும் திரிப்பதே ஆகும். கெல்டுகளையும், ட்ரூயிடுகளையும் அழித்து, அவர்கள் கலாசாரத்தைக் கபளீகரம் செய்ததன் ஒரு அங்கமே ஓஅம் கண்ணெழுத்துக்களை ஒரு மொழியாக இவர்களே உருவாக்கியது. அப்படிபட்ட வழக்கம் இன்றும் தொடர்ந்து வருவதை, இந்தியாவின் வட கிழக்கில் உள்ள போடோ இன மக்களை மதமாற்றம் செய்து வருவதிலும் காணலாம். போடோ மக்களில் பெரும்பாலானோரை கிருஸ்துவர்களாக ஆக்கியது மட்டுமல்லாமல்,அவர்கள் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாகக் கூறி, அவர்களுக்கும், எந்த இந்திய மக்களுக்கும் சம்பந்தம் இல்லாத லத்தீன் மொழி எழுத்தில் போடோ மொழியை எழுதச் செய்து வருகிறார்கள். (http://en.wikipedia.org/wiki/National_Democratic_Front_of_Bodoland )


இதே வழிமுறையை அன்றே பின்பற்றி, பழமையான கெல்டுகள்ட்ரூயிடுகள் கலாசாரத்தை அழித்தும், அதை மாற்றியும் அமைத்துக் கிருஸ்துவக் கருத்தாக ஆக்கிக் கொண்டார்கள். ட்ரூயிட் கண்ணெழுத்துக்களை, ஒரு மொழி என்று மாற்றினார்கள். கிருஸ்துவத்தில் சொந்த சிந்தனையால் எந்தக் குறியீடும் உருவாக்கப்படவில்லை என்று சொல்லும் வண்ணம், ட்ரினிடி என்னும், கிருஸ்துவ முக்கோணத்தையும் பழைய யூதர் மரபிலிருந்து எடுத்துக் கொண்டார்கள். அதற்கு விளக்கம் தர உருவ வழிபாடுகள் செய்யும் கிழக்கத்திய மதங்களிலிருந்து கருத்துக்களை எடுத்துக் கொண்டார்கள். அவற்றுக்குத் தங்கள் போக்கில் விளக்கம் கொடுத்து எழுதவும் தவறவில்லை. அப்படி எழுந்த கிருஸ்துவ முக்கோணம் (TRINITY) பொ.பி 170 ஆம் வருடம் உருவாக்கப்பட்ட்து. அதை உருவாக்கிய THEOPHILUS OF ANTIOCH என்பவர் ஈரான், ஈராக் பகுதிகளில் பிறந்தவர். உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் செய்து வந்தவர். பின்னாளில் யூதர்களுடைய பழைய ஏற்பாட்டில் கவரப்பட்டு, தான் அறிந்திருந்த பல கடவுள் வழிபாட்டுக் கருத்துக்களில் பெற்ற தத்துவ அறிவையும் இணைத்து கிருஸ்துவ முக்கோணத்தை உருவாக்கினார். அதன் மும்முனைகளும், கடவுள், அவரது வார்த்தை, அவரது அறிவு என்று விளக்கம் அளித்தார். இது வேதமதக் கருத்தாகும். வேத மதத்தில் பரப்பிரும்மம் என்பது ஆதியான ஒரே கடவுள். அவன் ஓம் என்னும் வார்த்தையால் அறியப்படுபவன், அவனது வித் என்னும் வேத அறிவால், உலகங்கள் படைக்கப்பட்டன. இந்தக் கருத்தை எடுத்துக் கொண்டு தியோஃபைலஸ் கிருஸ்துவ முக்கோணத்தை அமைத்தாலும், நாளடைவில் அது வேறு விளக்கங்களுடன் உருமாறி விட்டது.



Fig 2


அந்த முக்கோணத்தைத் தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று ஆக்கி விட்டார்கள். இதில் பரிசுத்த ஆவி என்பது கடவுள் என்னும் கருத்தாக்கம் உருவானது. அந்தக் கருத்தைச் சொல்லும் இடத்தில் சாவிலிருந்து ஏசுவை எழுப்பினது அந்தப் பரிசுத்த ஆவி என்பது நமக்குக் கிடைக்கும் ஒரு முக்கியக் கருத்தாகும். ஏனெனில் இறந்தவர்களுக்கும் முக்கோண அமைப்புக்கும் வேத மதத்தில் ஒரு தொடர்பு உண்டு.


அதே தொடர்பை எகிப்து நாட்டின் 'சாவுக்குப் பின் வாழ்வு' (LIFE AFTER DEATH) என்னும் கருத்திலும் காணலாம். அதே கருத்து, சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாகக் கிடைத்துள்ள எலாம் சின்னத்திலும் கிடைத்துள்ளது. அதே கருத்து ட்ரூயிடுகளது கருத்தாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதை, பலிமோட் புத்தகம் காட்டும் குறியீடுகள் தெரிவிக்கின்றன.

இவற்றை விளக்க, பலிமோட் புத்தகம் ஓஅம் எழுத்து என்று காட்டும் இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்.

 


Fig 3

இதன் அடியில் சதுரம், வட்டம், நான்காகப் பிரிக்கப்பட்ட வட்டம் என மூன்று வடிவங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு மேலே ஓஅம் என்று எழுத்துக்களை ஒரு பாதிரியார் உருவாக்கியுள்ளனர்  அவற்றை எழுத்து என்று ஒத்துக் கொண்டால், அடியில் உள்ள சதுரம், வட்டங்கள் ஆகியவை கண்ணெழுத்துக்கள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்.

 

ஏனெனில் இந்தக் கண்ணெழுத்துக்கள் அமைப்பில் ஒரு சின்னம் ஈரான் நாட்டில் ஜிராஃப்ட் (JIROFT)  என்னுமிடத்தில் கிடைத்துள்ளது.


 


Fig 4

http://archaeologynewsnetwork.blogspot.in/2011/01/archaeologists-may-have-found-5000-year.html#.UHwfGobK6y8


5000 வருடங்களுக்கு முந்தினதாகக் கருதப்படும் இதில் வட்டங்களும், சதுரங்களும், செவ்வகங்களும் இருக்கின்றன. இது ஒரு மொழியாக இருக்கலாம் என்று 5 வேறு வேறு ஐரோப்பிய மொழிகளை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்,

இப்படிப்பட்டச் சின்னங்கள் எகிப்து நாட்டின் பாப்பிரஸ் ஏடுகளிலும் காணப்படுகின்றன. பொ.மு 1320 இல் எழுதப்பட்ட பாப்பிரஸ் அனானா (PAPYRUS ANANA) என்பதில் வட்டம், முக்கோணம், சதுரம் என்னும் ஜியோமிதி வடிவங்களும், அவற்றிக்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருப்பதாக, ஜேம்ஸ் சர்ச்வார்ட் (JAMES CHURCHWARD) என்பவர் தனது நூலான 'THE LOST CONTINENT OF MU'  என்னும் நூலில் தெரிவிக்கிறார்.

 


Fig 5

 

எகிப்திய பாரம்பரியத்தில் அவர் காட்டும் இந்த வடிவங்கள் அனைத்துமே ஒருவர் இறந்த பின் பேசப்படுகிறது. இவற்றைப் பற்றிக் கூறும் இடங்களில் ஆத்மாவுக்கு அழிவில்லை என்றும், ஒருவன் இறந்த பின்னும் அவனது ஆத்மா வாழ்கின்றது என்றும், சூரியன், நக்ஷத்திரங்கள் வாழும் காலத்தைத் தாண்டியும் ஆத்மா வாழ்கின்றது என்றும் எகிப்திய பாப்பிரஸில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

http://books.google.co.in/books?id=NsaVQahQm44C&pg=PA140&lpg=PA140&dq=papyrus+anana&source=bl&ots=lA8V4yVAHp&sig=iIVdJB89XCD7-jmFw-r1qEG-lOA&hl=en&sa=X&ei=ypZyULjgA9GzrAfVtYHoAw&sqi=2&ved=0CDoQ6AEwBA#v=onepage&q=papyrus%20anana&f=false

ட்ரினிடி என்னும் முக்கோணத்திலும், பரிசுத்த ஆவி என்பது இறப்பிலிருந்தோ அல்லது இறப்புக்குப் பிறகோ ஒருவனை அழைத்துச் செல்கிறது என்று பேசப்படுகிறது.

(The eighth chapter of Paul's letter to the Romans, which contains many complex formulations of the relationship between God, Christ, and Spirit, including "the Spirit of him who raised Jesus from the dead,"[Rom 8:11] "all who are led by the Spirit of God are sons of God,"[8:14–17] and "the Spirit intercedes for the saints according to the will of God."[8:26–27]

http://en.wikipedia.org/wiki/Trinity )

 

இதில் ஆச்சரியமான விவரம் என்னவென்றால், முக்கோணமும், அதனுடன் வரும் சதுரம், மற்றும் வட்டமும் வேத மரபில், இறப்புக்குப் பின் ஆத்மாவை வழிப்படுத்தச் சொல்லும் மந்திரங்களில் வருவது. அந்த ஜியோமிதி வடிவங்களை ஆராய்வதற்கு முன் இறப்புக்குப்பின் என்ன நடக்கிறது என்று வேத மதம் கூறுவதை அறிந்து கொண்டால், அந்த வடிவங்களது அர்த்தம் எளிதில் விளங்கும். 


இறப்பினால் ஒருவனுக்கு பூத உடல் அழிந்து பிரேத உடல் உருவாகிறது என்பது வேத மதக் கருத்து. இறந்த 12 ஆவது நாள் அந்தப் பிரேத உடல் மறைகிறது. இறந்தவுடன் பூத உடலையும், 12 ஆவது நாள் பிரேத உடலையும் விட்ட ஆத்மா தன் முன்னோருடன் இணைகிறது. அதை 'சபிண்டி' அல்லது 'சபிண்டீகரணம்' என்பார்கள்.


ஒரு ஆத்மா பிறப்பெடுக்க 12 மாதங்கள் ஆகின்றன. அந்த ஆத்மா இறப்பின் மூலம் உடலை விட்டு நீங்கிய பின்னர் 12 நாட்களில் தான் முன்பு இருந்த நிலைக்கு வருகிறது. 12 மாதம் என்பது 12 நாட்களுக்கு இணையாகச் சொல்லப்படுகிறது. பிறப்பெடுக்கும் போது, அந்த ஆத்மா, மழை மூலமாகப் பூமிக்குள் சென்று, செடிகளால் உறிஞ்சப்படும் நீருடன் ஏதேனும் ஒரு செடிக்குள் நுழைகிறது. பிறகு அந்தச் செடியின் காய் அல்லது கனியில் நிலை பெறுகிறது. அந்தக் காய் அல்லது கனியை, ஒரு மனிதன் (ஆண்) உண்ணும் போது, அவனது உணவுக் குழாய் வழியாகச் சென்று, முடிவில் அவனது விந்தணுவில் நிலை கொள்கிறது. இது வரை அந்த ஆத்மாவுக்கு எந்த வலியும், கர்மவினைப்பயனும் ஏற்படாது.


அந்த ஆணினது விந்தணுவில் அந்த ஆத்மா 2 மாதங்கள் இருக்கும். அதற்குப் பிறகு அது ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் நுழையும் போது, ஒரு உயிராகப் பிறக்கிறது. ஆத்மா வேறு, உயிர் வேறு. ஆத்மாவுக்கு உணவுடன் தொடர்பு ஏற்படும் போது உயிர் உண்டாகிறது. அதாவது ஆணின் விந்தணு, பெண்ணணுவான சினை முட்டையில் கலந்தவுடன் வளருகிறது. CELL DIVISION  என்னும் வளர்ச்சிக்குக் காரணம், பெண் கர்ப்பப்பையிலிருந்து உணவு கிடைக்க ஆரம்பிக்கிறது. தாய் இடும் அன்னம் அங்கேயே தொடங்குகிறது.


அன்ன சம்பந்தம் வந்தவுடன் உயிர் வந்து விடுகிறது. அன்னத்தால் உயிர் வளர்கிறது. ஆத்மா பெறும் முதல் அன்னம், திட ரூபத்தில் இருப்பதில்லை. அன்னத்தின் நுட்பச் சத்துக்கள், உருவமில்லாத ரூபத்தில், திரவ ரூபத்தில் அதற்குக் கிடைக்கிறது. அந்தச் சத்து, தாய் உண்ட அன்னத்திலிருந்து கிடைக்கிறது. அந்த அன்னம் நிலமும், நீரும் சேர்ந்ததால் கிடைக்கிறது. இதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலைச் சிறிது எட்டிப்பார்த்து விட்டு, தமிழ் மரபிலும் வேதக் கருத்தே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு மேலே தொடரலாம்.


"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

உண்டி முதற்றே உயிரின் பிண்டம்

உணவெனப்படுவது நிலத்தின் நீரே.

நீரு நிலனும் புணரி யோரீண்

டுடம்பு உயிரும் படைத்திசினோரே."

என்று குடபுலவியனார் (பு.நா. 18) கூறுகிறார்.

 

பிண்டம் என்பது பிண்ட் என்னும் சமஸ்க்ருதச் சொல்லிலிருந்து உருவானது. இதைப் பிடி என்றும் சொல்வார்கள். பிண்டம் என்பதற்குச் சேர்த்தல் என்று பொருள். பிடித்தல் என்றாலும், ஒன்றாக இணைத்தல் அல்லது உணவின் தொகுப்பு என்று பொருள். ஆத்மாவுடன் உணவு சேரும் போது அதற்கு உயிர் வருகிறது. அந்த உணவு உடலாக வளருகிறது. இதையே மணிமேகலையும் (10-90) " மக்கள் யாக்கை உணவின்  பிண்டம்" என்று கூறுகிறது.


உயிர் இருந்தால்தான் ஐம்பூதங்களால் கிடைக்கும் சக்திகளைப் பெற முடியும், அதைக் கொண்டு ஐம்பொறிகளை இயக்க முடியும். ஆத்மாவுக்கு எல்லா சக்தியும் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்ட உருவம் தேவை. அதைப் பெற, ஒருவன் பிறப்பதற்கு முன் தாயின் கர்ப்பத்திலிருந்து உணவை எடுத்துக் கொண்டு பிண்ட ரூபத்தில் இருக்கிறான். அவன் இறந்த பின்னர் பிண்டம் என்னும் உணவுக் கோளம் மூலமாக அவனுக்கு உணவிட்டு அந்த ஆத்மாவின் உயிர்த் தொடர்பை அறுகாமல் வைத்திருப்பதே இறந்தவர்க்குச் செய்யும் சடங்காக வேத மதத்தில் இருக்கிறது.


இதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலும் இருக்கிறது. "புன் மேல் வைத்த இன்சிறு பிண்டம்" (பு.நா. 234) என்று தர்ப்பைப் புல் மீது வேள் எவ்விக்கு அவன் மனைவி பிண்டம் வைக்கிறாள்.


நிலனும், நீரும் சேருமிடத்து உணவு உண்டாகிறது. காய்ந்த நிலத்தில் மழை பெய்தவுடன் செடிகள் முளைப்பதால், நிலத்தில் உணவுப்பொருள் இருக்கிறது என்பது தெரிகிறது. நிலத்துடன்  நீர் சேர்ந்தால்தான் அது உயிரைக் கொடுக்கத்தக்க உணவாக ஆக முடியும். இதைச் சொல்லும் குடபுலவியனார், நீரற்ற நிலம் பயனற்றது. எனவே நீர் வளத்துடன் கூடிய நிலத்தை அரசர்கள் பரிசாகக் கொடுத்து, இறந்த பின் தாம் செல்லும் உலகத்துச் செல்வம் என அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் பெறுவர் என்கிறார். ஒருவர் மற்றொருவருக்கு உணவு கொடுக்கும் போது, உயிர் தழைக்கக் காரணமாகிறார். அதனால் தான் இறந்த பின்னும், அதாவது பூத உடலில் உயிரை இழந்த பின்னும், மேலுலகில் உயிருடன் இருக்க இந்த உணவுத்தானம் உதவுகிறது.


தாயின் கர்ப்பத்தில் 10 மாதங்கள் வளரும் பிண்ட உடலானது, தாயின் உணவு மூலமாகப் பஞ்ச பூதங்களிலிருந்தும் அவ்வவற்றின் சத்தை எடுத்துக் கொண்டு வளர்கிறது. முழு உருவம் பெற்ற பின் இந்த உலகில் பிறக்கிறது.


முடிவில் இறக்கும் போது. ஆத்மா அழிவதில்லை. அது உடலை விட்டு வெளியேறி விடுகிறது. உணவால் ஏற்பட்ட உடலைத் தீக்கிரையாக்குகின்றனர். அல்லது புதைக்கின்றனர். வேத மரபில் இயற்கை மரணமாக இருந்தால் எரித்தலும், அகால மரணமாக இருந்தால் புதைத்தலும் வழக்கமாக இருக்கிறது. உடலை எரிக்கும் போது, உணவால் ஆன உடல் சாம்பலாகிறது ஆனால், அதனுடைய பிரேத உடல் சாவதில்லை.


பிரேத உடல் என்றால் என்ன என்று ஆராய்ந்தால், அதைப் பின்வருமாறு எளிதாக விளக்கலாம். ஒரு மரக்கட்டையை எரிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்,. அது சாம்பலாகி விடும், ஆனால் எரியும் போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும். எந்தப் பொருளும் அழிவதில்லை. எந்த ஒரு பொருளும் ஒரு நிலையிலிருந்து, மற்றொரு நிலைக்கு உருமாற்றம் அடைகிறது என்னும் இயற்கைக் கோட்பாட்டின் அடிப்படையில், அதன் சில பகுதிகள் சாம்பலாகியும், பிற பகுதிகள் வாயு ரூபத்திலும் உரு மாற்றம் அடைகின்றன.


அது போல ஒருவன் இறந்த பிறகு, அவனது உடலை எரித்தால், அது சாம்பலானாலும், அவனது உடல் திசுக்களில் உள்ள வேதிப் பொருட்கள் வாயு ரூபத்தில் உருமாறுகின்றன. அல்லது அறிவியல் அறியாத ஏதோ ஒரு உருமாற்றம் நடக்கிறது. உணவுடன் (பிண்டத்துடன்) தொடர்புடைய அப்படிப்பட்ட உருமாற்றத்தை பிரேத சரீரம் என்று வேத மதம் அழைக்கிறது.


எரித்த சாம்பலைக் கடலிலோ அல்லது ஓடும் நதியிலோ கரைத்து விடுகிறார்கள். இதனால் திட உருவில் மீதம் இருக்கும் பகுதிகள் பல பில்லியன்களில் ஒரு பங்கு என்ற அளவில் இயற்கையில் கரைந்து விடுகிறது. ஆனால் வாயு ரூபத்திலும், வேறு ஏதோ ரூபத்திலும் இருக்கும் அவனது உடல் கூறுகள் இன்னும் காற்றில் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் வரை இயற்கையின் சமன்பாடு பாதிக்கப்படுகிறது. இயற்கை மாசு படுகிறது. அந்த மாசைத் 'தீட்டு' என்கிறார்கள். இயற்கையின் சமன்பாடும், மாசில்லா நிலையும் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதே வேத மதத்தின் குறிக்கோள். 


தீட்டு என்பது பிற இடங்களிலும் சொல்லப்படுகிறது. பெண்களது மாதவிடாயைத் தீட்டு என்பார்கள். அதற்குக் காரணம், மாத விடாயின் போது, பெண்ணின் கருப்பையில் கருத்தரிக்காமல் இறந்து போன சினை முட்டை அவளது உடலை விட்டு வெளியேறுகிறது. ஒரு உயிரை உண்டாக்கக்கூடிய சக்தி  படைத்த சினை முட்டை இறந்து போவதால், அது வெளிப்படுத்தும் அல்லது உருமாறும் நிலையானது, நம்மால் காண இயலாத வாயு அல்லது வேறு கதிர்கள் ரூபத்தில் இருக்கலாம். அதனால் நம்மைச் சுற்றியுள்ள சூழலில் இயற்கையின் சமன்பாடு பாதிக்கப்பட்டு, மாசு ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையில் ஒருவன் ஆன்மீக சிந்தனையில் ஈடுபடும் போது அந்த சிந்தனையில் அல்லது, அப்படிச் சிந்திக்கும் போது அவன்  உண்டாக்கும் சக்திக் கதிர்களில் தடங்கல் ஏற்படும். இதனால் தீட்டு என்று அவர்கள் தள்ளியே இருப்பார்கள்.


இந்த ஒதுக்கம் பார்ப்பனர்களுக்கு அதிகம் தேவை. அதிலும் கடந்த காலத்தில் முழுக்க முழுக்க தெய்வ காரியத்திலும், விரதங்களிலும் ஈடுபட்டவர்களாக இருந்ததாலும், கோயில் பணிகளைச் செய்து வந்ததாலும், அவர்கள் தீட்டு என்றால் ஒதுங்கி இருந்தனர். இதைத் தீண்டாமை என்று சொன்ன பெருமை வேத மதத்தையும் அதன் பின் இருக்கும் அறிவியலையும் அறியாத ஆங்கிலேயர்களும், திராவிடவாதிகளுமே. இந்த ஒதுக்கம் அவரவர் ஈடுபட்டு வந்த தெய்வ காரியம், விரதம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுவது. . 


இனி பிண்டத்துக்கு வருவோம். பிறப்பின் பயணம் 2+ 10 மாதங்கள். ஒரு மாதம் என்பது ஒரு நாள் என்ற கணக்கில் இறப்பின் பயணம், இறப்புக்குப் பிறகு 10+ 2 நாட்களில் அமைகிறது. முதல் 10 நாட்கள் என்பது பிறப்புக்கு முன் தாயின் கர்பத்தில் இருக்கும் 10 மாதங்களுக்குச் சமம். அடுத்த இரண்டு நாட்கள், தாயின் கர்ப்பத்தில் நுழைவதற்கு முன் தந்தையின் உடலில் இருக்கும் 2 மாதங்களுக்குச் சமம்.


தாயின் கர்ப்பத்தில் 10 மாதங்கள் அந்தப் பிண்டம் படிப்படியாக வளர்ந்தது, இறந்த பிறகு முதல்  பத்து நாட்களில் பிரேதமான சரீரம் படிப்படியாகத் தான் வந்த பஞ்ச பூதங்களில் கரைகிறது. இதை வேத மந்திரம் மூலமாகச் செய்கிறார்கள். இதனால் இறந்த 10 ஆம் நாள்தான் ஒருவன் உண்மையில் இறந்தவனாகக் கருதப்படுகிறான். ஆயினும், தாயின் கர்ப்பத்தில் நுழைவதற்கு முன் அந்த ஆத்மா, தந்தையின் உடலில் 2 மாதங்கள் பிண்ட சரீரத்தில் உணவுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. அந்த 2 மாதங்களில் பெற்றதை 11, 12 ஆம் நாட்களில் பஞ்ச பூதங்களில் கரையச் செய்கிறார்கள்.


12 ஆம் நாளன்று அந்தப் பிரேத சரீரத்தை முழுமையாகப் பஞ்ச பூதங்களில் கரைத்து விடுகிறார்கள். இப்பொழுது ஆத்மா மட்டுமே இருக்கிறது. அதைக் 'கூட்டத்தாரோடு சேர்க்க வேண்டும்'. அந்தக் கூட்டத்தார் யார் என்று பார்த்தால் இறந்தவனுடைய தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகியோர். அவர்களில் இருந்த ஆத்மா வேறு பிறவி எடுத்திருக்க்கூடும். ஆனால் அங்கே சொல்லப்படும் இந்த உறவுகள், ஒரு காலத்தில் பிண்ட சரீரமாக இருந்து இயற்கையில் ஒன்றியுள்ள உணவின் பிண்டத்துகள்களே. ஒரு மனிதன் தனக்கு முந்தின மூன்று தலைமுறையினரிடமிருந்து, தான் வளர பிண்டம் எடுத்துக் கொள்கிறான். பரம்பரையாக வரும் மரபணுக்கள் இதனுள் அடங்கும். இறந்த பிறகு இந்த மூன்று தலைமுறையினருடன் அவன் இணைந்து விடுகிறான். இந்த இணைப்பைச் செய்யச் சொல்லப்படும் மந்திரங்கள் சில ஜியோமிதி வடிவங்களால் இயங்குகின்றன. மூன்று தலைமுறைகளுக்கு வசு, ருத்ரன், ஆதித்தன் என்று பெயரிட்டுள்ளார்கள்.


அவை இந்தக்  கட்டுரையின் ஆரம்பத்தில் எகிப்திய வடிவங்கள் என்று காட்டப்பட்ட வடிவங்கள் ஆகும்.



Fig 6


12 ஆம் நாள் காரியத்தில், சபிண்டிகரணத்தின் போது, முதலில் வலது பக்கத்திலிருந்து சதுரம், முக்கோணம், வட்டம் என்னும் வடிவங்கள் இடப்படும். இவற்றைத் தரையில் நீரால் வரைவார்கள். முதலில் சதுரத்தில் ஒருவரை நிற்கச் செய்து அவர் மீது 'விஸ்வதேவஸ் என்னும் கடவுளை ஆவாஹனம் செய்வார்கள். இவர் வசு, ருத்ரன் ஆதித்தன் உட்பட இயற்கையில் உள்ள எல்லா தேவர்களுக்கும் அதிபதி. எல்லா தேவர்களுக்கும் பிரதிநிதியாக, இவரைச் சதுர வடிவ அமைப்பில் ஆவாஹனம் செய்வார்கள்,

அடுத்து இருப்பது முக்கோணம். அதில் இறந்தவரது மூன்று தலைமுறைப் பித்ருக்களை மந்திரத்தால் வரவழைத்து ஆவாஹனம் செய்வார்கள், முன்பே நாம் முக்கோணத்தைப் பற்றிப் பேசினதை நினவில் கொண்டு வருவோம்,. முக்கோண அமைப்பில் அதீத சக்திகள் நிலை பெறும் என்றோம். அதே கருத்தில், என்றோ இறந்து போன முன்னோர்களை அவர்கள் அடைந்த வசு, ருத்ர, ஆதித்த ரூபத்தில் முக்கோண அமைப்பில் மந்திரங்கள் மூலமாகக் கட்டுகிறார்கள்.



Fig 7

அடுத்து வருவது வட்டம். அதில் இறந்தவர் (யாருக்காக சடங்கு செய்கிறார்களோ)  மந்திரத்தால் நிறுத்தப்படுகிறார். இவர்கள் அனைவருக்கும் அதிபதியாக விஷ்ணுவை, முதலில் இருக்கும் சதுரத்தில் ஆவாஹனம் செய்வார்கள்.


Fig 8

இறந்தவர் தம் முன்னோருடன் சேரும் போது, மூன்றாவது தலைமுறை கொள்ளூத்தாத்தா விலக்கப்படுவார். அப்பொழுதுதான் உயிருடன் இருக்கும் அவரது மகன் (சடங்குகள் செய்பவன்), அவனுடன் தொடர்பு கொண்ட மூன்று தலைமுறையினருக்கு நீர்க் கடன் செலுத்த முடியும். இதைச் செய்யும் மந்திரங்களால்,  முக்கோண அமைப்பில் இருக்கும், இறந்தவருக்கு மூன்றாவது தலைமுறை கொள்ளூத்தாத்தா விலக்கப்படுகிறார்.  


Fig 9

மீதம் இருக்கும் இருவரும், இறந்தவர் இருக்கும் வட்டத்துக்குள் வரவழைக்கப்படுவார்கள. அதில் இறந்தவரைச் சேர்த்து, மூன்று தலைமுறையினர் மட்டுமே நிலை நிறுத்தப்படுவர். இவர்கள், உயிருடன் இருக்கும் சந்த்தியினருக்கும் வசு, ருத்ரன், ஆதித்தன் என்னும் மூன்று தலைமுறையாவார்.


Fig 10

அத்துடன் முக்கோணத்தின்  பயன்பாடு முடிந்து விடுகிறது. அதற்கு மேல் எந்த பித்ரு காரியத்திலும் சதுரமும், வட்டமுமே இருக்கும். முக்கோணம் இருக்காது. இயற்கையில் உள்ள அதீத சக்திகளைக் கட்டுவதற்குத்தான் முக்கோணம் பயன்படுகிறது. எங்கோ இருக்கும் வசு, ருத்ர ஆதித்த ரூபத்தில் உள்ள முன்னோர்களை இழுக்க முக்கோணம் பயன்படுகிறது. முக்கோணத்தைப் பற்றி பிறகு நிறைய பேசுவோம்.

பித்ருக்கள் இடம் மாறி முடிவில் விஸ்வேதேவஸில் ஐக்கியமாவதை 3 படிகளாக (STAGES) ஜியோமிதி வடிவங்களில் காட்டலாம். அவை வருமாறு:-

Stage 1 (Fig 11)


Stage 2 (Fig 12)


Stage 3 (Fig 13)


 

இந்த ஜியோமிதி வடிவங்கள் (சதுரம், முக்கோணம், வட்டம்) என்பவை மந்திர ரூபத்தில் இறந்தவர்களை வழி நடத்த வேத மதத்தில் உண்டானது. இறந்த பின்னும் ஒரு உலகம் இருக்கிறது என்று சொல்லுமிடத்தில், இந்த வடிவங்களை இணைத்து எகிப்திய பாப்பிரஸ் சொல்கிறதே, இது எப்படி சாத்தியமாயிற்று? அந்த வடிவங்களைப் பயன்படுத்தும் சடங்குகளும் விளக்கங்களும் வேத மரபில்தானே இருக்கின்றன? அவை எகிப்திய மரபில் உண்டானவை என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களிடம் அது முழுமை பெற்ற விளக்கமாக இல்லை. இந்த விளக்கங்கள் மற்றும் சடங்குகளைப் பிறரிடமிருந்து கற்றுக் கொண்டோ அல்லது, நாளடைவில் மறந்து விட்டோ அதைப் பற்றிப் பேசுவதாகத்தானே எகிப்திய விளக்கங்கள் இருக்கின்றன?


வேத மரபில் இறந்தவரது முந்தின தலைமுறையினர் முக்கோணத்தை விட்டு, வட்டத்துக்குள் வந்து விடுவர். அதாவது முக்கோணம் வட்டத்துக்குள் அடங்கி விடும்,. அந்த வட்டத்தில் இருக்கும் இறந்தவரும், அவரது முன்னோரும் அது முதல் பித்ரு தேவர்கள் ஆகி விடுகிறார்கள். எந்தத் தேவனுக்கும் அதிபதி, விஸ்வதேவஸ் ஆவார். அவர் ஆவாஹனம் ஆவது சதுரத்தில். இதனால் வட்டம் சதுரத்துக்குள் அடங்கி விடும்.


இது இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் நம்பிக்கையில் எழுப்பட்டுள்ள எகிப்திய பிரமிடுகளது அடிப்படை வடிவமாகும்.



Fig 14

http://www.world-mysteries.com/PhilipGardiner/forbidden_letters_49.htm


குறிப்பாக முதன் முதலில் உருவாக்கப்பட்ட கீசாவில் உள்ள பெரும் பிரமிடு (GREAT PYRAMID OF GIZA) இந்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஒரே சுற்றளவுடைய வட்டமும், சதுரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து அமைக்கப்படுகின்றன. வேத மரபில் தெய்வ நிலையை அடைந்த மூன்று தலைமுறையினர் (வட்டம்), அந்தத் தெய்வங்களுக்கு அதிபதியான விஸ்வதேவஸில் (சதுரம்) ஐக்கியமாகின்றனர் என்னும் கருத்து இங்கே பிரதிபலிக்கிறது.


இந்த வட்டத்தின் ஆரத்தை, உயரமாகக் கொண்டு கீசா பிரமிடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இரு-பரிமாண வடிவத்தில் இது முக்கோணமாகத் தெரியும், முக்கோணத்தில் அதீத சக்திகளும், இறந்தோரது உயிர்ச் சக்தியான பிண்ட சரீரமும் வரவழைக்கப்படுகிறது என்பது வேத மதக் கருத்து. அதை மந்திரங்களால் செய்கிறார்கள். அதை அறியாத ஒரு சமூகம், முக்கோண அமைப்பில் கட்டடம் எழுப்பி அதில் இறந்தவரைக் கிடத்தினால், அவர் ஒருநாள் உயிர் பெற்று விடுவார் என்று எண்ணியிருக்கிறது.



'Fig 15

 

இந்தக் கட்டமைப்பில் பை (PI) என்னும் கணித விதி உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அறிந்துதான் எகிப்தியர்கள் இந்தப் பிரமிடை எழுப்பினார்களா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் முழுக்க முழுக்க ஜியோமிதி வடிவங்களாலான, பலவிதமான ஹோம குண்டங்களை எழுப்பி அதில் தெய்வங்களை நிறுத்தி, அந்தத் தெய்வங்கள் மூலமாக மனித குலத்துக்குப் பல நன்மைகளைத் தேடித் தந்த வேத மரபில் இப்படிப்பட்ட வடிவக் கணக்குகள் சகஜமானவை.


அதன் தொல்லியல் ஆதாரமாக 5000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளிப் பகுதியில் காளிபங்கனில் ஹோம குண்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (படம் கீழே)

 


Fig 16


ஏறத்தாழ அதே காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட கீசா பிரமிடிலும் ஜியோமிதிக் கணக்குகள் இருக்கின்றன என்றால், அப்படிப்பட்ட வடிவமைப்புகள் தெரிந்த தொழில் நுட்ப அறிஞர்கள் இந்தியாவிலும் இருந்திருக்கிறார்கள். எகிப்திலும் இருந்திருக்கிறார்கள். அல்லது இந்தியாவிலிருந்து எகிப்துக்கு சென்றிருக்கின்றனர் என்று சொல்லலாம்.


அந்தத் தொழில் நுட்ப ஒற்றுமைக்கு சான்றாக கீசா பிரமிடில் காணப்படும் குறுகிய வழிப்பாதையைச் சொல்லலாம். அதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.



Fig 17

http://en.wikipedia.org/wiki/Great_Pyramid_of_Giza


க்ராண்ட் காலரி (GRAND GALLERY)  எனப்படும் இந்தப் பாதை குறுகிய சந்து போல கீசா பிரமிடுக்குள் இருக்கிறது. அதன் கட்டுமானம், மொஹஞ்சதாரோவில் உள்ள க்ரேட் பாத் என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கும் குளத்திலிருந்து நீர் வெளியேறும் பாதையை ஒத்திருக்கிறது.

 


Fig 18

http://www.mohenjodaro.net/ancientsanitation32.html

நீர் செல்லும் இந்தப் பாதையும் குறுகிய சந்து போல இருக்கிறது. இதன் பக்கவாட்டுக் கட்டமைப்பு கீசா பிரமிடில் உள்ள பாதையை ஒத்திருகிறது. இதற்குள் தாராளமாக மனிதர்கள் நடந்து போகலாம்.


இதே போன்ற பாதைகள் மதுரை நகரில் இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுவதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். மேலுள்ள படத்தில் குளத்து நீர் வெளியேறும் பாதை காட்டப்பட்டுள்ளது. இதைப் போலவே யானைகள் தங்கள் கூட்டத்துடன் செல்லக்கூடிய அகல, உயரத்தில் கழிவு நீர்ப் பாதைகள் மதுரையின் பூமிக்கடியே இருந்தன என்று  "பெருங்கை யானை இன நிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கு" (சில- 14 – 63& 64) என்று சிலப்பதிகாரம் கூறுகிறது, சுருங்கை என்றால் புகுந்து செல்லுதலை ஒருவரும் அறியாதபடி நிலத்தின் கீழ் மறைத்துப் படுத்த வழி என்பது பொருள். அது மேலே காட்டப்பட்ட அமைப்பில் இருக்கும் என்பது புலனாகிறது.


1800 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் அமைக்கப்பட்ட கழிவு நீர்ப் பாதை அமைப்பும், 5000 ஆண்டுகளுக்கு முன் மொஹஞ்சதாரோவில் அமைக்கப்பட்ட நீர் வெளியேறும் பாதை அமைப்பும், 5000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் அமைக்கப்பட்ட கீசா பிரமிடின் படிக்கட்டுகளின் பாதை அமைப்பும் ஒன்றாக இருந்திருக்கின்றன.


மய வாஸ்துவை அறிந்த நாம், இவை அனைத்தும் ஒரே விதமான தொழில் நுட்பம் என்றும், மய வாஸ்துவின் தொழில் நுட்பமே உலகெங்கும் பின்பற்றப்பட்டது என்றும் அறிவோம். இதே தொழில் நுட்பம், கீழை நாடுகளிலும் இருக்கிறது. அதை ஒருவரிடமிருந்து கற்றுக் கொண்டோ, இடம் விட்டு இடம் பெயர்ந்தோ, உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. ஒரே மக்கள் என்பதை விட ஒரே தொழில் செய்த மக்கள் ஒருவருக்கொருவர் தொழில் நுட்பத்தைப் பகிர்ந்து கொண்டோ அல்லது ஆங்காங்கு சென்றோ நிர்மாணித்திருக்கிறார்கள். இன்றும் தொழிலாளர்கள் பல நாடுகளுக்குச் சென்று ஒரே விதமான தொழில் நுட்பத்தைப் பரப்புவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.


ஆனால் கீசா பிரமிடின் கருத்தாக்கத்தை யார் உருவாக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பினால், அந்தக் கருத்து எகிப்தின் சொந்தக் கருத்தல்ல என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஓரிடத்தில் போதிக்கப்படும் கருத்துக்களைக் கற்றுக் கொண்டு போனவர்களோ அல்லது அந்தக் கருத்தை உடையவர் வேற்றிடம் சென்றாலோ தான் சென்ற இடத்தில் அந்தக் கருத்தைப் புகுத்துவார் என்று சொல்லலாம். போதிக்கப்படும் மூல இடத்தில் அந்தக் கருத்து அழியாமல், தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து போதிக்கப்பட்டிருக்கும். ஆனால் எடுத்துக் கொண்டு போன இடத்தில், நாளடைவில் அந்தக் கருத்து உருமாற்றம் அடைந்து விடும். இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் சடங்கில் வரும் வடிவங்களும், அதன் அர்த்தங்களும் இன்றும் இந்தியாவின் வேத மரபில் தொடர்ந்து வருகிறது. அதனால் அந்தக் கருத்துக்களின் ஆரம்பம் இந்தியாவில் தான் ஏற்பட்டிருக்கிறது. அதே அமைப்புகளுடனும் ஆனால், கருத்துத் திரிபுடனும் எகிப்தில் இருப்பதால், அது இந்தியாவிலிருந்து வெளியேறிச் சென்ற கருத்தேயாகும்.

அந்தக் கருத்து அருகில் உள்ள மிலேச்சப் பகுதியாக இருந்த ஈரானிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதை ஜிராஃப்ட் சின்னம் காட்டுகிறது.



Fig 19

இறந்தார் சடங்கில் செய்யப்படும் வழிமுறைகளைக் கற்றவர்கள், நாளடைவில் அவை மறந்தும், மறைந்தும் போகையில், அவற்றை மறைய விடாமல் செய்ய, புத்தகத்தில் எழுதுவது போலக் கல்லில் எழுதியுள்ளார்கள். மூலத்தில் இருக்கும் வடிவங்களுடன் கூட்டியும், குறைத்தும் மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இது சகஜம்தான்.

 


சதுரமும், வட்டமும் முடிவில் ஒன்றுக்குள் ஒன்றாக அமைகின்றன என்பதை சபிண்டி சடங்கில் பார்க்கிறோம். அதில் முக்கோணம் இறந்த முன்னோர்களை அழைக்கப் பயன்படுகிறது, பரிசுத்த ஆவி வந்து போவதைப் பற்றி சொல்லும் கிருஸ்துவம், அதை ட்ரினிடி என்னும் முக்கோணம் என்று அமைத்தது, ஏற்கெனெவே முக்கோணத்தைப் பற்றி இருந்து வந்த வேத மதக் கருத்தின் தாக்கம்தான்.

இதைப் பற்றி இங்கு சொல்வதற்குக் காரணம், கண்ணெழுத்து போன்ற வடிவத்தின் வாயிலாக ஒரு அர்த்தத்தைக் காட்டும் ட்ரூயிடுகளது சின்னங்களிலும்  பித்ரு சடங்கின் தாக்கம் இருக்கிறது என்பதே. பலிமோட் பக்கம் ஒன்றை இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கண்டோம்.



Fig 20

 

அதில் இருக்கும் சதுரம் உள் முகமாக ஆத்மாவை நோக்கிச் செல்லும் தத்துவத்தைக் கூறுகிறது என்று ட்ரூயிட் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது முக்கியமான ஒற்றுமை



Fig 21

 

http://www.summerlands.com/crossroads/ogham_mandalas.htm#The%20Stream%20Strand%20of%20Ferchertne


ஆனால் பார்ப்பதற்கு இது மூன்று படிகளுடன் கூடிய ஒரு ஹோம குண்டம் என்றே தோன்றுகிறது. தர்ப்பைப் புல்லைப் போல அவர்கள் பயன்படுத்திய செடியின் சமித்துகளை ஹோம குண்டத்தில் வைத்திருக்கிறாற்போல இருக்கிறது.


இதே போல இவர்கள் காட்டியுள்ள சக்கர வடிவிலான வட்டமும் ஒரு ஆழ்ந்த கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.



Fig 22


படிப்படியாக ஐந்து நிலைகள் கடந்து பிரேத சரீரத்தை விட்டுவிட்டு, ஆத்மா நிலை பெறும் வட்ட வடிவ சபிண்டி சடங்கு அமைப்பை நினைவுறுத்துகிறது.


இதற்கு இடைப்பட்டதாக வட்டத்துக்குள் 4 முக்கோணங்கள்.



Fig 23


எல்லாம் ஒரே திசையைப் பார்த்தாற் போல இருக்கும் இதனுள் முக்கோண வடிவங்கள் இருப்பது, இறந்த பின் செய்யும் சடங்கின் விளக்கம் என்று எண்ணத் தோன்றுகிறது.


சாவுக்குப் பின்னும் ஆத்மாவின் பயணம் தொடருகிறது என்பது வேத மரபின் முக்கியக் கருத்தாகும். இயற்கையின் சமன்பாட்டுக் கொள்கையில் உருவான இந்தச் சடங்குகள் அகால மரணமடைந்தவர்களுக்கும் செய்யப்படும். அதன் சடங்குகள் வேறானவை. அதில்  இறந்து 6 மாதத்துக்குள் நாராயண பலி என்னும் சடங்கு செய்து அந்த ஆத்மாவைப் பிரேத உடலிலிருந்து விடுவித்து, தெய்வ நிலையில் நிறுத்தி விடுவார்கள். சடங்குகள் மூலம் அந்தப் பிரேத உடலையும் பல பில்லியன் பகுதிகளுள் ஒன்றாகக் காற்று மண்டலத்தில் கரைத்து விடுகிறார்கள் சாம்பலை ஓடும் நீரிலும், கடலிலும் கரைப்பது போல.


இவ்வாறு இறந்தவர் உடலையும், ஆத்மாவின் பயணத்தையும் வேத மதம் கச்சிதமாக்க் கவனித்துக் கொள்கிறது. அவ்வாறு செய்யாத கிருஸ்துவமும், இஸ்லாமும் இருக்கும் நாடுகளில்தான் இறந்தவரது ஆவி நடமாடுதல், பேய், பிசாசு என்ற பயங்கள் அதிகம் இருந்திருக்கின்றன. அவர்களுக்குத்தான் சாத்தானின் தொல்லை இருக்கிறது. அவர்கள்தான் அதை விரட்ட பில்லி சூனியத்தில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள்.


ஆனால் அவர்கள் மதம் உண்டாவதற்கு முன் அங்கு வேத மரபின் சுவடுகள் இருந்திருக்கின்றன என்பதை அந்த ஓஅம் பக்கம் காட்டுகிறது. அதில் உள்ள சதுர வடிவம், ஒரு யந்திரமாக அதிலும் பொன்னால் செய்யப்பட்ட தகடாக இங்கிலாந்தில் கிடைத்துள்ளது. அதன் காலம் 4000 ஆண்டுகளுக்கு முன் என்பதால் அது த்ருஹ்யு வழி வந்த ட்ரூயிடுகளைச் சேர்ந்தது என்று தெரிகிறது.



Fig 24


இந்தப் படத்தில் இருக்கும் அந்தத் தகட்டையும் ஆராய்ந்து விட்டு, கீழே காணப்படும் ஸ்காட்லாந்து கல் ஓவியத்தில் இருக்கும் பாம்பு எதைக் குறிக்கிறது என்றும் ஆராய்வோம்.

 


Fig 25

.

12 கருத்துகள்:

  1. //மூன்று தலைமுறைகளுக்கு வசு, ருத்ரன், ஆதித்தன் என்று பெயரிட்டுள்ளார்கள்.//
    //எங்கோ இருக்கும் வசு, ருத்ர ஆதித்த ரூபத்தில் உள்ள முன்னோர்களை இழுக்க முக்கோணம் பயன்படுகிறது.//

    திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு,
    ஒரு சந்தேதம். வசு, ருத்ரன், ஆதித்தன் என்பது தலைமுறையை குறிக்கும் சொல்லா அல்லது ரூபம் - ஒரு வித உருவம் அல்லது நிலையை குறிக்கும் சொல்லா? ஏனென்றால் நான் ருத்ர ரூபமாக இருக்கும் தாத்தாவை அழைக்கிரேன், ஆனால் அதே அமாவாசை அன்று என் பெரியப்பா (இறந்த என் அப்பாவின் அண்ணன்) அவரை(எனது தாத்தாவை) வசு ரூபமாக அழைக்கிறார். இது silly doubtஆக இருந்தாலும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். If you feel it is not relevant to this topic, please send me a email. I'm following you in twitter too.
    Venky

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு வெங்கி அவர்களே,

      நாம் இங்கேயே பதில் அளிக்கிறேன்.
      பித்ரு காரியம் செய்வதைக் குறித்த பல விவரங்களுக்கான விளக்கத்தை - வசு, ருத்ர, ஆதித்ய உட்பட - ஏற்கெனெவே 17 கட்டுரைகளாக ஆங்கிலத்தில் என்னுடைய ஆங்கில வலைத் தளத்தில் பதிப்பித்துள்ளேன்.

      jayasreesaranathan.blogspot.in இல் 2008 ஆம் ஆண்டுத் தொகுப்பில் ஃபிப்ரவரி, மார்ச் மாதத் தொகுப்புகளில் அவற்றைக் காணலாம்.

      இவற்றின் முக்கியக் கருத்துக்களை இந்தக் கட்டுரை இணைப்பிலும் படிக்கலாம்.

      http://jayasreesaranathan.blogspot.in/2008/03/origins-of-tarpanam.html

      ******

      இந்தக் கட்டுரையைப் படிக்கும் வாசகர்களது உடனடி புரிமானத்துக்கு இங்கேயே விளக்கம் அளிக்கிறேன். இந்த விளக்கங்களுக்கான ஆதாரம், வேதம், உபநிஷத்து ஆகும். அவற்றை ஆங்கிலக் கட்டுரைகளில் ஆங்காங்கே கொடுத்துள்ளேன். அவை அத்தனையும் இங்கே எழுத முடியாததால், இங்கு சொல்லும் விளக்கத்துக்கு ஆதாரம் இருக்கிறது என்பதை அறிவிக்க இப்படி எழுதியுள்ளேன்.

      ****
      இனி விளக்கத்துக்கு வருவோம்.

      (தொடரும்)

      நீக்கு
    2. இயற்கையில் எல்லா பொருள்களும் (Matter) மூன்று ரூபத்தில் இருக்கின்றன. திட, திரவ, வாயு என்பதே. இவற்றை பூ, புவ, சுவ (Bhu, Bhuva, Sva)என்றும் கூறுவார்கள். நம் உடலும் இந்த மூன்றினைக் கொண்டுள்ளது.
      எலும்பு போன்ற திடப் பொருள்கள் பூ,
      ரத்தம், நிண நீர், ஹார்மோன் போன்றவை புவ. எண்ணம், மனம் ஆகியவை சுவ.

      இவற்றுக்கான மூலக் கூறுகளைக் (genes) கருவிலிருந்து பெறுகிறோம். அப்படிப் பெறுவதில் பூ சம்பந்தப்பட்டவற்றைப் பெற்றோரிடமிருந்தும் ,
      புவ - வை தாத்தா, பாட்டி (இரண்டு பக்கத்து),
      சுவ- வை கொள்ளு தாத்தா, பாட்டி (இரண்டு பக்கத்து)யிடமிருந்தும் பெறுகிறோம் என்பது
      வேத மரபின் கருத்து.

      இதில் புவ லெவலில் மட்டும் இன்றைய விஞ்ஞானம் ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறது. அதாவது புவ (திரவ) சம்பந்தமான நோய்களான இரத்த அழுத்தம் தாத்தாவுக்கு இருந்தால் பிள்ளைக்கு வர வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் பேரனுக்கு வரும் சாத்தியம் அதிகம் என்கிறது விஞ்ஞானம். இதற்கான மூலக் கூறுகளை பிள்ளையில் உடலில் இருக்கும், ஆனால் அது வெளிப்படாது. பிள்ளை அந்தக் மூலக்கூறைத் தாங்குபவராக மட்டுமே இருப்பார். அதை அவர் மூலமாகப் பேரன் வாங்கிக் கொள்வார். பேரனுக்கு அது நோயாக வெளிப்படாமல் போகலாம். நற் காரியங்களைச் செய்து வந்தாலும், அவரது அப்பா, ஒழுங்காக, சிரத்தையாகப் பிதுர் காரியம் செய்து வந்தாலும், இந்தப் பேரன் உடலில் அந்த மூலக் கூறுகள் இருந்தாலும், அது நோயாக ஆகாது.

      அந்தப் பேரன் தன் காலத்தில் ஒழுங்காகப் பித்ரு காரியம் செய்து வந்தால், அவன் பிள்ளைக்கு அந்த மூலக்கூறை அளித்தாலும், அது அவன் பிள்ளையைப் பாதிக்காது. அவன் பிள்ளை லெவலில் அது சுவ- வாக ஆகும். இவன் புவ லெவலில் பெற்றதை, இவனிடமிருந்து இவன் மகன் பெறும் போது, அதை சுவ லெவலில் வெளிப்படும் கூறாகப் பெறுவான். அந்த சுவ- லெவலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்க இயலும். இதுதான் பித்ரு காரியம் செய்வதால் ஏற்படும் பெரும் பயன்.

      இந்தத் தொடர்பு மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் ஏற்படுவதால், இதைச் செய்ய வேண்டியதில் ஜாதி, வர்ண வித்தியாசமே கிடையாது. செய்யாவிட்டால், அவரவர் சந்ததிக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அதைத் தெய்வம் தண்டிக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உள்ளுக்குள் இருக்கும் விஷயம் இதுதான். உண்மையில் தெய்வம் தண்டிப்பதில்லை, எதையும் கொடுப்பதில்லை, பறிப்பதும் இல்லை, அது சாட்சியாக இருக்கிறது. சந்தர்பங்களைக் கொடுக்கிறது. செய்வதும், செய்யாததும் நம்மில் இருக்கிறது. அதனால் நமக்கு ஏற்படும் சுக, துக்கத்துக்கு நாமே காரணம். ஒருவனுக்கு இப்படி இருக்கிறது, இன்னொருவனுக்கு இல்லையே என்பதற்கு தெய்வம் காரணமில்லை. அவரவரே காரணம்.

      ****

      (தொடரும்)

      நீக்கு
    3. இதையே இன்னொரு விதமகச் சொல்வதென்றால், அப்பாவைப் போல ஜாடையில் பிள்ளை இருக்கும். தாத்தாவைப் போல கோபம் வரும் (அட்ரீனல் நீர்), கொள்ளு தாத்தாவைப் போல புத்திசாலியாக இருக்கும். அறிவுக்கு மூன்றாம் தலைமுறை காரணமாகிறது. மூன்றாம் தலைமுறையில் ஒரு தவறு நடந்திருந்தால், ஒருவன் புத்தி பிசகியோ, புத்தி குறைவுடனோ பிறப்பான். உதாரணத்துக்கு இப்படிச் சொல்கிறேன்.

      இதன் மூலம் ஒவ்வொரு மனிதனும், தனது மூன்று தலைமுறை மூதாதையரிடமிருந்து பெரும் மூன்று விதமான கூறுகளை வசு, ருத்ரன், ஆதித்தன் என்கிறார்கள். இவை முறையே முதலாம், 2 ஆவது, 3 ஆவது தலைமுறைகளது மூலக்கூறுகள் (subtle matter of the body parts of the departed persons.) Since matter does not die, the transformed matter upon cremation continue to exist. பூ, புவ, சுவ என்னும் வெவ்வேறு கூறுகளில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத பிண்ட வஸ்துவை வசு, ருத்ர, ஆதித்த என்கிறோம்.

      இங்கு பிண்டம் என்பது உணவுக் கோள் எனப்படும். இறந்தவரது பிண்டம், பஞ்ச பூதக் கூறுகள் உருவில் இருக்கும். சபிண்டி சடங்குகளில் நாம் அவ்வாறு பஞ்ச பூதத்தில் ஐக்கியப்படுத்தி விடுகிறோம்.

      எல்லா சந்ததியினரும் ஒரே கூறினை, ஒரே விதமாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உதாரணமாக நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம்.

      ஒரே தாத்தாவை நீங்களும் ருத்ர ரூபத்தில் அழைக்கிறீர்கள். உங்கள் பெரியப்பா மகனும் அழைகிறார். ஆனால் இருவரும், ஒரே மூலக் கூற்றை (புவ லெவல்) அவரிடமிருந்து பெறவில்லை. நீங்கள் உங்கள் தந்தை மூலமாக, அவரிடமிருந்து பெற்றீர்கள். அவற்றில் எவ்வெவற்றைப் பெற்றீர்கள், அவற்றில் எவை எவை, உங்கள் தாயினது தந்தை மூலம் கிடைத்த கூறுகளுடன் சேர்ந்தன, உருமாற்றம் அடைந்தன என்று தெரியாது. அதனால் கடைசியில் உங்கள் உடலில் குடி வந்திருக்கும் மூலக்கூறு சற்று வித்தியாசப்பட்டே இருக்கும்.

      அதே போல உங்கள் பெரியப்பா மகன், அவரது தந்தை மூலமாக உங்கள் தாத்தாவிடமிருந்து மூலக் கூறுகளைப் பெற்றிருக்கிறார். ரூட் அதாவது மூலக் கூறு வந்த வழி வேறு. அதனால் நீங்கள் இருவருமே ஒரே தாத்தாவுக்கு (ருத்ர லெவல்) பிண்டம் வைத்தாலும், நீங்கள் தருவது நீங்கள்ுங்கள் தந்தை மூலமாகப் பெற்ற மூலக் கூறுக்குச் செல்லும். அதாவது அவரிடமிருந்து வாங்கிக் கொண்ட கடனை அடைக்கிறீர்கள். அதனால் உங்கள் பிள்ளைக்குக் கடன் வைக்காமல் போகிறீர்கள்.

      உங்கள் பெரியப்பா மகன் உங்கள் தாத்தாவுக்குப் பிண்டம் வைக்கும் போது, அவர், தனது தந்தை மூலமாகப் பெற்ற மூலக் கூறுக்குத் திருப்பியளிக்கிறார். அதுவும், உங்கள் மூலக் கூறும் ஒன்றல்ல. அவரவர் தந்தை வழி வரும் போது மாறுபாடு அடைந்துதான் பெற்றிருக்கிறீர்கள்.

      ஒரே பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளிலும் வேறுபாடு ஏற்படும். ஏனெனில் ஒரே மூலக் கூற்றை எல்லா பிள்ளைகளுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதனால்தான் ஒரே பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளில் உருவம், குணம், புத்தி வேறுபாடுகள் இருக்கின்றன.

      இதனால் ஒவ்வொரு மனிதனும் பித்ரு காரியம் செய்ய வேண்டும். அண்ணன் செய்கிறானே என்று தம்பி விட்டு விடக்கூடாது. இது மகள்களுக்கும் பொருந்தும் என்பதைப் பலரும் உணரவில்லை. மகள் தர்ப்பணம் செய்யவில்லையென்றாலும், இறந்த பெற்றோரை மனமார எண்ணி, வழிபட வேண்டும். அவளுடைய பிள்ளைகள் பிதுர் காரியம் செய்யும் போது அவளுடைய பெற்றோர் முதலானோருக்குச் செல்லும்.

      சிரத்தையாக பித்ரு காரியம் செய்வதால், இந்த மூன்று தலைமுறைகளிடமிருந்து பெற்ற மூலக்கூறுகள் பலம் பொருந்திய்தாக அமையும். சிரத்தையாகவும், விடாமலும் செய்யவில்லையென்றால், அந்த மூலக் கூறுகள் பலம் குன்றும். அதனால் நோய் ஏற்படும். இதனால் பெற்றவர் செய்த தவறு பிள்ளைகளை வந்தடையும் என்று சொல்லலாம்.

      ****

      (தொடரும்)

      நீக்கு

    4. இதையெல்லாம் செய்யாத பிற மதத்தவர் கதி என்ன? அவர்கள் தங்கள் முன்னோரைத் தெய்வமாக வழிபட்டாலும், முறையாக இப்படித் திருப்பித் தருவது வேத மரபில் மட்டுமே உள்ளது. இதை விளக்க இப்படிச் சொல்லலாம்.

      நீங்கள் டாலரில் கடன் வாங்கினால், டாலரில்தான் கடனை அடைப்பீர்கள். ரூபாயில் அடைப்பேன் என்றாலும், அதை டாலராக மாற்றக் கூடிய அமைப்பின் மூலமாகத்தான் மாற்ற முடியும். பித்ரு கடன் கழிப்பதில் ஹிந்து மதம் அப்படிச் செய்கிறது. மற்ற மதங்களில் இந்த நுணுக்கங்கள் கிடையாது. இதனால் அவர்கள் கடனை சரிவரத் திருப்பித் தராதவர்கள் ஆகிறார்கள். அதனால் அவர்களுக்கு நோயும், தாமசமும், கோபமும் ஏற்படுகிறது என்பதை அவர்கள் இன்று வாழும் வாழ்க்கை காட்டுகிறது. அமெரிக்காவில் இருக்கும் வியாதி வேறு எங்கும் கிடையாது. முஸ்லீம்களுக்கு இருக்கும் கோபம் வேறு எவருக்கும் கிடையாது.

      நோயற்ற சமுதாயமாக ஹிந்து சமுதாயம் இருந்து வந்தது. இஸ்லாமியர் வருகைக்குப் பின்னரே நோயும், வறுமையும் ஏற்பட்டன. எனினும், 1910 வரை, பல இந்திய முஸ்லீம்கள் பித்ரு காரியம் செய்து வந்தும், குல தெய்வ வழிபாடு செய்து வந்தும் இருந்தனர் என்பதை அந்நாளைய சென்ஸஸ் ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்திய முஸ்லீம்கள் அனைவருமே கத்தி முனையில் மதம் மாறிய ஹிந்துக்களே. அராபிய நாடுகளுலிருந்து வந்தவர்களில் இங்கு தங்கியவர்கள் மிகச் சிலரே. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவர்களில் பலரும் பாகிஸ்தான் சென்று விட்டார்கள். பரம்பரையாக இந்தியாவிலேயே இருந்து, மதம் மாற்றப்பட்ட முஸ்லீம்களே இன்றும் இந்தியாவில் இருக்கிறார்கள். தமிழ் நாட்டு முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அனைவரும் 300 வருடங்களுக்கு முன்னால் ஹிந்துக்களே. இதற்கான மரபணு ஆராய்ச்சி இருக்கிறது.

      நீக்கு
  2. Thank you for your detailed reply. I will go through the links.However for the record, my question was not in comparison with me and my periappa's son but me and my periappa himself. In the sense , I call my grandfather as rudra roopa, but my periappa invites him as 'vasu' roopa.
    But your explanation holds good for the same too. i.e. the subtle matters I got from my grand father was of 'bhuva' state, while my periappa would have got it in 'Bhoo' state. and hence I repay it recalling the matters of my grandfather "Rudra" state, while my periappa will be recalling the matters in "vasu" state. Hope my understanding is right. Please correct if I am wrong.

    பதிலளிநீக்கு
  3. Very very excellent job, i am continuously reading your posts after the invasion of Muslims and Christians most of the true history and our spiritual values and nobody has not taken any steps to recall them even it it was done they were put in darkness by saying Dravidian thoughts and our peoples were mind washed with the blind Dravidian thoughts, according to me the concept of dravidan is founded by Christians to make conversions (divide and convert) nowadays no one willing to find the true history or to speak religious values but by way of this blog as well as you English blog you done very good hindu religious service and i request and expect you to publish your findings by way of Book for the use of those who are not able to read in blogs

    பதிலளிநீக்கு
  4. Fantastic!So far no one had explained the importance of pitru rites as done by you. I am performing these annual ceremonies for past 50 years, without knowing the background. Many customs are now clear to me and so I owe lots of thanks to you. I think these articles should reach everyone so that opportunity is given to mend their ways.
    Thank you for the detailed analysis.
    TG Saranathan

    பதிலளிநீக்கு