செவ்வாய், 18 செப்டம்பர், 2012

107. ட்ரூயிட் (DRUID) என்னும் தானவர்கள்


புராணங்களில் ஆங்காங்கே பேசப்படும் தானவன் அயர்லாந்தின் பழமையான பாரம்பரியக் கதைகளிலும் சொல்லப்படுகிறான். இவன் ஒருவனல்லன். பல தானவர்கள் வடக்குப் பகுதிகளிலிருந்து கப்பல்களில் அயர்லாந்து வந்தனர். அவர்களே கெல்டிக் கடவுளர்களாகவும் சொல்லப்பட்டுள்ளனர். அவர்களே அயர்லாந்தை ஆண்ட அரசர்களாகவும் சொல்லப்படுகின்றனர். அவர்கள் தானுவின் மகன்களான கடவுள்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள் 'தூவத தே தானன்' (TUATHA DE DANANN) என்றழைக்கப்பட்டார்கள். இந்தச் சொல்லில் தே என்பது தெய்வம், தானன் என்பது தானுவின் மகன்கள் என்று பழைய அயர்லாந்து மொழியில் சொல்லப்படுகிறது. தூவத என்ற சொல் தூதன் என்பதை ஒத்திருக்கிறது.  தூவத தே தானன் என்பது "தானுவின் தேவ தூதர்கள்" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.


 

இவர்கள் வந்த காலத்தைப் பற்றியும் தெளிவாக பழைய ரெக்கார்டுகளில் இருக்கின்றன. இவர்கள் வெள்ளம் வந்த காலத்துக்குப் பிறகே வந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வெள்ளம் என்பது பனி யுகம் முடிந்த போது, ஆர்டிக் வட்டத்தில் பனிப்பாறைகள் உருகி, உடைந்து,,அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென்று கடல் மட்டம் உயர்ந்த காலம்,



இந்தப் படத்தில் அயர்லாந்துடன் கூடிய இங்கிலாந்து, மேற்கு ஐரோப்பா ஆகியவற்றைக் காணலாம். அவற்றைச் சுற்றி வெளிர் நீலமாக இருப்பது வெள்ளத்துக்கு முன் இருந்த நில நீட்சிகளே. இங்கிலாந்து தீவுகளூம், மேற்கு ஐரோப்பாவும் ஒரே நிலமாக இருந்தது என்பதை வெளிர் நீலப் பகுதிகள் காட்டுகின்றன. இவற்றைப் பற்றிய பிற விவரங்களை 46 ஆவது கட்டுரையில் எழுதினோம்.

 

பிரிட்டிஷ் தீவுகளும், மேற்கு ஐரோப்பாவும் நிலத் தொடர்புடன்  இருந்து வந்தன. ஆனால் ஆராய்ச்சிகள் காட்டும் விவரத்தின்படி, இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரு கடல் வெள்ளம் வந்து, அதனால் கடல் மட்டம் உயர்ந்து இந்த நிலத் தொடர்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டது. அது முதல் அயர்லாந்து உள்ளிட்ட பிரிட்டிஷ் பகுதிகள் கடலால் சூழப்பட்ட தீவுகள் ஆகி விட்டன. வெள்ளத்துக்குப் பிறகு தானுவின் மகன்கள் கப்பல்களில் வந்து அயர்லாந்தில் கரை ஏறினர் என்றால், அது இன்றைக்கு 6000 முதல் 7000 ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.


வந்தவர்கள் தாங்கள் வந்த கப்பல்களை எரித்து விட்டனர். வந்த இடத்தை விட்டு மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலும், அவ்வாறு திரும்பிப் போக முடியாதபடி இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எரித்து விட்டனர் என்று பழைய ஐரிஷ் வரலாறு கூறுகிறது. இதனால் வடக்கு அல்லது மத்திய ஐரோப்பாவிலிருந்து ஏதோ ஒரு காரணத்தினால் கிளம்பியவர்கள், தாங்கள் பழைய இடத்துக்குத் திரும்பிச் செல்லக்கூடாது என்ற வைராக்கியத்துடன் அயர்லாந்தில் தங்கி விட்டனர். அவர்களால் அயோர்னி என்ற பெயரைப் பெற்று, அந்த நாடு அயர்லாந்த் என்றானது.


இந்த விவரம் அவர்களது பூர்வீகத்தை மத்திய ஐரோப்பாவுக்கு இட்டுச் சென்றாலும், அங்கிருந்து இந்தியாவுக்கு அவர்களது பூர்வீகத்தைக் கொண்டு செல்வது தானு என்னும் பெயரே.


தானு என்பவள் தக்ஷபிரஜாபதியின் 13 மகள்களுள் ஒருத்தி. அவளும் அவளது சகோதரிகளும் காஸ்யப முனிவரைத் திருமணம் செய்து கொண்டனர். தானுவுக்கும், காஸ்யபருக்கும் பிறந்த பிள்ளைகள் தானவர் எனப்பட்டனர். பல புராணங்களிலும் தரப்பட்டுள்ள இந்தச் செய்தி கற்பனை என்றும் கட்டுக் கதை என்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களும், அவர்களுக்கு வால் பிடிக்கும் இந்தியர்களும் சொல்லி விடுவர். ஆனால் எது புராணக் கற்பனை என்கிறார்களோ, அந்தப் பெயர் பிரிட்டிஷ் பகுதிகளிலும் இருக்கிறதே? உலகம் முழுவதும் ஒரேவிதமான கட்டுக் கதை என்று இதைச் சொல்லலாமா?


அயர்லாந்தில் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதுமே இந்தத் தானுவின் பெயர் இருக்கிறது. தானுவின் பெயரைக் கொண்டு பல நதிகள் ஐரோப்பாவில் ஓடுகின்றன.  Don, Danube, Dniestr, Dniepr, என்னும் இந்த நதிகள் Danu  என்று சொல்லப்படும் பெண் தெய்வத்தை முன்னிட்டு எழுந்த பெயர்கள்.


டனுபே நதி.

 

இந்தப் பெயர்கள் ரோமானியர்கள் ஆட்சிக்கு முன்பே, கெல்டிக் மக்களால் கெல்டிக் மொழியில் அழைக்கப்பட்ட பெயர்கள். தானுவின் மகன்கள் ஐரோப்பாவில் ஏற்படுத்திய தாக்கத்தால் நதிகள் மட்டுமல்ல, கெல்டிக் கலாசாரமே உருவாக்கப்பட்டது.


கஸ்யபர் – தானு கதைக்கு வருவோம். ஒரு ஆண், அவனுக்குப் பதிமூன்று மனைவிகளா? அக்கிரமமாக இல்லை என்று கேட்கலாம். அதிலும் அந்த ஆண் ஒரு ரிஷி என்றால், ரிஷிகளுக்குப் பெண் பித்தா என்றெல்லாம் கேட்கலாம், கேட்டிருக்கிறார்கள். ஆனால் எதையுமே மறைத்து வைத்துச் சொல்வதுதான் ரிஷிகளுக்குப் பிடித்த விஷயம். இப்படி இருப்பது சாத்தியமா என்று மனிதன் கேள்விகளை எழுப்பி, விடை தேட வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். காஸ்யபர் திருமணக் கதையில் அவர்கள் ஒரு ரகசியத்தைப் பூட்டி வைத்துள்ளனர். ஒரு லட்சம் வருடங்களில் நடந்த வரலாற்றை ஒரே ஒரு புராண வரியில் சொல்லியுள்ளனர்.


காஸ்யபர், தானு, தக்ஷனின் மகள்கள் என்பவர்களெல்லாம், கடந்த ஒரு லக்ஷ வருட காலத்தில் தோன்றிய மனித இனங்கள் எனலாம். ஐரோப்பியர்கள், மக்கள்  இனத்தை நிறத்தால் பிரித்தார்கள். ஆனால் உண்மையில் இனம் என்பதும், இன வேறுபாடுகள் என்பதும் நமது திசுக்களுக்குள் இருக்கும் மரபணுவில் இருக்கிறது என்பதை இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. அந்த விஞ்ஞானம் சொல்லும் விவரத்தின் படி இன்றைய மனிதர்கள் அனைவரும், தாய் வழி, அல்லது தந்தை வழி என்ற குறிப்பிட்ட மரபணு அடையாளங்களால் குறிப்பிட்ட மூலங்களிலிருந்து உண்டாகி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.


காஸ்யபர் என்பவர் படைப்புக் கடவுளான பிரம்ம தேவனது மானச புத்திரர்களுள் ஒருவரான மரீசியின் மகன். மானஸ புத்திரர் என்பது முதலில் உண்டான ஆண் வர்கம். ஆண்வழியில் பரம்பரை பரப்பரையாகச் செல்லும் ஆண் மரபணுக்களில் ஒவ்வொரு வகையையையும் ஒவ்வொரு ரிஷியின் பெயரைக் கொண்டு அடையாளம் சொன்னார்கள். அப்படி உண்டான வகைகளில் தற்சமயம் இருக்கும் வகைகள் 7. இவை சப்த ரிஷிகளின் பெயரைக் கொண்டு உள்ளன. அவர்களுள் காஸ்யபர் ஒரு குறிப்பிட்ட மரபணு அடையாளத்தைக் குறிக்கிறார். எப்பொழுதெல்லாம் பிரளயம் வந்து, மக்கள் தொகை பெருமளவில் அழிந்து, பிறகு மீண்டும் மக்கள் பெருக்கம் ஆரம்பிக்கிறதோ, அப்பொழுதெல்லாம்  உண்டாகும் மக்கள் பெருக்கத்தை ஒரு ரிஷியின் பெயரால் சொல்லியிருக்கிறார்கள். கடந்த பல்லாண்டுகளாக காஸ்யபர் பெயரில்தான் மக்கள் பெருக்கம் நடந்ததாகச் சொல்லப்படுள்ளது. காஸ்யபர் என்னும் ஆண், தக்ஷப்பிரஜாபதியின் பல பெண்களை மணந்து, பல வேறுபட்ட மக்களை உண்டாக்கி இருக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. இது மரபணு ஆராய்ச்சிகள் சொல்லும் கருத்தை ஒத்திருக்கிறது. இன்றைக்கு உலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள் அதிகபட்சம் 5 பெண்களிலிருந்து தோன்றியிருகிறார்கள் (mtDNA) என்று பெண்ணைக் கொண்டு இன வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன.


இனப் பெருக்கங்கள் நடந்த காலக்கட்டத்தைப் பார்த்தோமென்றால், கடந்த பனியுகத்துக்கு முன் காஸ்யபர் தொடர்பு வருகிறது. அவரது பெயரால்தான் காஷ்மீர் (காஸ்யப மீரம்) என்ற பெயரே ஏற்பட்டது. அப்பொழுது இருந்த பெண் இனம் சதி தேவியின் பெயருடன் இருந்தது.


பெண்கள் பெயர் வரும் இடங்களிலெல்லாம் தக்ஷப் பிரஜாபதியின் பெயர் வரும், பிரஜாபதி என்பதே மக்களை உண்டாக்கும், அல்லது மக்கள் கூட்டத்துடன் தொடர்பு கொண்ட பெயர். அவருக்கு மொத்தம் 24 பெண்கள் பிறந்தனர் என்று விஷ்ணு புராணம் போன்ற பல புராணங்கள் கூறுகின்றன. இவர்களுள் ஆரம்பத்தில் 11 பெண்கள் இருந்தனர், பிறகு 13 பெண்கள் இருந்தனர். இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட பெண் பரம்பரையில் வரும் மரபணுவைக் குறிப்பவை. ஆதியில், அதாவது, தற்போதைய காலக்கணக்கான பனியுகம் ஆரம்பித்ததற்கு முன்னால் சதிதேவி வருகிறாள். அவள் சிவனை மணந்து கொண்டதும், தக்ஷ யாகத்தில் சிவனுக்குப் பாகம் கொடுக்காததும் பலரும் அறிந்த கதைகளே. அவற்றின் உட்பொருளை வேறொரு கட்டுரையில் காண்போம்.


இங்கு நாம் சொல்ல வருவது, அந்த சதி தேவி மாண்டாள் என்ற கருத்து, அவளைக் குறித்துச் சொல்லப்படும் பெண் வர்க்கம் அழிந்து விட்டது என்பட்தைக் குறிப்பது. அவள் பெயரால் காஷ்மீரத்தில் ஒரு ஏரி இருந்தது என்பது, அந்தப் பெண் வர்க்கத்தின் எஞ்சிய சிலர் அங்கு இருந்தனர் என்பதைக் குறிப்பது. அங்கு காஸ்யபர் அமர்ந்தார் என்றால், பழமையான ஆண் வர்க்கத்துக்கும், சதியின் எஞ்சிய பெண் வர்க்கத்துக்கும் பிறந்த மக்கள் தொகை காஷ்மீரப் பகுதியில் பெருக ஆரம்பித்தது என்று பொருள். அதுவரை கடல் போன்று பெரிதாக இருந்த 'சதி சரஸ்' என்னும்  ஏரியானது உடைந்து, நில பாகம் மேலெழுந்தது. அப்படி மேலெழுந்த இடமே காஸ்யபமீரம் என்றாகி அங்கு மக்கள் தொகை பெருக ஆரம்பித்தது. இதன் காலம் பனியுகத்துக்கு முன்பாக இருக்க வேண்டும். அந்த மக்கள் தொகை 25000 ஆண்டுகளுக்கு முன்பே வட ஐரோப்பா, வடக்கு ஆசியா நோக்கி நகர ஆரம்பித்து விட்டது. இதை மரபணு ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்துகின்றன.


இன்றைக்கு 40,000 வருடங்களுக்கு முன்னால் காஸ்பியன் கடல் பகுதியில் மக்கள் பெருக்கம் இருந்தது. காஸ்யபரின் பெயரால் காஸ்பியன் என்ற பெயர் உண்டாகி இருக்கிறது.



காஸ்பியன் கடல்.


அதற்கும் முன்னால் இருந்த மக்களினத்தை அறிய நாம் தென்னன் தேசம் இருந்த தென் கடலுக்குச் செல்ல வேண்டும். இன்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன், தென் கடல் பகுதியில் ஆப்பிரிக்காவையும், இந்தோனேசியாவையும் இணைக்கும் வண்ணம் ஆங்காங்கே கடலில் தீவுகள் இருந்திருக்கின்றன. இரண்டு மலைத்தொடர்கள் பல தீவுகளுக்கு அடித்தளமாக இருந்திருக்கின்றன.



27,000 ஆண்டுகளுக்கு முன் இந்தோனேசியா.


அப்பொழுது அங்கு 13 விதமான பெண் வர்க்கங்கள் இருந்திருக்கின்றன. அவர்களை தக்ஷனுடைய பெண்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அங்கு தானு இருந்தாள். அவள் மரபணுவைத் தாங்கிய மக்கள் தானவர்கள் என்ற பெயருடன் இருந்தனர். படத்தில் உள்ள சிவப்புக் குறியிட்ட இடத்தில் இருந்த எரிமலை 70,000 வருடங்களுக்கு முன் வெடித்த போது, மனித குலத்துக்குப் பேரழிவு ஏற்பட்டது.  (84 ஆவது கட்டுரையில் இதன் விரிவாக்கத்தைக் காணலாம்) அப்பொழுது பலரும் அழிந்தாலும், மய தானவன் தப்பித்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. வாஸ்து வித்தை தெரிந்த மயன் ஒரு தானவன். அவனும் அவனைப் போன்ற தானவர்களும் அவர்கள் தாங்கி வரும் தானுவின் மைட்டோகாண்ட்ரியல் டி என் ஏ என்னும் மரபணுவும் அழியாமல் தொடர்ந்து வந்தன. இனம் என்பதை இந்த மரபணு மூலமாகத்தான் பிரித்தறிய முடியும்.


அந்தத் தானவர்கள் வட மேற்கு இந்தியாவில் குடியேறினர். அவர்களுக்குள் அவரவருக்கென்றே சிறப்பாக இருந்த செயல்பாடுகள் மூலம் பிரிவுகள் இருந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் தானவர் என்றே அழைக்கப்பட்டனர்.

மத்ஸ்ய விழாவில், வீர விளையாட்டுக்களை ஆடுவதில் விருப்பமும், திறமையும் காலகஞ்சஸ் ஒரு தானவக் கூட்டமே. 


'நவதகவசர்' என்ற இன்னொரு தானவக் கூட்டமும் இந்தியாவின் சிந்து நதிப் பகுதியில் இருந்தது. இவர்கள் கண்கட்டு வித்தை செய்து தங்களை மறைத்துக் கொள்வர் என்று மஹாபாரதம் கூறுகிறது., அவர்கள் பெயரில் உள்ள கவசம் என்னும் சொல்லால், கவச உடை அணிந்து தங்களை மறைத்துக் கொள்ளும் திறமை இவர்களுக்கு இருந்தது என்று தெரிகிறது. இந்தப் பெயரால், கவச உடை தயாரிப்பில் அவர்களே முன்னோடிகள் என்றும் தெரிகிறது.


இவர்களைப் போல இருந்த இன்னொரு தானவக் கூட்டம் மயன் ஆவான். அவர்களுக்குக் கட்டடக் கலை திறமை இருந்தது. ராமாயண காலத்திலேயே இமயமலைப் பகுதியில் 'மயனது பவனம்' இருந்தது. அபூர்வ மணிகளைச் சேகரிப்பதும், பளிங்கு போன்ற கற்களைச் சேகரித்து அவற்றைக் கொண்டு மாய மாளிகை அமைப்பதிலும் மய தானவர்கள் தேர்ந்தவர்கள். மஹாபாரத காலத்தில் காண்டவ வனப் பகுதியில் (இன்றைய ஹரியானா, ராஜஸ்தானது சில பகுதிகள். அப்பொழுது அங்கு சரஸ்வதி நதி ஓடியது) மய தானவர்கள் வாழ்ந்தார்கள்.


இதற்கு மேற்குப் பகுதியில்  விருஷபர்வன் என்னும் தானவ அரசன் தனக்கென ஒரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான். அதன் காலம் இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பாகும்.



அந்த விருஷபர்வனது மகள் சர்மிஷ்டை ஆவாள். அதாவது அவள் தானவப் பெண். அவளுக்கும் யயாதி மன்னனுக்கும் பிறந்த பிள்ளையே த்ருஹ்யு ஆவான். தானுவின் மரபணு பெண்வழியில் வருவது அதாவது தாய் வழியில் வருவது. எனவே த்ருஹ்யுவும் தானவன் ஆவான்.

அவன் மட்டுமல்ல, அநுவும், புருவும் சர்மிஷ்டைக்குப் பிறந்தவர்களே. அநுவும் நாட்டை விட்டு வெளியேறினான். அவன் சென்ற இடம் ஈரான், ஈராக், மத்தியதரைக் கடல் பகுதியாகும்.


இந்த இருவருடன் பிறந்த புருவும் தானவனாவான். ஆனால் அவன் சரஸ்வதி நதி தீரத்தில் நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றான். இதனால் வட மேற்கு இந்தியாவில் இருந்த மக்களுக்கும், ஐரோப்பா சென்ற் த்ருஹ்யுவின் வழியில் வந்த மக்களுக்கும், ஈராந் ஈராக் பகுதியில் சென்ற அநுவின் வழி வந்த மக்களுக்கும் தாய் வழி மரபணுவில் ஒற்றுமை இருக்கும், இருக்கிறது. மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் கருத்துப்படி, ஒரே பெண் வழியாக தோன்றியவர்களே இந்த மூன்று இடங்களிலும், (வடமேற்கு, வடக்கு இந்தியா, அரேபியா, ஐரோப்பா) இருக்கிறார்கள்.


இன்றைக்குக் காணப்படும் இந்த நிலையைக் கொண்டு ஐரோப்பாவிலிருந்தும், இந்தியாவா, அல்லது இந்தியாவிலிருந்து ஐரோப்பாவா எப்படி மக்கள் சென்றார்கள் என்ற சந்தேகம் தேவையில்லை. மரபணு ஆராய்ச்சியில், இந்தியாவில்தான் ஆரம்பம் செல்கிறது. இந்தியாவிலிருந்து அரேபியாவுக்கும், மத்திய, மேற்கு ஐரோப்பாவுக்கும் செல்கிறது  என்று தெரிய வந்துள்ளது. இதை மெய்ப்பிக்கும் வண்ணமே நம் புராண, இதிஹாசங்களும் உரைக்கின்றன. எந்த புராணக் கதையும், ராமாயண, மஹாபாரதக் கதையும், பொய்யல்ல என்று மரபணு ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன.


இந்தப் பின்னணியுடன் நாம் மேற்கொண்டு அயர்லாந்து காட்டும் விவரங்களுக்குச் செல்வோம். பலவகையான திறமைகள் கொண்ட தானவர்கள் மத்திய ஐரோப்பாவுக்கும், அங்கிருந்து மேற்கு ஐரோப்பாவுக்கும் சென்றிருக்கின்றனர். விளையாட்டுக்குப் பெயர் போன அவர்கள் கெல்டுகள் என்ற பெயருடன் புது வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றனர். பாரதத்தை விட்டுக் கிளம்பும் வரை, வேத தர்மச் சூழ்நிலையில் வாழவே அவர்கள் அதன் சுவடுகளைத் தாங்கிச் சென்றிருக்கின்றனர். தானவர்களாதலால் 'தூவத் தே தானன்' என்று தங்களை அழைத்துக் கொண்டனர். அவர்களே அரசாண்டார்கள். அவர்களே தங்களையும் கடவுளாகப் பிரகலனப்படுத்திக் கொண்டார்கள். அரசனை தெய்வத்துக்குச் சமமாகத்தான் பாவிக்கும் மரபு பாரத்த்தில் உள்ளது.



அவர்கள் பரப்பின கருத்துக்களைப் பாருங்கள்:-


மனிதன் என்ற பொருள் தரும் மனு, மனன்னன் (MANANNAN) என்ற பெயரில் அயர்லாந்தில் உள்ள தானவர்களிடையே இருந்தனர். முதலாவது மன்ன்னன், 2 ஆவது மனன்னன் என்று மொத்தம் 4 மனன்னன்கள் இருந்திருக்கிறார்கள். அந்தப் பெயரிலிருந்துதான் MAN  என்னும் ஆங்கிலச் சொல்லே உருவானது.


பாரதக் கதையில் உள்ளது போலவே மக்கள் அவனை அணுகி, தங்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்குக் கைம்மாறாக தங்கள் உற்பத்தியில் ஒரு பங்கைத் தந்தனர். திராவிடவாதிகள் வாய் கிழிய மனுவைத் திட்டுகிறார்களே, உண்மையில், மனுவைப் பற்றிச் சொல்லும் விவரங்களில், அவன் யாரையும் அடக்கி ஆண்ட்தாகச் சொல்லப்படவில்லை. பிரளயத்துக்குப் பிறகு எங்கும் குழப்பம் இருந்தது. ஒரு ஒழுங்கும், அமைதியும் இல்லாமல் இருந்தது. திருட்டும், பயமும் இருந்தன. அதனால் மக்கள் தங்களுக்குள் தீரனாகவும், அறிவாளியாகவும் தென்பட்ட மனுவை (மனிதன்) அணுகித் தங்களைக் காக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர். படை, பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தங்கள் விளைச்சலிலிருந்து ஒரு பங்கைத் தருவதாகவும் ஒப்புக் கொண்டனர். அந்த மக்களையும், அவர்கள் சார்ந்த விவகாரங்களையும் நிர்வகிக்க மனு சட்ட திட்டங்களை இயற்றினான்.


இதே போன்ற மனு அயர்லாந்திலும் இருந்திருக்கிறான். அவனை யாரும் திட்டவில்லை. எந்த ஆங்கிலேயரும் அந்த மனன்னனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை, தாங்கள் வாழ்ந்த மண்ணில் ஒரு சமயம் இருந்தவர்கள் என்பதைக் கூட அவர்கள் நம்பத் தயாராக இல்லை. ஆனால் நம் நாட்டுக்கு வந்து, நம் புராணங்களில் சொல்லப்பட்ட மனுவைப் பற்றி, தாங்கள் நன்கு படித்து புரிந்து கொண்டாற்போல பாவனை செய்து, நம் மக்கள் மனதில் விரோதத்தை வளர்த்துவிட்டனர் ஆங்கிலேயர்கள்.

 

வேத மரபின் மற்றொரு பிரதிபலிப்பு, கெல்டிக் காலண்டர்கும். இது அச்சு அசலாக வேதாங்க ஜோதிடக் காலண்டர் ஆகும். இதைக் கோலினி (COLIGNY) என்றார்கள். கோள் என்னும் சொல்லைத் தழுவி இருக்கிறது. இது சூரிய- சந்திரமானம் இரண்டையும் கொண்டது. வேதாங்க ஜோதிடத்தில் உள்ளது போல 5- வருடக் காலண்டர் இது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை அதிக மாதம் வரும். இவர்களும் அந்த அதிக மாதத்தைக் கழித்தார்கள். இந்த 5 வருட சுற்றின் முதல் வருட்த்தை சம்வத்சரம் என்று வேதாங்க ஜோதிடம் அழைக்கிறது. இவர்களும் சமோனியாஸ் என்றார்கள். ஒலி ஒற்றுமை இருப்பதால், ஆரம்பத்தில் சம்வத்சரம் என்றே சொல்லி, பிறகு அது திரிந்திருக்கிறது.


இவர்களும் சந்திரனை அடிப்படையாக் கொண்டு சந்திர மாதத்தைப் பின்பற்றினார்கள். ஒரு சந்திர மாதத்தில் இரண்டு பக்ஷங்கள் என்று வேத மதத்தில் பின்பற்றுவதையே இவர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். மாதத்தை 'மாதுஸ்' என்றார்கள். வேதாங்க ஜோதிட்த்தில் சொல்லப்பட்டுள்ளதைப் போலவே 5- வருடக் காலண்டரில் இத்தனை நாள், இத்தனை பௌர்ணமி,  இத்தனை அதிக மாதம் என்று கணக்கு சொல்லியிருக்கிறார்கள். த்ருஹ்யு இருந்த காலத்தில் வழங்கப்பட்ட வேதாங்க ஜோதிடம் அப்படியே கெல்ட் ஜோதிடத்தில் இருக்கிறது.

( பார்க்க http://en.wikipedia.org/wiki/Coligny_calendar )


இந்த அதீத ஒற்றுமையைப் பற்றி எந்த ஆராய்ச்சியாளரும் மூச்சுவிடுவதில்லை. இப்படி ஒரு கெல்டிக் காலண்டர் இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. கிரேக்க ஜோதிடத்தைப் பற்றி ஓயாமல் பேசுவார்கள், அதிலிருந்துதான் வேத ஜோதிடம் உண்டானது என்பார்கள். ஆனால் கிரேக்கத்துக்கு முன்பே இந்த கெல்டிக் காலண்டர் ஐரோப்பா முழுவதும் பின்பற்றப்பட்டிருக்கிறது. அது வேதாங்க ஜோதிடத்தை ஒத்திருக்கிறது என்பதால், அதைப் பற்றிப் பேசுவதில்லை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.


அதைப் பற்றிப் பேசினால், இதுவரை வந்துள்ள அத்தனை ஆராய்ச்சிகளுமே விழுந்து விடும். ஏனெனில் வேதாங்க ஜோதிடம் உண்டான காலத்தை நிரூபிக்க அதிலேயே விண்வெளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. லகதர் என்னும்  ரிஷியால் எழுதப்பட்ட ரிக்ஜோதிட வரிகள் சில நம்மிடையே இருக்கின்றன. அதன் 6 ஆவது ஸ்லோகத்தில் உத்தராயணம், தக்ஷணாயனம் ஆரம்பித்த போது சூரியனும், சந்திரனும் நின்ற நக்ஷத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொண்டு கணிக்கும் போது அது எழுதப்பட்ட காலம் பொ.மு, 18 ஆம் நூற்றாண்டு, அதாவது இன்றைக்கு 3800 வருடங்களுக்கு முன் என்று தெரிகிறது.


ஐரோப்பியர்கள் கணக்குப் படி அப்பொழுது ஆரியன் இந்தியாவுக்கு வரவில்லை.


கிரேக்க ஜோதிடம் என்ற ஒன்றே அப்பொழுது இல்லை. கிரேக்க ஜோதிடம் பொ.மு. 2 ஆம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது.

ஐரோப்பியர்கள் கணிப்பில் அப்பொழுது ஐரோப்பிய மக்கள் நாகரிக வளர்ச்சி அற்றவர்களாக இருந்திருக்கின்றனர்.


அவ்வாறிருக்க ஐரோப்பாவில் கெல்டுகள் பின்பற்றிய ஜோதிட,ம், வேதாங்க ஜோதிடத்தை ஒத்திருந்தது என்று எப்படிச் சொல்வது?

கெல்டுகள் ஜோதிடம் என்ற ஒன்று இருந்தது என்றே எப்படி ஒப்புக் கொள்வது?


யாரும் வாயைத் திறக்கவில்லை, இதுதான் ஐரோப்பிய வரலாற்று ஆராய்ச்சியாளார்களது லட்சணம்!


இந்தியாவைக் குறித்த எந்த உண்மை விவரத்தையும் ஏற்றுக் கொள்ளூம் மனோபாவம் இன்னும் அவர்களுக்கு வரவில்லை. இந்தத் தொடரின் போக்கில் அப்படிப்பட்ட விவரங்களைத் தக்க இடங்களில் தருகிறேன். உள்நோக்கம் கொண்டவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்னும்  போர்வையில் காலனி ஆதிக்கத்தின் போது மட்டுமல்ல, இப்பொழுதும் இருக்கிறார்கள்.


கெல்டுகள் ஜோதிடம் ஒன்றே போதும், அது பாரதத்திலிருந்து வந்தது என்று சொல்ல..


யயாதியின் மகனான த்ருஹ்யுவின் காலத்தில் ரிக் வேதங்கள் எழுந்து விட்டன. வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு ரிஷிகளால் பாடப்பட்டவையே ரிக் வேதம் ஆகும். த்ருஹ்யுவுக்குப் பிற்பட்ட காலத்திலும் ரிக் வேதங்கள் எழுந்திருக்கின்றன. அவற்றில் அவனைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுதான் ஆரிய – தஸ்யு போரையே மாக்ஸ் முல்லர் 'கண்டு பிடித்தார்.'


பல நூற்றாண்டுகளாக அல்லது ஆயிரக் கணக்கான வருடங்களாக எழுந்த ரிக் வேதத்துடன், அதன் கூடவே ரிக் ஜோதிடமும் உருவாக்கப்படும். இன்றைக்குப் பஞ்சாங்கத்தில் நேரம், காலம் சொல்வதைப் போல ரிக் ஜோதிடத்தில் அந்தந்த வருடத்தின் சூரிய – சந்திர அமைப்பச் சொல்லியுள்ளார்கள்.

 

மேலே கூறிய லகத ஜோதிடம் 3800 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றால், அப்பொழுதுதான் ரிக் வேதம் எழுந்த்து என்று அர்த்தமல்ல. அதற்கு முன்னாலும் ரிக் வேத மந்திரங்கள் பாடப்பட்டன. அப்பொழுது இருந்த கோள் நிலையைச் சொல்ல ரிக் வேதாங்க ஜோதிடம் இருந்திருக்கிறது. த்ருஹ்யுவின் காலக்கட்டமான 7000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த அறிவு இருந்திருக்கிறது. அதை ட்ரூயிடுகள் எடுத்துச் சென்றிருக்கின்றனர். வான சாஸ்திரத்தில் இவர்கள் நிபுணர்கள் என்று ஜூலியஸ் சீசர் சொல்லியுள்ளார் என்பது இங்கு நினைவு கூறத் தக்கது.


இவற்றைத் தவிர மிக முக்கியமான வேதப் பழக்கம் ஒன்று ட்ரூயிடுகளிடையே இருந்திருக்கிறது, அது சோம பானம் தயாரித்தல் ஆகும். அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.  

14 கருத்துகள்:

  1. Dear Madam,

    I enjoy reading your blogs. Very interesting and very informative. I am wondering, if the peoples of India migrated into Europe several thousands of years back, and they managed to carry with them and propagate some remnants of Vedic culture in their new homelands, how is it that most of such cultures have buried their ancestors and not cremated them? Cremation seems to be the distinct hallmark of Vedic culture but I am surprised that this important aspect of Vedic religion was not carried on in their new homelands? May be you have explained this in one of your blogs already. Please let me know.

    Regards.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. No, Celts did not bury the dead. They cremated them and collected the ash and stored them in a burial jar as we find in India. This was called Pitru-medha ceremony. Read my English article on this in the context of Adhicchanallur - Sembina kadandiyur urns in

      http://jayasreesaranathan.blogspot.in/2008/04/from-adicchanallur-to-sembiyankandiyur.html

      The Vedic proof for this can be read here.

      http://www.sanskrit.org/www/Rites%20of%20Passage/ancestors2.html

      Important to note is that the vedic ceremony says,

      "A cow or goat, known as an anustarani[4], was burned along with the body of the deceased."

      Similar practice was done by Celts / Druids. They cremated the dead with rituals as was done in Vedic society. They also burned the living creatures ( as told above in Pitru Medha ) in the pyre.

      Julius Caesar has written this on Celtic practice:-

      “Their funerals, considering the state of civilisation amongst the Gauls, are magnificent and costly; and they cast into the fire all things, including living creatures, which they suppose to have been dear to them when alive; and, a little before this period, slaves and dependents, who were ascertained to have been beloved by them, were, after the regular funeral rites were completed, burnt together with them.”

      This practice was seen in the cremation of RAvana. Valmiki Ramayana testifies this incident on Ravana's cremation. This practice seems very old - happening in Rig vedic time. Ravana - Rama period comes 7000 years ago. 5 generations before them ( 200 years roughly) came Yayti and Druhyu. Therefore it is plausible that Druhyus carried this culture of cremation along with living beings.

      Later day writers of Christian leanings distorted the Celtic practice of cremation and even said that they killed human beings on pyre.

      Burial also was practiced by Druids. It was there in Vedic custom also. The Vedic custom is that those who die a natural death must be cremated and those who died an unnatural death must be buried. The Stonehenge burials show that the people had died unnatural death.

      The Druids also had a custom of funeral songs and Funeral games. This is similar to how we do
      Shubha - sweekaaram - of doing auspicious things after completion of 12 days after death to signify return to normal routine. The Druids held games and competitions in the similar way. Gaming was running in their blood. That is why I strongly felt that Kelta was the root word of their name - Celts.

      A word on spelling of Celts. The Greco- Romans added unnecessary spellings to old terms thinking that they were making a new language. But they have only harmed history by that.

      Coming to this issue under discussion, I wrote a para on cremation practice if Druids in this article itself but deleted later as it did not fit with the flow of the article. I will do at an appropriate place.

      Please stay on with the blog. Some mind blowing expositions are going to be published on spread of Shiva worship in Europe as far as Arctic circle. The Sami people who followed Saivu culture have remnants of Vena, father of Prithu which is a different line - away from Druids. Skanda (murugan) comes in that picture giving us many surprises. It is truly mind boggling how Skanda traveled from Thennan Desam through NW India to Scandinavia and had a presence in Europe as Baal. It is to the credit of Christianity to have destroyed all old practices.

      நீக்கு
    2. // I am wondering, if the peoples of India migrated into Europe several thousands of years back//

      Genetics show that movement happened via Indian sub continent since 40,000 years ago. The Devas of the North hemisphere moved to Siberia then. My English article based on the clues on Sun worship traces that movement. It can be read here:-
      http://jayasreesaranathan.blogspot.in/2011/11/indus-girl-and-indra-loka-have-remnants.html

      Between 25,000 to 40,000 years ago another group went and centered around Caspian sea. The Puranic apsaras and Gandharvas came in that period. They had done fire rituals / Homa for which there is literary evidence.

      13,000 years ago, the last migration took place via Dwaraka and Saraswathi river but they spread within India. At apt places, I will produce climate and vegetation maps of Graham Hancock to show how this goes well with growth of mankind in this period which saw the rise of Rama and Krishna.

      Those who are curious to know what prompted people to move up north, can read my article in English in the link below.

      http://jayasreesaranathan.blogspot.in/2011/11/sundaland-was-location-of-tripura.html

      WE have to take lead from this article on how Shiva came to be associated with the South. Will do that in the course of this Tamil series.

      நீக்கு
    3. The above comment might give a view that people with Vedic rituals came down from north to India. No, it is not so. Everytime movement had happened from south to north. Once gone to north, the culture had disintegrated or lost over time- may be a kind of short OOzhi. There is no reverse migration.

      நீக்கு
  2. Thanks for taking time to give a detailed response regarding my query about cremation/burial of ancestors. If celtics had cremated their ancestors in the distant past, I think this evidence then adds more weight to the direction of migration.

    Looking forward to your blogs on Shiva worship in Europe. Your blogs always make for compelling reading.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://druidnetwork.org/en/learning/courses/online/polytheist/one

      The above link brings out the Druid culture based on researches done so far. 12 links are given in the sidebar to guide your search. I will quote this site in the next article, as many readers may miss the info recorded in the comments. I would like to tell the readers not to miss the comments because some of the worthy information are there in the comments only which were written in the course of clearing doubts and answering some questions.

      நீக்கு
    2. I find reader traffic from outside India eager to read this article - perhaps on Google alert on terms in English on Druids - and attempting to google - translate this article. How I wish I can bring this and other related ones in English. Anyone finding time can help me in translating them.

      நீக்கு
    3. I am happy to say that one Ms Shantha, an Electrical engineer by profession and a multi lingual person, residing in the USA contacted me upon reading my above request and had agreed to translate the articles into English. She is translating from the 102nd article onwards. The 102nd article had already been posted in my English blog. The link is :-

      http://jayasreesaranathan.blogspot.in/2012/09/from-indus-proto-siva-to-celtic_29.html

      My sincere thanks to her for helping me in taking these articles for the English reading people.

      நீக்கு
  3. please change your heading "தமிழன் திராவிடனா?” it is not suitable. please change " ஆரியன் ஐரோப்பாவிலிருந்து வந்தவனா?” it is the correct heading...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seems you have not read all the articles. This is a series on the main theme 'தமிழன் திராவிடனா?' - in which the current ones are on disputing the claims of European origin for Aryans and on showing that whatever similarity is there between Europe and India, the root cause can be traced to India.

      நீக்கு
  4. //I would like to tell the readers not to miss the comments because some of the worthy information are there in the comments only which were written in the course of clearing doubts and answering some questions.//

    Mam,
    I thoroughly agree with you. However your comment section is limited to only the last 5 comments. If there were 10 comments in different posts, it is not humanly possible to scan through all the posts for the latest comment. Hence I suggest you to provide a "see all comments.." options, that can lead us to a page listing all the comments chronologically. I have a in-house web developer. Should you want any assistance please feel free to write to me at venkat@editmymail.com. A small 'Anil Ubakaram' in your mammoth effort.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thanks for the offer of help, Mr Venky. I couldn't locate 'see all comments' in the blogger. Though I am not yet aware of many of the features of blogger, I am under the opinion that one can subscribe to the comments as well as the posts, to get them in their mail box. They are displayed in the side bar of this page. Anyone willing to track the comments can join the இங்கு சேரலாம் - கருத்துகள்

      If any other suggestions are there, please write to me.

      நீக்கு
  5. பெயரில்லா19 மே, 2013 அன்று PM 10:31

    As per Wikipedia Celtic calendar is called Coligny since the bronze tablets containing the calendar was found in a place in France called Coligny. So the name is not derived from Tamizh as alleged by you.
    Please do not make wild guesses without verifying the facts.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Let it be a wild guess, but what about other issues, mainly the intercalary month (அதிக மாதம்)? The fact is that Coligny, Gaul, Celt (pronounced as Kelt) were one with same culture of Celts and Druids. What is Gaul? How that name came into being? Do you know that figurines in the posture of Meditation and Yoga have been unearthed in these regions of France and Germany? These people who had their earlier origins in Bharat were speakers of Apabrahmsa - stunted Tamil - or what is called Kodum Tamil. Read my English blog on "Hanuman and Sita conversed in Madhura language".

      நீக்கு