திங்கள், 10 செப்டம்பர், 2012

104. ஐரோப்பாவில் காளி யந்திரம்!

 

 

உலகின் சில பகுதிகளிலுள்ள வயல்வெளிகளில் அவ்வபொழுது திடீரென்று சில வடிவங்கள் முளைக்கின்றன. இவற்றை CROP CIRCLE  என்கிறார்கள். அந்த வயல்களில் உள்ள செடிகளைக் கொண்டே இந்த வடிவங்கள் அமைகின்றன. அந்தச் செடிகள் வெட்டப்படாமல், பிடுங்கிப் போடப்படாமல், அப்படியே தலை சாய்த்து, ஒரு பெரிய கோலம் போல அல்லது ஒரு ஒழுங்கான வடிவத்தில் தோற்றமளிக்கின்றன.


 

இவை ஓரிரவிலேயே திடீரென்று தோன்றி விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில், பகல் வேளையிலேயே, யாரேனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கண்ணுக்கெதிரேயே அவை மடமடவென்று சரிந்தும், சாய்ந்தும், ஒரு குறிப்பிட்ட வடிவத்தை அடைந்து விடுகின்றன.


அந்த வடிவங்கள் குறிப்பிட்ட ஜியோமிதி வடிவங்களாக இருக்கின்றன என்றும், அவற்றை உண்டாக்க பல வட்டங்கள், சதுர செவ்வகங்கள், கோடுகள் போன்றவற்றை பல விதங்களிலும் ஒன்றன் மீது ஒன்று வரைந்து உருவாக்க முடியும் என்றும் கண்டு பிடித்தார்கள். இவ்வாறான வடிவங்களைக் கணினியிலோ அல்லது ஒரு தாளிலோ வரைந்து, அழித்து, முடிவான வடிவத்தைக் கொண்டு வர முடியும், ஆனால், பல சதுர மீட்டர் பரப்பளவில் வளர்ந்துள்ள செடிகளில், அவற்றுக்கு எந்த சேதம் வராமலும், சுற்றுப் பகுதியிலும் சேதம் விளைவிக்காமலும், ஒரே நாளில், அல்லது ஒரே இரவில் மனிதர்களாலோ அல்லது கருவிகளைக் கொண்டோ இவ்வாறு அமைக்க முடியாது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.


இவை எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தோன்றுவதில்லை. பலப்பல வடிவங்களில் தோன்றுகின்றன. அவற்றில் சில நாம் வரையும் கோலம் போல இருக்கின்றன. பிற  வடிவங்கள் யோகம், மற்றும் தந்திர மரபில் சொல்லப்படும் வடிவங்களை ஒத்திருக்கின்றன. அப்படி மிகச் சரியான ஒரு யந்திர அமைப்பில், 1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் தேதி, இங்கிலாத்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ்ஷையர் என்னும் இடத்திலுள்ள BYTHORN வயல்வெளியில், ஒரு வடிவம் திடீரென்று தென்பட்டது. ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது அது இப்படி இருந்தது.


 


இதன் நடுவில் 5 முனை நக்ஷத்திர அமைப்பு தென்படுகிறது. (இதே நக்ஷத்திர அமைப்பு கேர்னூனோஸ் தலையிலும் அமைக்கப்பட்டிருந்தது.) படத்தில் வெண்ணிறமாகத் தெரியும் இடங்களிலுள்ள செடிகள் நன்கு நேர்த்தியாக ஒன்றன் மீது ஒன்று சாய்ந்து படுத்த நிலையில் உள்ளன. எந்தச் செடியின் காம்பும் உடையவில்லை. கையால் அவற்றை அந்த அளவுக்கு வளைத்தால் இந்தச் செடிகள் உடைந்து விடக்கூடியவை. ஆனால் இவற்றை எலாஸ்டிக் பாண்டை இழுப்பது போல இழுத்து படுக்க வைத்தாற்போல இருக்கின்றன.



மடிக்கப்பட்ட செடிக்காம்புகள்.


இன்றைய விஞ்ஞானம் அறிந்துள்ள எந்தவிதமான சக்தியாலும் இவ்வாறு செய்ய இயலாது. மனிதச் செயலுக்கு அப்பாற்பட்ட இப்படிப்பட்ட வடிவங்களைப் பற்றி, பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. இவை இன்னும் நாம் கண்டுபிடிக்காத இயற்கைச் சக்திகளால் உண்டாகின்றன என்ற எண்ணம் விஞ்ஞானிகள் மத்தியில் இருக்கிறது. ஆனால் மூட நம்பிக்கைகள் அறவே இல்லாதவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மேலை நாட்டவர் பலர், வேற்றுக் கிரக மனிதர்கள் பூமிக்கு வந்து இவ்வாறு செய்கின்றனர் என்றும்  நம்புகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வடிவங்களில் ஏசுவையும், கிருஸ்துவ, யூத  நம்பிக்கைகளையும், நக்ஷத்திரங்களையும் தேடிப் பிடித்து இணைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த வடிவங்களைப் பார்க்கும் போது, தெளிவான நீரில் காற்றாலும், நுண்ணிய துகள்கள் சிதறுவதாலும் தோன்றும் சுழிகளையும், அடுத்தடுத்து அவை ஏற்படுத்தும் சீரான ஜியோமிதி வடிவங்களையும் நினைவூட்டுகின்றன. நீரிலோ அல்லது ஏதாவது திரவத்திலோ, ஒலி அலைகளைச் செலுத்தி இப்படிச் சீரான வடிவங்களை உருவாக்க முடியும். இதை CYMATICS  என்னும் ஒரு துறையாகவே ஆராய்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக குறிப்பிட்ட அலைவரிசைகளில் ஒலி அலைகளை திரவத்தில் செலுத்திய போது பின்வருமாறு வடிவங்கள் எழுந்தன.



இவற்றைப் பார்க்கும் பொழுது, நம் நாட்டில் யந்திர வழிபாட்டில் இருக்கும் சில வடிவங்களை ஒத்திருப்பதைக் காணலாம். மேலேயுள்ள படத்தின் நடுவில் இருக்கும் வடிவம், ராகு யந்திரத்தை ஒத்திருக்கிறது. கீழுள்ள படங்களில் அந்த ஒப்புமை காட்டப்பட்டுள்ளது.




வலது பக்கம் இருப்பது ராகு யந்திரம். இடது பக்கம் இருப்பது CYMATICS  முறையில் உருவான வடிவம்.


அது போல கடைசி வரிசையில் முதலாவதாக இருக்கும் வடிவம் 6 X 6 என்னும் அமைப்பில் நேர்க் கோடுகளாகவும், குறுக்குக் கோடுகளாகவும் உள்ளன. இதே அமைப்பில் 8 x 8  என்னும் அமைப்பில் இருந்தால் அது நாராயண யந்திரம்.  இவை இரண்டையும் கீழே காணலாம்.




வலது பக்கம் இருப்பது நாராயண யந்திரம். இது சதுர வடிவில் எட்டுக்கு எட்டு என்ற அளவில் 64 சச்சதுரங்களைக் கொண்டது. நாராயண மந்திரமும் எட்டெழுத்துக்களைக் கொண்டது என்பதால், மனம் போன போக்கில் அது உருவாக்கப்பட்டதல்ல என்றும் தெரிகிறது. 8 என்னும் எண்ணைத் தமிழில் '' என்றுதான் எழுதுவார்கள். அக்ஷரங்களில் (அக்ஷரம் = அழியாதது) தன்னை அகாரம் என்னும் '' வாகக் கிருஷ்ணன் பகவத் கீதையில் அடையாளம் காட்டிக்கொள்கிறான். திருக்குறள் தேவனாரும், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் என்று சொன்னதில், '' என்னும் அக்ஷரத்தை, எந்தத் தெய்வத்தை மனதில் வைத்துக் கொண்டு சொன்னார் என்பது இங்கு யோசிக்க வேண்டியது.


 

இது மட்டுமல்ல, இன்னொரு விவரமும் இந்த யந்திர அமைப்பில் இருக்கிறது. நம் நாடு முழுவதும், நிலத்தை 8 X 8 = 64 என்ற அளவில்தான் அளந்தார்கள். பிரித்தார்கள். இதில் ஆரியம், திராவிடம், வட இந்தியா, தென் இந்தியா என்ற எந்த வேறுபாடும் கிடையாது. இந்தியாவின் பல இடங்களிலும் கிடைத்துள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் நிலத்தின் அளவுகள் 64 இல் இத்தனை பாகம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளன. நிலங்களை எட்டுக்கு எட்டாகத்தான் அளந்தார்கள். இந்த அமைப்பை வாஸ்து சாஸ்திரம் உயர்வாகச் சொல்லியுள்ளது. சதுஷ்ஷஷ்டி (சமஸ்க்ருதத்தில் 64 என்னும் எண்) என்றழைக்கப்படும் இந்த வடிவம்  வாழ்விடங்களுக்கு மிகவும் ஏற்புடைய அளவாகச் சொல்லப்படுகிறது. இந்த வடிவத்தை நாராயணன் எனப்படும் திருமாலுடன் தொடர்பு படுத்துவதால், பல புதிர்களுக்கு விடை கிடைக்கிறது.

 


அப்படிப்பட்ட ஒரு புதிர் தமிழ்ச் சங்க நூல்களில் சொல்லப்படும் ஐம்படைத்தாலியாகும். குழந்தை பிறந்த 5 ஆம் நாள் விஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களான சங்கு, சக்கரம், சாரங்கம் என்னும் வில், கதை, கட்கம் ஆகியவற்றைச் சிறிய வடிவில் செய்து குழந்தையின் கழுத்தில் அணிவித்தார்கள். இதற்குக் காரணம், குழந்தைக்கு எந்தக் கெடுதலும் நேராமல், திருமால் காப்பாற்றுவார் என்பதே. இந்தக் கருத்தின் ஆரம்பம் மஹாபாரதக் காலத்துக்குச் செல்கிறது. மஹாபாரதப்போரின் விளைவாக பாண்டவர்களது வாரிசுகள் அனைவரும் இறந்து போனாலும், அபிமன்யுவின் மனைவியின் கர்ப்பத்தில் இருந்த குழந்தையைத் திருமால் பஞ்சாயுத பாணியாகச் சூழ்ந்து கொண்டு காவல் காத்தார். எஞ்சிய ஒரே வாரிசான பரீக்ஷித்து என்னும் அவனைக் கருவிலேயே பாதுகாத்ததால், திருமாலின் பஞ்சாயுதங்களையும் தாயத்து போல அணியும் வழக்கம் தமிழ் நிலங்களில் வந்திருக்கிறது. இதன் மூலம் இரண்டு விவரங்கள் புலனாகின்றன.


ஒன்று, மஹாபாரத்த்தின் தொன்மை.

ஐம்படைத்தாலியைப் பற்றிய குறிப்புகள் அகநானூறு, புறநானூறு போன்றவற்றில் வருகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நூல்களின் காலக் கட்டத்தில் ஐம்படைத்தாலி அணிதல் வழக்கமாக இருந்திருந்தால், அதற்கு எத்துணை காலத்திற்கு முன்பே அது மக்கள் வாழ்வில் இருந்திருக்க வேண்டும்? கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட மக்கள் தமிழ் நிலங்களுக்கு வந்த காலம் தொட்டு இந்தப் பழக்கம் இருந்திருக்க வேண்டும்.


இரண்டாவது, இன்றைக்குப் பலரும் எண்ணுவது போல ஹிந்து மதம் சைவம், வைணவம் என்று பிரிந்திருக்கவில்லை. அரசன் சிவ பக்தனாக இருப்பான், ஆனால் அவன் குழந்தைக்கு திருமாலின் ஐம்படைத்தாலி அணிவிப்பான். ஹிந்து மதத்தின் ஒவ்வொரு தெய்வத்துக்கும் பிண்ணனியில் இருக்கும் தத்துவத்தை அறிந்த சமுதாயமாக அன்றைய தமிழ் மற்றும் பாரத சமுதாயம் இருந்திருக்கிறது என்றும் தெரிகிறது.

 


"காப்புக்கு முன்னெடுக்கும் கடவுள் மாலேயாகும்" என்று சூடாமணி நிகண்டு கூறுவதற்கொப்ப, குழந்தை பிறந்த 10 நாட்களுக்குள் 'காப்படித்தல்' என்ற ஒரு சடங்கைச் செய்து அதில் குழந்தையின் கையிலும், காலிலும் காப்பு வளைகள் அணிவிக்கும் வழக்கம் இன்றும் பல தமிழர்களிடையே இருக்கிறது. சங்க காலத்தில் குழந்தைக்குப் பாதுகாப்பாக திருமால் இருப்பான் என்று அந்தத் திருமாலின் பஞ்சாயுதங்களையும் ஒரு இலை போன்ற வடிவில் (ஆலிலை) வடித்து அதைக் கழுத்தில் அணிவிப்பார்கள், இலை என்பதைத் தாலம் அல்லது தால் என்பார்கள். இதனால் அந்த அணிக்குத் தாலி என்ற பெயர் ஏற்பட்டது. ஐந்து படைக்கலன்களைக் கொண்டதால் அதற்கு ஐம்படைத்தாலி என்ற பெயர் ஏற்பட்டது.  தாலி என்பதும் அந்த ஐம்படைகள் வடிவமும் காக்கும் சக்தி படைத்தவையாகின்றன.


 

அதை அணிந்து கொண்டு குழந்தை தவழும் போது அந்தத் தாலம் (இலை வடிவ அமைப்பு) ஆடும். அதையே தால்- ஆட்டுப் பருவம்  (தாலாட்டு) என்று சொல்லிப் பாடி மகிழ்ந்தார்கள். இதை அரையில் கட்டும் அரைஞாணாகவும் அணிவித்தார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. 1000 வருடங்களுக்கு முன் வரை, தமிழர்கள் இதை அணிந்தார்கள் என்பதை முதலாம் குலோத்துங்க சோழன் இதை அணிந்திருந்தான் என்ற செய்தியிலிருந்து தெரிகிறது. இங்கு சொல்ல வருவது என்னவென்றால் வாழும் வீடு, நிலம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு, சதுர வடிவ நில அமைப்பின் மூலமாகப் பாதுகாப்பு தருபவர் திருமால் ஆவார். அது மட்டுமல்ல, அந்த நிலத்தில் தவழும் குழந்தைக்கும் திருமால் பாதுகாப்பு தருகிறார். அந்தப் பாதுகாப்பைப் பெற மந்திரம், ஹோமம், ஜபம் ஆகியவை அல்லாமல், சில குறிப்ப்ட்ட வடிவங்களைக் கொண்டே பெற்றிட முடியும். அந்த வடிவங்களில் திருமாலின் சக்தி பொருந்தியிருக்கும். இதைப் போலவே பிற வடிவங்களில் வேறு வேறு தெய்வங்களின் சக்தி பொருந்தியிருக்கும்.

 


மேலே காட்டியுள்ள CYMATICS  முறையில உருவாக்கிய வடிவங்களைப் போல பல வடிவங்களை இயற்கையில், இயற்கைச் சக்திகளால் உருவாக்க முடியும். ஆனால் அவற்றுள் உயர்வானதும், ஒழுங்கு முறையுடனும் கூடிய தெய்வ சக்திகளை உருவாக்கும் முறையை பாரத மக்கள் மக்கள் அறிந்திருந்தார்கள். அப்படி உண்டான ஒரு வடிவம், 5 முனைகள் கொண்ட நக்ஷத்திர வடிவமாகும். அந்த வடிவம் ஸ்யாமா காளியின் வடிவமாகும்.


 

BYTHORN  வயல்வெளியில் உண்டான வடிவம் ஸ்யாமா காளியைக் குறிப்பது. வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் இந்த வடிவத்தைக் கீறி, ஸ்யாமா காளியை வழிபடும் வழக்கம் நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. அந்த ஸ்யாமா காளி யந்திரம் இவ்வாறு இருக்கும்,



தில் 5 முனைகள் கொண்ட நக்ஷத்திரம் ஒரு வட்ட அமைப்புக்குள் அமைந்திருக்கும், அதை மண்டலம் என்பார்கள். இந்த மண்டலம் ஒரு சதுர அமைப்பில் அமைக்கப்பட்டு, அதற்கு  நான்கு திசைகள் அமைக்கப்படும். மேலே காணும் அமைப்பில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளிலும் வாயில் அமைக்கப்பட்டு, சர்வதோபத்ர அமைப்பில் உள்ளது. சர்வதோபத்ரம் என்பது எல்லா பக்கங்களிலும் பாதுகாப்பாக உள்ளது என்று பொருள். இந்த யந்திர அமைப்பில் நக்ஷத்திரத்துக்கு நடுவில் ஒரு முக்கோணம் அமைந்துள்ளது. BUTHORN  வயல் அமைப்பில் அது இல்லை.



ஆகாயத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நடுப் பகுதி குழப்பமாகத் தெரிகிறது.

முக்கோணம் என்பது காளியைக் குறிக்கும். காளி யந்திரத்தில் ஒரே ஒரு முக்கோணம் நடுவில் இருக்கும்.

 



 

எந்த ஒரு பெண் தெய்வத்துடன் கூடிய யந்திரமாக இருந்தாலும், அதன் நடுவில் காளியைக் குறிக்கும் முக்கோணம் இருக்கும். ஸ்ரீசக்கர யந்திரத்திலும், நடுவில் ஒரு தனி முக்கோணம் இருக்கும். கீழே காட்டப்பட்டுள்ளது ஸ்ரீசக்கர யந்திரம்.



 

BYTHORN வயல் அமைப்பில் நடுப்பகுதி சரிவர அமையவில்லை. இதனால் அந்த சக்தி (காளி) முழுமையாக அங்கு பரிமளிக்கவில்லை என்று தெரிகிறது.

 

காளி என்றாலே அச்சத்தைத் தரும் உருவமும், வேகமும் கொண்டவள். எதிரிகளை அழைப்பதில் அவளுக்கு நிகர் அவளேதான். காளி என்றால் கருப்பு என்று ஒரு பொருளும், சண்டை என்று ஒரு பொருளும் உண்டு. ஸ்யாமா காளி என்றால் அதே பொருளை அதிகமாகவும், விசேஷமாகவும் கொண்டவள் என்று பொருள். ஸ்யாமா என்றால் கருப்பு என்று பொருள். ஸ்யாமா காளியின் வடிவமான 5 முனை நக்ஷத்திரத்தை, ஹரிக்கேன் என்னும் சூறாவளிப் புயலின் மையத்தில் காணலாம்.




அமெரிக்காவில் முன்பு வீசிய இரண்டு ஹரிக்கேன் சூறாவளிகளை வானிலிருந்த விண்கலத்திலிருந்து படம் எடுத்தார்கள். அந்தச் சூறாவளிகளின் சுழற்சிகளது மையப் பகுதியில் நக்ஷத்திர அமைப்பு இயல்பாகவே உண்டாகிறது என்பதை இந்தப் படங்களில் காணலாம். வலது புறம் இருக்கும் படத்தில் 5 முனை நக்ஷத்திர அமைப்பு தெளிவாக  இருப்பதைக் காணலாம்.


 

இந்த வடிவத்தை உண்டாக்கிய சூறாவளியை நம்மால் உணர முடியும், ஆனால் நம்மால் உணர முடியாமலும், விஞ்ஞானக் கருவிகளால் கண்டுபிடிக்கப்படாமலும் இருக்கும் பல சக்திகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றான ஸ்யாம காளியின் சக்தி BYTHORN  வயல் வெளியில் அன்று இருந்திருக்கிறது.


 

இப்படிப்பட்ட அமைப்புகள் இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களில் அடிக்கடி உண்டாகின்றன. இவற்றுள் இங்கிலாந்திலுள்ள வில்ட்ஷையர் (WILTSHIRE)  பகுதிக்கருகே அதிக அளவில் உண்டாகின்றன. அதிலும் ஸ்யாமா காளி யந்திரத்தைப் போன்ற 5 முனை நக்ஷத்திரம், அதிக அளவில் இந்தப் பகுதியில்தான் காணப்பட்டுள்ளது.




 

இங்கு வருடந்தோறும் குறைந்த்து 50 முறையாவது பல்வேறு வகையான வடிவங்கள் வயல் வெளியில் தோன்றுகின்றன. இந்த இடத்தில்தான் ஸ்டோன்ஹென்ஞ் (STONEHENGE) எனப்படும் பழமையான கல் அமைப்புகளும் உள்ளன.





பொ.மு 3000 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இதைப் போன்ற பல கல் அமைப்புகள் இதே இடத்தில் அருகருகே காணப்படுகின்றன. இந்த ஸ்டோன்ஹென்சுக்குப் பக்கத்திலேயே ஒரு க்ராப் சர்கிள் (CROP CIRCLE) வடிவம் வயலில் தோன்றியது. அதைக் கீழ்க்காணும் படத்தின் இடது பக்கத்தில் காணலாம்.

 

 .

 

சந்திரனது வளர்ச்சியையும், தேய்வையும் ஸ்டோன்ஹெஞ்சின் மூலம் கணித்திருக்கலாம் என்ற ஒரு கருத்து இருக்கிறது. அதைக் காட்டும் விதமாகக் க்ராப் சிர்கிள் உண்டாகி இருக்கிறது என்று இடப்பக்க அமைப்பைப் பற்றி கூறுகிறார்கள். இதைப் பற்றிய கருத்தைப் பிறகு சொல்வோம். இந்தப் படத்தின் வலது பக்கத்தில் உள்ளது இந்த இடத்துக்கு அருகில் உள்ள மற்றொரு பழமையான கல் அமைப்பு. இந்தக் கற்களுக்குக் கீழே அல்லது அருகே, இறந்தவர்களை அடக்கம் செய்திருக்கிறார்கள். அவை அனைத்தும் இயற்கை மரணங்கள் அல்ல என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  இவற்றிலெல்லாம் பொதுவாக இருப்பது, முக்கோண அமைப்பே.

 

வலது பக்க அமைப்பின்  (WEST KENNETH LONG BARROW) முக்கியத்துவம் என்னவென்றால் அது முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள படத்தில் சதுரத்துக்குள் இரண்டு முக்கோணங்களாக அந்த மயானக் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அமைப்பைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.



இப்படி அமைக்கப்பட்ட மயானக் கற்கள் இங்கிலாந்தின் இந்தப் பகுதியில் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில்தான் ஸ்யாமா காளி வடிவம் உட்பட பலப்பல வடிவங்களில் செடி வடிவங்கள் திடீர் திடீரென்று உருவாகின்றன. இதில் காணப்படும் அதிசயம் என்னவென்றால், இங்கிலாந்தின் வடிவமும் முக்கோணமாகும் என்பதே. (கீழே இங்கிலாந்தின் படம்)




 

இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக அதிக அளவில் திடீர் அமைப்புகள் தோன்றுமிடம், இத்தாலியில் உள்ள சிசிலியா தீபகற்மாகும், அதன் வடிவமும் முக்கோணமே.

 


மேலே உள்ள படத்தில் காணப்படுவது இத்தாலி நாடு. அதன் கீழ்புறத்தில் (தெற்கில்) முக்கோண வடிவில் காணப்படுவது சிசிலியா தீபகற்பமாகும்.

 

கீழே காட்டப்பட்டுள்ளது ஹாலந்தில் (நெதர்லாந்து) உள்ள முக்கோண வடிவமான ஓரிடம், அங்கும் இந்த திடீர் வடிவம் தோன்றியது. அதை வலப்பக்கப் படத்தில் காணலாம்.




 

கீழுள்ள படத்தில் ஜெர்மனி நாட்டிலுள்ள ஒரு பழைய கோட்டையைக் காணலாம்.  வெவெல்ஸ்பர்க் (WEWELSBURG) என்னும் இந்தக் கோட்டை முக்கோண வடிவிலானது. 



ந்த கோட்டைக்குள் இருந்த செடிப்பரப்பில் திடீர் வடிவம் ஒன்று தோன்றியுள்ளது. அதைக் கீழேயுள்ள படத்தில் காணலாம்.

 


 

இந்த இடங்களைத் தவிர அபூர்வமாக வேறு சில இடங்களிலும் இப்படிபட்ட் வடிவங்கள் தோன்றுகின்றன. அப்படிப்பட்ட ஒரு இடம், ஈரான் நாட்டிலுள்ள ஃபார்ஸ் (FARS) மாநிலத்தில் உள்ள சர்வேஸ்தான். அதைக் கீழே காணலாம். அந்த மாநிலமும் முக்கோ வடிவில் இருக்கிறது.





 

அங்கு உண்டான வடிவத்தின் வரைபடமும், அந்த வடிவமும் மேலுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளன. ஈரான், இந்தியா போன்ற இடங்களில் இப்படிப்பட்ட வடிவங்கள் தோன்றினதே இல்லை. ஈரானில் இது முதல் முறை. ஆனால் அது தோன்றின த்தின் பெயரைப் பாருங்கள்சர்வேஸ்தான்! சர்வமும் இருக்கும் ஸ்தானம் என்ற பொருள் கொண்டது.


 

அது இருக்கும் மாநிலம் ஃபார்ஸ் எனப்படுவது. இன்றைய எல்லை அமைப்பில் முக்கோணமாகக் காணப்படும் இந்த இடம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. பழைய பாரசீக மொழியில் இதைப் பார்ஸ்வம் என்றார்கள். பார்ஸ்வா என்பது பார்ஸா என்றாகி, பிறகு பரஸ்வாஷ் என்ற பெயரில் ஈராக் பகுதிகளில் ஆரம்பத்தில் இருந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பரஸ்வாஷ் என்ற பெயர் பரசுராமர் பெயருடன் தொடர்புடையதால், பரசுராமருக்குப் பயந்து பாரத்த்தை விட்டு வெளியேறின மக்களாக இவர்கள் இருக்கும் சாத்தியம் இருக்கிறது.


பார்ஸ்வம் என்பது சமஸ்க்ருதச் சொல்.


அதற்கு ' அருகில் உள்ளது' அல்லது 'பக்கம்' அல்லது 'பக்கவாட்டில் உள்ளது' என்று பொருள். அதாவது ஃபார்ஸ் என்னும் பாரசீகம் பாரதத்தின் பக்கவாட்டில் உள்ளது என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. பாரசீகம் பக்கவாடு என்றால், பாரதம் என்னவாக இருக்க முடியும்? அது மூலம் அல்லது முக்கிய உடல் என்றுதானே அர்த்தமாகும்? சமஸ்க்ருதத்தைத் தாங்கள்தான் அறிந்தவர்கள் என்று நீட்டி முழக்கிப் பேசும் ஐரோப்பிய, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இந்தப் பொருள், விவரங்களை அப்படியே ஒதுக்கி விட்டு, பாரசீகம் என்னும்  ஈரானிலிருந்துதான் எல்லாமுமே உருவானது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.


 

பார்ஸ்வம் என்பதன் பிற பொருள்களையும் பாருங்கள்.


ஒரு வட்டத்தின் விளிம்புப் பகுதியைப் பார்ஸ்வம் என்பார்கள். 


ஒரு சக்கரத்தின் எல்லையைப் பார்ஸ்வம் என்பார்கள்.


அன்றைய பாரதத்தின் எல்லையாக அந்த நாடு இருக்கவே அது பார்ஸ்வம் – பாரசீகம், ஃபார்ஸ் என்ற பெயர் பெற்றிருக்கிறது. அங்குள்ள மக்கள் பார்ஸிகள் எனப்பட்டார்கள். இந்தப் பெயர் காரணத்தினால், பாரசீக நாடு (இன்றைய ஈரான்- ஈராக்) எல்லை என்றும், பாரதம் மையப் பகுதி என்றும் தெளிவாகத் தெரிகிறது. முதலில் எல்லைப் பகுதி வந்து, பிறகு மையப் பகுதி ஏற்படுமா? அல்லது மையப் பகுதி முதலில் தோன்றி அதற்கு எல்லை ஏற்படுமா?  மையப் பகுதிக்குத்தானே எல்லை அமையும்? மையப்பகுதியில்தானே கலாசாரம் பரிமளித்திருக்கும்? மையப் பகுதியைச் சார்ந்துதானே எல்லைப் பகுதி வளர்ந்திருக்கும்? பாரதத்தில் வளர்ந்த வேத மதத்தைப் பின்பற்றாதவர்கள் எல்லைக்கு அனுப்பப்பட்டார்கள்.


 

பார்ஸ்வம் என்பதற்கு சமஸ்க்ருத்த்தில் இன்னொரு அர்த்தமும் உள்ளது. குதிரை வண்டியின் சக்கரத்தின் அச்சுடன், குதிரைகளை இணைக்கும் பகுதிக்குப் பார்ஸ்வம் என்று சமஸ்க்ருதத்தில் கூறுவார்கள். பாரசீகம் குதிரைகளுக்குப் பெயர் போனது. இந்தப் பார்ஸ்வ அச்சு இல்லாமல் குதிரை ஓடாது.  இந்தக் கருத்தும், பாரசீகப் பகுதிகள் பாரதத்தைச் சார்ந்து இருந்தன என்பதை நிறுவுவதாக உள்ளது.

 


அந்த ஃபார்ஸ் பகுதியில் சர்வேஸ்தான் (SARVESTAN) என்னுமிடம் உள்ளது என்பது அந்தப் பெயரும் பாரதம் சார்ந்த ஒரு பாரம்பரியத்தைக் காட்டுகிறது. பழைய பாரசீகம் இன்று ஈரானாக உருவெடுத்தபோது, அந்தக் குறிப்பிட்ட ஃபார்ஸ் பகுதி முக்கோண வடிவில் அமைந்து விட்டது. அந்த முக்கோணத்தில் க்ராப் சர்கிள் எனப்படும் வயல் வெளி அமைப்பு தோன்றியுள்ளது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

 

இவற்றைத் தவிர ஜாவா தீவுகளிலும், ஆங்காங்கே இந்தத் திடீர் வடிவங்கள் தோன்றுகின்றன. அவை தோன்றும் யோக்யகர்தா போன்ற இடங்களது வடிவம் ஏறத்தாழ முக்கோணமாக இருக்கின்றன.

 

இந்த முக்கோணங்களிலேயே மிகவும் பெயர் பெற்ற முக்கோணம் 'பெர்முடா முக்கோணம்' ஆகும் (BERMUDA TRIANGLE). இந்த முக்கோணம் கடல் பகுதியில் இருக்கிறது.




அட்லாண்டிக் கடலில் ஒரு முக்கோண அமைப்புக்குள், வினோதமான சக்தியின் தாக்கங்கள் உணரப்படுகின்றன. இந்த முக்கோணப்பகுதிக்குள் செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களில் உள்ள விஞ்ஞானக் கருவிகள் செயலிழந்தும், வித்தியாசமாகவும் செயல்படுகின்றன. சில சமயங்களில் இவை ஒரு சுவடும் இல்லாமல் மறைந்தும் போய் விடுகின்றன.

 


இந்த முக்கோண இடத்தில் நாம் அறிந்த விஞ்ஞானக் கோட்பாடுகளிலிருந்து வேறான சக்திகள் இயங்குகின்றன என்று தெரிய வந்துள்ளது. கடலில் இருக்கும் இந்த முக்கோணம் போலத்தான் நிலத்தில் இருக்கும் முக்கோணமும். அவற்றின் முக்கோண எல்லைகள் இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம்இங்கிலாந்தில் இருப்பதைப் போல. அல்லது செயற்கையாகவும் ஏற்பட்டிருக்கலாம், ஜெர்மனியின் கோட்டையைப் போல. ஆனால் முக்கோண அமைப்பு இருந்தால் அங்கு விஞ்ஞானத்தால் அறிய முடியாத, அல்லது இதுவரை அறியப்படாத சக்திகள் அங்கு விளையாடுகின்றன என்று தெரிகிறது.

 


அவை எப்பொழுது விளையாடும் என்று சொல்ல முடிவதில்லை. ஆனால் வயல் வெளியில் ஏற்படும் வடிவங்களில் சில அதிசய சக்திகள் இருப்பதை ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்திருக்கிறார்கள். வடிவங்கள் தோன்றினதும் அந்த இடங்களில், சிறிது நேரம் மின் அதிர்வுகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.


 

இன்னொரு ஆராய்ச்சியில், இப்படிபட்ட அதிசயங்கள் அடிக்கடி நடக்கும் இடமான வில்ட்ஷையரில் (இங்கிலாந்து) விஞ்ஞானக் கருவிகள், காமரா ஆகியவற்றைக் கொண்டு நிலத்தைக் கண்காணித்தார்கள். அப்படிக் கண்காணித்த போது, ஈஸ்ட் ஃபீல்டு என்னுமிடத்தில் ஒளிக்கற்றைகள் அங்குமிங்கும் தென்பட்டு, 10 நிமிடங்களில் ஒரு வடிவம் உண்டாகி விட்டது. அதை கீழுள்ள படத்தில் காணலாம்.



இதில் நாம் வனிக்க வேண்டிய விவரம் என்னவென்றால், ஈஸ்ட் ஃபீல்டு எனப்படும் இந்த இடமானது முக்கோண வடிவிலானது.

 


மேலே உள்ள படத்தில் முக்கோண வடிவில் ஈஸ்டு ஃபீல்டு இருப்பதைக் காணலாம். இந்த வடிவம், தெருக்களினால் ஏற்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் முக்கோண  வடிவம், இங்கிலாந்தைச் சுற்றியுள்ள கடலால் இயற்கையாக ஏற்பட்டது. ஆனால் உள்நாட்டுப் பகுதிகளில், தெருக்கள் அமைப்பினாலோ, அல்லது வேலியினாலோ, அல்லது சுவர், மலை என்பது போன்ற அமைப்புகளாலோ முக்கோண அமைப்பு உண்டாகலாம். அப்படிப்பட்ட ஈஸ்ட் ஃபீல்டு அமைப்பில் க்ராப் சர்கிள் தோன்றியிருக்கிறது. அந்த டத்தை மஞ்சள் நிறமாகப் படத்தில் காணலாம். (அந்த இடத்தில் க்ராப் சர்கிள் உண்டானதைப் படம் பிடித்தார்கள் என்பதை மேலேயுள்ள படத்தில் கண்டோம்.)


 

முக்கோண வடிவம் இருந்தால் அங்கு ஒரு அதீத சக்தி உண்டாகி விடுகிறது, அல்லது குடி கொண்டு விடுகிறது, அல்லது அங்கு விளையாடுகிறது என்று தெரிகிறது. அனுபவத்தில் இதை நான் கண்கூடாகப் பார்த்துள்ளேன். பொதுவாக முக்கோண வடிவத்தில் நிலம் இருக்காது. ஆனால் அப்படி ஒரு நிலம் தமிழ் நாட்டில் ஒரு தொழில் நகரத்தில் இருந்தது. 15 வருடங்களுக்கு முன்னால் அந்த நிலத்தைப் பற்றி அறிய நேர்ந்தது. அந்த நிலத்தில் எந்தத் தொழிலும் செய்ய முடியவில்லை. அங்கு செய்த கட்டமைப்புகள் உடைந்து விழுந்தன. தொழிலாளிகளுக்கு விபத்து நேர்ந்தது. தொழிலில் பணம் போட்டவர்கள் ஒட்டாண்டிகளானார்கள். அச்சத்தைக் கொடுக்கும் செய்திகளும், கனவுகளும் அவர்களுக்கு வந்தன. அந்த இடம் கிட்டத்தட்ட 7 பேர் கை மாறியது. 7 ஆவது நபர் அங்கு தொழில் தொடங்கி அல்ல்ல் பட்ட பொழுது, ஒருவர் ஒரு காளி உருவப் படத்தைக் கொண்டு வைத்தார். அதற்குப் பிறகு அமைதி திரும்பியது. ஆனாலும் அங்கு பொருளீட்டும் செயல்கள் எது செய்தாலும் அவை உடனுக்குடன் அழிந்தன. அதற்குப் பிறகு அங்கு தொழில் செய்வதையே நிறுத்தி விட்டு, காளி கோவிலாக வழிபட ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகுதான் அந்த இடத்துடன் தொடர்புடையவர்களுக்கு வாழ்விலும், தொழிலிலும் நிம்மதி பிறந்தது.

 


இதை நோக்கும் போது, முக்கோண வடிவ அமைப்பில் காளியின் சக்தி பரவியிருக்கும் என்பது புலனாகிறது. அந்தச் சக்தியை அமைதிப்படுத்தினால், அதனிடமிருந்து அனுகூலங்களைப் பெறலாம் என்றும் தெரிகிறது. அந்தக் காளியைக் குறித்த தீவீர உபாசனை ஸ்யாமாகாளியாகிறது. அது 5 முனை நக்ஷத்தி அமைப்புடனும், நடுவில் முக்கோண அமைப்புடனும் கூடியது. அப்படிப்பட்ட அமைப்பு இங்கிலாந்தில் அடிக்கடி க்ராப் சர்கிளாகக் காணப்பட்டது. அதுவே கேர்னூனோஸ் தலையில் காணப்படுகிறது.


கேர்னூனோஸ் ஒரு கெல்டிக் கடவுள். கெல்டிக் மக்கள் இங்கிலாந்தில் வாழ்ந்தவர்கள். அவர்கள் இந்த நக்ஷத்திர வடிவத்தை அடிக்கடி பார்த்திருக்க வேண்டும். ஆனால் வர்களிடமிருந்து அது பாரதத்துக்கு வரவில்லை. ஏனெனில் இந்த முக்கோண, நக்ஷத்திர வடிவங்களுக்கெல்லாம் அர்த்தமும், அவற்றின் மூலம் நன்மைகள் பெறும் வழிபாட்டு முறைகளும் இன்றும் பாரதத்தில்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தலைமுறை, தலைமுறையாகக் கற்பித்து, வழிவழியாகத் தொடரச் செய்யவேதான் அந்தக் கருத்துக்கள் இன்றும் பாரதத்தில் நிலை பெற்று இருக்கின்றன. இதனால் இவற்றை அறிந்து ஆரம்பித்த மக்கள் இங்கேயே இருந்தவர்கள்தாம் என்று தெரிகிறது. பாரதமும் முக்கோண வடிவில் அமைந்தது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.




 

அப்படியல்ல, இவற்றை அறிந்த மக்கள் ஆரியர்கள், அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்றால், அவர்கள் இருந்ததாகச் சொல்லப்படும்  ஐரோப்பாவில் ஏன் இந்த வடிவங்கள் குறித்த கருத்துக்கள் தெளிவாக இல்லை என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கருத்துக்கள் பாரதத்திலிருந்து ஐரோப்பா சென்றிருக்கிறது, சரியான வழிகாட்டுதல் இல்லாததால், நாளடைவில் அந்தக் கருத்துக்கள் உருமாறி பில்லி சூனியம் என்று சொல்லும் அளவுக்குச் சென்று விட்டன.


இதைச் சொல்வதற்கு முக்கிய ஆதாரம், இங்கிலாந்தில் வில்ட்ஷயர் பகுதிகளில் காணப்படும் ஸ்டோன்ஹென்ஞ் (STONEHENGE) எனப்படும் கல் வடிவ அமைப்புகளே. இவை சொல்லும் விவரத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்.

 

2 கருத்துகள்:

  1. Dear Mam,
    The UFOlogists believe crops circles to be the work of aliens, you have given a completely different tperspective. I think that these may be the creation of some unknown natural forces yet to be identified.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் இந்த பகிர்வு இருக்கிறது...

    நன்றி!!

    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு