சனி, 19 நவம்பர், 2011

85. திரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்! -2


ரோமக தேச மயன்.


திரிபுர மயனுக்கு அடுத்து மயனது பெயர்,
ரோமக தேசத்தில் வருகிறது.

மயன் என்னும் மிலேச்சன் ரோமக நாட்டைச் சேர்ந்தவன் என்றும்,
அவனுக்கு சூரியன் அருளிய வான சாஸ்திரமே சூரிய சித்தாந்தம் என்றும்
அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது.

சமஸ்க்ருத்த்தில் இருக்கும் அந்த நூல்,
வராஹமிஹிரர் உள்ளிட்ட பலரும் பயன்படுத்திய நூலாகும்.
அந்த நூலில் ரோமக தேசத்தின் இருப்பிடம் சொல்லப்பட்டுள்ளது.
இந்த இடம் இலங்கைக்கு மேற்கே 90 பாகைகள் தொலைவில் இருக்கிறது.
அதாவது, லங்கையில் நண்பகல் வரும் பொழுது, 
ரோமக தேசத்தில் பொழுது விடிந்து கொண்டிருக்கும். 

இந்த இடம் இன்று அட்லாண்டிக் கடலுக்குள் இருக்கிறது.





46 ஆவது கட்டுரையில் நாம் காட்டிய அட்லாண்டிஸ் நகரமும்
இதே இடத்தில் அமைந்திருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.


(பார்க்க பகுதி 46)



அட்லாண்டிஸ் நகரம், கட்டிடக் கலைக்கும்,
நன்கு அமைந்த நகர அமைப்புக்கும் பெயர் போனது.
அந்த இடத்தில் ரோமக தேசமும் அமைந்திருக்கவே,
ரோமக தேசம் என்பதே அட்லாண்டிஸ் என்பதன்  பண்டைய பெயராக இருக்கக்கூடும்.
அங்கு மயன் இருந்தான் என்று சூரிய சித்தாந்தம் சொல்வதால்,
அந்த நகரத்தில் உயரிய கட்டடங்கள் இருந்தன என்று சொல்லப்படுவதில்
ஆச்சரியம் ஏதும் இல்லை.
அங்கிருந்த மயாசுரனுக்கு
இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன் சூரியன்,
சூரிய சித்தாந்தத்தை உபதேசித்தான் என்று
அந்த நூலை ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள். 




மஹாபாரதத்தில் மயன்.


இந்தக் காலக் கட்டத்திற்குப் பிறகு மயனின் பெயர்
மஹாபாரதக் காலத்தில்தான் வருகிறது.
இந்தக் காலக் கட்டத்திலிருந்துதான் 
மயனது வாஸ்து நிபுணத்துவத்தைச் சான்றுகளோடு சொல்ல முடிகிறது.
மஹாபாரதத்தில், காண்டவ வனத்தை அர்ஜுனன் அழிக்கும் போது
மயன் பெயர் வருகிறது.


அந்த வனத்தில் இருந்த மயன், நெருப்பில் சிக்கிக் கொள்கிறான்.
(திரிபுர சம்ஹாரத்தில் நிகழ்ந்த்தைப் போல)
நெருப்பிலிருந்து அவனை அர்ஜுனன் காப்பாற்றுகிறான்
அதற்குத் தன் நன்றியைக் காட்டும் விதமாக
ஏதாவது கைம்மாறு செய்வதாக மயன் சொல்கிறான்.
அதற்கு அர்ஜுனன் மறுப்பு தெரிவிக்கிறான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன்,
கைம்மாறை ஏற்றுக் கொள்ளும்படி சொல்லி,
மயனை நோக்கி,
ஒரு மிகச் சிறந்த அரண்மனையைப் பாண்டவர்களுக்குக்
கட்டித்தருமாறு கேட்டுக் கொள்கிறான்.
மயனும் அவ்வாறே செய்வதாகச் சொல்கிறான் (-பா 2-1)



அவன் பாண்டவர்களுக்காக நிர்மாணித்த சபா மண்டபம்,
மயசபை எனப் புகழ் பெற்றது.



அதைக் கட்டுவதற்கு வேண்டிய அபூர்வப் பொருட்கள்,
சங்குகள், பலவித பளிங்குக் கற்கள் ஆகியவற்றை,
கைலாய மலைக்கு வடக்கிலிருந்து கொண்டு வருகிறான்.
அவற்றைக் கொண்டு 14 மாதங்களில் மய சபையை அமைத்துக் கொடுக்கிறான்.


அந்த மயன் கட்டிய அரண்மனையின் முக்கிய அம்சம்,
அரண்மனைக்குள்ளேயே இருக்கிற குளம் ஆகும்.


அது வருண சபையை ஒத்தது என்று அனைவரும் புகழ்கிறார்கள்.
வருண சபை என்பது இயற்கைச் சிற்பியான விஸ்வகர்மாவினால்
உலகில் நில பாகங்களிக்கிடையே உண்டான கடல்
என்பதை மஹாபாரத வர்ணனை மூலம் அறிகிறோம்.
இயற்கையில் இருந்த அமைப்பை,
அதற்கு ஒப்புமையாகக் கூறியுள்ளதால்,
மய சபையின் குளம்,
செயற்கையானதும், முதன் முதலில் ஒரு மாளிகைக்குள் கட்டப்பட்டதும் ஆகும்
என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. 



மஹாபாரத விவரத்தைக் கொண்டு
மய வாஸ்து என்பது கிருஷ்ணனுடைய அனுமதியின் பேரில்
முதன் முதலில் பாரதத்தில் நுழைந்திருக்கிறது என்று தெரிகிறது.
மயவாஸ்து என்பதே,
குறிப்பாக யானம், சயனம், மாயத்தோற்ற அமைப்புகள்,
விசித்திர அமைப்புகள் இவற்றுக்குப் பெயர் போனவை. 


சிலப்பதிகாரத்தில் கோவலன்கண்ணகியின் கட்டில்,
மயன் நிருமித்த விதிகளால் செய்யப்பட்ட கட்டிலைப் போல இருந்த்து
என்ற குறிப்பு வருகிறது.
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” (சி- 2- 12) என்பதில்
அன்னஎன்று சொல்லியுள்ளாதால்,
மயனது விதிகளால் செய்யப்பட்ட கட்டிலைப் போல இருந்தது என்றாகிறது.
இதன் மூலம் மயனது தொழில் நுட்பம்
பாரதம் முழுவதும் பரவியிருந்தது என்று தெரிகிறது.



இதை மெய்ப்பிக்கும் வண்ணம் சிலப்பதிகாரத்தில் இன்னொரு விவரம் வருகிறது.
அதில் இந்திர விழா நடந்த போது வைக்கப்பட்டிருந்த
சில அபூர்வப் பொருட்களைப் பற்றிய விவரம் வருகிறது.
அவை கரிகால் பெருவளத்தான் வடதிசை நோக்கிப் பயணம் செய்த போது,
அவனுக்குத் திறையாகச் செலுத்தப்பட்டவை.


சோணையாற்றங்கரையில் இருந்த வஜ்ஜிர நாட்டு மன்ன்ன் கரிகாலனுக்கு,
முத்துப் பந்தல் தந்தான். 

மகத நாட்டு மன்ன்ன் பட்டி மன்றம் தந்தான். 

அவந்தி நாட்டு மன்னன் தோரண வாயில் கொடுத்தான். 

இவை எல்லாம் பொன்னாலும், மணியாலும் செய்யப்பட்டவை.
இவற்றைச் செய்த கம்மாளார், நுண்வினைஞர்கள் ஆகியோரது முன்னோர்கள்
தொன்மையான ஒரு காலத்தில்,
மயனுக்குச் செய்த உதவிக்குக் கைம்மாறாக,
மயனிடமிருந்து இந்த நுட்பங்களைத் தெரிந்து கொண்டார்கள்.

அவர்கள் வழியில் வந்தவர்களால் செய்யப்பட்ட இந்தப் பொருட்கள்
மயன் நிருமித்த வகையால் செய்யப்பட்டு,
பார்ப்போரை பிரமிக்கச் செய்வனவாக இருந்தன.
அந்தப் பொருட்களை, இந்திர விழாவின் போது பார்வைக்கு வைத்திருந்தனர். (சிலம்பு -5)



அவற்றை அமைத்த கம்மாளர்களுடைய முன்னோர் மயனுக்குச் செய்த உதவி என்ன,
அதற்கு ஏன் மயன் கைம்மாறு செய்தான் என்று தேடும் போது,
மய சபை நிர்மாணம் பொருந்துகிறது.
மயசபையைத் தனி ஒருவனாக மயன் கட்டியிருக்க முடியாது.
ஏற்கெனெவே அங்கிருந்த கம்மாளர்கள், தச்சர்கள், நுண் வினைஞர்கள்,
கட்ட்டக் கலைஞர்கள் ஆகியோரை வேலைக்கமர்த்தியிருக்கிறான். 


அந்த வேலையில், அவர்களும், மயனிடமிருந்து
பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நுணுக்கங்கள் பரம்பரை பரம்பரையாக சீடர்களுக்கோ
அல்லது அவரவர் வம்சாவளிகளுக்கோ கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தத் திறமையால் அவர்கள் வடபால் அரசர்களுக்குச்
செய்து கொடுத்த பந்தலும், பட்டி மன்றமும், தோரண வாயிலும்
கரிகாலன் வசம் வந்து பூம்புகாரில் காட்சிப் பொருள்களாக ஆயின.


இவற்றையெல்லாம் இங்கு சொல்வதற்குக் காரணம்,
இந்தப் பாடலில் தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின்
என்று சொல்லப்பட்டுள்ள தொல்லோர், 
மஹாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மயன் மாளிகை கட்டிக் கொடுத்த போது
அவனிடம் வேலை செய்தவர்களாக இருக்க வேண்டும் என்று காட்டுகிறது. 


மயன் இட்ட பணிகளைச் செய்ததால்,
பதிலுக்கு மயன் அவர்களுக்குத் தன் தொழில் ரகசியங்களைக் கற்றுத் தந்திருக்கிறான்.
அது, இளங்கோவடிகள் வாயிலாக வெளிப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், மஹாபாரதமும், சிலப்பதிகாரமும் நடந்த விவரங்களையே
தந்திருக்கின்றன என்று தெரிகிறது.

மஹாபாரதத்தில் வரும் எல்லா விவரங்களுமே
சரித்திரச் சான்றுகள்
என்று ஏற்றுக் கொள்ளத்தக்கவையே என்று நிரூபிக்கின்றன.



அந்த மஹாபாரதம் நடந்து 5000 ஆண்டுகள் ஆகியுள்ளன.
அப்பொழுதே பரம்பரை விஸ்வகர்மாக்களும் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் மய வாஸ்துவையும் கற்றிருக்கிறார்கள்.
விஸ்வகர்ம வாஸ்துவுக்கும், மய வாஸ்துவுக்கும்,
அளவு முறைகளில் அதிக வித்தியாசம் இல்லை.


கிராமம், தெருக்கள் போன்றவற்றை அளக்கும் யோஜனை என்னும் தூரத்தில்தான்,
இரண்டிலும் அதிக வேறுபாடு இருக்கிறது.
மற்றபடி அவர்கள் அதிகம் மாறுபடுவதில்லை.


ஆனால் மய வாஸ்து என்பது,
கட்டடக்கலை (Architecture), யானம், சயனம்
ஆகியவற்றில் முக்கியத்துவம் கொண்டது. 


சமையல் அறையைத் தென் கிழக்கில் அமைப்பது,
மயமதம் சொல்லும் விதியாகும்.
ஆனால் ஒரு வீட்டின் வாயில் கதவு இருக்கும் திக்கின் அடிப்படையில்
சமையல் அறை உள்ளிட்ட அறைகளை அமைக்க வேண்டும் என்பது
விஸ்வகர்ம பிராகாசிகையின் கருத்து. 


ஒரு வீடு என்றால், முன்கட்டு, இடைப் பகுதி, பின் கட்டு என்று அமைத்து,
பின்கட்டில் சமையல் அறை அமைக்க வேண்டும்
என்பது விஸ்வகர்மா நிர்ணயித்த விதி.
அந்த அமைப்பில்தான், நமக்கு முந்தின தலைமுறை வரை,
வீடுகள் அமைத்தார்கள் என்பதால்,
தமிழ் நாட்டுப் பகுதிகளில்,
விஸ்வகர்ம வாஸ்துவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. 


சிற்பங்கள், விசித்திர அமைப்புகள்,
யானம், சயனம் ஆகியவற்றில் மயவாஸ்துவைக் கற்றுக் கொண்டு
பின்பற்றியுள்ளார்கள் என்பதை
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி
என்னும் சிலப்பதிகார வரிகள் மூலம் தெரிந்து கொள்கிறோம்.


சங்ககாலத்தில் மயன்.

மஹாபாரதக் காலத்துக்கு அடுத்தாற்போல
மயனது பெயர் வருவது இரண்டாம் தமிழ்ச் சங்ககாலமாக இருக்கலாம் என்று,
டா. கணபதி ஸ்தபதி அவர்கள் கண்டெடுத்துள்ளஐந்திறம்
என்னும் நூல் மூலம் தெரிகிறது.


தமிழ்ச் சங்கத்தில் தங்கள் நூல்களை அரங்கேறுவதில்,
பாரதம் முழுவதுமே மக்கள் ஆர்வமாக இருந்தனர் என்று பார்த்தோம்.
ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர் முதல்,
கிருஷ்ணனது குல குருவான சாண்டில்யர் வரை
ஆரிய அரசன் எனப்பட்ட பிரமதத்தன் உட்பட பலரும்
தமிழ்ச் சங்கத்தில் தங்கள் படைப்புகளை அரங்கேற்றியுள்ளனர்.
அப்படிப்பட்ட பெருமை மிக்க சபையில்,
மயனும் அரங்கேற்றியுள்ளான் என்பது சாத்தியமே.



அதை உறுதி படுத்துவது போல ஐந்திறத்தில்
குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்
அமர்நிலைப் பேரியல் வெற்புறம் திறனாய்
பல்துளி யாற்றுப் பெருமலை திறனிலைப்
புக்குறும் நிலைத்திறன் ஏழேழ் நிலமும்
ஏழேழ் நாடென இயம்புறும் காலை” (ஐந்திறம் – 812)
என்று சொல்லப்பட்டுள்ளதால்,
இந்நூல் கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் சங்க காலத்தில்
அரங்கேற்றிய நூலாக இருக்க வேண்டும்.



இந்த நூல் ஐந்திறம் எனப்பட்டது. இது ஐந்திரம் அல்ல.
தொல்காப்பியர் தாம் ஐந்திரம் அறிந்துள்ளதாகச் சொன்னது,
ஐந்திரன் என்னும் இந்திரன் இயற்றிய ஐந்திரம் என்னும் வியாகரண நூலாகும்.
இது இலக்கண நூல்.
இந்த ஐந்திர வியாகரண சாஸ்திரம்,
பொ-பி- 1800 ஆண்டுகள் வரை,
அதாவது ஆங்கிலேயர்கள் நம் பாட முறையை நீக்கித்,
தங்கள் பாட முறையைப் புகுத்தின வரையிலும்,
மெட்ராஸ் ப்ரெசிடன்சி எனப்பட்ட,
தமிழ் நிலங்களில் பாட சாலைகளில் கற்றுத்தரப்பட்டது.

முன்பே தமிழ்ப் பார்ப்பனர் கட்டுரையில், தமிழ், சமஸ்க்ருதம்
ஆகிய இரண்டு மொழிகளிலும் தலைஎன்னும் தலையாய பாடமாக,
இலக்கணம் சொல்லித்தரப்பட்டது என்று பார்த்தோம்.
இந்திரன் மஹேந்திர மலையின் மீதமர்ந்து உபதேசித்த
ஐந்திரம் என்னும் இலக்கண நூல் சமஸ்க்ருதப் பாடத்தில் சொல்லித்தரப்பட்டது. 



மயன் அரங்கேற்றிய ஐந்திறம் என்பது
சிற்ப சாஸ்திரத்தைக் கற்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகளைச் சொல்கிறது.


ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் மனதை நிலை நிறுத்தி,
அதன் மூலம் ஒருவன் அடையும் உள்ளொளி முன்னேற்றத்தைத்
தத்துவ ரீதியில் அதில் சொல்லப்பட்டுள்ளது.
ஒரு சிற்பிக்கு அப்படிப்பட்ட மன நிலை தேவை.
அப்பொழுதுதான் அவனால்,
தெய்வ சக்தியை நிலைபெறச் செய்யக்கூடிய தெய்வ உருவை அமைக்க முடியும்.
ஓம் என்னும் மூலத்திலிருந்து பயணிக்கும் போது,
அந்த ஓங்காரம் ஊடுருவும் காலம்,
அதன் சீலம் (லயம்)
அது காட்டும் கோலம் (உருவம்)
அந்த உருவம் நிலைபெரும் ஞாலம் என்பவற்றை அடைய முடியும்.


இந்த ஐந்திறங்களும் அமையப் பெற்ற சிற்பி,
இயல், இசை, நாடகம், சிற்பம், கட்டடம் என்னும்
ஐந்து திறன்களிலும் தேர்ச்சி பெறவேண்டும்.


ஒரு இலக்கியவாதிக்கு இயல் (இலக்கணம்) மட்டும் தெரிந்தால் போதும்.
ஒரு இசைக் கலைஞனுக்கு இயலும், இசையும் தெரிய வேண்டும்.
சிலப்பதிகாரத்தில், மாதவி அரங்கேற்றத்தின் போது, அவளது இசை ஆசிரியர்கள்,
எவ்வாறு இயலில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
அந்த்த் தேர்ச்சி இருந்தால்தான், பாடும் பாடலைக் குற்றமில்லாமல் பாட முடியும்.


ஒரு நாடக, அல்லது நடனக் கலைஞனுக்கு,
இயலும், இசையும் தெரிந்திருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் குற்றமில்லாமல், அவனது
நாடக / நடனக் கலையை வெளிக் கொணர முடியும்.


ஒரு சிற்பக் கலைஞனுக்கு, இயல், இசை, நடனம் / நாடகம்
என்னும் மூன்றுமே தெரிந்திருக்க வேண்டும்.
நடராஜர் சிலை வடிக்க வேண்டுமென்றால் இவை இல்லாமல் முடியுமா?


ஒரு கட்டடக் கலைஞனுக்கு, முன் கூறிய இயல், இசை, நாடகம், சிற்பக்கலை
என்னும் நான்குமே தெரிந்திருக்க வேண்டும்.
அப்பொழுதுதான், ஒரு கட்டடத்தின் பல் வேறு விதமான தேவைகளை
அவனால் சரிவரச் செய்ய முடியும்.


இந்தக் கருத்தை வெளிப்படுத்தும்
ஐந்திறம் தந்த மயன்,
தான் கட்டிய அமைப்பில் அவற்றைக் காட்டாமல் இருப்பானா?


பாண்டவர்களுக்கு அமைத்துக் கொடுத்த அரண்மனையில்
எல்லா சித்து வேலைகளையும் அவன் காட்டினான்.

அதன் சிறப்பு அம்சம்,
மாளிகைக்குள் அமைந்த குளமாகும். 

நீர் இருப்பதே தெரியாத அமைப்பில் அவன் கட்டினதால்,
அதில் துரியோதனன் விழுந்து,
அதைக் கண்டு திரௌபதி பரிகசிக்க,
மஹாபாரதப் போருக்கான வித்து அங்கு இடப்பட்டது. 


இங்கு நமக்குத் தேவையான விவரம்,
மாளிகைக்குள் குளம் அமைத்தான் என்றால்
அதற்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வரமுடியும்?
அந்தக் குளத்தில் பயன்படுத்திய தண்ணீரை எப்படி வெளியேற்ற முடியும்?   


அங்குதான் மயனது திறமை பளிச்சிட்டது.
அந்த்த் திறமையை அவனிடமிருந்து கற்றுக் கொண்ட தொல்லோர்
(சிலப்பதிகாரம் சொன்ன வரிகளை நினைவு படுத்திக் கொள்ளவும்),
தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் வெளிக்காட்டாமல் இருந்திருப்பார்களா?

அந்த அபூர்வத் திறமை,
மொஹஞ்சதாரோ முதல்,
மஹாபாரதத்துடன் தொடர்பு கொண்ட எல்லா இடங்களிலும் தெரிகிறதே!.

அவை மஹாபாரத மயன் பள்ளியில் பயின்றவர்களால் செய்யப்பட்டது போல் இருக்கிறதே! 


அப்படி உண்டான ஒன்றல்ல - பல வாபிகள் என்னும் குளங்கள்
சிந்து சமவெளிப் பகுதிகளில் காணப்படுகின்றன. 
அவற்றை அமைப்பதற்கான பொறியியல் திறன் 
அதற்கும் முன்பே இருந்திருந்தால்தானே, 
சிந்து சமவெளிப் பகுதியில் அவற்றை நிர்மாணித்திருக்க முடியும்?

அந்தத் திறமை, பாண்டவர் அரண்மனையைக் கட்டிய 
மயனிடம் இருந்திருக்கிறது.
அவனிடம் பயின்றவர்கள்தானே 
அவற்றை மொஹஞ்சதாரோவுக்கும், ஹரப்பாவுக்கும் 
எடுத்துச் சென்றிருக்க முடியும்?


அவற்றை இனி ஆராய்வோம். 


(வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையிருந்த
மாயன் () மயன் நாகரிகத்தைப் பற்றி ங்கு சொல்லவில்லை.
அதற்கும் நாம் சொல்லும் மயனுக்கும் தொடர்பு இருப்பதாக
எந்த பாரத நூலும் சொல்லவில்லை.
ஆனால், அந்த நாகரிகத்தவர் சொல்லும் சுக்கிரன் சுழற்சி என்பதில் உள்ள சுக்கிரனுக்கும்,
தானவ அசுரர்களுக்கும் தொடர்பு உண்டு. 


அவற்றையும்,
கட்டடக் கலைக்குப் பெயர் பெற்ற அந்த மயன் மக்களைப் பற்றிய விவரங்களையும்,
இந்தத் தொடரின் போக்கில் பிறகு காண்போம்)


 

46 கருத்துகள்:

  1. Hello Madam,

    Kindly check htis link given below. You can send your article to this if it is possible for you.

    http://hindusanghaseidhi.net/?p=991

    Regards

    Siva

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு சிவா அவர்களே,

      நீங்கள் குறிப்பிட்ட அமைப்புக்கு நான் அனுப்பிய, சித்திரையில் புத்தாண்டு குறித்த கட்டுரையை உள்ளடக்கிய புத்தகம் ஒன்று இந்த மாதம் 21 ஆம் தேதி வெளியாகிறது. அன்று அந்தத் தலைப்பில் என்னைப் பேசச் சொல்லியிருக்கிறார்கள். இடம், நேரம் போன்ற விவரங்கள் கிடைத்தும், தெரியப்படுத்துகிறேன். பொது மக்கள் கலந்து கொள்ளலாம் என்றால், இந்தத் தளத்தில் விவரம் கொடுக்கிறேன்.

      இன்று சித்திரைப் புத்தாண்டைப் பற்றி இரு கட்டுரைகள் இட்டுள்ளேன். வரலாறு டாட் காம் தலையங்கத்துக்கு மறுமொழியாக இட்டவை. படிக்கவும், பகிர்ந்து கொள்ளவும். நன்றி.

      நீக்கு
    2. Dear Mr Siva,
      Kindly go through my latest blog. If you are in Chennai, kindly attend.

      http://thamizhan-thiravidana.blogspot.in/2012/04/inviting-readers-for-chitthirai.html

      நீக்கு
    3. திரு சிவா அவர்களே,

      சித்திரைச் சிறப்பு விழாவில் நான் ஆற்றிய உரையையும், வெளியிடப்பட்ட கட்டுரையையும், இந்த வலைத் தளத்தில் பிரசுரித்துள்ளேன். படிக்கவும்.

      http://thamizhan-thiravidana.blogspot.in/2012/05/blog-post.html

      நீக்கு
  2. Thanks Mr Siva,
    I already received the request letter from the organizers and have sent my article to them. After knowing the copyright rules, I will post it in my blog for everyone to read. I have produced Tamil verses from சுவடிகள் to substantiate that Tamil New Year started in Chiththirai only.

    பதிலளிநீக்கு
  3. பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.

    Please study this book. I think you already studied this. I want your opinion mam. This book have lot of songs in vaisambayanam which describes mayan. I think this book is available in all govt. library.

    And what's your opinion about mayan pranava veda.

    பதிலளிநீக்கு
  4. and also see this.

    //Another notable discovery made recently is that he was the author of Pranava Veda, the primal and most significant of all Vedas, which is referred in Bhagavata Mahapuranam as ‘eka eva pura vedah pranavo sarva vangmayah’, whereby, Veda Vyasa confirms the existence of the one and only Veda in the very remote past. Today it is found to have been originated in the Kumari Continent, Mayan being the author. The text in technical Tamil, as the Siddha literature of the Tamils, is printed in Chennai and was presented to the world in May 27, 2006 (the day of the Centenary celebration of Sirpakala Saagaram M. Vaithayanatha Sthapati revered Sthapati and father of Dr. V. Ganapati Sthapati).//

    http://www.aumscience.com/content/mission.html

    பதிலளிநீக்கு
  5. @ SUBRAMANI

    ஐந்திறம் படிக்காமல் ஐந்திறம் பற்றி எழுதுவேனா?
    நிற்க, பிரணவம் என்றால் என்னவென்று தெரியுமா?

    தெரிந்து கொள்ளுங்கள்.
    பிரணவம் என்றால் ஓம் என்னும் ஓங்காரம். அதுவே இந்த அண்டங்களின் ஒலி. அண்டங்கள் உண்டாவதற்கு ஆதாரமான vibration அது. அதை உங்கள் உடலிலும் நீங்கள் உணரலாம். உங்கள் ரத்த ஓட்டத்தை ஒரு ஸ்டெதஸ்கோப் கொண்டு கேட்டால் அது ‘ஓம் ஓம்’ என்றுதான் ஒலிக்கும். அந்த ஓம் என்பது சனாதனமான (பழமையும், என்றும் உள்ளதுமான ) ஹிந்து மதத்தின் ஆதாரம். அதில் லயிக்காமல், எந்த ஞானமும் கிடைக்காது. அதனால் அதை முதலாகச் சொல்கிறார்கள். அந்தப் பிரணவத்தின் பொருளையும், அதை சொல்லும் ஹிந்து நூல்களைப் பற்றியும் எனது ஆங்கிலப் பதிவில் எழுதியுள்ளென். லிங்க் இங்கே:-

    http://jayasreesaranathan.blogspot.com/2008/06/why-hari-om-is-uttered-in-beginning-of.html

    பிரணவ வேதம் என்பதில் உள்ள வேதம் என்னும் சொல் பிரயோகத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.

    வேதம் என்றால் வித்தை என்பது பொருள்,
    ”வித்ஞானதே வேத:” என்னும் வேரிலிருந்து உண்டானது வேதம் என்னும் சொல். எந்த வித்தை என்றாலும் அது அந்த வித்தையின் வேதம் எனப்படும். பிரணவ வேதம் என்றால் பிரணவத்தை அறிவிக்கும் வேதம். ரிக் வேதம் என்றால், ரிக்குகளது வித்தை. ரிக் என்றால் போற்றுதல், புகழுதல் என்று பொருள். ஆதியான பிரம்மத்தைப் பலவாகப் போற்றுவது ரிக் வேதம். யஜுர் வேதம் என்றால் வழிபாட்டுக்களைச் சொல்லும் வித்தை. சாம வேதம் என்பது சமமானதை வித்தையாகக் கொண்டது. ரிக்குகளில் போற்றப்படுவதை, இசை வடிவில் சொல்வதால் இது சாமம் எனப்பட்டது. இந்த மூன்றும், கலியுகத்தில் உபயோகப்படுவது என்பதால், 5000 ஆண்டுகளுக்கு முன் வேத வியாசர் (வியாசர் என்றாலே தொகுப்பாளர் என்று பொருள்) இவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளார். வேதம் என்றால் இவை மட்டுமே வேதம். இவை தெய்வ வழிபாட்டுக்கும், யாக, ஹோமங்களுக்கும் தேவை.

    இவை தவிர எல்லா வித்தைகளையும் அதனதன் வேதம் என்பார்கள். ஆயுர் வேதம் என்னும் வேதம், ஆயுளை பலப்படுத்தும் வித்தை கொண்டது. தனுர் வேதம் என்னும் வேதம், வில் வித்தையைக் கொண்டது. கந்தர்வ வேதம் என்பது ஆடல், பாடல் கலைகளைக் கொண்டது. அது போல சிற்ப வேதம் என்று சொல்ல மாட்டார்கள். சிற்பத்துக்கு வேதம் கிடையாது. சிற்பத்துக்கு சாஸ்திரம் உள்ளது. சிற்ப சாஸ்திரம் என்பார்கள். சாஸ்திரம் என்பது ’சஸானாத், சாஸ்திரமுச்யதே’ என்பதன் சுருக்கம். சாஸனம் என்றால் விதி முறைகள். விதி முறைகளைக் கொண்டது சாஸ்திரம். சிற்பம் வடிக்க விதி முறைகளைக் கொண்டது சிற்ப சாஸ்திரம். விதி முறைகளில்லாமல் சிற்பம் வடிக்க முடியாது என்பதால், அதைச் சிற்ப சாஸ்திரம் என்கிறார்கள். அது போல பிற சாஸ்திரங்கள் உள்ளன, தர்மத்தைக் கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகளைச் சொல்வது தர்ம சாஸ்திரம். இப்படியே பல விஷயங்கள் அதனதன் சாஸ்திரங்களாக அமையும்.


    தமிழும், சமஸ்க்ருதமும் இரண்டு கண்கள் என்று அடிக்கடி சொன்ன கணபதி ஸ்தபதி அவர்கள், இப்படிப் பட்ட ஆதார விளக்கங்களைக் கண்டிப்பாக அறிந்திருப்பார். ஐந்திறம் என்பதும் அந்த ஆதாரத்தையே சொல்கிறது. ஒரு சிற்பிக்கு இருக்க வேண்டிய தெய்வ நம்பிக்கையையும், தெய்வ பலத்தையும் அளிக்கும் வழியாக பிரணவத்தைச் சொல்கிறது.

    எந்த வேதமும் சொல்ல ஆரம்பிக்கும் போது ஓம் என்னும் பிரணவத்தைச் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். அந்தப் பிரணத்தையே மூச்சாகக் கொண்டு, மூச்சுப் பயிற்சி செய்து, ஞானம் காண்பதற்கு வழி சொல்வது பிரணவ வேதம் ஆகும். இந்த ஓங்காரத்தைக் கொண்டு தியானம் செய்தே எந்தச் செயலையும் செய்ய வேண்டும் என்பதாலும், ஓங்காரத்தில் தியானிப்பவனுக்கு, அவன் தேடும் ஞானம் கிட்டும் என்பதால் பிரணவத்தை முதல் வேதம் அல்லது வித்தை என்றார்கள்.

    பிரணவத்தில் மனதைச் செலுத்தி, உள் ஒளியைக் கண்டால் தான், ஒரு சிற்பிக்கு, தெய்வ உருவைச் செதுக்க முடியும். சிலையை யார் வேண்டுமானாலும் வடிக்கலாம். ஆனால் அதில் தெய்வம் குடி கொண்டிருக்க வேண்டுமென்றால், சில நியம நிஷ்டைகளுடனும், மன சுத்தியுடனும், உள்ளொலி ஞானத்துடனும் ஒருவன் சிலை வடிக்க வேண்டும். இதை ‘மய விஞ்ஞானம்’ சொல்கிறது என்று கணபதி ஸ்தபதி அவர்களே சொல்லியுள்ளார்.

    “ ஓம் ஒலி கேட்டுணர்ந்தால் உள்ளொலி ஞானம் தோன்றும்,
    ஓம் ஒலி கண்டுணர்ந்தால் ஒளியொளிர் உருவே தோன்றும்,
    ஒளியொளிர் உருவந்தானே ஆடலன் ஆடலன்றோ”
    (மய விஞ்ஞானம்)

    தெய்வக் கருவை மந்திர, யந்திரங்களால் உள்ளிறக்கும் நடராஜர் போன்ற தெய்வச் சிலையை, ஓங்கார உபாசனையும், அதன் மூலமாக உள் ஒளியும் கண்டவனால் தான் முடியும் என்பதே மய விஞ்ஞானம், ஐந்திறம் போன்றவற்றின் கருத்து.

    பதிலளிநீக்கு
  6. //ஐந்திறம் படிக்காமல் ஐந்திறம் பற்றி எழுதுவேனா?//

    I didn't told you didn't study aintiram. and I stated that ''I think you already studied this.''

    //பிரணவம் என்றால் என்னவென்று தெரியுமா? //

    Ya! I knew that from some books.

    //வியாசர் என்றாலே தொகுப்பாளர் என்று பொருள்//

    I knew that and next vyasa is Aswathaman.

    //பிரணவ வேதம் என்பதில் உள்ள வேதம் என்னும் சொல் பிரயோகத்தைப் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள். //

    I didn't know that till i red your answer. Because someone told me that veda means knowledge. Thankyou for ur additional information.

    One thing I want you told you. I want your opinion about ''பண்டைத்தடயம்'' book. Because you mentioned that mayan was romakan. But that book mentioned mayan was born in KUMARI KANDAM. and that article about mayan was written by the follower of ganapathy sthapathy.(I forgot ''HER'' name)

    And I'm just a reader, Not a researcher. I wan't to know everyone facts.

    //Veda Vyasa confirms the existence of the one and only Veda in the very remote past. Today it is found to have been originated in the Kumari Continent, Mayan being the author.//

    Here they told that pranava veda was first and Vyasa(krishna) also confirmed that. And It was written by Mayan.

    Is it correct or not? Is Pranava veda mentioned by Vyasa and Mayan's pranava veda is same or not?

    பதிலளிநீக்கு
  7. @ Subramani,

    I hope you read the 2 articles on Mayan thoroughly and also my comment and also the article on Om for which I have given the link. That article will tell you what Pranava or Om kar means. Pranava or Om-kar is the basic vibration of the Universe. No one can create it nor write about it. Mayan did not create it nor was the first one to write about it. All the people - sages and saadhaks (சாதகர்கள் / மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு, யோக நிலைக்குச் செல்பவர்கள்) can realise it. Any one engaged on divine works will go through the process of realizing the "Swara" of OM. That has happened with all sages and Munis. That is all.

    பிரணவ வேதம் என்று ஒரு வேதம் கிடையாது. அதை வேதம் என்றி ஐந்திறம் சொல்லவில்லை. ’ஓம் ஒலி’ என்றே ஐந்திறம் சொல்கிறது.
    ஐந்திறத்தில் வருகிற ஓம் ஒலி குறித்த பாக்கள் :-

    “மறை முதல் ஒலி ஓம் என அறைதல் மரபே”

    ”மொழி முதல் ஓமென்று உரத்தல் வழக்கே”

    அணுத் திரள் ஒலியே எழுத்தொலிச் சிறப்பாகும்”

    ஸ்தபதி அவர்கள் வார்த்தையில்,
    இந்த மூன்று பாக்களும், “ ஓம் என்ற மூலத்தின் தோற்றத்தையும் அதாவது அதன் வெளிப்பாட்டையும் அதன் நிலைப்பாட்டையும் ஐந்திறம் அறுதியிட்டுக் கூறுகிறது.”

    இந்த பாக்கள் வேத மறையை ஒத்துக் கொள்கின்றன என்பதையும், எந்த வேதத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்னும், ஒரு மொழியில் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னும், ஓம் என்பதைத் தியானித்தல் மரபு என்று சொல்வதைக் காணலாம். இந்த மரபையும், அல்லது ஓம் என்பதையும் கண்டுபிடித்தது மயன் அல்ல என்பதையும் இந்த வரிகள் காட்டுகின்றன.

    பிரணவம் என்பது ஒரு மந்திரம். அதன் உருவம் பிள்ளையார் உருவத்தில் காண்பது மரபு. அதை ஒரு வேதம் என்று சொன்னால், அதை ஒரு வித்தையாகக் காண்கிறார்கள் என்று அர்த்தம். அது ஏன் வித்தை என்றால், ஓம்கார உபாசனைக்குப் பல வழிகள் இருக்கின்றன. எப்படி எப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்ற முறைகள் இருக்கின்றன. அதனால் அது ஒரு வித்தை. வித்தை என்பதால் அது வேதம். உண்மையில் ‘சிவ ஸ்வரோதயம்” என்னும் நூலே பிரணவ உபாசனைக்கு ஆதார நூல் என்று சொல்வார்கள். அதைச் செய்தவர் சிவ பெருமான். இடகலை, பிங்கலை, சுழுமுனை போன்ற நாடிகளில் ஓடும் ப்ராணனை வசியப்ப்டுத்தி, ஓங்காரத்தில் நிலை நிறுத்திச் செய்தால், முக்காலமும் தெரியும். சித்தர்கள் அதைச் செய்தவர்கள். அதைச் செய்தால் ஒருவன் சிறந்த சோதிடனாவான். தெய்வீகக் கலைகள் அவனுக்குக் கிட்டும். தெய்வச் சிற்பம் வடிக்க விரும்பும் ஒரு சிற்பி அந்த உபாசனையில் ஈடு பட வேண்டும். இதையே மயன் செய்தான். செய்ததை எழுதினான்.

    அதற்கு மேல், மயன் தான் அதைக் (பிரணவம்) கண்டுபிடித்தான் என்றோ, அவனே அதைத் தந்தவன் என்றோ ஒருவர் சொன்னால், அது அறியாமை. ஸ்தபதி அவர்களைப் போன்ற ஒருவர் சொன்னால், தான் எடுத்துக் கொண்ட பொருளை உயர்த்திச் சொல்வதற்காக அவ்வாறு சொல்கிறார் என்று விவரம் தெரிந்தவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். ஆனால் ஐந்திறத்தில் மயன் சொல்வது, ஓங்கார உபாசனை செய்து, படிப்படியாக உயர்பவன் அந்த தெய்வத்தைத் தன் கை வண்ணத்தில் (சிற்பமாகக்) கொண்டு வர முடியும் என்பதே.

    அந்த மயன் குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் தனது நூலை எந்தச் சங்கத்தில் அரங்கேற்றினான் என்று சொல்லவில்லை. ஆனால், கட்டுரையில் சொல்லப்பட்டபட்ட ஏழேழ் நாடுகள் இருந்த காலம் என்பதால் அது, 2 ஆவது சங்க காலமாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

    மயன் என்னும் பெயர் எங்கெங்கெல்லாம் வந்திருக்கின்றன என்பதைச் சொல்லியுள்ளேன். மயன் என்பவன் ஒரு உருவகம், ஒரு பரம்பரை, உருவுடனும் வாழ்ந்தவன் என்று மூன்று விதமாகச் சொல்லலாம். இதுவரை நம்மிடம் உள்ள எல்லா விவரங்களையும் திரட்டி மயனைப் பற்றிக் கொடுத்துள்ளேன்.

    ஒரு ஜோதிடரைக் கேட்டால் அவர் மயன் ஒரு ஜோதிடர் என்றுதான் சொல்வார். ஏனெனெனில் மயனுக்கு உபதேசிக்பப்பட்ட சூரிய சித்தாந்தம் ஜோதிட நூல். அதிலும் மயாசுரன் என்று சொல்லப்படவே, மயன் என்னும் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றுதான் கொள்ள முடியும்.

    கிருஷ்ணன் காலத்தில் வரும் மயனே சிற்பக்கலை வல்லுனனான மயன் ஆவான் என்றும், (அவனே 2 ஆம் சங்க காலத்தில் வாழ்ந்தவனாக இருக்க வேண்டும்) சொல்லும் வண்ணம் இன்றைய சிற்பக் கலையின் ஆரம்பம் அப்பொழுது ஆரம்பித்தது. அது இந்தியாவிலும் இருந்தது, இரண்டு கடல் தாண்டி மெக்சிகோ அருகே உள்ள மாயன் பண்பாட்டிலும் தெரிகிறது. அதைப் பற்றிய விவரங்கள் மாயன் பண்பாட்டைப் பற்றிச் சொல்லும் போது எழுத இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. @ Subramani.

    You have said,
    //Another notable discovery made recently is that he was the author of Pranava Veda, the primal and most significant of all Vedas, which is referred in Bhagavata Mahapuranam as ‘eka eva pura vedah pranavo sarva vangmayah’, whereby, Veda Vyasa confirms the existence of the one and only Veda in the very remote past.//

    Please know the exact verse (eka eva pura vedah pranavo sarva vangmayah’), and meaning of the meaning of the verse as told in Srimad Bhagvatham

    Srimad Bhagavatam 9.14.48

    eka eva pura vedah

    pranavah sarva-vanmayah

    devo narayano nanya

    eko 'gnir varna eva ca

    SYNONYMS

    ekah -- only one;
    eva -- indeed;
    pura -- formerly;
    vedah -- book of transcendental knowledge; pranavah -- omkara;
    sarva-vak-mayah -- consisting of all Vedic mantras;
    devah -- the Lord, God;
    narayanah -- only Narayana (was worshipable in the Satya-yuga);
    na anyah -- no other;
    ekah agnih -- one division only for agni; varnah -- order of life;
    eva ca -- and certainly.

    In the beginning Om was the only Mantra. Narayana was the only deity. This is what Srimad Bhagavatham says (It is not called as Mahapuranam. Mahapuranam is a work done by Jains.)Do those people promoting Mayan as the progenitor of Pranava (Om) agree that he also said that Narayana was the only deity?

    If at all we want to pin point authorship for Pranava, it is Brahma deva (நான் முகப் பிரம்மன்) and none else. From Pranava all creation starts. There is a film song .. ”பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே, அதனை அவனிடத்தில் வைத்தான் முருகனே.” Mayan's name is never remembered with Pranava. He is remembered for shilpa sastra. Like any one steeped in his sastra, Mayan has delved into Pranava. Such a meditation on Pranava is a necessary precondition for a shipi to make divine images.

    பதிலளிநீக்கு
  9. Now I understood your facts. Thank you for your guidance with synonomical and expanded statements about pranava veda.

    பதிலளிநீக்கு
  10. திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களே,

    மிக அருமையான கட்டுரை.இவ்வளவு விவரங்கள் ஒருவரால் எப்படி சேகரிக்க முடிந்தது ?என்று மிகவும் வியப்பாக இருக்கிறது.கடந்த சில மாதங்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப நாட்களாக உங்களிடமிருந்து கருத்துரைகள் எதுவும் வரவில்லையே என்று நினைத்தேன் திரு தனபால் அவர்களே. நீங்கள் படிப்பதைக் கேட்டு மகிழ்ச்சி.
    இந்த விவரங்களை இந்தத் தொடருக்கெனச் சேகரிக்கவில்லை. 'நோக்கம்' கட்டுரையில் சொன்ன பலதரப்பட்ட துறைகளில் ஈடுபடும் போது, ஓரளவுக்குப் பிறகு, அவையெல்லாம் ஒன்றுக்கொன்று இயைந்து இருப்பதைக் காண முடிகிறது, அவற்றைக் கொண்டு இந்தத் தொடரை எழுதுகிறேன். எழுத எழுத, தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பிற கிளைச் செய்திகளையும் கொடுக்கலாமே என்று அவ்வப்பொழுது சேர்த்து எழுதுகிறேன். அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  12. once upon atime I studied that //In '''சதாபத பிராமணம்''' they mentioned one katarkol./// I think that kadatkol is oldest. Can you help me what the lines are? I forgot it.

    பதிலளிநீக்கு
  13. @ Subramni,
    Can you be more exact? If you think that a Tamil word is there in Satapada Brahmana, no it is not so. There is no Katarkol or Kadatkol in sanskrit or Satapada Brahmana.

    பதிலளிநீக்கு
  14. ஆரியப் படையெடுப்பை உண்மையில்லை என்பவர்கள் ஈரானியர்களின் சரித்திரத்தையும், பாரசீகத்தின் சரித்திர ஆராய்சியாளர்களையும் பொய்யன்களாக்குகிறார்கள்.

    இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.

    http://www.iranchamber.com/history/article...ple_origins.php


    கிறித்துவுக்கு முந்தைய இரண்டாவது ஆயிரமாண்டில், பாபிலோனுக்கு அருகில் இலாம் தேசத்தில் ஒரு நாகரிகம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தபோது, இந்தோ - ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் தாங்கள் குடியேறிய மாபெரும் ஈரானியப் பீடபூமிக்குத் தங்கள் பெயரைச் சூட்டினார்கள். ‘ஆரியர்களின் பூர்வீக தேசம்’ என்று பொருள்படுகின்ற ‘ஆர்யானா வயேஜோ" என்ற பெயரிலிருந்தே ‘ஈரான்’ என்ற சொல் உருவாயிற்று. அரை-நாடோடிகளான இந்த மக்களின் வழிவந்தவர்கள்தான் மெடிஸ்களும் பாரசீகர்களும் ஆவர்.

    இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்

    பதிலளிநீக்கு
  15. இரானியர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் அவர்கள் இலாம் நாடு உண்டான காலத்துக்கும் முற்பட்ட நம் நாட்டு நூல்களான மஹாபாரதம், ராமாயணம் சொல்லும் விவரங்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.இலாம் மக்கள், அங்குள்ள சூசா, அவர்கள் பெண் தெய்வம் இனன்னா போன்றவர்களைப் பற்றியும் இந்தத் தொடரில் வருகிறது.

    5000 ஆண்டுகளுக்கு முன், மொத்தம் 4 காலக் கட்டங்களில், வட இந்தியாவிலிருந்து மக்கள் வெளியேறி, ஈரான், மத்திய ஐரோப்பா பகுதிக்குச் சென்றுள்ளனர். அவற்றின் சுருக்கம் இந்த லிங்கில் கருத்துரைப் பகுதியில், சாந்தனு அவர்களுக்கு எழுதியுள்ளேன். அதில் பெர்சியா என்பதன் பெயராக்கம் எப்படி வந்த்து என்றும் எழுதியிருப்பேன்.
    இந்த லிங்கில் உள்ள கட்டுரையையும், கருத்துரைகளையும் படிக்கவும்.

    http://jayasreesaranathan.blogspot.com/2011/11/indus-girl-and-indra-loka-have-remnants.html


    இந்த லிங்கில் மஹாபாரதக் காலத்துக்கான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    http://jayasreesaranathan.blogspot.com/2011/11/inscriptional-evidence-for-mahabharata.html

    இவையும், ஈரானின் மக்களது மூலமும், டேரியஸ் தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்ட காரணமும் இந்தத் தொடரில் தமிழில் விளக்கப்படும். ஈரானிலிருந்தோ, மத்திய ஐரோப்பாவிலிருந்தோ, மக்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்று மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்பதை இந்தத் தொடரில் சொல்லி வந்துள்ளேன். அந்த மரபணு ஆராய்ச்சிகள் உள்ள லிங்குகளை இந்தத் தொடரின் 46 ஆவது கட்டுரைக்குக் கீழ் கருத்துரையில் தந்துள்ளேன். படிக்கவும்.

    இன்னும் தமிழன் இந்த வித விஞ்ஞான ஆராய்ச்சிகளை அறியவில்லை என்பது வருத்த்துக்குரியது. அவற்றின் மூலம் ஆரியப் படையெடுப்புக் கருத்து பொய் என்று அறியவில்லை என்பதும், வருத்தத்திற்குரியது. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மஹாபாரத, ராமாயண, புராண, சங்க இலக்கியங்களில் உலக சரித்திரம் புதைத்துள்ளது என்று ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு மஹாபாரத, ராமாயண, புராணம் என்றாலே எட்டிக் காயாக கசக்கிறது என்பதால், அவர்களால் அறிவு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலாமல் இருக்கிறது என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  16. pls kindly read periyar books and Caspian muthal gangai varai. in this books author told clearly how aryan invasion happened and also give the archeological and historical truth about Iran history and Afghanistan history and dont give history abour puranas and epic here is the link for the truth about aryan invasion

    www.tamiloviya.com

    www.sollvanam.com (ஆயிரம் தெய்வங்கள் by ஆர்.எஸ்.நாராயணன்)

    www.yarl.com

    history of Iran and Afghanistan search in Wikipedia.we have to prove the aryan invasion true by archeological and historical evidence and not by neea nanna useless speaches

    பதிலளிநீக்கு
  17. pls go through this web

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=286:2008-04-14-19-20-00&catid=73:2007&Itemid=0

    go through the official web of India and read the history of indie

    Mr jayasreesaranathan you have to prove the Aryan invasion theory in historical ways.if you are trying to say.இரானியர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் அவர்கள் இலாம் நாடு உண்டான காலத்துக்கும் முற்பட்ட நம் நாட்டு நூல்களான மஹாபாரதம், ராமாயணம் சொல்லும் விவரங்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

    that Indian people is brilliant and other people are mad then why you are using such mad people technology like internet and medicine for your life. you so brilliant Indian people and use your Purana and epics Vedas for your life.if your epics and Vedas are true then why don't you go to the court and tell them to write the true history of India cannot the wrong history in your Indian constitution and Indian official history like official web of history of India and also go through the official web of Indian genetics and clearly you can see the difference of people

    www.igvdb.res.in/

    தெளிவாக.. படமே போட்டு காட்டுகிறார்களே..
    வட பகுதிகளில் caucasoid களும் தென் பகுதிகளில் proto austroloid களும் இருப்பதாக..
    இருவரும் இரு வேறு இனங்கள் தானே.. வேறு வேறு காலங்களில் தானே இந்திய பகுதிக்கு வந்திருக்க வேண்டும்..
    தயை கூர்ந்து விளக்கவும்..

    பதிலளிநீக்கு
  18. why do you unnecessarily bring in topics like using "mad peoples' internet" and such? No one mentioned that they are mad until you did...which shows your state of mind. No one is stopping you in your endeavor to tarnish the vedas. People like you do not have what it takes to investigate Indian history on your own, and blindly believe and take no effort to verify the credibility of the investigation of the foreigners. Good luck and god speed.

    பதிலளிநீக்கு
  19. that not a good answer you did you say like this
    இரானியர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் அவர்கள் இலாம் நாடு உண்டான காலத்துக்கும் முற்பட்ட நம் நாட்டு நூல்களான மஹாபாரதம், ராமாயணம் சொல்லும் விவரங்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

    what this meaning if you say i only say foreigners they are mad and what is the meaning for your above words if your is topic is good then you will say for my question i have enough proof for Aryan invasion is not happened and that you give to the Iran historians.and you give your words like this.you above said instead you said இரானியர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் அவர்கள் இலாம் நாடு உண்டான காலத்துக்கும் முற்பட்ட நம் நாட்டு நூல்களான மஹாபாரதம், ராமாயணம் சொல்லும் விவரங்களை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.this is correct answer a man who describe a world wide topic of Aryan invasion. if you enough proof you would say such words like this.you already say the Aryan went to world from north India if it is true Iran are the branch people of Indian Aryan so you had the correct proof to give to them and you will reply to them they were false it is your duty OK

    and i want kindly answers in Tamil language for my other replies also with historical and archeological evidence. pls kindly give the answers in tamil

    பதிலளிநீக்கு
  20. இங்கு எழுதும் எல்லா பெயரில்லாதவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இதுவரை வந்த எல்லா கட்டுரைகளையும் படித்து விட்டுக் கேள்விகள் / கருத்துரைகள் எழுதவும். எல்லாக் கட்டுரைகளும் தமிழிலதான் உள்ளன. படிக்கப் பொறுமை இல்லையென்றால், தேடுக பெட்டியின் மூலம் தொடர்புடைய கட்டுரைகளைப் படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  21. பெயர் Ulla jayasree வேண்டுகோள். see i want only answers for this only if yours are write you can go to the court and give petition that Indian history having many false proof and the deliberately confusing our people and give your proof to the court and ask them to establish a correct Indian history to the people this will help the Indian people for their correct history and to the world also.

    instead why this arguments between you and Tamil people and useless speeches.

    if your detail for the Aryan invasion theory is good proof and true one you kindly go to the court proof your arguments in court and give the correct answers to the people of India that will end to this Aryan invasion theory

    pls give answers in Tamil
    thank you

    பதிலளிநீக்கு
  22. My recent post in English on genetic studies and movement of people from India to outside India with illustrations.

    They will be given in detail in Tamil in this site, in the course of this series.

    http://jayasreesaranathan.blogspot.com/2011/12/yet-another-genetic-study-that.html

    பதிலளிநீக்கு
  23. http://www.arianuova.org/arianuova.it/arianuova.it/Components/English/A59-IndiaAmerica.html

    Ganapathi sthapathi told that Mayan was from First tamil sangam. Refer the link above. And ganapathi's followers also told like that. I already informed this to you.
    (பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.)

    பதிலளிநீக்கு
  24. (My nhm writer is not working, so Iam writing in English)


    //Ganapathi sthapathi told that Mayan was from First tamil sangam. Refer the link above. And ganapathi's followers also told like that. I already informed this to you.//

    epporuL yaar yaar vaaik kEtpinum, apporuL
    meypporuL kaaNpathaRivu.

    I have written enough on Mayan. Mayan's own reference to Kapatapuram, is proof of the 2 nd sangam and not first sangam. Let people go through the information I have given from texts and analyse.

    பதிலளிநீக்கு
  25. //I have written enough on Mayan. Mayan's own reference to Kapatapuram, is proof of the 2 nd sangam and not first sangam.//

    I want to know where is that link. I can't identify that mayan verse.

    //குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்//
    If you told this verse means I want to know
    //ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென// 7*7 countries is in First or second tamil sangam. I don't know that.

    And you told that tiripura siva and mayan were in same period. But tripuram eritha virisaday kadavul is in first sangam.

    //மயனது பெயர் வருவது இரண்டாம் தமிழ்ச் சங்ககாலமாக இருக்கலாம் என்று,
    டா. கணபதி ஸ்தபதி அவர்கள் கண்டெடுத்துள்ள “ஐந்திறம்’
    என்னும் நூல் மூலம் தெரிகிறது.//

    I want to know where sthapathi told mayan in second tamil sangam. In my view sthapathi follower told that mayan in first tamil sangam. (as i mentioned earlier in Pandai thatayam book)

    நீங்கள் கூறிய ஐந்திரம் ஐந்திறம் வித்யாசத்தை தற்போது கண்டுகொண்டு தமிழ் விக்கிப்பீடியாவில் மாற்றியாகிவிட்டது. நீங்கள் அதைக்கூறாவிடில் அங்கு தவறாகவே இருந்திருக்கும். அதைக்கூறியதற்கு நன்றிகள்.

    and you told that somasundara irayanar did sangapalakai is in second tamil sangam. But that sthapathi follower told mayan did sanga palakai in first tamil sangam. Till now i can't find what is ப. நூ. as i mentioned earlier.

    All my questions about mayan from that pandai thatayam book only. So i request you to study that book. and one thing that book not only about mayan they even mentioned thondai mandala history records and lot of other things also. I think you can get more points from that book.

    At last i'm not a researcher like you. நான் இவற்றை உங்களை எரிச்சலூட்டுவதற்காக கேட்கவில்லை. நான் தெரிந்து கொண்டவை சிலவற்றில் cila க்ருத்துகள் உங்களோடு ஒன்றுபடுகிறேன். ஆனால் இம்மயன் பற்றி மட்டும் சில குழப்பம் உள்ளது.

    பதிலளிநீக்கு
  26. //My nhm writer is not working, so Iam writing in English//

    I saw in one of the ananda vikatan blog they attached tamil keyboard in comment area. But i don't know how they attached that.

    பதிலளிநீக்கு
  27. >>>
    /I have written enough on Mayan. Mayan's own reference to Kapatapuram, is proof of the 2 nd sangam and not first sangam.//

    I want to know where is that link. I can't identify that mayan verse.

    //குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்//
    If you told this verse means I want to know
    //ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென// 7*7 countries is in First or second tamil sangam. I don't know that.<<<<


    ஏழேழ் நாடுகள் அழைந்ததும் 2 ஆம் சங்கம் முடிந்தது.இதைப் பற்றி இந்தத் தொடரில் கட்டுரைகள் முன்னமே இடப்பட்டுள்ளன.

    ஐந்திறத்தில் ஏழேழ் நாடுகள் இயம்புறும் காலை மயன் தன் நூலை அரங்கேற்றினான் என்று சொல்லும் செய்யுள் இந்தக் கட்டுரையிலேயே இடப்பட்டுள்ளது. மீண்டும் இங்கே:-


    “அதை உறுதி படுத்துவது போல ஐந்திறத்தில்
    “குமரி மாநிலம் நெடுங்கலை ஆக்கம்
    அமர்நிலைப் பேரியல் வெற்புறம் திறனாய்
    பல்துளி யாற்றுப் பெருமலை திறனிலைப்
    புக்குறும் நிலைத்திறன் ஏழேழ் நிலமும்
    ஏழேழ் நாடென இயம்புறும் காலை” (ஐந்திறம் – 812)
    என்று சொல்லப்பட்டுள்ளதால்,
    இந்நூல் கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் சங்க காலத்தில்
    அரங்கேற்றிய நூலாக இருக்க வேண்டும்.”

    பதிலளிநீக்கு
  28. >>And you told that tiripura siva and mayan were in same period. But tripuram eritha virisaday kadavul is in first sangam.<<

    விரிசடைக் கடவுள் என்பவர் அன்றும், இன்றும், என்றும் இருப்பவர். அவருக்குரிய பல பெயர்களில் அதுவும் ஒன்று. அதைக் கொண்டு அவரை 11,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் (முதல் சங்கம் தோன்றிய காலம்) என்று குறுக்குவது சரியல்ல.

    திரிபுர சம்ஹாரம் என்பதை geological manifestation ஆகப் பார்க்க வேண்டும், ஏன் என்று முந்தின கட்டுரையில் எழுதியுள்ளேன். இன்னும் விரிவான விளக்கத்தை என் ஆங்கில வலைத் தளத்தில் எழுதியுள்ளேன். புவியியல் ஆராய்ச்சிகள், விஞ்ஞான ஆராய்ச்சிகளுடன் அது ஒத்துப் போவதையும் அதில் காட்டியுள்ளேன். அதன் படி திரிபுர சம்ஹாரத்தின் காலம் இன்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன். அப்பொழுது தமிழ் உண்டாகவில்லை. தமிழ்ச் சங்கமும் இல்லை. தமிழுக்கு இலக்கணம் கொடுத்தவுடன்தான் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
    அந்தக் கட்டுரை

    http://jayasreesaranathan.blogspot.com/2011/11/sundaland-was-location-of-tripura.html

    அதிலும் மயன் பெயர் வந்துள்ளது. அந்த மயன் என்பவன் நீங்கள் உருவகித்து வைத்து போன்ற ஒரு உருவம் அல்லன். அது தானவ மக்கள். அதை மயன் பெயரால் அடையாளம் காட்டியுள்ளனர். திரிபுரம் எரிந்த போது, உயிருடன் தப்பியவர்களுள் தானவர்களும் ஒருவர். தானவர்கள் உலகின் பல இடங்களிலும் பரவியுள்ளனர். ஐரோப்பாவில் உள்ள டனுபே நதி, மேற்கு ஐரோப்பிய மக்கள் தானவர்களிடமிருந்து உண்டானவர்கள் என்று சொல்லும் வண்ணம் விவரங்கள் இருக்கின்றன.

    மேற்கு ஐரோப்பாவில் அவர்கள் நுழைந்தது. இந்தத் தொடரில் முன்பு காட்டிய அட்லாண்டிஸ் மூலமாக இருக்க வேண்டும், ஏனெனில் அட்லாண்டிஸ் இருப்பதாக சொல்லப்படும் இடத்தில் ரோமக தேசம் இருந்த்து. ரோமக தேசத்தில் இருந்தவனும் மயன் என்னும் அசுரன் என்பதை சூரிய சித்தாந்தம் மூலம் அறிகிறோம். சூரிய சித்தாந்தம் என்பது ஹிந்து ஜோதிடமே. அந்த ஜோதிடம் ரோமக தேசம் மூலம், அட்லாண்டிஸ் அழிந்த பிறகு, மேற்கு ஐரோப்பா வழியாக நுழைந்து ரோமர்கள் ஜோதிடமாக ஆனது. ரோமக தேசத்தைச் சேர்ந்தவர் ரோமக ரிஷி. இவரது ரோமக சித்தாந்தம், பஞ்ச பக்ஷி சாஸ்திரம் போன்றவை பாரத நாட்டில் பிரசித்தி பெற்றவை. இந்த ரிஷியின் பெயரால் சித்தர் பாடல்கள் இருக்கின்றன. இவர் அதில் மிலேச்சத்தை குறிப்பிட்டுள்ளார்.

    நிறக, இந்த விவரங்கள் சொல்வதற்குக் காரணம், மயன் என்ற பெயர் பல இடங்களில் வருகின்றன. ரோமக தேசத்தில் வருகிறது. அங்கு ஜோதிடத் தொடர்புடன் வருகிறது. இவ்வாறான வேறுபட்ட விவரங்களை இந்தத் தொடரில் சொல்லி வருகிறேன். அப்படி வேறுபாடுகளுடன், மயன் என்னும் பெயர் பல காலக் கட்டங்களில் வருவதால், ஐந்திறம் மயனை மட்டும் பிடித்துக் கொண்டு, எல்லாவற்றுடனும் முடிச்சு போட்டால், அது உங்களை எங்கும் இட்டுச் செல்லாது.

    பதிலளிநீக்கு
  29. >>And you told that tiripura siva and mayan were in same period. But tripuram eritha virisaday kadavul is in first sangam.<<

    சிவனுக்குப் பல பெயர்கள், அவர் விரிசடைக் கடவுளாக இருந்தாலும், சங்கத்தோடு கொடுத்துக் கேட்டவர் ‘இறையனார்’ என்பதைக் கவனிக்கவும். இறையனார் என்ற சொல்லே சங்கத்தின் முதற் கடவுளான சிவனுக்குப் பல இடங்களிலும் சொல்லப்படுகிறது. இறையனார் அகப்பொருள் உரை என்பதிலும் இறையனார் என்பதே வருகிறது. தருமிக்குத் தந்த பாடல் குறுந்தொகையில் உள்ளது, அதையும் இறையனார் எழுதினதாகவே தொகுத்துள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  30. ஸ்தபதி அவர்களது மாணவர் சொல்வதை, ஸ்தபதியே சொல்லியிருக்கிறார். அதை நான் படித்திருக்கிறேன். ஐந்திறம் புத்தகம் குறித்த அவரது ஆய்வுப் பார்வை புத்தகமும் என்னிடம் இருக்கிறது. ஸ்தபதி அவர்கள் மயன் எழுதிய நூல் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியுள்ளதைச் சுட்டிக் காட்டி, இதைக் கொண்டு இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாரே தவிர அதற்கு மேல் சொல்லவில்லை. அதற்கு மேல் பில்டப் கொடுத்து எழுதப்படும் கட்டுரைகள் (நீங்கள் சுட்டிக்காட்டுபவை) ஆதாரபூர்வமானவை அல்ல.

    ஒரு உதாரணம், மயன் சங்கப் பலகை சமைத்தான் என்பது. சங்கப் பலகை பற்றி அறிய திருவிளையாடல் புராணம் படியுங்கள். அதைப் பற்றியும் இந்தத் தொடரில் கட்டுரை இட்டுள்ளேன்.

    மயன், தமிழர் தொடர்பு பற்றி சில அடிப்படை விவரங்கள்.

    # மயன் ஒரு தானவன் அல்லது அசுரன், எந்தத் தமிழ் மன்னனும், தன்னை ஒரு அசுரனுடன் இணைக்கவும் இல்லை, அல்லது ஒரு அசுரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் இல்லை. ஆனால் ’மனு முறை’ செய்து என்று மனுவுடன் சொந்தம் கொண்டாடிய கல்வெட்டு எழுத்துக்கள் இருக்கின்றனவே தவிர, எந்தத் தமிழ் மன்னர்களும், தமிழர்களும் எந்த அசுரனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    # அதனால்தானோ, மூன்று சங்கங்களிலும் அரங்கேற்றப்பட்ட முக்கிய நூல்களையும், புலவர்களையும் பற்றிச் சொல்லும் நக்கீரனார், இறையனார் அகப்பொருள் உரையில் மயனைப் பற்றிச் சொல்லவில்லை.

    # மயனது ஐந்திறத்தை தஞ்சாவூர் நூலகத்தில் ஸ்தபதி அவர்கள் கண்டெடுத்தார். அந்த நூல் சொல்லும் விவரத்தின் படி, அந்த நூல் 2 ஆம் சங்கத்தில் அரங்கேறியிருக்கிறது. அந்தச் சங்கத்தின் காலக் கட்டத்தில், நில அமைப்புகள் அதிகம் இல்லை. அதனால் கட்டடக் கலை அப்பொழுது வளர்ச்சி பெறவில்லை எனலாம். சிற்பக் கலையும் வளர்ச்சி பெறவில்லை மயன் எழுதியதும், கட்டடம் / சிற்பக் கலை அல்லாமல், அந்தக் கலைஞனுக்கு இருக்க வேண்டிய தகுதிகளைப் பற்றியே அமைந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அந்த நூலின் வீச்சு, பரவலானதாக இல்லாததால், அது இறையனார் அகப்பொருள் உரையில் சொல்லப்படவில்லை எனலாம். மாறாக, வியாழமாலை அகவல் என்னும், ஜோதிட சாஸ்த்திரத்தின் பிரபவ முதலான 60 வருடங்கள் பற்றிப் பேசும் நூல் 2 ஆம் சங்கத்தில் அரங்கேறினது என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. இந்த ஜோதிடத்தின் விவரம் முக்கியத்துவம் பெற்றதாக இருந்ததால் இதைப் பற்றி குறித்திருக்க வேண்டும். இந்த நூலும், பிரசித்தி பெற்றதாக இருந்திருக்க வேண்டும்.


    # மயன் நிருமித்த அளவுகள் யானம் (வாகனம்) சயனம் ( ஆசனங்கள் போன்றவை) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டன. அதைத்தான் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறீர்கள். அவற்றைப் பின்பற்றிய மக்கள் பாரதம் முழுவதும், அதற்கப்பாலும் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாரதத்தில் உள்ளவர்கள் மயனுக்கும் குருவான விஸ்வகர்மாவை முன்னிட்டே தங்கள் குலத்தை அடையாளம் சொன்னார்களே தவிர, மயனை முன்னிட்டு அல்ல. மயனுக்குத் தலை வணங்கினாலும், மயன் அசுரனானதால் அவனை முன்னிட்டுத் தங்களை அடையாளம் சொல்லிக் கொள்ளவில்லை.

    # ராவணன் ஒரு அசுரன், அவன் இருந்த காலத்தில் பாண்டியர்கள் இருந்திருக்கின்றனர். “தசானன் ஸ்ந்தீப ரக்ஷகார” என்று பெயர் சொல்லாத ஒரு பாண்டிய அரசனைப் பற்றிய குறிப்பு சின்னமனூர் செப்பேடுகளில் வருகிறது. இதன் தமிழ்ப் பகுதியில் “தசவதனன் சார்பாக சந்து செய்தும்” என்று சொல்லப்பட்டுள்ளது. தசவதனான பத்துத் தலை ராவணனுடன் என்ன சந்து செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அத்துடன் நிறுத்திக் கொண்டார்கள். திராவிடவாதிகள் சொல்லிக்கொள்கிறார்களே, தாங்கள் ராவணன் வம்சம் என்று - அப்படியெல்லாம் அசுரர்களுடன், தமிழ் மன்னர்கள் தங்களை ஒரு போதும் இணைத்துக் கொண்டதில்லை. அவ்வாறிருக்க, ஸ்தபதி அவர்கள் மயனுடன் இணைத்துக் கொண்டது, திராவிட மூளைச் சலவையின் விளைவே என்று எண்ணத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  31. # மயன் நாகரிகம் எனப்படும் மெக்ஸிகோ நாட்டு அமைப்புகளில் கட்டடக் கலை அமைப்புகளில் ஒற்றுமை உள்ளது. ஆனால் அந்த நாகரிகத்தின் காலம், ஹிந்து நூல்கள் வாயிலாக மயனைப் பற்றி நாம் காணும் பண்டைய காலத்துடன் ஒத்துப் போகவில்லை. அவை 2000 ஆண்டுகளுக்குள்தான் தோன்றியவை. ஸ்தபதி அவர்கள் சென்று பார்த்த Machu Picchu அமைப்புகள் 2000 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்பட்டவையே. இங்கிருந்து கட்டடக் கலைஞர்கள் அங்கு சென்றிருக்க்கூடும், அல்லது இவர்களிடமிருந்து கற்றவர்கள் அங்கு எழுப்பியிருக்கக்கூடும் என்று சொல்லும் வண்ணம் இவை இருக்கின்றன. அதற்கேற்றாற்போல பொ.பி 8 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராமாயணக் காட்சி ஒன்று மயன் அமைப்புகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு சிலை அமைப்பில் ஒரு சிலையும் உள்ளது. மெக்ஸிகோ நாட்டு மயன் மக்களாக இருந்திருந்தால் அவற்றை எழுப்பியிருக்க முடியும்?
    ஹிந்து தாக்கம் கொண்ட மக்களாக இருந்தாலோ அல்லது அப்படிப்பட்ட மக்கள் அங்கு தொழில் ரீதியாகச் சென்று அவற்றை அமைத்திருந்தாலோ அது சாத்தியமாகும்.

    இதுவரை மயன் பற்றி வெளிவந்துள்ள பத்திரிகை, நூல் குறிப்புகளை இந்த இணைப்பில் படிக்கவும். இந்த இணைப்பின் இறுதியில் மயன் அமைப்புகளில் காணப்படும் ராமாயணக் காட்சி படம் கொடுக்கப்பட்டுள்ளது.

    http://www.hinduwisdom.info/Pacific.htm#Articles:

    அது மட்டுமல்ல,. இங்குள்ள மயன் மக்கள் தங்களை பாரதத்தின் நாகாலாந்து மக்களுடன் இணைத்துச் சொல்லும் பழைய நினைவும் இருக்கிறது என்பதை மேற் சொன்ன இணைப்பில் காணலாம். Kekechi Maya என்னும் இந்த மக்கள் தாங்களது முன்னோர்கள் நாகாலாந்திலிருந்து வந்தார்கள் என்கிறார்கள். இது ஒரு இட மாற்றத்தைக் காட்டுகிறது.

    மஹாபாரத விவரத்தின் படி, மயன் என்பவன், கைலாச மலைக்கு வடக்கில் வசித்து வந்தான். அவனது இன மக்களான தானவர்கள், இன்றைய வடமேற்கு இந்தியாவில் அப்பொழுது இருந்தனர். அந்த மயன் பாண்டவர்களுக்கு அரண்மனை கட்டிக் கொடுத்தான். அவன் அமைத்த குளம் பற்றிய விவரங்கள் இனிமேல்தான் இந்தத் தொடரில் வருகின்றன, அப்பொழுது, வட இந்தியாவில் காணப்படும் அப்படிப்பட்ட குளங்கள் தமிழ் நாட்டில் காணப்படாமை குறித்தும் விவரங்களை எழுதுகிறேன்.

    மயனது வீச்சு, வட மேற்கு இந்தியா, சுமேரியா, அங்கிருந்து, ரஷியா வழியாக, வட அமெரிக்கா, அங்கிருந்து அமெரிக்க மேற்குக் கடற்கரை ஓரமாக மெக்சிகோ வரை சென்றிருக்கிறது. அப்பொழுது (அந்தக் காலக்கட்டத்தில்), கட்டடக் கலையை விட ஜோதிடமே அவனுடன் அங்கு சென்றிருக்கிறது. அந்த ஜோதிடத்தின் ஒரு கணிப்பே, 2012 இன் முடிவில் ஒரு புது சுற்று ஆரம்பிக்கும் என்பதே.

    மரபணு ஆராய்ச்சிகளும், அங்குள்ள மயன் மக்களது மரபணுத் தொடர்பை மேற் சொன்ன வழியாகவே காட்டுகிறதே தவிர, தமிழ் மக்களுடன் அல்ல.

    பதிலளிநீக்கு
  32. மயன் மக்கள் இருந்த மெக்சிகோ முதலான இடங்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்த வழியை, மரபணு ஆராய்ச்சிகள் காட்டும் வழியும், பாரத நூல்கள் காட்டும் வழியும் ஒத்திருக்கின்றன என்று தெரிவிக்கும் எனது கட்டுரையை இந்த இணைப்பில் படிக்கலாம்.

    http://jayasreesaranathan.blogspot.com/2011/11/indus-girl-and-indra-loka-have-remnants.html

    பதிலளிநீக்கு
  33. NHM writer ஐ அவரவர்கள் கணிணியில் இறக்கிக் கொள்ளலாம். அதைக் கொண்டு இந்த தளத்தில் தமிழில் எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  34. Thankyou for your answers.

    //தசவதனன் சார்பாக சந்து செய்தும்//

    I think this unknown pandya is anantha guna pandyan mentioned in one tamil puranam. i forgot that purana name. but in that he was tenth pandyan in list. if you know that puranam name and verse no or lines means give me. in this pandyan period rama crossed sea. Maximum that puranam is thiruvilayadal or madura puranam.

    பதிலளிநீக்கு
  35. This is a very valuable information Mr Subramani. I will look out for it. If you happen to get the info, please post it here.

    பதிலளிநீக்கு
  36. see பகுப்பு:தொன்பியல் பாண்டியர்கள் in tamil wikipedia. http://tawp.in/r/2yth

    in thi my ananthaguna essay is there. see 2 links in மேற்கோள்கள் list. you can get 73 pandyas list.

    But I can't remember that thiruvilayadal verse. But he rules kalyanapuram.

    பதிலளிநீக்கு
  37. you told that irayanar in second sangam. i want to know who is the pandya at that time and which no thiruvilayadal they told like that?
    and first and third sangam starts on which no thiruvilayadal under which pandyas? may you help me?

    பதிலளிநீக்கு
  38. திருவிளையாடல் புராணம் ஆலவாய் காண்டத்தில் 2 ஆம் ஊழிப் பிரளயம் விவரிக்கபப்டுகிறது. அதற்கு முன் ஆண்ட 22 பாண்டிய அரசர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் கீர்த்தி பூடண (பூஷண) பாண்டியன் ஆண்ட போது பிரளயம் ஏற்பட்டது.

    எழில்புனை யதுல கீர்த்தி யெனவிரு பத்தி ரண்டு
    வழிவழி மைந்த ராகி வையங் காத்த வேந்தர்
    பழிதவி ரதுல கீர்த்தி பாண்டியன் றன்பா லின்பம்
    பொழிதர வுதித்த கீர்த்தி பூடணன் புரக்கு நாளில்.
    (ஆலவாய்க் காண்டம் - ஆலவாய்ப் படலம் -8)

    கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி
    ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப்
    பொருங்கட் கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப்
    பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் கோத்த வன்றே.
    (ஆலவாய்க் காண்டம் -ஆலவாய்ப் படலம்-9)

    அது ஏற்படுத்தின அழிவுக்குப் பின் வந்த அரசன் பெயர் வங்கிய சேகர பாண்டியன் என்று சொல்லப்பட்டுள்ளது.(ஆ-கா- 13) அவன் காலத்தில் ஆலவாய் நகரம் நிர்மாணிக்கப்பட்டது. ஆலவாய் என்பதன் சமஸ்க்ருதச் சொல் கபாடம் என்னும் கபாடபுரமாகும்.

    http://www.tamilvu.org/coresite/html/siteindex.htm

    பதிலளிநீக்கு
  39. நீங்கள் கபாடபுரத்திற்கு அர்த்தம் கூறியது சரியே. ஆனால் அதற்குப்பிறகு ஒரு சந்தேகம். திருவாலவாய்க்கு பிறகு வரும் மன்னர்கள் வரிசையாக இருக்க அதற்கு பின் தற்போதைய மதுரை தலைநகரமானது வரவில்லையே. மேலும் இறையனார் 2ஆம் சங்கமென்றால் அதற்கடுத்த திருவிளையாடலில் வரும் நக்கீரர் மூன்றாம் சங்கத்தவர் தானே. அல்ல்து இரு நக்கீரர்களும் வேறா. மேலும் சம்பந்தர் வ்ரலாறு வரை தலைநகரமேதும் மாறியதாக தகவல் ஏதும் உண்டா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை மூன்று திருவிளையாடல் புராணங்கள் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆலவாய் என்னும் கபாடபுரத்தில் நடந்தது வரை சொல்லப்படவே, 2 ஆம் ஊழியுடன் முற்றுப் பெற்று விட்டது என்று தெரிகிறது. அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன் வரை நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே இந்தப் புராணமாகும். அதற்குப் பிறகு சிவனது திருவிளையாடல்கள் நடக்கவில்லை என்றும் கொள்ளலாம்.

      இரண்டு நக்கீரர்கள் இருந்தனர். சமணர் ஆதிக்கம் இருந்த கூன் பாண்டியன் காலத்தில் சம்பந்தர் இருந்ததால், அவரது காலம் கி.பி.யில்தான் வருகிறது. பாண்டியர் தலைநகரமாக மதுரை உண்டான காலம், 3 ஆம் ஊழிக்குப் பிறகு நடந்திருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தோன்றி 2500 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன என்று விக்கிபீடியா கட்டுரை சொல்கிறது. 3000 வருடங்களுக்கு மேல் ஆகின்றன என்று அந்தக் கோவிலில் எழுதி இருப்பதாகச் சொல்கிறார்கள். இவை எல்லாம், 3 ஆம் ஊழிக்குப் பிறகு மதுரை தலைநகரானதைக் காட்டுகின்றன.

      திருவிளையாடல் புராணம் தரும் மன்னர் பட்டியல், சங்க நூல்கள், மற்றும் பட்டயங்கள் தரும் பட்டியல் ஆகியவற்றை ஒ்ருங்கிணைத்து ஆராய வேண்டும்.

      நீக்கு
  40. ஐந்திறம் தமிழ் புத்தகம் உங்களிடம் உள்ளதா ? படிக்க ஆவலாக இருகிறேன் கிடைக்கும் இடம் சொல்லுங்கள் .

    பதிலளிநீக்கு