tag:blogger.com,1999:blog-747814237511445388.post7718644049988777703..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 12. மூவேந்தர்களும், 'ஆரிய' மூடப்பழக்கங்களும்!Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-81276012031404389122013-08-05T15:58:02.790+05:302013-08-05T15:58:02.790+05:30//ஒருவன் முட்டாளாக இருந்தால் அவனுக்கு மட்டும்தான்...//ஒருவன் முட்டாளாக இருந்தால் அவனுக்கு மட்டும்தான் கேடு. <br />ஆனால் ஒருவன் அயோக்கியனாக இருந்தால் ஊருக்கே கேடு. <br />அப்படிக் கேடு விளைவிக்கும் திராவிடவாதிகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//<br />சரியாகச் சொன்னீர்கள் விடுதலைப்புலிகளுக்கு வக்காளத்து வாங்குவது <br />எதைத்செய்தாலும் அதற்கு குற்றம் காண்பது கொலை குற்றவாளிகளுக் கு தண்டணை கொடுக்கக்கூடாதென்பதுENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-74621939494855215782012-10-15T16:19:34.644+05:302012-10-15T16:19:34.644+05:30கஜேந்திர மோக்ஷம் புராணக் கதையில் யானையாகப் பிறந்தத...கஜேந்திர மோக்ஷம் புராணக் கதையில் யானையாகப் பிறந்தது ஒரு பாண்டிய மன்னனே! இது கிருத யுகத்தில் நடந்தது- அதாவது இராமர் அவதரித்த திரேதா யுகத்திற்கும் முன்பு.ஆகையால் தெற்கில் சில இராச்சியங்கள் அப்போதே இருந்தன.<br />வால்மீகி இராமாயணத்தில், வாலியின் கிஷ்கிந்தை இன்றைய கர்நாடகாவில் உள்ளது. வாலியை அம்பினால் அடித்தவுடன், வாலி இராமனைப் பார்த்து தன்னை அடித்தது எப்படி நியாயமாகும் என்று கேட்க்கிறான்.அப்போது, இராமன் தங்களது இராச்சியம் பாரதம் முழுவதும் உள்ளதால்,அநியாயம் எங்கு நடந்தாலும் அதி தண்டிக்கும் உரிமை அந்த அரசர்களுக்கு உண்டு என்கிறான்.ஆகையால்,தசரத சக்கரவர்த்திக்கு பாரதம் முழுமையும் அதிகாரம் இருந்தது.அதாவது, ரகு வம்ச அரசர்கள் கீழ் பாரதம் முழுமையும் இருந்தது.<br />ஔரங்கசீப்பும் சுல்தான்களை நியமித்து தக்ஷிண பிரதேசத்தை ஆண்டான். <br />சாரநாதன்.Anonymoushttps://www.blogger.com/profile/15518425712953026751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-43471940875849511622012-03-17T15:56:48.851+05:302012-03-17T15:56:48.851+05:30நன்றி நேரம் அமையும் போதெல்லாம் படிக்கிறேன் ..நன்றி நேரம் அமையும் போதெல்லாம் படிக்கிறேன் ..Life is hard to live , you wouldn’t got the recognize in this world . ?https://www.blogger.com/profile/10179379770431403121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-46428164103897869462012-03-16T19:17:39.075+05:302012-03-16T19:17:39.075+05:30தாமதமாகப் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.
உங்கள் கே...தாமதமாகப் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். <br /><br />உங்கள் கேள்வி புரிகிறது.அன்றைய பாரதம் என்பது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், அதற்கும் அப்பால் சில இடங்கள் என்று இருந்தது. இவை அனைத்தையும் தன் குடைக் கீழ்க் கொண்டு வந்தால் ஒரு அரசன் ‘சக்கரவர்த்தி’ என்னும் பட்டம் பெறுவான். முசுகுந்தன் அப்படிப் பட்டம் பெற்ற சக்கரவர்த்தி ஆவான். ராமனுக்குச் சில தலைமுறைகள் முன்னோனான ரகுவும், சக்கரவர்த்தி ஆனான். அவனைக் கொண்டுதான் ரகு வம்சம் என்றும், ராமனை ராகவன் என்றும் அழைத்தார்கள். முசுகுந்தன் பெற்ற வெற்றிகளை மஹாபாரதத்திலும், ரகு பெற்ற வெற்றியை காளி தாசர் எழுதிய ரகு வம்சத்திலும் படிக்கலாம்.<br /><br />நிற்க, இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவர்கள் காலத்தில் இன்றைக்கு இருப்பது போல இந்தியா முழுவதும் மக்கள் பெருக்கம் இல்லை. அவர்கள் சக்கரவர்த்தி என்னும் பட்டம் பெறுவதற்காக, திக் விஜயம் என்னும் பெயரில் பிரதக்ஷிணமாகச் சென்று, நாடுகளை வென்றார்கள். பிரதக்ஷிணம் என்றால், வலச்சுற்றாகக் கிழக்கில் ஆரம்பித்து, தென் திசைக்கு வருவார்கள். இந்த முறையில் போரிடச் செல்லும் வழக்கம் புற நானூறிலும் சொல்லப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களில், முதலாம் ராஜராஜனை எடுத்துக் கொண்டால், முதலில் தென் திசையில்தான் தன் வெற்றிகளை நாட்டினான். வலச்சுற்றில், அவன் நாட்டிலிருந்து தென் திசையில் ஆரம்பிக்க வேண்டும்.<br /><br />இந்த வித திக் விஜயத்தில், முசுகுந்தனும், அவனுக்குப் பின்னாளில் ரகுவும் தென்னிந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அப்பொழுது நிறைய அரசுகள் இங்கு இல்லை. ஆங்காங்கே மக்கள் குழுக்களாக இருந்திருக்கிறார்கள். தென் பகுதியின் கிழக்குக் கடற்கரையில் பூம்புகார் அன்றே இருந்திருக்கிறது. அதை முசுகுந்தன் தன் குடைக் கீழ் கொண்டு வந்திருக்கிறான். அங்கு வெற்றி பெற்ற பிறகு, மேற்குத் திசையில் வெற்றியை நாட்ட அவன் செல்ல வேண்டும். அதனால் தான் வென்ற இடங்களில் எல்லாம், தனது அதிகாரியை அங்கு நியமித்து விட்டுச் சென்றிரு்க்கிறான். அந்த வகையில், முசுகுந்தன் காலத்துத் தொடர்புடைய படைத் தலைவர்கள், மற்றும் அதிகாரிகள் பூம்புகாரில் தொடர்ந்திருக்கிறார்கள். நாளங்காடி பூதத்தை அவர்களிடம் தந்திருக்கிறான். இது அடியார்க்கு நல்லார் உரையில் சொல்லப்பட்டுள்ளது.<br /><br />முசுகுந்தனது தலை்நகரம் வட இந்தியாவில் இருந்தததால், தென்னிந்திய முனை அவனது கண்காணிப்புக்கு வெகு தொலைவில் வருகிறது. அவன் காலத்தில் வட இந்தியாவில் இருந்த அளவு அரசு அமைப்புகள், தென் இந்தியாவில் இல்லை. அதனால் தென் பகுதியில் அவன் கவனம் குறைவாகத்தான் இருந்திருக்கும். அதை ஈடு செய்ய, அந்தக் காவல் பூதத்தைத் தென்பகுதியில் நிறுவ விரும்பி, புகார் நகரில் நிறுவி இருக்க வேண்டும். இதற்குப் பல காலம் கழித்துதான், சோழ வர்மன் சோழ வம்சத்தை நிறுவிகிறான். அதுவும், முசுகுந்தன் வழியில் அமைந்த் தென் பகுதி அரசை, நேரிடைக் கவனிப்பில் கொண்டு் வர, இந்தச் சோழ வர்மன் வந்திருக்கக் கூடும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-7716059493608869742012-03-12T12:48:03.602+05:302012-03-12T12:48:03.602+05:30மன்னிக்கவும் , பதில் தெளிவாக இல்லை என்று சொல்லவில்...மன்னிக்கவும் , பதில் தெளிவாக இல்லை என்று சொல்லவில்லை ..என் ஐயம் தீரவில்லை ...சோழவர்மன் முன்னோனான " முசுகுந்தன் " ..நாளங்காடிப் பூதத்தை (புகாரில் - பூம்புகாரில் ) தன் தமருக்கு, அதாவது தன்னைச் சேர்ந்தோருக்குத்<br />தந்தான் , என்று சொல்கிறீர்கள் ..<br /><br />ஆனால் , " முசுகுந்தன் " ஆட்சி செய்தது ..வட பாரதத்தில் .அங்குதான் அவன் மக்களும் இருந்திருப்பார்கள் ..அப்படி இருக்கையில் ..ஏன் ..புகாரில் பூதத்தை அமைக்க வேண்டும் ..<br /><br />கி.வ .இராஜசேகர்Life is hard to live , you wouldn’t got the recognize in this world . ?https://www.blogger.com/profile/10179379770431403121noreply@blogger.com