tag:blogger.com,1999:blog-747814237511445388.post6608199753709106022..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 70. அறிவன் என்னும் தமிழ் ஜோதிடன்.Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-79337976392437495072012-11-07T19:07:13.866+05:302012-11-07T19:07:13.866+05:30ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு
சிரமம் பாராமல் நீண்ட வ...ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு<br />சிரமம் பாராமல் நீண்ட விளக்கங்கள் அளித்ததற்கு நன்றி<br />vedamgopalhttps://www.blogger.com/profile/05120406364750597616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-47594943150073807932012-11-07T14:52:39.707+05:302012-11-07T14:52:39.707+05:30அந்தணர் என்றால் ’அந்தத்தை அணவினவர்’ என்று நச்சினார...அந்தணர் என்றால் ’அந்தத்தை அணவினவர்’ என்று நச்சினார்க்கினியர் சொல்வதாக சூடாமணி நிகண்டு பொருள் தருகிறது. அந்தம் என்பது வேதாந்தம் என்று பொருள். வேதத்தின் முடிபான பொருளை ஆராந்தறிபவர் அந்தணர் ஆவார். <br /><br />ஐயர் என்னும் சொல்லுக்குப் ‘பூஜிக்கத்தக்கவர்’ என்று இந்த நிகண்டு பொருள் தருகிறது. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-81123442659320170842012-11-07T14:44:57.934+05:302012-11-07T14:44:57.934+05:30”ஐயர் யாத்தனர்’ என்பதில் உள்ள ஐயர் என்பவர்கள் இருட...”ஐயர் யாத்தனர்’ என்பதில் உள்ள ஐயர் என்பவர்கள் இருடிகள் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளதில் ஆரிய இருடி, ஆரியமில்லா இருடி என்பது கிடையாது. ரிஷிகளுக்கான தமிழ்ச் சொல் தாபதர் என்பதாகும், ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” சூத்திரத்தில், தாபதர் என்பவர்களையும் ஒரு வகையாகச் சொன்னதைக் கவனிக்கவும். இவர்களே, சித்தர்கள், யோகிகள், தவசிகள், குருமார்கள் ஆவார்கள். எந்த ஜாதியினரையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுக்கென்று குருமாரோ அல்லது ஒரு துறவியோ இருப்பார். அவரது வழிகாட்டுதல்படி திருமணம் முதல் பல சடங்குகளையும் செய்து வருகின்றனர். <br /><br />முன்பே ஒரு கருத்துரையில் வண்ணார் சமூகத்தைப் பற்றி செப்புத் தகடு ஆதாரம் எழுதியிருப்பேன். அதில் அவர்களுக்கென்று குரு ஒருவர் இருந்தார் என்றும், அவர் வழிகாட்டுதல்படியே திருமணத்தை மடத்தில் செய்தனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. <br />ஆகவே ஒட்டு மொத்த மக்களுக்கும் ஏதோ ஓரிரு ரிஷிகள் (ஐயர்)கரணம் யாத்திருக்க முடியாது. ஆங்காங்கு இருந்த மக்கள் கூட்டத்தினருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் அடிப்படையில், அவர்களிடையே இருந்த துறவிகள், குருமார்கள் கரணத்தைச் சொல்லி வழி காட்டியிருக்கின்றனர். <br />இவ்வாறு சொல்பவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதால் அவர்களுக்கு ஐயர் என்று பெயர். <br /><br />ஐயங்கார் சமூகத்தில், குல குருவைத்தான் ஐயங்கார் என்று சொலி வந்தார்கள். ஐயன் என்பதுடன் கார் என்னும் விகுதி தெலுங்கு காரு என்பதிலிருந்து ஏற்பட்டது. அவரது மனைவியை அம்மங்கார் என்றுதான் அழைப்பார்கள். அம்மா காரு என்பது அம்மங்கார் என்றாகி இருக்கிறது. ஐயரும், அம்மாவும் பொதுவான சொற்களாகக் காலம் காலமாக இருந்து வந்திருக்கின்றன.<br /><br />இதுவே இன்கா மக்களது முதல் மகக்ளது பெயர் என்பதால் (ஐயர்மாரா, பாச்சமாமா)இந்தச் சொற்களின் பழமை தெரிகிறது. யாரேனும் திணித்தா இவற்றைக் கொண்டு வந்திருக்க முடியும்? Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-44143132108151118352012-11-07T13:39:32.023+05:302012-11-07T13:39:32.023+05:30//பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் க...//பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”//<br /><br />இந்த வரிகளது பொருளை மு. ராகவ ஐயங்கார் அவர்கல் எழுதியுள்ள ‘தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி” என்னும் நூலில் படிக்கலாம். <br /><br />இதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆதியில், பொய், ஏமாற்றுதல் இல்லை. களவு, கற்பு என்னும் இரண்டு வழிகளிலுமே மணந்து கொண்டனர். இரண்டிலுமே ஒத்த உரு, திரு, அறிவு, குலம் கொண்டவர்கள்தான் மணம் புரிந்தார்களே தவிர பொருந்தா மணம் இல்லை. இன்றைய காதல் திருமணம் போல இல்லை. <br /><br />கள்வு வழியில் பெற்றோர், உற்றோர், பெரியோர் எடுத்துத்தராமல், தாங்களாகவே ஒருவருடன் ஒருவர் ஈர்க்கப்பட்டது களவின் ஆரம்ப கட்டமாகும். இதை அவர்கள் ஊழ் வலி என்றே எண்ணினர். கணாவன் மனைவி உறவே ஊழ் வலியால் ஏற்படுகிறதென்பது அன்றைய கருத்து. <br /><br />இந்தக் களவிலும் 3 ஸ்டேஜ் இருக்கிறது என்பதற்கு சங்கப் பாடல்கள் ஆதாரம் தருகின்றன. முதலில் எதேச்சையாக எதிர்ப்பட்டு ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர். அதனால் அடிகக்டி யாருக்கும் தெரியாமல் சந்திக்கின்றனர். இது முதல் ஸ்டேஜ் / கட்டம்.<br />இதன் பிறகு, பெண் வீட்டில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு பெண்ணை வெளியில் அனுப்பாமல் வீட்டில் சிறைப் படுத்துகின்றனர். இது இரண்டாவது கட்டம். இங்குதான் பாங்கன், பாணன், பார்ப்பனன் எல்லோரது ஆலோசானையும் பெறப்படுகின்றன. <br /><br />3 ஆவது கட்டத்தில் திருமணம். அறிவன் என்னும் ஜோதிடனது ஆலோசனையையும் பெற்று திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தலும் இருந்திருக்கிறது. வீட்டார் ஒத்துக் கொண்டு ‘கரணம்’ செய்து திருமணம் செய்துள்ளனர். கரணம் என்றால் சடங்கு என்ற பொருளில் வந்துள்ளது.<br /><br />இதிலேயே, வீட்டார் ஒப்புதல் இல்லாமல் ஓடிப் போய் காந்தர்வ மணம் புரிதலும் நடந்திருக்கிறது. இதைத்தான் தமிழர் கலாசாரம் என்று சொல்லிக் கொண்டு அண்ணா துரை முதல் பல திராவிட வாதிகளும் ஆபாசமாக தங்கள் கதைகளில் எழுதியுள்ளனர். ஓடிப் போய் செய்ய்ம் திருமணத்தில் கரணம், அதாவது சடங்குகள் கிடையாது. காந்தர்வ மணம் எனப்படும் அதில் மனம், உடல் ஒப்பி உறவு கொண்டனர். அது களவொழுகக்மாக இருப்பினும், கூடிய பின் அது கற்பொழுகக்மாகக் கருதப்பட்டது. ஏனெனில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து, அந்தப் பெண்ணை ஏமாற்றாமல் ஒழுங்காக வாழ்க்கையை நடத்தினர். <br /><br />இந்த ஒழுக்கம் குறிஞ்சி நிலப்பகுதிக்கு உரியது. மலை நாட்டில்தான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சந்திக்க வசதிகள் இயற்கையாக இருந்த்ன. மக்களும் களவிலிருந்து கற்பொழுக்கம் பிறந்த்தால் அதை ஏற்றுக் கொண்டனர்.<br /><br />ஆனால் நாளடைவில் அதில் பொய்யும், வழுவும் ஏற்படலாயிற்று. கரணம் இல்லாமல், அதாவது உற்றாரது முன்னிலையில் உறுதி எடுத்துக் கொள்ளும் சடங்கு இல்லாததால், தன்னை நம்பி வந்த பெண்ணைக் கைவிடுதல் ஏற்படலாயிற்று. இதை நிறுத்த அந்த மக்களுக்கும், கரணம் அதாவது திருமணச் சடங்குகளை ஏற்படுத்தினர்.<br /><br />இதுதான் நடந்த கதை.<br /><br />தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே, களவில் பொய், ஏமாற்று வந்து விட்டது. அதனால் அவர் காலத்துக்கு முன்பே வந்து விட்ட கரணத்தைத் தொல்காப்பியர் கூறுகிறார். <br /><br />அந்தச் சூத்திரத்துக்கு உரை சொல்லும் நச்சினார்க்கினியர், ஐயர் என்பவரை ரிஷிகள் (இருடிகள்) என்கிறார். உண்மையில் எல்லா சடங்கு, சாஸ்திரங்களைத் தந்தவர்கள் ரிஷிகளே. பார்ப்பனர்கள் அல்லர். பார்ப்பனர்களுக்கும் சேர்த்து வாழும் முறைகளை ரிஷிகள் வகுத்துக் கொடுத்துள்ளனர். மனு, பார்ப்பனன் அல்லன். அவன் அரசன். அவனது தண்ட நீதியே மனு நீதியாகும். <br /><br />உண்மையில் மனு நீதியில்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு கருதி, தந்தை, கணவன், மகன் ஆகியோர் பாதுகாப்பில் பெண்ணானவள் இருக்க வேண்டும் என்றார். அவர் இருந்த காலக் கட்டத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பிலை என்றும், ஆண்- பெண் உறவுகளில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது என்றும் தெரிகிறது. <br /><br />(தொடரும்) Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-233850136609285552012-11-07T13:12:42.149+05:302012-11-07T13:12:42.149+05:30விட்ட இடத்தில் தொடருவோம். ஐ என்னும் பெண் தலைமையின்...விட்ட இடத்தில் தொடருவோம். ஐ என்னும் பெண் தலைமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த சிந்து சமவெளி சினன்ங்களும், வேட்டுவ வரி துர்கையும் இருக்கிறாள். ஜம்புத்தீவு அதிபதியான சம்பாபதி என்னும் ஜம்பு தேவியே பெண் தான்.<br />மக்கள் கூட்டத்தை ஆண்டு வந்த ஆதி உருவகம் பெண் தான். அவளை ஒற்றை எழுத்தில் ஐ என்றனர். இந்தப் பெண் தெய்வம் சிந்து சமவெளியிலிருந்து ஐரோப்பா சென்று, பைபிளில் அஷேராவாக ஆனாள். உருவ ஒற்றுமையைக் கொண்டு இதை இந்தத் தொடரில் விளக்க உள்ளேன்.<br /><br />ஐ என்பதிலிருந்து ஐயன் உண்டானது. ஆண்பாலைக் குறிக்கும் இந்தச் சொல் ஆரிய - பார்ப்பன ஆதிகக்ச் சொல் என்கிறார்களே, இந்தச் சொல் எங்கு இருக்கிறது தெரியுமா? தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரமாக இருந்த இன்கா நாகரிக மக்களிடையே இருக்கிறது. அந்த மக்கள் இனத்தின் ஆரம்ப மக்கள் ஐயர்மார்!<br /><br />அது ஐயரா அல்லது ஆயரா என்னும் உச்சரிப்புக் குழப்பம் இருக்கிறது. ஆயர் என்றால் மாடுகள் கூட இருக்க வேண்டும். ஆனால் இவரகளுக்கு மாடுகளும், மாடு மேய்த்தலும் இல்லை. ஆனால் ஐயா, அம்மா என்றழைக்கப்பட்ட நான்கு, நான்கு பேர், ஒரு ஊழியில் தப்பி குகைக்குள் புகுந்து சுரங்கப்பாதை போன்ற அதில் பயணித்து. ஆண்டிஸ் மலை மேல் வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆரம்பித்த கலாசாரமே இன்கா என்பது.<br /><br />அந்த அம்மாவுக்குப் பாச்ச மாமா (பாச்சியம்மன்) என்று பெயர். அவளது உருவமும் கிடைத்திகிருக்கிறது. இப்பொழுது வெளியிடப்போகும் 113 ஆவது கட்டுரையில் அந்த விவரங்கள் வரப்போகின்றன. அதில் விவரிக்கிறேன்.<br /><br />இங்கு சொல்ல வருவது என்னவென்றால், ஐயன், அம்மா பாச்சியம்மா (பேச்சியம்மா?) போன்ற சொற்கள் இன்றைய இந்தோனேசியப் பகுதியைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்களிடையே 10,000 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது. அங்கு அவ்வப்பொழுது எரிமலைகள் வெடித்த பொழுது, நெருப்பு சார்ந்த ஊழியும் (தக்ஷ யாகம் இதைக் குறிக்கிறது, அதில் தப்பி வந்தவன் தான் திராவிட மனுவான வைவஸ்வத மனு என்று கொண்டு வரப்போகிறேன்), நீர் சார்ந்த ஊழியும் ஏற்பட்டிருக்கின்றன. பாண்டியனைப் பொறுத்த மட்டில் அவன் வாழ்ந்த இடங்களில் நீர் சார்ந்த ஊழியை மூன்று முறை சந்திதிருக்கிறான். இதனால் திராவிடேஸ்வரனுக்கும், பாண்டியனுக்கும் ஆதியில் ஒரே மூலம் இருந்தாலும், பிரிந்த வழியில் வேறுபாடு இருக்கிறது. <br /><br />தென் கடலில் 10,000 வருடங்களுக்கு முன்பே அருகருகே வாழ்ந்த மக்கள் பேசின மொழிகள் தமிழும், சமஸ்க்ருதமும் ஆகும். ஐயன் என்னும் சொல் அங்கிருந்து வருகிறது. அவர்களில் ஒரு பகுதி ஊழியில் தப்பி மேற்கு நோக்கி தென் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அவர்களும் ஐயா, அம்மா என்ற சொற்களை ஆதி தந்தை, ஆதி தாய் என்று சொல்லியுள்ளதால், ஐயன் என்னும் சொல்லுக்கு கண்டபடி பொருள் காண்பதைப் போல அபத்தம் வேறு இல்லை. <br /><br />இன்றைக்குப் பல துறை ஆராய்ச்சிகள் எவ்வளவோ பெருகி விட்டன. உலகின் மாபெரும் சரித்திரச் சொத்தான தமிழ் இலக்கியத்தை நம் வசம் வைத்துள்ள நாம் இந்தத் துறைகளது துணை கொண்டு, தமிழனது மூலத்தை மட்டுமல்ல, இன்றைய உலக மக்கள் இனத்தின் மூலத்தையே சொல்லி விடலாம். அதைச் செய்ய முதலில் இந்தத் திராவிட போதையிலிருந்து வெளி வர வேண்டும்.<br /><br />(தொடரும்) Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-20205617124577660312012-11-07T13:12:18.632+05:302012-11-07T13:12:18.632+05:30திரு வேதம் கோபால் அவர்களே,
நீங்கள் குறிப்பிட்டுள்...திரு வேதம் கோபால் அவர்களே,<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களை இந்தத் தொடரில் கொண்டு வருகிறேன்.<br />திராவிடவாதிகள் எழுப்பின அந்தக் கேள்விகளுக்கும், நெருடலான விவரங்களுக்கும் விளக்கம் தருகிறேன். இவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்ல இயலாது. உதாரணமாக சமஸ்க்ருத - தமிழ் ஒருங்கிணைந்து உண்டான விதத்துக்கு நேரிடையாக ஆதாரம் கிடையாது. ஆனால் பல கதைகள். அவற்றில் புதைந்துள்ள விவரங்கள் மூலமாக ஆதாரம் கிடைக்கிறது. காரணம், இவற்றின் மூலம், சரித்திர காலம் என்று நாம் சொல்லும் சில ஆயிரம் வருடங்களையும் தாண்டி. 10,000 வருடங்களுக்கு முன் சென்று விடுகிறது. அப்பொழுது பயனாகும் ஆதாரங்களே வேறு.<br /><br />அதில் ஒன்றுதான் ஐயர் என்பது. இலக்கிய ஆதாரத்தின் படி, நீங்கள் கடைசியில் குறிப்பிட்டுள்ளவையே இருக்கின்றன. <br />ஐ என்பது பெண் - தலைமைப் பெண். அதுதான் ஆதியில் வந்த சொல். அது ஐயை ஆயிற்று. பிறகு அது ஆண்பால் விகுதி சேர்த்து ஐயன், ஐயா, ஐயர் என்றாயிற்று. ஐ என்பதும் ஐயன் என்பது தலைவனைக் குறிப்பதாகவே ஆதியில் இருந்திருக்கிறது. ’ஐயனே’ என்று இறைவனை அழைப்பது வழக்கம். அவனே அனைவருக்கும் தலைவன் என்பதால் இப்படி அழைக்கிறோம். <br /><br />ஐ என்னும் பெண்பால் விகுதியிலிருந்து ஐயன் என்பது உண்டானதால், ஆதியில் பெண்ணிடம்தான் தலைமை இருந்தது என்றாகிறது. தக்ஷ யாக காலத்திலேயே (நெருப்பு ஊழி) இது வந்து விட்டது. சதி தேவி சொல்லும் 108 தேவி நாமங்களை அலசினால் இது விளங்கும். மத்ஸ்ய புராணத்தில் வரும் இந்த நாமங்களில் 31 ஆவது பெயர் குமரி. குமரி தேவி,குமரி தீர்த்தம் என்றெல்லாம் இருந்திருக்கிறது. அவள் குடிகொண்ட இடம் மயபுரி என்கிறாள் சதி தேவி. இன்றைக்கு இந்த இடத்தை மேற்கு வங்கத்தில் காட்டுகிறார்கள். ஆனால் ஆதியில் மயன் இருந்தது, எரிமலைப் பகுதியான இந்தோனேசியா! அந்த இடத்துக்கு அருகாமையில் தென்னன் மதுரை இருந்தது என்று நாம் சொல்லி வருகிறோம். அங்கு இருந்த இடமே ஆதி மயன் இருப்பிடமாகும். அழிந்து போனாலும், ஆதி பெயர்கள் அனைத்தையும் இன்றைய பாரத நாட்டில் காணலாம். ஊழியில் இடம் பெயர்ந்தாலும், வந்த இடத்தில், பழைய பெயர்களை வைத்திருக்கிறார்கள். இதற்கான முக்கிய உதாரணம் ‘பாதாளம்’. பாதாளம் என்றொரு இடம் சிந்து முகத்துவாரத்தில் பாகிஸ்தானில் இருக்கிறது.<br /><br />(தொடரும்)Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-47239467175573145562012-11-07T09:32:11.596+05:302012-11-07T09:32:11.596+05:30ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு
நான் சமீபத்தில் திரு.க...ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு<br />நான் சமீபத்தில் திரு.கல்கி அவர்களின் சில ஆரோக்கியமான விவாதங்கள் ஒன்றைப் பற்றி வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தைப் படித்தேன். (புத்தகத்தின் தலைப்பு – எல்லோரும் ஒர் இனம்). கல்கி அவர்கள் ஆனந்தவிகடனில் ”தமிழன் மூளை” என்ற தலைப்பில் ஒர் கட்டுரை திரு.சோமசுந்தர பாரதியார் எழுதிய ஒரு தமிழ் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்பு கட்டுரைக்கு விளக்கம் அளித்துள்ளார். விவாதம் ஆரியர்-திராவிடர் தமிழர் திருமணம் தொல்காப்பியர் சொன்னது என்ன என்பதை பற்றிய விவாதம். அதில் தெய்வ பக்தி தேச பக்தி நிறைந்த மூத்த தமிழ் அறிஞர்கள் சிலர் சோமசுந்திர பாரதி மறைமலை அடிகள் போன்றோரும் இப்படி பிரிவினையை தூண்டும் ஆராச்சியில் ஏன் இறங்குகிறார்கள் என்ற தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இதில் தமிழரின் திருமணம் பற்றி தொல்காப்பியர் கூறுகையில்<br />”பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப”<br />இதில் வரும் ஐயர் என்பவர் யார் என்று தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். அதைப்போல் களவு கற்பு கரணம் மணமுறை பற்றி ஒரு சிறிய விளக்கம் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சோமசுந்தர பாரதியார் கூற்றுப்படி ”ஐயர்” என்ற சொல் ஆரிய இருடிகளை குறிப்பதில்லை. ஐயன் என்ற ஆண்பால் சொல்லும் ஐயை என்ற பெண்பால் சொல்லும் சங்க இலக்கியங்களில் காண்பது வெளிப்படை. அவற்றின் பண்மை சொல்லே ”ஐயர்” அதன் பொருள் மேலோர் என்பதாகும். இதற்கும் ”ஆரிய” வட சொல்லிற்கும் தொடர்பு கிடையாது. இது ”அறிவர்” என்ற ஒரு வகுப்பினரை குறிக்கும். பார்பனருள் சிறந்தாரை ”அந்தணர் என்றும்” அவரின் வேறுபட்ட தமிழ் பெருமக்களை ”ஐயர்” அல்லது ”அறிவோர்” என்று சுட்டுவதும் தொல்காப்பியர் மரபு. இதற்கு எடுத்துகாட்டாக கற்பியல் 5ஆம் சூத்திரத்தி்ல் ஒரு செய்யுளையும் சொல்லி அதில் அந்தணர் ஐயர் என்று தனித் தனியே கூறியுள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளார். <br />vedamgopalhttps://www.blogger.com/profile/05120406364750597616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-71597047314868336952012-11-04T21:40:08.363+05:302012-11-04T21:40:08.363+05:30தொல்காப்பியத்திற்கு உரை எழுத மகாபலிபுரம் சென்ற கரு...தொல்காப்பியத்திற்கு உரை எழுத மகாபலிபுரம் சென்ற கருணாநிதி, தாங்கள் அதி விமரிசையாக பற்ப்பல அசைக்க முடியாத மேற்கோள்கள் காட்டி நிலை நிறுத்திய சூத்திரங்களுக்கு என்ன வியாக்கியானம் கொடுத்துள்ளார்?<br />நன்றி. ஸாரநாதன். Anonymoushttps://www.blogger.com/profile/15518425712953026751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-46606290526771635112011-10-09T15:04:10.581+05:302011-10-09T15:04:10.581+05:30@thamizhan
எச்சரிக்கை விடுவதற்கு முன்னால் அடுத்த...@thamizhan<br /> <br />எச்சரிக்கை விடுவதற்கு முன்னால் அடுத்த கட்டுரையையும் படியுங்கள். <br /><br />அறிவன் என்ற பெயர் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட பெயர்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-54909963314937005342011-10-08T20:35:07.167+05:302011-10-08T20:35:07.167+05:30தமிழ்நாட்டில் வள்ளுவன் எனும் சாதியினர் ஜோதிடம் கணி...தமிழ்நாட்டில் வள்ளுவன் எனும் சாதியினர் ஜோதிடம் கணித்துச் சொல்லும் தொழிலைச் செய்து வருகின்றனர்.<br /><br />http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D<br /><br />நீங்களாக புது பெயர் இடவேண்டாம். எச்சரிக்கை...thamizhanhttps://www.blogger.com/profile/02249313947019910095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-34183702479411566562011-09-22T17:01:30.676+05:302011-09-22T17:01:30.676+05:30நன்றி திரு குமார் அவர்களே.நன்றி திரு குமார் அவர்களே.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-12138754219002898902011-09-22T14:40:47.773+05:302011-09-22T14:40:47.773+05:30வணக்கம் ஜெயஸ்ரீ அவர்களே.
நூலின் பெயர் : தொல்காப்ப...வணக்கம் ஜெயஸ்ரீ அவர்களே.<br /><br />நூலின் பெயர் : தொல்காப்பியத்தின் காலம்<br /><br />பதிப்பகத்தின் பெயர் தெரியவில்லை. திரு.குணா அவர்களின் ”தமிழக ஆய்வரண்” ஆக இருக்கலாம். நூல் கிடைத்தால் தெரிவிக்கவும். <br /><br />//இந்த விவரங்கள் இந்தத் தொடரில் பின்னால் வருகின்றன.//<br /><br />தங்களது அரிய பணி தொடர வாழ்த்துக்கள்.குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-55496121296925166612011-09-21T23:00:40.903+05:302011-09-21T23:00:40.903+05:30நன்றி திரு குமார் அவர்களே.
நான் திரு குணா அவர்களின...நன்றி திரு குமார் அவர்களே.<br />நான் திரு குணா அவர்களின் நூலைப் படிக்கவில்லை. நூலின் பெயரைத் தரவும்.வாங்கிப் படிக்கிறேன்.<br /><br />தற்போது நம்மிடம் உள்ள தொல்காப்பியம் 3ஆம் ஊழி முடிந்த பிறகு உண்டான கடைச் சங்க கால நூலாகும். எனவே இதன் காலம் 3500 ஆண்டுகளுக்கு உட்பட்டதே. இடைச் சங்கத்திலும் தொல்காப்பியம் இருந்தது. அந்தத் தொல்காப்பியத்தின் நிலப் பகுப்பு ஏழேழு நாற்பத்தொன்பதாக இருக்க வேண்டும். தற்போதைய தொல்காப்பியத்தில் முல்லை, மருதம் என்னும் ஐந்து வகைகளே உள்ளன. பழைய தொல்காப்பியத்தை ஒட்டியே எழுத்து, சொல் இலக்கணங்கள் இருக்க வேண்டும். நிலமும், கருவும், உரிப்பொருளும் மட்டும் மாறி இருக்கும். 7000 வருடங்களுக்கு முந்தின தொல்காப்பியம் இடைச் சங்க இலக்கணமாகும், அது இப்பொழுது இல்லை. <br /><br />தொல்காப்பியம் என்பதும், தொல்காப்பியர் என்பதும் பொதுப் பெயர்கள். வேதத்தைத் தொகுத்த வியாசர் என்பது போல.வியாசர் என்றால் தொகுப்பாளர் என்பது பொருள். பல காலக் கட்டத்திலும், வேதம் தொகுக்கப்பட்டு, அதனால் பல தொகுப்பாளர்கள், அதாவது வியாசர்கள் இருந்திருக்கிறார்கள். அது போல இலக்கண நூலான தொல்காப்பியமும் வேறு வேறு காலக் கட்டத்தில் இருந்து வந்திருக்கிறது. அதைக் கொடுத்தவருக்குப் பொதுப் பெயராக தொல்காப்பியர் என்றும் இருந்திருக்க வேண்டும்.<br /><br />நம்மிடம் புழங்கி வரும் தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முன்னால் துவாரகையிலும், (தற்போது பேட் துவாரகை என்று சொல்லப்படுவது)தென்னன் தேசத்திலும் ஒரே சமயம் கடல் கொண்ட பிறகு உருவாக்கப்பட்டது. இந்த விவரங்கள் இந்தத் தொடரில் பின்னால் வருகின்றன.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-32456056049325696892011-09-21T20:15:54.307+05:302011-09-21T20:15:54.307+05:30சென்ற மாதம் வெளியான திரு.குணா அவர்களின்
தொல்காப்ப...சென்ற மாதம் வெளியான திரு.குணா அவர்களின் <br />தொல்காப்பியத்தின் காலம் என்ற ஆராய்சி நூல், 7000 ஆண்டுகளுக்கு முன் என நிறுவியிருப்பதாக அறிந்தேன்.குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-21888445163588432572011-09-11T22:33:40.854+05:302011-09-11T22:33:40.854+05:30@ Kavi
வால் அறிவன் என்றால் ’மெய்யுணர்வினை உடையவன்’...@ Kavi<br />வால் அறிவன் என்றால் ’மெய்யுணர்வினை உடையவன்’ என்று பரிமேலழகர் பொருள் கூறுகிறார். மெய்யுணர்வு = உண்மையறிவு, ஐயம் திரிபு இல்லாத அறிவு, தத்துவ ஞானம் என்பது பொருள்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-68965687864667656482011-09-10T02:57:02.190+05:302011-09-10T02:57:02.190+05:30மிக அற்புதமான தொகுப்பு. நன்றி.மிக அற்புதமான தொகுப்பு. நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-25529296785734695502011-09-09T16:03:30.559+05:302011-09-09T16:03:30.559+05:30ஜெயஸ்ரீ அவர்களே, அருமையான கட்டுரை, “அறிவன்” வார்த்...ஜெயஸ்ரீ அவர்களே, அருமையான கட்டுரை, “அறிவன்” வார்த்தைக்கு பொருள் மிகவும் வியப்பாக இருக்கிறது, வாழ்த்துக்கள், திருக்குறளில் வரும் “வால்அறிவன்” வார்த்தைக்கு பொருள் கூறவேண்டும், அறிய ஆர்வமாக உள்ளது....kavihttps://www.blogger.com/profile/14225514519821469659noreply@blogger.com