tag:blogger.com,1999:blog-747814237511445388.post7092913072232790748..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 73. ஆவணியில் புத்தாண்டா?Jayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-16894304056908493442011-09-17T22:51:59.144+05:302011-09-17T22:51:59.144+05:30Thanks Mr Subramani.Thanks Mr Subramani.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-62001231129653293222011-09-17T21:24:03.693+05:302011-09-17T21:24:03.693+05:30sometime shortlinks can't function well in tam...sometime shortlinks can't function well in tamil wiki. complete link about inca's agriculture mentioned below.<br /><br /><br />http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88தென்காசி சுப்பிரமணியன்https://www.blogger.com/profile/00334520233206017404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-38547527401108270862011-09-17T13:57:03.116+05:302011-09-17T13:57:03.116+05:30நன்றி திரு சுப்பிரமணி அவர்களே.
மேலே நீங்கள் கொடுத...நன்றி திரு சுப்பிரமணி அவர்களே.<br /><br />மேலே நீங்கள் கொடுத்துள்ள இணைப்பு முழுமையாக இல்லை என்று நினைக்கிறேன். அதில் ஒன்றும் வரவில்லை. மீண்டும், அந்த இணைப்பை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />நாம் இங்கு மயன் பற்றிப் பேசும் போது நான் தவறாமல் படிக்கும் -Anthropology வலைத்தளத்திலும் இதைப் பற்றிய கட்டுரை வந்துள்ளது. <br />அதை இந்த இணைப்பில் படிக்கலாம்.<br />http://frontiers-of-anthropology.blogspot.com/2011/09/lacandon-mayas-and-malay-mayas.html<br /><br />இதில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியக் கருத்து, இந்தோனேசியா வழியாக மக்கள் பசிஃபிக் கடலைக் கடந்து மயன் இருப்பிடத்தை அடைந்திருக்கலாம் என்பது.<br /><br />இதற்கு முன் ஒரு கருத்துரையில், இந்தோனேசிய எரிமலையான டோபா என்பது 65,000 ஆண்டுகளுக்கு முன் வெடித்த நிகழ்வே, சிவன் திரிபுரம் எரித்த செயலாக வர்ணிக்கப்படுகிறது என்று எழுதி இருந்தேன்.<br />அந்த எரிமலை வெடிப்பதற்கு முன்னால், இந்தியக் கடலில் சாகத்தீவும், மக்கள் பெருக்கமும் இருந்தது. அந்த வெடிப்பினால், மக்கள் தொகை சிதறுண்டு, குறைந்தும் போயிற்று. அப்பொழுது ஒரு ரிவர்ஸ் இடப் பெயர்வு நடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அந்த ரிவர்ஸ் இடப்பெயர்வில் உள்ள மிஸ்ஸிங் லிங்க் சாகத்தீவும், குமரிக் கண்டமும். இதை இந்தத் தொடரில் எடுத்துச் செல்வேன். <br /><br />டோபா வெடிப்பினால், ஒரு பகுதி மக்கள் பசிஃபிக் கடலைக் கடந்து மயன் என்று மேற்கு அமெரிக்க கடற்கரையில் குடியேறி இருக்க்கூடிய சாத்தியம் இருப்பதை, மேலே கொடுத்த இணைப்பு உறுதி செய்கிறது.<br /><br />நினைக்கும் வேகத்தில் எழுத வேண்டும் போல இருக்கிறது. ஆனால் பிற வேலைகள், பொறுப்புகளுக்கிடையே இந்தத் தொடரை எழுதுவதால், இந்தத் தொடர் மெதுவாகச் செல்கிறது. தற்சமயம், நாடிச் சுவடி ஒன்றை மொழி பெயர்த்து, உரை எழுதும் பொறுப்பு முடியாமல் இருப்பதால், அதை வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறேன். அதை முடித்தவுடன், அடுத்த வாரம் முதல், இந்தத் தொடரில் முழு கவனம் செலுத்த முடியும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-81860490167163846662011-09-17T02:14:57.913+05:302011-09-17T02:14:57.913+05:30//இந்தத் தொடரில் சைபீரியா பகுதியில் அர்க்கைம் என்ன...//இந்தத் தொடரில் சைபீரியா பகுதியில் அர்க்கைம் என்னும் இடத்தைப் பற்றி எழுதி இருப்பேன். உத்தர குரு என்னும் அந்த இடம் ஒரு காலத்தில் (30,000 ஆண்டுகளுக்கு முன்னால்) இந்திர லோகமாக இருந்தது. இதை நீங்கள் கட்டுக் கதை என்று சொல்லலாம்.//<br /><br />பொதுவாக நான் இந்து தொன்மங்களை பொய்யெனக் கொள்வதில்லை. அதில் ஏதாவது மறை பொருள் விள்க்கங்கள் இருக்கும். மேலே வேறு எவரோ ஈரான் பற்றி கூறியதை நான் கூறியதாக நினைத்துவிட்டீர்கள் போலும்.<br /><br />//அங்கிருந்த மக்கள் வழியில் வந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள, மயன், ப்யூப்லோ, இன்கா மக்கள். அவர்களது முதல் ஆரம்பம், தென் இந்தியக் கடலில் இருந்த சூரிய மலையில். அதைக் காட்டும் ஒரு ஆதாரத்தை, வரப்போகும் கட்டுரைகளில் எழுத உள்ளேன்.//<br /><br />மேலும் நீங்கள் கூறிய தென்னமேரிக்க-தென் இந்திய தொடர்பை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். <br /><br />அவர்கள் விவசாய(பொன்னேர் உழுதல்) மற்றும் விழாக்கள்(இந்திரவிழா) பெரிதளவு இந்திய முறையை போலுள்ளதையும் தமிழ் விக்கிப்பீடியாயில் எழுதியிருக்கிறேன். இந்த இணைப்பை பாருங்கள்.<br /><br />http://tawp.in/r/2l7d<br /><br />மேலும் இன்கா, மாயன்-தென்னிந்திய தொடர்புகள் பற்றிய சில புத்தகங்களையும் படித்ததுண்டு.<br />-சுப்பிரமணிsubramanihttp://www.google.com/ig#m_32noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-17906876595458449272011-09-17T00:24:03.156+05:302011-09-17T00:24:03.156+05:30//நான் கணினி உபயோகம் பற்றி சில நாட்களே கற்று வருவத...//நான் கணினி உபயோகம் பற்றி சில நாட்களே கற்று வருவதால் எனக்கு இந்த தளத்தில் எவ்வாறு இணைய வேண்டுமென்று தெரியவில்லை. கருத்துறை இடும்போது மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் உள்ளே நுழைய மறுக்கிறது. உதவவும்.//<br /><br />பக்கவாட்டில் ‘இங்கு சேரலாம்’ என்றுள்ள இடத்தில், இடுகைகள் என்று உள்ள இடத்தில் நீங்கள் இணையலாம்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-26110329318207569172011-09-17T00:20:52.007+05:302011-09-17T00:20:52.007+05:30திரு சுப்பிரமணி அவர்களே.
’மயன் விதித்துக் கொடுத்...திரு சுப்பிரமணி அவர்களே. <br /><br />’மயன் விதித்துக் கொடுத்த மரபின்’ என்று சிலப்பதிகாரம் சொல்லும் மண்டபங்கள், தமிழ் அரசர்களுக்காக, அதாவது தமிழர்களுக்காக மயன் செய்து கொடுத்தவை அல்ல. அப்படி ஏதாவது வலைத் தளத்தில் எழுதியிருந்தால் அது தவறு. <br />அந்தப் பகுதியை சிலப்பதிகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே படிக்கவும்.<br /><br />அதில் <br />வஜ்ஜிர நாட்டு மன்னனிடமிருந்து பெற்ற கொற்றப் பந்தரும்,<br /><br />மகத நாட்டு மன்னனை சோழ மன்னன் வென்று அவனிடமிருந்த பட்டி மண்டபத்தைப் பெற்றமையும்,<br /><br />அவந்தி (உஜ்ஜயினி) நாட்டு மன்னன் மகிழ்ந்து கொடுத்த வாயில் தோரணமும் சொல்லப்படுகிறது<br /><br />இவை மூன்றும் மயன் நிருமித்த வழியால் செய்து கொடுக்கப்பட்டன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. <br />இந்த மூன்றும் செய்யும் கம்மாளர்களர்களுடைய முன்னோர் மயனுக்கு ஒரு உதவி செய்தனர். அதற்குக் கைம்மாறாக, மயன் இந்த மூன்றையும், (பந்தர்,பட்டி மன்றம், தோரண வாயில்) செய்து கொடுத்தான். அவற்றைப் பெற்ற வட இந்திய மன்னர்கள் சோழ அரசனுக்கு அவற்றைக் கொடுத்தனர். அவற்ரை ஒருசேர இந்திர விழாவில் வைத்திருந்தனர். அவற்றை மயன் செய்து கொடுத்தது வட நாட்டு அரசர்களுக்கு என்பதைக் கவனிக்கவும்.<br /><br />மயன், பாண்டவர்களுக்கு அரக்கு மாளிகை கட்டிக் கொடுத்தான். <br />மயன் வழித்தோன்றல், ராமர் சேது பாலத்தைக் கட்டினான்.<br /><br />பொதுவாக 4 விஷயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. வீடு, மனை முதலியன பருவ காலம், திக்கு ஆகியவற்றின் அடிப்படையில் இடத்துக்கு இடம் மாறும். அவ்வாறு பூமியின் தெற்கில் அமைந்த நகரங்கள் மயன் உண்டாக்கிக் கொடுத்த விதி முறைகள் படி இருக்கும். இலங்கையும் நிர்மாணிக்கப்பட்ட நகரம்தான். ஆனால் அதை மயன் நிர்மாணிக்கவில்லை. விஸ்வ கர்மா நிர்மாணித்தான் என்று வால்மீகி எழுதியுள்ளார். காரணம், இலங்கை பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ளது. இவை எல்லாம் மனம் போன போக்கில் அன்றைக்குச் செய்ய வில்லை. வாஸ்து என்னும் இந்த சாஸ்திரம் படி செய்தார்கள்.<br /><br />வாஸ்து சாஸ்திரம் என்பது, 4 வகைப்படும். நிலம் /வீடு/ மாளிகை போன்ற வசிக்கும் இடங்கள், குளம், ஏரி போன்ற நீர் நிலைகள்,தெரு, ஊர் போன்ற பொது இடங்கள், வாகனங்களுக்கான அளவீடுகள், கட்டில், அரியணை போன்ற சொகுசுப் பொருள்களுக்கான அளவீடுகள் என்று நான்கு வகையாக மாறும். <br /><br />அதன் அடிப்படையில்தான் மயன் அளவீடா, விஸ்வ கர்மா அளவீடா என்று கண்டு பிடிக்கிறோம். <br /><br />மய சபா என்றே ஒரு சபையை நிர்மாணிக்கும் விதத்தை ‘சம்ஸ்க்ருத பாரதம்’ என்னும் நூல் விளக்குகிறது. இது இந்திரன், வருணன் ஆகியோரது சபைகளைக் கட்ட பயன்படுத்திய சாமான்களைக் கொண்டு கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. <br />அந்த இந்திரன் யார்?<br /><br />இந்தத் தொடரில் சைபீரியா பகுதியில் அர்க்கைம் என்னும் இடத்தைப் பற்றி எழுதி இருப்பேன். உத்தர குரு என்னும் அந்த இடம் ஒரு காலத்தில் (30,000 ஆண்டுகளுக்கு முன்னால்) இந்திர லோகமாக இருந்தது. இதை நீங்கள் கட்டுக் கதை என்று சொல்லலாம். ஆனால் அப்பொழுது அங்கு மக்கள் தொகை இருந்தது என்பதற்கு ஆதாரம் உள்ளது. அங்கிருந்த மக்கள் வழியில் வந்தவர்கள், அமெரிக்காவில் உள்ள, மயன், ப்யூப்லோ, இன்கா மக்கள். அவர்களது முதல் ஆரம்பம், தென் இந்தியக் கடலில் இருந்த சூரிய மலையில். அதைக் காட்டும் ஒரு ஆதாரத்தை, வரப்போகும் கட்டுரைகளில் எழுத உள்ளேன்.<br /><br />அதனால் மயன் என்பவன் தமிழனுக்கு மட்டும் என்று சுருக்கி விடாதீர்கள். இடம், பொருளுக்கு ஏற்றாற் போல பல விஷயங்கள் இருக்கின்றன. பாரத மூலம் மிகப் பழமையானது, தமிழர் முதல் பலரும் இதன் அங்கத்தினர்களே. வரிசைக் கிரமாக இந்தத் தொடரைப் படித்தால்தான் பல விஷயங்கள் புரியும். <br /><br />நிற்க, ப.நூ என்றால் என்ன என்று எனக்கும் தெரியவில்லை.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-7874615985155326132011-09-16T23:20:26.066+05:302011-09-16T23:20:26.066+05:30//ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களை...//ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள்//<br /><br /><br />அவர்கள் தரும் ஆதாரங்களைத் தாருங்கள். அவற்றில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறேன். <br /><br />இந்தத் தொடரை நீங்கள் முழுவதும் படித்தீர்களா? ஈரான், ஈராக் முதலான வட மேற்கு நாடுகள் பாரதத்தின் பகுதியாக இருந்தது என்று சொல்லும் மஹாபாரத வர்ணனைகள் கொடுத்துள்ளேன். சீனாவும் பாரதத்தின் பகுதியாக இருந்தது. இன்றைய இந்தியாவை வைத்துக் கொண்டு அன்றைய பாரதத்தின் எல்லையை நிர்ணயிக்க வேண்டாம்.<br /><br /><br />பாரசீகம் என்பது பார்ஸ்வ என்றே முதலில் அழைக்கப்பட்டது. பார்ஸ்வ என்றால் இடது பக்கம். இதைப் பற்றி இன்னும் இந்தத் தொடரில் எழுத ஆரம்பிக்கவில்லை.<br /><br />இன்றைக்கு முக்கியமான ஆதாரம் மரபணு ஆராய்ச்சிகளாகும். <br />அதன் மூலம் மக்கள் இடப் பெயர்வு, மற்றும் மூலம் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளார்கள்.<br />கீழ்க் காணும் இணைப்பில் இடப்பெயர்வை எளிய முறையில் காணலாம். இடப்பெயர்வு இந்தியா வழியாக ஐரோப்பாவுக்குச் சென்றதே தவிர, ஈரானின் வழியாக இந்தியாவுக்கு வரவில்லை. ஆரிய - தஸ்யு கட்டுரைகளை இந்தத் தொடரில் படியுங்கள். அது சொல்லும் வழியில்தான் ஈரானிய மக்கள் தொகை ஏற்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு. <br /><br />http://www.bradshawfoundation.com/journey/<br /><br />கீழ்க் காணும் இணைப்பில் இது வரை உலகில் நடந்துள்ள தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளைக் காணலாம். இவற்றில் எதுவும் நீங்கள் சொல்லும் கருத்தை ஒப்புக் கொள்ளவில்லை.<br /><br />http://www.archaeologica.org/NewsPage.htm<br /><br />ஆரியப் படையெடுப்பும், நீங்கள் சொல்லும் ஈரானியக் கதைகளும் ஆதாரமில்லாதவை என்று ஆங்கிலத்தில் பலப்பல ஆராய்ச்சி முடிவுகள் வந்து விட்டன. தமிழில் அவை இன்னும் வராததால் தமிழ் மக்களுக்குத் தெரியவில்லை.<br /><br />சாம்பிளுக்கு இந்த இணைப்புகளில் உள்ள ஆங்கிலக் கட்டுரைகளைப் படியுங்கள். <br /><br />http://koenraadelst.bharatvani.org/downloads/books/aid.htm<br /><br />http://www.stephen-knapp.com/death_of_the_aryan_invasion_theory.htm<br /><br />http://www.docstoc.com/docs/72461396/collapseofaryaninvasiontheory<br /><br />இவை தவிர என்னுடைய ஆங்கில வலத்தளத்தில் ஆரியப் படையெடுப்பு குறித்த 162 கட்டுரைகள் உள்ளன. <br />அவற்றை இந்த இணைப்பில் படிக்கவும், <br /><br />http://jayasreesaranathan.blogspot.com/search/label/No%20Dravidian%20divideJayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-45586678366197886392011-09-16T19:25:43.954+05:302011-09-16T19:25:43.954+05:30ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையு...ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள், என்பதற்கு ஆதாரங்களையும் தந்து, அவர்கள் ஆரியரில்லை, இங்கு வரவுமில்லை என்பதை நிரூபியுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-69973523830833071542011-09-16T16:09:04.809+05:302011-09-16T16:09:04.809+05:30ஐந்திரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் மயனின...ஐந்திரம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் மயனின் கலையையே தமிழர்கள் பின்பற்றியதாக சிலம்பில் உள்ளது. அதை வைத்தே கூறினேன்.<br /><br />:மயன் விதித்துக் கொடுத்த <br /><br />::மரபின் இவைதாம் <br /><br />:ஒருங்குடன் புணர்ந்து <br /><br />::ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்-சிலப்பதிகாரம்(இந்திரனுக்கு விழுவூரெடுத்த காதை)(108 - 109)<br /><br />மேலும் வைசம்பாயனம் மட்டுமே மயன் பற்றி அதிகம் நிரம்ப கூறுகிறது.<br /><br />:குமரிநன் நிலத்தன்று குணமுறும் கலைகள் ஆய்ந்து<br />::குமரியாள் அருளினாலே கூர்மதி நனிவிலங்க<br />:அமர் பொருள் ஆக்கம் கண்டான் ஆற்றலும் ஆண்மை மிக்க<br />::அமர்நிலை வீரம் ஓங்க அருங்கலை வளர்த்தான் அன்றே - வைசம்பாயனம்<br /><br />//சிலப்பதிகாரத்தில் மாதவி அரங்கேறும் மேடையைப் பற்றிய வர்ணனை வருகிறது. அது மயன் சாஸ்திரத்தின் அடிப்படையில் இல்லை. மாறாக விஸ்வகர்மாவின் சிற்ப சாஸ்திரத்தின் அடிபப்டையில் உள்ளது.//<br /><br />//மயன், விஸ்வகர்மா ஆகிய இருவருமே சிற்ப சாஸ்திரிகள். உலகின் தென் பாகத்திலும், வடபாகத்திலும், பருவ நிலைகள் வேறு, பருவ காலங்கள் வேறு. தென் பகுதி பருவ நிலைக்கு ஏற்ப மயன் சாஸ்திரம் எழுதினார். வட பகுதி பருவ நிலைக்கு ஏற்ப விஸ்வகர்மா சாஸ்திரம் எழுதினார்.//<br /><br />ஒருவேளை குமரிக்கண்டத்தின் ஊழியில் தென்பகுதிக்காக இயற்றப்பட்ட மயநூல் அழிக்கப்பட்டு, வடபகுதி நூல்கள் அழியாததால் விஸ்வகர்மாவின் சாஸ்திரம் பின்பற்றப்பற்றிருக்கலாம்.<br /><br />//சங்கப் பலகையைப் பற்றி தமிழ் இணைப்பில் சொல்லியுள்ளார்கள். சங்கப் பலகை தெய்வீகப் பலகை. அதை இறையனார் கொடுத்ததாகத் தான் சரித்திரம். (இந்தத் தொடரில் சொல்லியுள்ளேன். தேடல் பகுதியின் மூலம் கட்டுரையைக் கண்டு பிடிக்கலாம்). அது சிறியதாக இருந்தது. ஆனால் சிறந்த புலவர்கள் உட்கார, உட்கார அது இடம் கொடுக்கும். அதை மயன் வடித்ததாக தமிழ்ச் சங்க நூல்கள் சொல்லவில்லை என்பதே நான் அறிந்தது.// <br /><br />மயன் சங்கப்பலகை செய்ததை<br /><br />''அவைக்களப் பலகை கண்டு அருந்தமிழ் பலகை யாக்கி<br /><br />அவைக்களச் சான்றோர் வாழ்த்த அருந்தமிழ் பலகை ஏற்றி<br /><br />அவைக்கள வேந்தன் வாழ்த்த அருந்தமிழ் நூல்களெல்லாம்<br /><br />அவையுளோர் கண்க ளிக்க அரங்கேற்றி நின்றதன்றே -(ப.நூ.30)''<br /><br />என்ற பாட்டின் வழியறியலாம். ஆனால் இதில் குறிக்கப்பட்ட ''ப.நூ.30'' என்ன நூலென்று தெரியவில்லை. இந்த புத்தகத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.<br /><br />''பண்டைத்தடயம், மணிவாசகர் பதிப்பகம், நடன காசிநாதன், மா.சந்திரமூர்த்தி.டிசம்பர் 2005.''<br /><br />''ப.நூ.30'' என்ன நூலென்று தெடிக்கொண்டிருக்கிறேன். மேலும் நான் இயந்திரவியல் மாணவன் என்பதால் எனக்கு இவற்றில் அதிகம் புரிதலில்லை. நான் படித்தவற்றை கொண்டே இவ்வாறு கூறுகிறேன். இதில் தவறுகளும் இருக்கலாம்.<br /><br />நான் கணினி உபயோகம் பற்றி சில நாட்களே கற்று வருவதால் எனக்கு இந்த தளத்தில் எவ்வாறு இணைய வேண்டுமென்று தெரியவில்லை. கருத்துறை இடும்போது மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் உள்ளே நுழைய மறுக்கிறது. உதவவும்.<br /><br />-சுப்பிரமணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-55262967752038949572011-09-16T14:53:51.188+05:302011-09-16T14:53:51.188+05:30மயன் பற்றிய தமிழ்ச் சுட்டி தவறான செய்தியைத் தருகிற...மயன் பற்றிய தமிழ்ச் சுட்டி தவறான செய்தியைத் தருகிறது. மயன் செய்த ஐந்திரம் என்பதும், தொல்காப்பியர் தாம் படித்ததாகச் சொல்லும் ஐந்திரம் என்பதும் வேறு. அதே போல சிலப்பதிகாரம் சொல்லும் ஐந்திரம் என்பதும் மயன் செய்த ஐந்திரமும் வேறு. <br /><br />மயன், விஸ்வகர்மா ஆகிய இருவருமே சிற்ப சாஸ்திரிகள். உலகின் தென் பாகத்திலும், வடபாகத்திலும், பருவ நிலைகள் வேறு, பருவ காலங்கள் வேறு. தென் பகுதி பருவ நிலைக்கு ஏற்ப மயன் சாஸ்திரம் எழுதினார். வட பகுதி பருவ நிலைக்கு ஏற்ப விஸ்வகர்மா சாஸ்திரம் எழுதினார். அவர்கள் சாஸ்திரங்களில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை நான் முதுகலையில் பாடமாகப் படித்துள்ளேன். <br /><br />சிலப்பதிகாரத்தில் மாதவி அரங்கேறும் மேடையைப் பற்றிய வர்ணனை வருகிறது. அது மயன் சாஸ்திரத்தின் அடிப்படையில் இல்லை. மாறாக விஸ்வகர்மாவின் சிற்ப சாஸ்திரத்தின் அடிபப்டையில் உள்ளது. இந்தத் தொடரில் தக்க இடத்தில் அதை எழுதுகிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தின் கட்டுமான அளவுகள், தாஜ் மஹாலின் கட்டுமான அளவீடுகள், டில்லியில் உள்ள இரும்புத்தூணின் (இந்தத் தொடரில் இரும்புத் தூணைப் பற்றி எழுதியுள்ளேன்)அளவுகள் ஆகியவை ஒன்றே என்று ஐ.ஐ.டியினர் கண்டு பிடுத்துள்ளனர். அதாவது சிந்து சமவெளி காலம் முதல் அதே அளவு முறைகளைத் தான் நம் மக்கள் கடைபிடித்துள்ளனர். அந்த அளவு முறை விஸ்வகர்மா முறை - அது மயன் அளவு முறை அல்ல. <br /><br />பூமியின் வட பகுதியில் - அதாவது பூமத்திய ரேகைக்கு வடக்கே இருப்பதால், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் விஸ்வகர்மா சாஸ்த்திரத்தையே பின்பற்றியுள்ளனர். விஸ்வகர்மா பரம்பரையினர் இன்று வரை இருக்கிறார்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த மக்கள். ஆறுபடை வீடுகளது அமைப்பு விஸ்வகர்ம ப்ரகாசிகா என்னும் விஸ்வ கர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். <br /><br />சங்கப் பலகையைப் பற்றி தமிழ் இணைப்பில் சொல்லியுள்ளார்கள். சங்கப் பலகை தெய்வீகப் பலகை. அதை இறையனார் கொடுத்ததாகத் தான் சரித்திரம். (இந்தத் தொடரில் சொல்லியுள்ளேன். தேடல் பகுதியின் மூலம் கட்டுரையைக் கண்டு பிடிக்கலாம்). அது சிறியதாக இருந்தது. ஆனால் சிறந்த புலவர்கள் உட்கார, உட்கார அது இடம் கொடுக்கும். அதை மயன் வடித்ததாக தமிழ்ச் சங்க நூல்கள் சொல்லவில்லை என்பதே நான் அறிந்தது. <br /><br />ஆனால் இந்தத் தொடரில் நான் சொல்லும் சாகத்தீவுடன் மயன் சம்பந்தம் வருகிறது. சூரிய வழிபாடு, சூரியனது சிற்பம் போன்றவற்றில் மயன் கைவண்ணம் இருக்கிறது. அதை ஓரிரண்டு கட்டுரைகளுக்குப் பிறகு கொண்டு வருகிறேன். <br /><br />இன்னும் சொல்லப்போனால் சூரிய சித்தாந்தம் என்பதே மயனுக்கு உபதேசிக்கப்பட்டது. அந்த மயனது இருப்பிடம் அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. அது ரோமக தேசம் என்பது. அது இன்றைய ரோம் நகரம் அல்ல. <br />அதன் ரோமக தேசத்தின் இருப்பிடம் பூமத்திய ரேகைக்கு அருகே, இலங்கைக்கு 90 பாகை மேற்கில் இருந்தது. அந்த இடம் இன்று அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கிறது. அட்லாண்டிஸ் பற்றி இந்தத் தொடரில் எழுதியுள்ளேன். தேடல் பகுதியின் மூலம் அந்தக் கட்டுரையைப் படிக்கவும். அந்தப் பகுதியே ரோமக தேசத்துடன் ஒத்துப் போகிறது.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-67474925797840360772011-09-16T13:51:09.775+05:302011-09-16T13:51:09.775+05:30பாண்டிய-இராமாயண வரிகளை சொல்லியதற்கு நன்றி,
மேலும்...பாண்டிய-இராமாயண வரிகளை சொல்லியதற்கு நன்றி,<br /><br />மேலும் மயன் வரலாறு, வைசம்பாயனம், ஐந்திரம் போன்றவற்றிலும் உங்கள் வாதங்களுக்கு வழு சேர்க்கும் மூலங்கள் அதிகம் உள்ளன.<br /><br />மேலும் குமரிக்கண்டத்தில் பிறந்த மயன் இயற்றிய பிரணவ வேதமே வியாசர் எழுதிய நான்மறைக்கு முந்து நூலாக தமிழ்-சமஸ்கிருத ஒப்பீட்டு தொன்மவியலாளர்கள் கருதுகின்றனர். அந்த மயனை பற்றி எழுதிய வைசம்பாயனர் வியாசரின் சீடராவார். மயனே தமிழர் கலைகளின் மூலன் என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதை அறியாமல் வேதம் தவறானது என திராவிடத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் தவறாka கூறுகின்றனர்.<br /><br />மேலும் மயன் பற்றிய விவரங்களுக்கு,<br /><br />in tamil-<br />http://tawp.in/r/2hx8<br /><br />in english-<br />http://en.wikipedia.org/wiki/Mamuni_Mayan<br /><br />-சுப்பிரமணிAnonymousnoreply@blogger.com